Friday, March 05, 2004

46 மொழிகளில் ஐ லவ் யூ



காதல் என்பது 'அனுமதியின்றி உள்ளே வராதீர்' என்ற பலகையைப் பொருட்படுத்தாது. காதல் என்பது கடிதத்தை அனுப்புவதற்கு முன்பாகவே பதிலை எதிர்பார்க்கும். காதல் என்பது யாரோ ஒருவர் உள்ளே வரப்போகிறார் என்று காத்திருப்பது.


'எப்போது மலரைப் பார்த்தாலும் நான் உன்னை நினைந்துக் கொள்வேன்.'


'முத்தத்தை எப்படித் திருடுவது?'



இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்குமே. இவையெல்லாம் பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து அட்டை வாக்கியங்கள். தீப்பெட்டி அளவு முதல் சுவரொட்டி அளவு வரை விதவிதமான வடிவங்களில், வண்ணங்களில், சித்திரங்களில், புகைப்படங்களில் வாழ்த்து அட்டைகள் குவிந்துள்ளன. பிரித்தால் 'ஐ லவ் யூ' எனப் பாடும் வாழ்த்து அட்டைகளும் உண்டு.


காதலர்களுக்காக உள்ளூர் நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை விழுந்து விழுந்து சிந்திக்கின்றன. 'நேராகப் போ...' 'கரடுமுரடான சாலை அருகிலுள்ளது' 'சாலை திரும்புகிறது' 'இவ்வழியில் போகலாம்' 'இவ்வழியில் போகக்கூடாது' 'இங்கே வாகனங்கள் நிறுத்தக்கூடாது' என்பன போல் ஏராளமான போக்குவரத்துக் குறியீடுகளை நாம் அறிவோம், நாம் அவற்றுக்குக் கொள்ளும் அர்த்தங்கள் ஒரு பக்கம் இருக்க, ஒவ்வொரு குறியீட்டுக்கும் காதல் சார்ந்த அர்த்தங்களை வாழ்த்து அட்டைகளில் உருவாக்கிவிட்டனர்.


'தி லவ் டைம்ஸ்' என்ற வாழ்த்து அட்டை முழுக்க முழுக்கப் பத்திரிகை போலவே தயாரிக்கப்பட்டுள்ளது. 'விலை' என்ற இடத்தில் 'விலையற்றது' என்றும் 'நாள்' என்ற இடத்தில் "எக்காலமும்' என்றும் குறிப்பிட்டுள்ள இதில், காதல் ஏவுகணை, இதய மாற்று அறுவைச் சிகிச்சை, காதல் அறிவியல், காதல் வேலை வாய்ப்பு என எங்கும் காதல் மயம்தான்.


வாழ்த்து அட்டைகள் மட்டுமன்றிக் காதலர் தினத்துக்கெனச் சிறப்புப் பரிசுப் பொருள்களும் ஏராளமாய் உள்ளன. சாக்லேட் பெட்டிகள், புகைப்படச் சட்டங்கள், எழுதுபொருள் பெட்டி, நகைப்பெட்டி, இசைக் கோப்புகள், புசுபுசு பொம்மைகள், இசைப்பேழைகள், குறுந்தகடுகள், பூச்செண்டுகள், சின்னச் சின்ன பொம்மைகள், சாவிக் கொத்துகள் எனக் கணக்கில்லாத பரிசுப் பொருள்கள் காணக் கிடைக்கின்றன. பரிசுப் பொருள்கள் எவ்வகையாக இருந்தாலும் அதில் ஓர் இடத்திலாவது ஐ.எஸ்.ஐ. முத்திரை போலக் காதல் முத்திரையான இதயம் இடம் பெற்றுள்ளது. இதை வேறொரு மாதிரிச் சொல்வதானால் இதயத்தின் வடிவம் பொறிக்கப்பட்ட எந்தப் பொருளும் காதலுக்குரிய பரிசுப் பொருளாகிவிடுகிறது.


இந்தக் காதலர் தினத்துக்காக "Be my Valentine" என்ற ஆங்கிலப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. காதல் கவிதைகள், பாடல்கள் ஆகியவற்றோடு 46 மொழிகளில் "நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்ற வாக்கியத்தின் ஆங்கில வரிவடிவமும் இந்நூலில் உள்ளது. வாழ்த்து அட்டைகளைப் பொறுத்தவரை 5 ரூபாயில் தொடங்கி 200 ரூபாய் வரையும். பரிசுப் பொருள்களைப் பொறுந்த அளவில் ரூ.30-லிருந்து ரூ.2000 வரையும் விலையுள்ளது. 'முக்கால்வாசிப் பரிசுப் பொருள்களும் வாழ்த்து அட்டைகளும் இறக்குமதியானவை. கால்வாசி மட்டுமே உள்ளூர்த் தயாரிப்புகள்' எனப் பிரபல புத்தகக் கடை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 'இணையத்தில் நிறைய வாழ்த்து அட்டைகள் உருவாக்கிச் சேமிக்கப்பட்டுள்ளன. அவற்றை மின்னஞ்சல் மூலம் பலரும் அனுப்பியிருக்கிறார்கள் இதனால் கடைகளில் வாழ்த்து அட்டை விற்பனை பாதிக்கவில்லையா?' என்று ஒரு விற்பனையாளரைக் கேட்டோம். 'இந்த வாழ்த்து அட்டைகளைக் காதலர்கள் எப்போதும் வைத்திருக்கலாம். இணையத்திலிருந்து தாளில் பதிவு செய்தாலும் அட்டை போல வராது. அதுவுமின்றி அதற்குச் செலவும் அதிகம். எனவே அட்டை வாங்குவோர் எப்போதும் குறைவதில்லை' என்றார் அவர். 'நிறைய வார்த்தைகளும் வாக்கியங்களும் உள்ள அட்டைகளை நாங்கள் விரும்பவில்லை' எனக் கல்லூரி மாணவியர் சிலர் தெரிவித்தனர்.


கடந்த சில ஆண்டுகளாக இந்தச் சீசனில் விற்பனை அதிகரித்திருப்பதாகவும் காதலர் தினத்துக்கு முந்தைய மூன்று நாள்களில்தான் அதிக விற்பனை இருக்கும் என்றும் விற்பனையாளர் பலர் கூறினர். சென்னையில் உள்ள ஒரு பிரபல புத்தகக் கடையில் காதலர் தினத்துக்கெனச் சிறப்புக் காட்சியறை உருவாக்கப்பட்டுள்ளது


காதலுக்கு மொழியில்லை என்றாலும் எல்லா வாழ்த்து அட்டைகளும் ஆங்கிலத்திலேயே இருப்பதைப் பார்க்கும்போது ஏதோ காதல், ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே உரித்தானதோ என்ற கேள்வியை எழுப்பியது.


தினமணி கதிர், 11-2-2001 - காதலர் தின ஸ்பெஷல்

Thursday, March 04, 2004

படித்துக் "கிழிக்கும்" வாசகர்கள்



²ôÃø 23 - ¯Ä¸ Òò¾¸ ¾¢Éõ


´Õ Òò¾¸òÐû «¨¾ ±Ø¾¢ÂÅ÷ ¯Â¢÷ Å¡ú¸¢È¡÷. ´÷ áĸò¾¢§Ä¡ µ÷ ¯Ä¸§Á ¯Â¢÷ Å¡úóÐ ¦¸¡ñÊÕ츢ÈÐ. þó¾¢Â¡Å¢ý §¾º¢Â áĸí¸Ùû ´ýÈ¡É ¸ýÉ¢Á¡Ã¡, áüÈ¡ñÎ ¸ñ¼ áĸõ. ³.¿¡.º¨À, ԦɊ§¸¡ ¿¢ÚÅÉõ, ¬º¢Â ÅÇ÷ Åí¸¢ ¬¸¢ÂÅüÈ¢ý ¾¸Åø ¨ÁÂÁ¡¸×õ þÐ ¯ûÇÐ. ¸ýÉ¢Á¡Ã¡ ¦À¡Ð áĸòÐìÌû ¿¡õ ѨÆó¾§À¡Ð µ÷ ¯ýɾ ¯Ä¸òÐìÌû ѨÆÔõ ¯½÷× ²üÀð¼Ð.


