Tuesday, April 13, 2004

கவிதாயினி அ. வெண்ணிலா

பெண்கள் அநேகம் பேர், பிள்ளை பெற்று விடுகிறார்கள். ஆனால், அவர்கள் தாய்மை அடைந்தார்களா என்பது கேள்விக் குறிதான். பிள்ளையை எப்படியெல்லாம் வளர்க்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டான தாய்மார்கள் , இங்கு அதிகம். வசையும் வன்முறையும் காணாத குழந்தைகளை யாராவது கண்டதுண்டா? தன் சொந்தக் குழந்தையின் மீது, ஒரு விழுக்காடு சுயநலமும் இல்லாமலா அன்பு செலுத்துகிறார்கள்? பிரதிபலன் எதிர்பார்த்தால் அதற்கு அன்பு என்றா பெயர்? தாயே தெய்வம் என வணங்கும் இந்த நாட்டில் கருக்கொலையும் சிசுக்கொலையும் தொட்டில் குழந்தைகளும் இருக்கின்றனவே ! காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதெல்லாம் இருக்கட்டும் . ஆண் குஞ்சையும் பெண் குஞ்சையும் வெவ்வேறு விதமாக எந்தக் காக்கையாவது நடத்துகிறதா? ஒவ்வொரு கட்டளையும் குழந்தையின் அடிப்படை உரிமைகளின் மீது ஒரு சமாதிக்கான செங்கல்லாய் இறங்குவது தெரியும்தானே? இந்த அழகில் 'அம்மா' உணர்வெழுச்சி(சென்டிமென்ட்)யும் தியாகம், தெய்வாம்சம், ஆகா ஓகோ என்றெல்லாம் புகழ்வதும் மோசடி இல்லையோ?
இப்படியெல்லாம் கேள்வி கேட்காமல் இருந்தால் இளையராஜாவின் 'அம்மா' பாடல்களைக் கேட்டு நாம் கண்­ர் விடலாம். பட்டினத்தாரைப் படித்துவிட்டு உள்ளம் உருகலாம். அன்னையர் தினத்தை ஆராதிக்கலாம். உணர்ச்சி, ஓடத் தொடங்கிவிட்டால் அறிவு நின்றுவிடும்தானே!
கவிதையைப் பொதுவாக, உணர்வுபூர்வமாக அல்லாமல், அறிவுபூர்வமாக அணுகக் கூடாது என்பர். தாய்மையை அனுபவித்து, குதூகலிக்கும் அ. வெண்ணிலாவை நாமும் உணர்வுபூர்வமாகவே அணுகுவோம். என் மனசை உன் தூரிகை தொட்டு, நீரிலலையும் முகம், ஆதியில் சொற்கள் இருந்தன ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளின் மூலம் இவர், பரவலான கவனிப்பைப் பெற்றுள்ளார்.
ஆடைக்குள்ளிருந்துதாயின் வாசம்சொட்டுச் சொட்டாய்கோப்புகளில் இறங்குகிறது.அவசரமாய்அலுவலக கழிப்பறையில் நுழைந்துபீச்சி விடப்படும் பாலில் தெறிக்கிறதுபசியைத் தின்று அலறும்குழந்தையின் அலறல்.
பால் ஊட்டமுடியாத நிலையில், மார்பகம் கனத்துக் கல் போலாகி விடும். அத்தகைய நிலையில் பீச்சி விடுவதைத் தவிர வேறு வழியில்லை. அந்த உண்மையை வெண்ணிலா, அருமையாகப் பதிவு செய்துள்ளார்.
மிதியடிச் சத்தத்தைமிதப்படுத்து.அழைப்பு மணியோகதவு தட்டலோயோசித்து- பின்மெதுவாய் எழுப்பு.'யார் வீட்ல' எனகேட்கும் முன்குரலைமென்மையாக்கு.நீ நுழையும்எந்த வீட்டினுள்ளும்- ஒருகுழந்தை தூங்கிக்கொண்டிருக்கலாம்.
'உறங்கும் குழந்தை', எண்ணற்ற பொருள்கள் உடைய ஒரு படிமம். மிகுந்த அக்கறையும் கனிவும் முன்னெச்சரிக்கையும் தாய்மையும் தொனிக்கும் இக்கவிதை, அனைவருக்கும் ஒரு சிறந்த செய்தியை முன்வைக்கிறது.