1890-¬õ ¬ñÎ þ¾üÌ «Êì¸ø ¿¡ðÊÂÅ÷, ¦ºý¨É¢ý «ý¨È ¬Ù¿÷ ¸ýÉ¢Á¡Ã¡ À¢ÃÒ. ¬¸§Å «Å÷ ¦ÀÂâ§Ä§Â þó¾ áĸபடித்துக் "கிழிக்கும்' வாசகர்கள்



ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்


ஒரு புத்தகத்துள் அதை எழுதியவர் உயிர் வாழ்கிறார். ஒர் நூலகத்திலோ ஓர் உலகமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் தேசிய நூலகங்களுள் ஒன்றான கன்னிமாரா, நூற்றாண்டு கண்ட நூலகம். ஐ.நா.சபை, யுனெஸ்கோ நிறுவனம், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் தகவல் மையமாகவும் இது உள்ளது. கன்னிமாரா பொது நூலகத்துக்குள் நாம் நுழைந்தபோது ஓர் உன்னத உலகத்துக்குள் நுழையும் உணர்வு ஏற்பட்டது.


1890-ஆம் ஆண்டு இதற்கு அடிக்கல் நாட்டியவர், சென்னையின் அன்றைய ஆளுநர் கன்னிமாரா பிரபு. ஆகவே அவர் பெயரிலேயே இந்த நூலகம் அழைக்கப்படுகிறது. முன்னதாக 1860-ல் சென்னை அருங்காட்சியகத்தின் பகுதி நேரக் கண்காணிப்பாளரான கேப்டன் ஜெஸ்ஸி மிட்செல் அரசை அணுகி, அருங்காட்சியக நூலகம் ஒன்றை அமைக்க வேண்டினார். அந்நூலகம் 1862 முதல் செயலாற்றத் தொடங்கிற்று. பின்னர் அதில் நூல்கள் பெருகப் பெருக அதற்கு ஒரு புதிய கட்டடம் தேவையாயிற்று. அக்கட்டடத்திற்குத்தான் கன்னிமாரா பிரபு அடிக்கல் நாட்டினார். எனவே, கன்னிமாரா நூலகத்தின் நிறுவனர் ளன்ற பெருமை காப்டன் ஜெஸ்ஸி மிட்செலுக்குத்தான். பதினாறாம் நூற்றாண்டு நூல்கள் முதல் இன்றைக்கு வெளிவந்த நூல்கள் வரை சேமிக்கப்பெறும் இந்த நூலகத்தில் ஏறத்தாழ 5 லட்சத்து 7 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.


குறிப்புதவி நூல்களாக ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. இந்த நூல்கம் நூல்களை இரவல் தருவதோடு மாதம் 100 ரூபாய் கட்டினால் குறைந்தபட்சம் 2 நூல்களை வீட்டுக்கே கொண்டு வந்தும் தருகிறது. பெரும்பாலான நூல்கள் பாடவாரியாக, ஆசிரியர்வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டு தொலைக்காட்சிகளும் 60 கல்வி ஒளிநாடாக்களும் உள்ளன. கணிப்பொறி மயமாகி வரும் இந்நூலகத்துள் ஒரு லட்சம் நூல்களின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கல்வி தொடர்பான குறுந்தகடுகள் 140 உள்ளன. நகலெடுக்கும் வசதி உள்ளது.


பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கான பிரெய்லி மற்றும் பேசும் புத்தகச் சேவையும் உள்ளது. தேசியத் தகவல் மையப் பொதுத் தகவல் முறையகம் மூலம் ஏராளமான தகவல்கள் இங்கே கிடைக்கின்றன. இந்தியச் சுற்றுலா வழிகாட்டி, இந்தியப் பல்கலைக்கழகக் கல்விமுறை வழிகாட்டி, ஊரகத் தொழில் நுட்பங்கள், இந்தியப் பாரம்பரிய அறிவியல், இந்திய மாவட்டங்கள்-மாநிலங்களின் விவரங்கள், இந்தியப் பொருளாதார வங்கியியல் விவரங்கள், இந்தியத் தொழிற்சாலைகளின் அகராதி, வேளாண் புள்ளியியல் விவரங்கள் போன்றவை இந்தப் பிரிவில் கிடைக்கின்றன. அரசுத் தேர்வு முடிவுகளை இதில் காணலாம்.


இன்டர்நெட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஒரு மணிக்கு ரு. 35ம் அரை மணிக்கு ரூ.20ம் கட்டணம். விரைவில் மைக்ரோ ·பிலிமில் முக்கிய நூல்களை ஏற்றிப் பாதுகாக்க உள்ளனர். அயல்நாடுகளில் இருந்து அதற்கான இயந்திரங்கள் விரைவில் வர உள்ளன.


தேசிய விடுமுறை நாள்கள் மூன்றையும் மாநில அரசின் ஆறு விடுமுறை நாள்களையும் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் காலை 9 முதல் இரவு 7.30 மணி வரை இந்த நூலகம் இயங்குகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாய் ஆயிரத்து இருநூறு பேர் வருகின்றனர். சனி, ஞாயிறுகளில் இந்த எண்ணிக்கை, 2000 வரை போகிறது.


பயன்பாட்டினைப் பொறுத்து நூல்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ - மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தூசு தட்டிச் சுத்தம் செய்யப்படுகின்றன. மிகப் பழைய நூல்களின் பக்கங்கள் ஒவ்வொன்றும் ஷிபான்சில்க் என்ற துணி ஒட்டப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது.


பொது நூலகத் துறையிலிருந்து நூல்களைப் பெறுவதோடு தனக்கென்று நூல் தேர்வுக் குழு ஒன்றையும் இந்த நூலகம் கொண்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் பாட நூல்கள், வெளிநாட்டு நூல்கள் போன்றவை வாங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் இந்த வகையில் 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நூல்கள் வாங்கப்பட்டன.


கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் என்ற ஒன்று இருக்கிறது. இதற்குத் தலைவர் உள்ளார். செயற்குழு உள்ளது. ஆனால் இதுவரை கூட்டங்கள் ஏதும் கூட்டப்பெறவில்லை. இந்த நூலகத்திற்கு 68 ஆயிரம் ஆயுள் உறுப்பினர்கள் உள்ளனர். 36 ஆண்டுகளாய் இந்த நூலகத்தில் பணியாற்றி வரும் நூலகர் ந.கி. நடராஜனைச் சந்தித்து வாசகர்கனளப் பற்றிக் கேட்டோம்.


''பொதுவாக வாசகர்கள் நல்ல செயல்வேகத்தோடு இருக்கிறார்கள். இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிப்பொறியியல் போன்ற அறிவியல் நூல்களை அதிகம் பேர் வாசிக்கின்றனர். இதற்கடுத்து இலக்கியம் வருகின்றது. அதன் பின் வரலாறு, சமயம் போன்றவை வருகின்றன.


ஆனால், பல விநோத வாசகர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். சிலர் தாள்களைக் கிழித்து எடுத்துச் சென்றுவிடுகின்றனர். சிலர் திருடி எடுத்துச் சென்றுள்ளனர். ஆறு மாதங்கள் நாங்கள் தேடினோம். கிடைக்கவில்லை. பிறகு அவர்களே ஒரு நாள் கொண்டு வந்து எடுத்த இடத்திலேயே வைத்துள்ளனர். கலைந்திருக்கும் புத்தகங்களை அடுக்க உதவுபவர்கள் உண்டு. உபத்திரவம் செய்வோரும் உண்டு. சில வாசகர்கள் தூங்குவதும் உண்டு. நாம் எழுப்பினால், 'சிந்தனை செய்கிறேன் தொந்தரவு செய்யாதீர்கள்' என்பார்கள். சிலர் அழகான புத்தகங்களைப் பேனாக் கத்தியினால் கன்னாபின்னாவென்று கிழித்து வைப்பார்கள். (அப்படி ஒரு புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார்.) அப்படிப்பட்ட மன நோயாளிகளும் உள்ளனர். கணிப்பொறியில் ஒரு லட்சம் புத்தகங்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்து வைத்தோம். கணினி விஷயம் தெரிந்தவர்கள் வந்து அவற்றை அழித்துவிட்டு ஏதாவது பேர், ஊர், கதைகளையெல்லாம் எழுதி வைத்திருந்தனர். நல்லவேளையாக, பிரதானக் கணிப்பொறியில் அந்தத் தகவல்கள் இருந்ததால் தப்பித்தோம். இல்லையேல் பெரும் உழைப்பு வீணாகியிருக்கும்.


ஜ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வெழுதுவோரில் சிலர் ஒரு புத்தகத்தை மட்டும் எடுத்துப் படிப்பதில்லை. பத்துப் பன்னிரண்டு நூல்களை எடுத்து வைத்துக்கொள்வார்கள். அதில் அவர்கள் தேர்ந்தெடுத்த பாடத்துக்குப் புறம்பான நூல்களும் இருக்கும். கேட்டால், 'நண்பர் வரப்போகிறார். அவருக்காக எடுத்துவைத்திருக்கிறேன்' என்பார்கள்.


சிலர் தனக்குத் தேவையான நல்ல புத்தகத்தைக் கண்டால் அதை யாரும் எடுக்காமல் இருக்க வேறு நூல் வரிசைகளில் செருகிவைத்துவிட்டுச் செல்வர், பின்னர் நாங்கள் தூய்மைப் பணி செய்யும் போதுதான் இந்த விஷயம் எங்களுக்குத் தெரியும். 'எனக்கு இந்தப் புத்தகம் தேவை. எடுத்து வையுங்கள்' என்றால், நாங்களே எடுத்து வைப்போம். சிலர் புத்தகங்களைப் பற்றிய விமர்சனங்களை அந்தப் புத்தகத்திலேயே கிறுக்கி வைப்பார்கள்.'


சிலர் 'எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்' போன்றவற்றில் வெளிவரும் விளம்பரங்களையும் அறிவிப்புகளையும் கிழித்து எடுத்துச் சென்றுவிடுவர். இதனால் எல்லோருக்கும் இந்தப் பத்திரிகை பத்திரமாகக் கிடைக்க அவற்றைப் பூட்டி வைக்க வேண்டியிருக்கிறது. இது தெரியாத சிலர், 'இதைப் போய்ப் பூட்டிவைத்திருக்கிறீர்களே' என்று வருத்தப்படுவார்கள்.


திருப்பித் தரும் தேதியை இரவல் நூல்களில் பொறிப்போம். ஒருவர் குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பித் தராமல் ஓராண்டு கழித்து வந்து அவரே ஒரு தேதியைப் புத்தகத்தில் பொறித்துக் கொண்டுவந்து தந்தார். அந்தத் தேதியில் தேடினால் அவரது நூலக அட்டை கிடைக்கவில்லை. பிறகுதான் அவரது வேலை அது என்று தெரிந்தது.


எங்களிடம் ஊழியர்கள் குறைவு. தரைத் தளத்தோடு சேர்த்து நான்கு தளங்களிலும் நூல்கள் உண்டு. எல்லாப் பிரிவையும் எப்போதும் கண்காணிக்க இயலாது. ஆகவே வாசகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயலாற்றினால் எங்களுக்கு மிக உதவியாய் இருக்கும்'' என்கிறார் நடராஜன்.


இவ்வளவு பெரிய நூலகத்துக்கு ஒரே ஒரு தொலைபேசிதான் உள்ளது. அதன் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். சுமார் 1200 வாசகர்கள் தினம்தோறும் வரும் இந்த நூலகத்தில் வாசகர்கள் பலர் நீண்ட நேரம் அமர்ந்து படிப்பதைப் பார்க்க முடிந்தது. களைப்படையும் வாசகர்கள், தேநீர் அருந்தக் கூட வளாகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டியுள்ளது. அவர்களுக்கு ஓர் உணவகம் இங்கு அமைத்தால் உதவியாக இருக்கும் என்று தோன்றியது. மூளை சற்றே களைப்படையும்போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படவேண்டுமல்லவா?


தினமணி கதிர், 23.4.2000
õ «¨Æì¸ôÀθ¢ÈÐ. Óýɾ¡¸ 1860-ø ¦ºý¨É «Õí¸¡ðº¢Â¸ò¾¢ý À̾¢ §¿Ãì ¸ñ¸¡½¢ôÀ¡ÇÃ¡É §¸ô¼ý ¦ƒŠ…¢ Á¢ð¦ºø «Ã¨º «Ï¸¢, «Õí¸¡ðº¢Â¸ áĸõ ´ý¨È «¨Áì¸ §ÅñÊÉ¡÷. «óáĸõ 1862 Ó¾ø ¦ºÂÄ¡üÈò ¦¾¡¼í¸¢üÚ. À¢ýÉ÷ «¾¢ø áø¸û ¦ÀÕ¸ô ¦ÀÕ¸ «¾üÌ ´Õ Ò¾¢Â ¸ð¼¼õ §¾¨Å¡¢üÚ. «ì¸ð¼¼ò¾¢üÌò¾¡ý ¸ýÉ¢Á¡Ã¡ À¢ÃÒ «Êì¸ø ¿¡ðÊÉ¡÷. ±É§Å, ¸ýÉ¢Á¡Ã¡ áĸò¾¢ý ¿¢ÚÅÉ÷ ÇýÈ ¦ÀÕ¨Á ¸¡ô¼ý ¦ƒŠ…¢ Á¢ð¦ºÖìÌò¾¡ý. À¾¢É¡È¡õ áüÈ¡ñÎ áø¸û Ó¾ø þý¨ÈìÌ ¦ÅÇ¢Åó¾ áø¸û Ũà §ºÁ¢ì¸ô¦ÀÚõ þó¾ áĸò¾¢ø ²Èò¾¡Æ 5 ÄðºòÐ 7 ¬Â¢Ãõ Òò¾¸í¸û ¯ûÇÉ.


ÌÈ¢ôҾŢ áø¸Ç¡¸ ´Õ Äðºõ áø¸û ¯ûÇÉ. þó¾ áø¸õ áø¸¨Ç þÃÅø ¾Õŧ¾¡Î Á¡¾õ 100 åÀ¡ö ¸ðÊÉ¡ø ̨Èó¾Àðºõ 2 áø¸¨Ç Å£ðÎ째 ¦¸¡ñÎ ÅóÐõ ¾Õ¸¢ÈÐ. ¦ÀÕõÀ¡Ä¡É áø¸û À¡¼Å¡Ã¢Â¡¸, ¬º¢Ã¢Â÷šâ¡¸ò ¦¾¡Ìì¸ôÀðÎûÇÉ. þÃñÎ ¦¾¡¨Ä측𺢸Ùõ 60 ¸øÅ¢ ´Ç¢¿¡¼¡ì¸Ùõ ¯ûÇÉ. ¸½¢ô¦À¡È¢ ÁÂÁ¡¸¢ ÅÕõ þóáĸòÐû ´Õ Äðºõ áø¸Ç¢ý Å¢ÅÃí¸û ¦¾¡Ìì¸ôÀðÎûÇÉ. ¸øÅ¢ ¦¾¡¼÷À¡É ÌÚó¾¸Î¸û 140 ¯ûÇÉ. ¿¸¦ÄÎìÌõ ź¾¢ ¯ûÇÐ.


À¡÷¨ÅÂü§È¡÷ ÁüÚõ ¸¡Ð §¸Ç¡§¾¡Õì¸¡É À¢¦ÃöÄ¢ ÁüÚõ §ÀÍõ Òò¾¸î §º¨ÅÔõ ¯ûÇÐ. §¾º¢Âò ¾¸Åø ¨ÁÂô ¦À¡Ðò ¾¸Åø Өȸõ ãÄõ ²Ã¡ÇÁ¡É ¾¸Åø¸û þí§¸ ¸¢¨¼ì¸¢ýÈÉ. þó¾¢Âî ÍüÚÄ¡ ÅÆ¢¸¡ðÊ, þó¾¢Âô Àø¸¨Äì¸Æ¸ì ¸øÅ¢Ó¨È ÅÆ¢¸¡ðÊ, °Ã¸ò ¦¾¡Æ¢ø ÑðÀí¸û, þó¾¢Âô À¡ÃõÀ⠫ȢŢÂø, þó¾¢Â Á¡Åð¼í¸û-Á¡¿¢Äí¸Ç¢ý Å¢ÅÃí¸û, þó¾¢Âô ¦À¡ÕÇ¡¾¡Ã Åí¸¢Â¢Âø Å¢ÅÃí¸û, þó¾¢Âò ¦¾¡Æ¢üº¡¨Ä¸Ç¢ý «¸Ã¡¾¢, §ÅÇ¡ñ ÒûǢ¢Âø Å¢ÅÃí¸û §À¡ýȨŠþó¾ô À¢Ã¢Å¢ø ¸¢¨¼ì¸¢ýÈÉ. «ÃÍò §¾÷× ÓÊ׸¨Ç þ¾¢ø ¸¡½Ä¡õ.


þý¼÷¦¿ð ź¾¢Ôõ ²üÀÎò¾ôÀðÎûÇÐ. þ¾üÌ ´Õ Á½¢ìÌ Õ. 35õ «¨Ã Á½¢ìÌ å.20õ ¸ð¼½õ. Å¢¨ÃÅ¢ø ¨Áì§Ã¡ ·À¢Ä¢Á¢ø Ó츢 áø¸¨Ç ²üÈ¢ô À¡Ð¸¡ì¸ ¯ûÇÉ÷. «Âø¿¡Î¸Ç¢ø þÕóÐ «¾ü¸¡É þÂó¾¢Ãí¸û Å¢¨ÃÅ¢ø Åà ¯ûÇÉ.


§¾º¢Â Å¢ÎÓ¨È ¿¡û¸û ãý¨ÈÔõ Á¡¿¢Ä «Ãº¢ý ¬Ú Å¢ÎÓ¨È ¿¡û¸¨ÇÔõ ¾Å¢Ã ÁüÈ «¨ÉòÐ ¿¡û¸Ç¢Öõ ¸¡¨Ä 9 Ó¾ø þÃ× 7.30 Á½¢ Ũà þó¾ áĸõ þÂí̸¢ÈÐ. ´Õ ¿¡¨ÇìÌî ºÃ¡ºÃ¢Â¡ö ¬Â¢ÃòÐ þÕáÚ §À÷ ÅÕ¸¢ýÈÉ÷. ºÉ¢, »¡Â¢Ú¸Ç¢ø þó¾ ±ñ½¢ì¨¸, 2000 Ũà §À¡¸¢ÈÐ.


ÀÂýÀ¡ðʨÉô ¦À¡ÚòÐ áø¸û, ¬Ú Á¡¾í¸ÙìÌ ´Õ Өȧ¡ - ãýÚ Á¡¾í¸ÙìÌ ´Õ Өȧ¡ àÍ ¾ðÊî Íò¾õ ¦ºöÂôÀθ¢ýÈÉ. Á¢¸ô À¨Æ áø¸Ç¢ý Àì¸í¸û ´ù¦Å¡ýÚõ „¢À¡ýº¢øì ±ýÈ Ð½¢ ´ð¼ôÀðÎô À¡Ð¸¡ì¸ôÀθ¢ÈÐ.


¦À¡Ð áĸò ШÈ¢ĢÕóÐ áø¸¨Çô ¦ÀÚŧ¾¡Î ¾É즸ýÚ áø §¾÷×ì ÌØ ´ý¨ÈÔõ þó¾ áĸõ ¦¸¡ñÎûÇÐ. þ¾ýãÄõ ¬ñΧ¾¡Úõ À¡¼ áø¸û, ¦ÅÇ¢¿¡ðÎ áø¸û §À¡ýȨŠší¸ôÀθ¢ýÈÉ. ¸¼ó¾ ¬ñÎ ÁðÎõ þó¾ Ũ¸Â¢ø 13 Äðºõ åÀ¡ö Á¾¢ôÒûÇ áø¸û Å¡í¸ôÀð¼É.


¸ýÉ¢Á¡Ã¡ áĸ Å¡º¸÷ Åð¼õ ±ýÈ ´ýÚ þÕ츢ÈÐ. þ¾üÌò ¾¨ÄÅ÷ ¯ûÇ¡÷. ¦ºÂüÌØ ¯ûÇÐ. ¬É¡ø þÐŨà Üð¼í¸û ²Ðõ Üð¼ô¦ÀÈÅ¢ø¨Ä. þó¾ áĸò¾¢üÌ 68 ¬Â¢Ãõ ¬Ôû ¯ÚôÀ¢É÷¸û ¯ûÇÉ÷. 36 ¬ñθǡö þó¾ áĸò¾¢ø À½¢Â¡üÈ¢ ÅÕõ áĸ÷ ¿.¸¢. ¿¼Ã¡ƒ¨Éî ºó¾¢òÐ Å¡º¸÷¸ÉÇô ÀüÈ¢ì §¸ð§¼¡õ.


''¦À¡ÐÅ¡¸ Å¡º¸÷¸û ¿øÄ ¦ºÂø§Å¸ò§¾¡Î þÕ츢ȡ÷¸û. þÂüÀ¢Âø, §Å¾¢Â¢Âø, ¯Â¢Ã¢Âø, ¸½¢ô¦À¡È¢Â¢Âø §À¡ýÈ «È¢Å¢Âø áø¸¨Ç «¾¢¸õ §À÷ Å¡º¢ì¸¢ýÈÉ÷. þ¾ü¸ÎòÐ þÄ츢Âõ ÅÕ¸¢ýÈÐ. «¾ý À¢ý ÅÃÄ¡Ú, ºÁÂõ §À¡ýȨŠÅÕ¸¢ýÈÉ.


¬É¡ø, ÀÄ Å¢§¿¡¾ Å¡º¸÷¸¨ÇÔõ ¿¡ý ºó¾¢ò¾¢Õ츢§Èý. º¢Ä÷ ¾¡û¸¨Çì ¸¢Æ¢òÐ ±ÎòÐî ¦ºýÚŢθ¢ýÈÉ÷. º¢Ä÷ ¾¢ÕÊ ±ÎòÐî ¦ºýÚûÇÉ÷. ¬Ú Á¡¾í¸û ¿¡í¸û §¾Ê§É¡õ. ¸¢¨¼ì¸Å¢ø¨Ä. À¢ÈÌ «Å÷¸§Ç ´Õ ¿¡û ¦¸¡ñÎ ÅóÐ ±Îò¾ þ¼ò¾¢§Ä§Â ¨ÅòÐûÇÉ÷. ¸¨Äó¾¢ÕìÌõ Òò¾¸í¸¨Ç «Îì¸ ¯¾×ÀÅ÷¸û ¯ñÎ. ¯Àò¾¢ÃÅõ ¦ºö§Å¡Õõ ¯ñÎ. º¢Ä Å¡º¸÷¸û àíÌÅÐõ ¯ñÎ. ¿¡õ ±ØôÀ¢É¡ø, 'º¢ó¾¨É ¦ºö¸¢§Èý ¦¾¡ó¾Ã× ¦ºö¡¾£÷¸û' ±ýÀ¡÷¸û. º¢Ä÷ «Æ¸¡É Òò¾¸í¸¨Çô §ÀÉ¡ì ¸ò¾¢Â¢É¡ø ¸ýÉ¡À¢ýÉ¡¦ÅýÚ ¸¢Æ¢òÐ ¨ÅôÀ¡÷¸û. («ôÀÊ ´Õ Òò¾¸ò¨¾ ±ÎòÐì ¸¡ðθ¢È¡÷.) «ôÀÊôÀð¼ ÁÉ §¿¡Â¡Ç¢¸Ùõ ¯ûÇÉ÷. ¸½¢ô¦À¡È¢Â¢ø ´Õ Äðºõ Òò¾¸í¸û ÀüȢ ŢÅÃí¸¨Çò ¦¾¡ÌòÐ ¨Åò§¾¡õ. ¸½¢É¢ Å¢„Âõ ¦¾Ã¢ó¾Å÷¸û ÅóÐ «Åü¨È «Æ¢òÐÅ¢ðÎ ²¾¡ÅÐ §À÷, °÷, ¸¨¾¸¨Ç¦ÂøÄ¡õ ±Ø¾¢ ¨Åò¾¢Õó¾É÷. ¿øħŨÇ¡¸, À¢Ã¾¡Éì ¸½¢ô¦À¡È¢Â¢ø «ó¾ò ¾¸Åø¸û þÕ󾾡ø ¾ôÀ¢ò§¾¡õ. þø¨Ä§Âø ¦ÀÕõ ¯¨ÆôÒ Å£½¡¸¢Â¢ÕìÌõ.