பாலை உள்வாங்கிஉதட்டிற்குக் கொண்டுவந்து உமிழ்வதும்...
வரும் தூக்கத்தைஅழுகையால் விரட்டி,தூக்கத்திற்கு அழுவதும்...
தூக்கினால் கீழிறங்கியும்கீழே விட்டால் தூக்கச் சொல்லியும்...
விதவிதமான விளையாட்டு சாமான்களை ஒதுக்கிஉடைந்த பாத்திரங்களோடு உருள்வதும்...
குழந்தையின் முரண் நகைக்குரிய இயல்புகளை எளிய சொற்களில் இக்கவிதை சித்திரிக்கிறது. இப்படியாக, குழந்தைக்குச் சோறூட்டுவது, அதை அடிக்கவேண்டியிருப்பது, அது, துண்டொன்றைக் கட்டிக்கொண்டு அம்மா ஆவது, பிசாசை அழைப்பேன் என அதைப் பயமுறுத்துவது, யாரும் சொல்லித் தராமலேயே செய்தித் தாளை அப்பாவிடம் கொடுத்து, கீரைக்கு அம்மாவை அழைக்கும் குழந்தை, அதன் சிரிப்பு, வீட்டையே மாற்றிய குட்டி இளவரசி, கேள்விகளால் நிரம்பிய குழந்தைகளின் உலகம், குழந்தைக்கான கதைகளால் குழந்தையானது, சப்தம் போடாமல் விளையாடுமாறு குழந்தைகளிடம் கூச்சமே இல்லாமல் சொல்வது, நிலா கும்பல், சொப்பு விளையாட்டு, குழந்தையும் மழையும், தொட்டிலும் குழந்தையும், தங்கம் - செல்லம் என்றெல்லாம் கொண்டாடிய குழந்தையை, அடுத்த குழந்தை பிறந்ததும் நாயே என்றது, குழந்தைகள் ஊருக்குப் போயிருக்கிற நாட்களில் வந்து போன யானை - மழை - இறகுதிர்த்த பறவை - எரி நட்சத்திரம், குழந்தைக்குச் செய்யவேண்டிய வேலைகள், அது, ஒன்னுக்கிருந்து தாளம் போடுவது, தொலைந்தாலும் அகப்படும் விளையாட்டு கார் சாவி, குழந்தையின் அழுகை, அத்துடன் சேர்ந்து இயற்கையை இரசிப்பது........ எனக் குழந்தையின் உலகிற்குள் தம்மையே கரைத்துக்கொண்டுள்ளார், வெண்ணிலா. இவரின் குழந்தை , அதிருஷ்டசாலிதான். இதர குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டிச் சோறூட்டுவோம் . இங்கோ, நிலாவே சோறூட்டுகிறதே!
இப்படி ஓயாமல் குழந்தையின் ஒவ்வோர் அசைவையும் கவிதையாக்கும் வெண்ணிலா, குழந்தைக் கவிஞர் மட்டும் அல்லர். காதலிலும் முத்திரை பதித்துள்ளார்.
முத்தத்தில் துவங்கிமுத்தத்தில் முடியும்தாம்பத்ய உறவுஎத்தனை பேருக்கு வாய்க்கிறது?
யாரும் சொல்லாமலேயேகற்றுக்கொள்கிறார்கள்அலுத்துத் தூங்குவதற்கான உடற்பயிற்சியாக.
என்கிற வரிகளில் உண்மை உறைந்துபோய் இருக்கிறது.
உன் இனிஷ’யல் போட்டுக்கொள்ளஉனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்நான்கைந்து மணி நேரம்ரத்த வெள்ளத்தில் மிதந்து
கேட்டால் கிடைக்குந்தான்உன் முத்தம்உன் அரவணைப்புஉன் ஆறுதல்
பச்சப்புள்ள கேட்டாபாலூட்டுகிறோம்
கரு சுமந்துகுழந்தைத் தவம் இருக்கும் பெண்களைசுமக்கஎந்த ஆணுக்கு உள்ளது கருப்பை
மிக நுண்மையான செய்தியை வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். பிள்ளைப் பேற்றின் போது கணவன் உடன் இருக்கவேண்டும் எனப் பூடகமாகத்தான் இதைச் சொல்வது வழக்கம். இந்தத் துணிச்சல்தான் நவீன பெண்ணின் அடையாளமாக வெளிப்படுகிறது. மின்சாரம் நின்ற நேரத்தில் உதட்டை ஈரப்படுத்திய குறும்பு, என்னை எழுது என்றவனிடம், 'மழையில் நனைவது சுகமா? மழைப் பற்றி எழுதுவது சுகமா?' என்றது, 'உன் நினைவுகளை இங்கொன்றும் அங்கொன்றும் தெளித்துக்கொள்கிறேன் , குழந்தை தன்னைச் சுற்றிப் பொருட்களைப் பரத்திக்கொள்வதைப் போல' என்றது ஆகியவை இவரின் காதல் மனத்தைக் காட்டுகின்றன.