ƒ.².±Š., ³.À¢.±Š. §¾÷¦ÅØЧšâø º¢Ä÷ ´Õ Òò¾¸ò¨¾ ÁðÎõ ±ÎòÐô ÀÊôÀ¾¢ø¨Ä. ÀòÐô ÀýÉ¢ÃñÎ áø¸¨Ç ±ÎòÐ ¨ÅòÐ즸¡ûÅ¡÷¸û. «¾¢ø «Å÷¸û §¾÷ó¦¾Îò¾ À¡¼òÐìÌô ÒÈõÀ¡É áø¸Ùõ þÕìÌõ. §¸ð¼¡ø, '¿ñÀ÷ ÅÃô§À¡¸¢È¡÷. «ÅÕ측¸ ±ÎòШÅò¾¢Õ츢§Èý' ±ýÀ¡÷¸û.


º¢Ä÷ ¾ÉìÌò §¾¨ÅÂ¡É ¿øÄ Òò¾¸ò¨¾ì ¸ñ¼¡ø «¨¾ ¡Õõ ±Î측Áø þÕì¸ §ÅÚ áø Å⨺¸Ç¢ø ¦ºÕ¸¢¨ÅòÐÅ¢ðÎî ¦ºøÅ÷, À¢ýÉ÷ ¿¡í¸û àö¨Áô À½¢ ¦ºöÔõ §À¡Ð¾¡ý þó¾ Å¢„Âõ ±í¸ÙìÌò ¦¾Ã¢Ôõ. '±ÉìÌ þó¾ô Òò¾¸õ §¾¨Å. ±ÎòÐ ¨ÅÔí¸û' ±ýÈ¡ø, ¿¡í¸§Ç ±ÎòÐ ¨Åô§À¡õ. º¢Ä÷ Òò¾¸í¸¨Çô ÀüȢ ŢÁ÷ºÉí¸¨Ç «ó¾ô Òò¾¸ò¾¢§Ä§Â ¸¢Ú츢 ¨ÅôÀ¡÷¸û.'


º¢Ä÷ '±õôÇ¡ö¦Áñð ¿¢äŠ' §À¡ýÈÅüÈ¢ø ¦ÅÇ¢ÅÕõ Å¢ÇõÀÃí¸¨ÇÔõ «È¢Å¢ôÒ¸¨ÇÔõ ¸¢Æ¢òÐ ±ÎòÐî ¦ºýÚÅ¢ÎÅ÷. þ¾É¡ø ±ø§Ä¡ÕìÌõ þó¾ô Àò¾¢Ã¢¨¸ Àò¾¢ÃÁ¡¸ì ¸¢¨¼ì¸ «Åü¨Èô âðÊ ¨Åì¸ §ÅñÊ¢Õ츢ÈÐ. þÐ ¦¾Ã¢Â¡¾ º¢Ä÷, 'þ¨¾ô §À¡öô âðʨÅò¾¢Õ츢ȣ÷¸§Ç' ±ýÚ ÅÕò¾ôÀÎÅ¡÷¸û.


¾¢ÕôÀ¢ò ¾Õõ §¾¾¢¨Â þÃÅø áø¸Ç¢ø ¦À¡È¢ô§À¡õ. ´ÕÅ÷ ÌÈ¢ôÀ¢ð¼ §¾¾¢ìÌû ¾¢ÕôÀ¢ò ¾Ã¡Áø µÃ¡ñÎ ¸Æ¢òÐ ÅóÐ «Å§Ã ´Õ §¾¾¢¨Âô Òò¾¸ò¾¢ø ¦À¡È¢òÐì ¦¸¡ñÎÅóÐ ¾ó¾¡÷. «ó¾ò §¾¾¢Â¢ø §¾ÊÉ¡ø «ÅÃÐ áĸ «ð¨¼ ¸¢¨¼ì¸Å¢ø¨Ä. À¢È̾¡ý «ÅÃÐ §Å¨Ä «Ð ±ýÚ ¦¾Ã¢ó¾Ð.


±í¸Ç¢¼õ °Æ¢Â÷¸û ̨È×. ¾¨Ãò ¾Çò§¾¡Î §º÷òÐ ¿¡ýÌ ¾Çí¸Ç¢Öõ áø¸û ¯ñÎ. ±øÄ¡ô À¢Ã¢¨ÅÔõ ±ô§À¡Ðõ ¸ñ¸¡½¢ì¸ þÂÄ¡Ð. ¬¸§Å Å¡º¸÷¸û ¾í¸û ¦À¡Úô¨À ¯½÷óÐ ¦ºÂÄ¡üȢɡø ±í¸ÙìÌ Á¢¸ ¯¾Å¢Â¡ö þÕìÌõ'' ±ý¸¢È¡÷ ¿¼Ã¡ƒý.


þùÅÇ× ¦Àâ áĸòÐìÌ ´§Ã ´Õ ¦¾¡¨Ä§Àº¢¾¡ý ¯ûÇÐ. «¾ý ±ñ½¢ì¨¸¨Â «¾¢¸Ã¢ì¸Ä¡õ. ÍÁ¡÷ 1200 Å¡º¸÷¸û ¾¢Éõ§¾¡Úõ ÅÕõ þó¾ áĸò¾¢ø Å¡º¸÷¸û ÀÄ÷ ¿£ñ¼ §¿Ãõ «Á÷óÐ ÀÊôÀ¨¾ô À¡÷ì¸ ÓÊó¾Ð. ¸¨ÇôÀ¨¼Ôõ Å¡º¸÷¸û, §¾¿£÷ «Õó¾ì ܼ ÅÇ¡¸ò¨¾ Å¢ðÎ ¦ÅÇ¢§Â ¦ºøÄ §ÅñÊÔûÇÐ. «Å÷¸ÙìÌ µ÷ ¯½Å¸õ þíÌ «¨Áò¾¡ø ¯¾Å¢Â¡¸ þÕìÌõ ±ýÚ §¾¡ýÈ¢ÂÐ. ã¨Ç ºü§È ¸¨ÇôÀ¨¼Ôõ§À¡Ð º¢È¢Ð Å¢üÚìÌõ ®ÂôÀ¼§ÅñÎÁøÄÅ¡?


¾¢ÉÁ½¢ ¸¾¢÷, 23.4.2000

Wednesday, March 03, 2004

சாராயக் கடைகளையும் சாத்துங்கள்

மே மாதம் 18-ஆம் தேதி, செல்வி ஜெ.ஜெயலலிதா, நமது மூன்றாண்டுக் கால உத்தரவுகள் பலவற்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். அத்துடன் சில திட்டங்களை மேம்படுத்தினார்.
பொது விநியோக முறையில் "எச்' முத்திரை நீக்கம், அரிசி வாங்க கூப்பன் முறை ரத்து, குடும்ப அட்டை இல்லாதவருக்குப் புது அட்டை, விவசாயிகளுக்கும் குடிசை வாசிகளுக்கும் மீண்டும் இலவச மின்சாரம், அனைத்து விவசாய பம்பு செட்டுகளுக்கும் குடிசைகளுக்கும் மின்சார மீட்டர் முறை வாபஸ், சத்துணவுத் திட்டத்தில் கூடுதலாக முட்டை, அனைத்துப் பள்ளி மாணவர் களுக்கும் விடுமுறை நாளிலும் பஸ் பாஸ், அரசு ஊழியர் - ஆசிரியர் - தலைவர்கள் - பத்திரிகைகள - தொலைக்காட்சிகள் மீதான வழக்குகள் திரும்பப் பெறுதல், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் திரும்பப் பெறுதல் ஆகிய உத்தரவுகள், அவர் அறிக்கையில் முக்கிய இடம் பெற்றிருந்தன.

ஜெ. ஆட்சியில் அனைத்துமே மோசமான முடிவுகள் என்று சொல்லிவிட முடியாது. அநியாயக் கொள்ளை அடித்த தனியார் மணல் குவாரிதாரர்களிடமிருந்து அவற்றை மீட்டு அரசே நடத்தச் செய்தது, லாட்டரிகளைத் தடை செய்தது, கந்து வட்டியை ஒழித்தது, பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்தது... என அவர் ஆட்சியில் சில நல்ல உத்தரவுகளும் உண்டு. இவற்றில் அவர் கை வைக்காதது மிகச் சிறந்த முடிவு.

ஆனால், டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்யும் முடிவு, ஜெ. ஆட்சிக்குக் களங்கம் கற்பித்து வருகிறது. ஏற்கெனவே இருந்த அரசுகள், மதுவிற்கு அனுமதித்த போதும் அரசே ஏற்று நடத்தும் துணிச்சலை(!)ப் பெற்றதில்லை. தி.மு.க. அரசு, மதுவிலக்கை நீக்கியபோது இராஜாஜி, கொட்டும் மழையில் தி.மு.க. தலைவரைச் சந்தித்து அதை நிறுத்தக் கோரினார். ஆனால் அவர் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அப்போது முதல் மதுவிலக்கு நீக்கப்படுவதும் மீண்டும் அமுலாவதும் மாறி மாறி வந்தது. கள்ளச் சாராயத்தைக் காரணம் காட்டி மது விற்பனை நேரடியாக, வெளிப்படையாகக் கிடைக்கச் செய்தனர். மாநில அரசின் நிதி நிலையின் காரணமாகவும் மது விற்பனை நடந்தது. ஆனால், அரசே ஏற்று நடத்தும் ஒரு மோசமான முன்னுதாரணம் முன்னெப்போதும் இருந்ததில்லை.

"கள்ளுண்ணாமை'யை வலியுறுத்தும் வள்ளுவர், நமது பாடத் திட்டங்களில் உள்ளார். மதுவை எதிர்த்த காந்திஜி, நம் தேசத் தந்தை. அவருடைய படம், அரசு அலுவலகங்கள் பலவற்றிலும் உள்ளது. ரூபாய் நோட்டிலும் அவர் படத்தை அச்சிட்டுள்ளோம். அவர் படம் போட்ட பணத்தாளைக் கொடுத்து, அவர் எதிர்த்த பொருளை வாங்கிக் குடிக்கிறார்கள், நமது மக்கள். இதற்கு நமது அரசே உடந்தை யாகவும் இருந்து வாய்ப்புகளை ஏற்படுத்தியும் தருகிறது.

"மது, நாட்டுக்கு வீட்டுக்கு உடலுக்கு கேடு' என எல்லா டாஸ்மாக் அறிவிப்புப் பலகையிலும் எழுதப்பட்டுள்ளது. இத்தகைய கேட்டினை அரசு ஏன் செய்யவேண்டும்? மக்களுக்கு நல்வழி காட்டவேண்டிய அரசு, தார்மீக நெறிகளைப் போதிக்காவிட்டாலும் தீய வழிகளை காட்டாமலாவது இருக்கலாமே.

அரசுக்கு வருவாய் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். சிக்கல் இருக்குமிடத்தில் தீர்வு இல்லாமற் போகாது. தரிசு நில மேம்பாடு என்பது ஜெ. அரசின் சிறந்த திட்டங்களுள் ஒன்று. சிறந்த திட்டங்களை நேர்மையாக நடை முறைப்படுத்தினால் சிக்கல்களைத் தீர்க்கலாம். உடனடியாகத் தீர்க்க முடிய வில்லை என்பதற்காக, தீய வழிகளில் பொருள் திரட்டி ஆட்சியை நடத்துவது அடிப்படை நெறிகளுக்கு மாறானது.

கேளிக்கை, உயர்ரக இறக்குமதிகளுக்கு அதிக வரி விதித்தால் அதை அத்தகைய மக்கள் தாங்கக்கூடும் கொஞ்சம் சிந்தித்தால் பல வகைகளில் பணம் திரட்டலாம்.

சிறப்பான ஆட்சி என்பது எல்லாவற்றையும் இலவசமாக அளித்துவிடல் இல்லை; மக்களைச் சுயசார்பு கொண்டவர்களாக, தன்னிறைவு பெற்றவர்களாக, முழுமையான நாகரிகம் மிக்கவர்களாக மாற்றுவதே. ஒரு மக்கள் நல அரசு, இதற்குத்தான் முயற்சி எடுக்க வேண்டும்.
"உங்கள் அன்புச் சகோதரியின் ஆட்சி' என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லும் ஜெ, அந்த ஏழை-எளிய சகோதரிகள், மதுவினால் படும் துயரங்களை எண்ணிப் பார்க்கவேண்டும். மதுவினால் அணைந்த குடும்ப விளக்குகளும் இருண்ட வீடுகளும் எண்ணிலடங்காதவை.
ஒவ்வொரு நாளும் மது அரக்கனால் நரக வேதனை அனுப விக்கும் கோடிக்கணக்கான அன்புச் சகோதரிகளை ஜெ. ஒரு முறை நினைத்துப் பார்க்க வேண்டாமா? அடி-உதை பட்டு, காலி சாராய பாட்டில்களை விலைக்குப், போட்டு, சில்லரைக் காசுகளைக் கொண்டு வந்து உலை கொதிக்க உதவும் சிறுவர்களை சிறிது சிந்திக்க வேண்டாமா? இருந்தும் இல்லாத ஆடையுடனும் புத்தியுடனும் தெருவோரம், சாக்கடைக்கருகில் வீழ்ந்து கிடக்கும் "குடிமக்களின்' நாராச சொற்களுக்கு ஒரு விடிவுகாலம் வேண்டாமா? இந்த இழிந்த வாழ்விலிருந்து அவர்கள் மீள ஒரு வழிகாட்டவேண்டாமா?

இப்போதாவது அரசு சிந்திக்க வேண்டும். மதுக்கடைகளை அரசும் நடத்தக்கூடாது; தனியாரும் நடத்தக்கூடாது. கள்ளச் சாராயத்தையும் ஒழிக்கவேண்டும். மதுக்கடைகளைத் திறந்த பாவத்திற்குப் பரிகாரமாக அரசு, அந்த மதுக்கடை இருந்த இடங்களில் எல்லாம் போதை மீட்பு & மறுவாழ்வு மையங்களை அமைக்கவேண்டும்.

அப்போதுதான் தொண்டர்கள், அம்மா என்றழைக்கும் அந்தச் சொல்லுக்கு அர்த்தம் இருக்கும்.

Tuesday, March 02, 2004

சோனியா காந்தி இதுவரையும் - இனியும்

இந்திய தேசிய காங்கிரசுக்குப் புத்துணர்ச்சியூட்டி அது, ஆட்சிபீடம் ஏறக் காரணமாய் இருப்பவர் சோனியா காந்தி. 1996க்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தையும் வலிமையான தலைமையையும் இழந்த கட்சி; வங்காளத்திலிருந்து தமிழ்நாடு வரை துண்டு துண்டாக உடைந்த கட்சி; குழு மோதல்களுக்கும் உட்கட்சிப் பூசலுக்கும் பெயர்பெற்ற கட்சி....... என்ற பின்புலத்திýருந்த காங்கிரசைத் தலைநிமிரச் செய்திருக்கிறார், சோனியா.

யார் இந்த சோனியா?

அரசியல் என்றாலே அஞ்சி ஓடியவர்; நாத்தனார்- --மாமியார் சண்டையில் அல்லாடியவர்; திருமணமாகி வெகுகாலம் கழித்தே இந்தியக் குடியுரிமையைப் பெற்றவர்; விதவை; பதிபக்தி இல்லாதவர்; வெளிநாட்டுக்காரி; போஃபர்ஸ் ஊழலில் தொடர்புடையவராகக் கூறப்பட்ட குவோட்டரோச்சி; இந்திய நிலவரங்களைப் புரிந்து கொள்ளாதவர்; பேசத் தெரியாமல் உரையைப் படிப்பவர், சிலைக் கடத்தலுக்கு உதவியவர்..... என ஏராளமான குற்றச்சாட்டுகளை, பொதுவாழ்வுக்கு வந்த குறைந்த காலத்திலேயே சுமந்துகொண்டிருக்கிறார்.

உண்மையில் யார் இந்த சோனியா?

இத்தாலியில் டுரின் என்ற நகரத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது, ஓவசஞ்சோ கிராமம். இங்கு 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் பிறந்தார், சோனியா மெய்னோ என்கிற சோனியா காந்தி.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கச் சென்றபோது, அங்கு தன்னைவிட இரண்டு வயது மூத்த இராஜீவ் காந்தியைச் சோனியா சந்தித்தார். அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. 1968-இல் இராஜிவை மணந்து, பாரம்பரியமிக்க இந்திய அரச குடும்பத்தின் உறுப்பினரானார், சோனியா.

அதன்பிறகு சுமார் 30 ஆண்டுக்காலம், இந்தியாவில் ஏராளமான வெகுமுக்கிய அரசியல் நிகழ்வுகள் நடைபெற்றபோதும் அதில் சோனியா, அக்கறையோ ஆர்வமோ காட்டவில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று மட்டும் இருந்தார்.

இந்தியன் ஏர்லைன்ஸில் விமான ஓட்டியாக இருந்தார், இராஜிவ், அவருடைய சகோதரர் சஞ்சய் காந்தி 1980 இல் விமான விபத்தில் மரணமடைந்தார். அப்போது தம் தாயார் இந்திராகாந்திக்கு உதவும் பொருட்டு இராஜிவ், அரசியலுக்கு வந்தார். சோனியா, இதனால் கடும் அதிருப்திக்கும் வருத்தத்திற்கும் உள்ளானார். இதைக் குறித்து அவர் கூறியபோது, "முதல்முறையாக இராஜிவுக்கும் எனக்கும் இடையே சிக்கல் உருவானது. அவருக்காகவும் எங்களுக்காகவும் எங்கள் குழந்தைகளுக்காகவும், அனைத்திற்கும் மேலாக எங்கள் சுதந்திரத்துக்காகவும் ஒரு பெண்புலிபோல நான் அவருடன் மோதினேன்' என்கிறார்.

அதிகம் வெளியே வராதவர், சோனியா காந்தி. 1984-இல் அவருடைய மாமியார் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது, மக்களின் கவனம் சோனியா மீதும் சிறிது திரும்பியது. ஆனால், சோனியா, ஒரு குடும்பப் பெண்ணாக மட்டுமே காலம் கழித்தார்.

இராஜிவ், 1991 மே 21ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார் "சிறந்த தலைவர் இல்லாததால் கட்சியின் செல்வாக்கும் புகழும் இறங்கி வருகிறது. எனவே நீங்கள் வந்து பொறுப்பேற்க வேண்டும்' எனக் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் வற்புறுத்தினார்கள். ஆனால், சோனியா, ஓர் அடிப்படை உறுப்பினராகக் கூட கட்சியில் சேரவில்லை.

ஆயினும், 1997 இல் சோனியா, காங்கிரஸில் உறுப்பினரானார். 1998-இல் அதன் தலைவர் ஆனார். மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, இராஜிவ் காந்திக்குப் பிறகு, நேரு குடும்பத்திலிருந்து வந்த 5ஆம் தலைவர், சோனியா காந்தி. 1999-இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் சோனியா வெற்றி பெற்று, ஒரு பாராளுமன்ற உறுப்பினரானதோடு தேசிய அளவில் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.

தமக்கு எதிரான தமது எதிர்க்கட்சியினரின் "வெளிநாட்டுக்காரர்' என்ற பிரச்சாரத்தைச் சோனியா பெரிதும் அலட்சியம் செய்தார். அவர் 1968 இல் இந்தியாவில் தன் புகுந்த வீட்டுக்குள் நுழைந்தபோதும் 1983 இல்தான் இந்தியக் குடியுரிமை பெற்றார். இந்த நீண்ட இடைவெளிக்கு என்ன காரணம் என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். வெளிநாட்டினர், இந்தியாவில் உயர் பதவி வகிக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினர். இதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்தவேண்டும் என்றும் முயன்றனர்.

2004 தேர்தலில் "அந்நியர்' என்பது ஒரு தேர்தல் விவாதமாகவும் இருந்தது. ஆனால், மக்கள் அதைப் பொருட்படுத்தவே இல்லை. ஏற்கனவே, அன்னி பெசன்ட், அன்னை தெரசோ போன்றோரை. நாம் அந்நியர் என்று பார்க்கவில்லையே என்று மக்கள் நினைத்தனர்.

அரசியலின் மீது சோனியாவுக்கு இருந்த வெறுப்பைப் பற்றித் தாரிக் அலி எழுதும் போது, "இந்திய அரசியலில் ஈடுபடுவதை விட என் குழந்தைகள் பிச்சை எடுக்கலாம்' எனச் சோனியா கூறியுள்ளதாக எழுதினார்.

ஆனால், இப்போது ராகுல்காந்தி, அமேதி தொகுதியின் உறுப்பினராகப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளார். பிரியங்கா காந்தி, காங்கிரஸின் நட்சத்திரப் பிரச்சாரகர் ஆகிவிட்டார். எதிர்காலத்தில் அவர், இன்னோர் இந்திராகாந்தியாக வருவார் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

இப்போது நாட்டின் முன் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. சிறியது முதல் பெரியது வரை, பஞ்சாயத்திலிருந்து பாராளுமன்றம் வரை, அன்றாடம் தோன்றிவரும் சிக்கல்களை சோனியா எப்படிச் சமாளிக்கப் போகிறார்?

அயோத்திச் சிக்கல், காஷ்மீர், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, நதிநீர் இணைப்பு, காவிரிச் சிக்கல், தெலுங்கானா, நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், மனித உரிமைகள், வேலையில்லாத் திண்டாட்டம், இலஞ்ச ஊழல்..... போன்றவை சோனியாவின் முன் உள்ள சவால்கள்.

குறைவான அரசியல் அனுபவம், ஆட்சி அனுபவமின்மை போன்றவற்றால் சோனியா, மற்றவர்களின் உதவியை நாடவேண்டியிருக்கும். அந்த ஆலோசகர்களின் கைப்பாவையாக அவர் ஆகிவிடாமல் சுய சிந்தனையுடன் முடிவுகளை எடுக்க வேண்டியது மிக அவசியம்.

கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து, மாற்றுக் கருத்துக்கு மதிப்பளித்து, ஆரோக்கியமான அரசியலை அவர் நடைமுறைப்படுத்துவார் என்று எதிர்பார்ப்போம். பொது வாழ்வுக்கு வந்து மிகக் குறைந்த காலத்திலேயே சுதாரித்துக் கொண்டவர்; தம் தகுதிகளை வளர்த்துக்கொண்டவர்; தக்க ஆலோசகர்களையும் விசுவாசிகளையும் கொண்டிருப்பவர், நவீன இந்தியாவின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் கனவுகளையும் நிறைவேற்றுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Monday, March 01, 2004

வருக "கிராப்பு' தலை பெண்கள்!

அண்மையில் இலக்கியக் கூட்டமொன்று தொடங்கு முன் அரங்கின் முன் நண்பர்களுடன் குசலம் விசாரித்துக்கொண்டிருந்தேன். தற்செயலாகத் திரும்பினேன். "கிராப்பு' தலை, முழுக்கால் குழாய், சட்டையுடன் இளைஞர் ஒருவர் வந்துகொண்டிருந்தார். "அவரை எங்கோ பார்த்திருக்கிறோமே' என்று சிந்தித்தேன். அப்போது அவர் புன்னகைத்தார். அந்தச் சிரிப்பு, அவரை எனக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது. ஆறடி இல்லாவிட்டாலும் மூன்றடிக் கூந்தலுடன் முன்பு தோற்றமளித்த வாசகி அவர்.

பேச்சிலும் வாசிப்பிலும் சிந்தனையிலும் நிறைய மாற்றம் தெரிந்தது. "என்ன, ஆளே மாறிவிட்டீர்களே!' என்றபோது "ஏன், மாறக்கூடாதா?' என்று மடக்கினார்.

அதன்பிறகும் பல கூட்டங்களிலும் பொது இடங்களிலும் நான் தொடர்ந்து கவனித்த ஒன்று: பெண்கள், ஆண் தோற்றம் அடைந்து வருகிறார்கள் என்பது. முழுக்கால் குழாயும் சட்டையும் அணிவது, சென்னை போன்ற மாநகரங்களில் சர்வ சாதாரணம் தான். நெற்றியில் பொட்டு இல்லாமையும் வளையல் - தோடு - சங்கிலி போன்ற ஆபரணங்களைத் தவிர்ப்பதையும்கூட நான் பெரிய மாற்றமாகச் சொல்லிவில்லை. நான் சொல்ல வருவது பெண்களின் "கிராப்பு' அல்லது "பாப்' பற்றி.

தலைமுடி குறையக் குறைய, பெண்களின் ஆளுமைத் திறன் அதிகரித்திருப்பதாக நாம் கருதலாமா? இப்படி எண்ணியவுடன் அந்தக் கால அஞ்சல் தலைளகளில் சிரித்த எலிசபெத் மகாராணி என் மனக்கண்ணில் தோன்றினார். மேலைநாட்டுப் பெண்மணிகள் வரிசையாகத் தோன்றிக்கொண்டே இருந்தார்கள். இங்கும் இந்திராகாந்தி, பிரியங்கா, கிரன் பேடி, மாயாவதி, அருந்ததி ராய், ரோகிணி, லட்சுமி, சௌகார் ஜானகி, மாலதி மைத்ரி, தேன்மொழி... என மிக நீண்ட பட்டியலில் பெண்கள் அணிவகுத்தார்கள்.

தமிழ்நாட்டுப் பெண்களைப் பொறுத்தவரை, சாமிக்கு நேர்ந்து கொண்டாலோ, பெரிய அளவில் பேன்கள் இருந்தாலோதான் தலையில் கத்தி-கத்திரியை வைக்க விடுவார்கள். சிறிய வயதிலிருந்தே நீண்ட கூந்தல் வளர்ப்பதை ஒரு பெரிய வேலையாகச் செய்வோரே அதிகம். விட்டால் தானாக வளர்ந்துவிட்டுப் போகிறது. அதற்கு எதற்கு "அந்த எண்ணெய் இந்த ஷாம்பு' என்று இவ்வளவு ஆர்ப்பாட்டம்? அதைப் பராமரிப்பதில் உள்ள சிக்கல்களை எடுத்துச் சொன்னால் "பொம்பளைப் புள்ளைக்கித் தலையில நிறைய முடி இருந்தாத்தான் அழகு. பேசாமப் போங்க' என்று நம் வாயை அடைப்பார்கள்.

"ஆறடிக் கூந்தல் அள்ளி முடித்து' எனச் சொல்லி வைத்துவிட்டார்கள். நம் கவிஞர்களோ கூந்தலை மேகத்தோடும் கருப்பாக உள்ள அனைத்தோடும் ஒப்பிட்டு விட்டார்கள். பாஞ்சாலியோ, துச்சாதனன் - துரியோதனன் இரத்தத்தைப் பூசிய பிறகே கூந்தலை முடிவேன் எனச் சபதம் செய்தாள். அந்த இடைப்பட்ட காலத்தில் பாஞ்சாலி மிகவும் சிரமப்பட்டிருக்கவேண்டும்.

அதன் பிறகு பெரும்பாலும் பெண்கள், கூந்தலைப் பணயம் வைக்க எண்ணியதில்லை. சாமிக்கே நேர்ந்தாலும் கணவருக்கோ - பிள்ளைக்கோ மொட்டை அடித்து விடுவதாகத்தான் வேண்டுவது வழக்கம். இப்போது திருப்பதியில் நிறையத் தலைகள் தெரிகின்றனவே என்கிறீர்களா? அந்த அளப்பரிய தியாகத்தை என்னென்பது!?

"வைத்தால் கூந்தல், வழித்தால் மொட்டை' என்ற நிலையில்தான் தமிழ்ப் பெண்கள் இருந்தார்கள். இந்தக் "கிராப்பு', "பாப்' வகையறாக்கள், முழுக்க முழுக்க மேலைநாட்டு இறக்குமதிதான். இன்றைக்கும் பெரும்பான்மைப் பெண் குழந்தைகள் பாப் வெட்டுவது, இயல்பாகிவிட்டது. அழகு நிலையங்கள் பெருகி வரும் இக்காலத்தில் பெண்களின் தலையலங்காரம், அடிக்கடி மாறி வருகிறது. அதிலும் "கிராப்பு' வெட்டிக்கொண்ட பெண்களின் அழகு, கொஞ்சமும் குறையவில்லை. குறையாததோடு, நவீன அழகையும் அவர்களுக்குத் தருகிறது.

கூந்தலில் பிசுக்கு நீக்கிக் குளிப்பது, குளித்தபின் உலர வைப்பது, கூந்தலைப் பின்னுவது, அதில் மலர் அலங்காரம், சிடுக்கு-பேன் தொல்லை.... என ஏராளமான சிக்கல்கள் உள்ளன. மேலும் சிறப்பாகப் பின்னிவிட-பராமரிக்க வேறொருவர் உதவியும் தேவையாய் இருக்கிறது.

எதற்காக இத்தனை பாடு? அதிகமாக முடியிருப்பதால் சூரிய ஒளி நேரடியாகத் தலையில் படாமல் தலைமுடி, ஒரு கேடயமாகப் பயன்படுகிறது என்போர் உண்டு. இந்தக் கோடையில் வியர்வை பொங்கி, தலையில் அரிப்பெடுத்து, "சொரிந்தால் முடி கலையும், அழகு குலையுமென்று சொரியவும் முடியாமல் திண்டாடும் பெண்களுக்கு என்ன வழி?'

விலகி விலகி முத்தமிட்டுக்கொள்ளும் கத்திரிக்கோலின் இரு முனைகளும் கூந்தலின்மேல் சிறிய நடனம் புரியட்டுமே! அழகு என்பது கூந்தலில் மட்டும் இருப்பதில்லை; அது பெண்ணின் துணிவு மிகுந்த மனத்திலிருந்து பிறக்கிறது என்பது உலகத்திற்குப் புரியட்டுமே!!!