வெண்ணிலாவிற்குப் பலவற்றிலும் நிறைவின்மை உள்ளது. முத்தமிட்டு, தலை வருடி, முகத்தோடு முகம் வைத்து, விரல்களில் நெட்டி எடுத்து எல்லாம் எழுப்பாமல் 'ஏய்' எனக் கால் žண்டி எழுப்புவது குறித்துக் கேட்கிறார். 'அந்தரங்க விநாடிகள் அத்தனையும் காணாமல் போயின நண்பன் , கணவனான போது' என்கிறார்.
சுக இருப்புக்காககால் மேல் உள்ள காலைக் கண்களால்நெருடிப் போகாத
பார்வையைச் சந்தித்தவுடன்சரியாய் இருக்கும்முந்தானையைக்கூட இழுத்துவிட்டுக் கொள்ள வைக்காத
குழந்தைக்குப் பாலூட்டும்விநாடிகளில்...தரைபிளந்து உள்நுழையும்அரைப்பார்வை வீசாத
காற்றில் ஆடை விலகும்நேரங்களில்...கைக்குட்டை எடுத்துமுகம் துடைத்துக்கொள்ளாத
ஆண்களுக்குநண்பர்கள் என்று பெயர்.
- எல்லாக் குற்றங்களையும் ஆண்களின் கூடையில் நிரப்பி விடும் முயற்சி, இது. 'பார்வை'க் குற்றங்களுக்கு ஒருவரை மட்டும் குறை கூறுவது, பொருந்தாது.
காதலித்த போது காதலைப் பற்றிப் பாடியுள்ளார். திருமண வாழ்க்கை, குழந்தை , அதன் வளர்ச்சி, மாத விலக்கு...எனத் தாம் நேரடியாக அனுபவித்தவற்றையே அதிகமாகப் பாடியுள்ளமை, இவர் எழுத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. கற்பனையாகப் புனைந்து, சொற்பெருக்காகவும் வார்த்தை விளையாட்டாகவும் பாடாமை, இவர் சரியான திசையில் செல்வதை உணர்த்துகிறது.
நீரிலலையும் முகம் தொகுப்புக்காக, சிற்பி விருது, தேவமகள் விருது, கவிதை உறவில் முதல் பரிசு, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். உளவியலிலும் கல்வியியலிலும் முதுகலைப் பட்டமும் இந்தியில் இளங்கலைப் பட்டமும் பெற்றவர்.சிறுகதை, புதினம் ஆகியவற்றிலும் கைவண்ணம் காட்டுகிறார். வந்தவாசியில் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றுகிறார். கணவர் , கவிஞர் மு. முருகேஷ். காதல் திருமணம் வெற்றி பெறும் என்பதற்கு இவர்களையே எடுத்துக்காட்டாய்க் கூறலாம்.
சில நூறு விநாடிகளைப் பார்த்திருக்கின்றன பூக்கள்.
சில நூறு மாதங்களைக்கடந்திருக்கின்றன செடிகள்.
சில நூறு ஆண்டுகளைசுவாசித்திருக்கின்றன மரங்கள்.
பல நூறு தலைமுறைகளைவாசித்துக்கொண்டிருக்கும் மலைகள்.
பூ, செடி, மரம், மலைஅத்தனையும் புரட்டிப் பார்த்துவிடும் என் ஒற்றைக் கவிதை
என்கிறார், அ. வெண்ணிலா.
நம்புகிறோம். இந்த நிலா, சூரியனுக்கே இரவல் கொடுக்கக்கூடும்.

அண்ணாகண்ணன்

No comments: