Saturday, April 10, 2004

கவிதாயினி தமிழச்சி

உலகம் எதிரெதிரில் பாதியாகப் பிரிந்து கிடக்கிறது இரவு-பகல், பொய்-உண்மை, அழுக்கு-தூய்மை, அநீதி-நீதி என எந்தப் பொருளை எடுத்தாலும் அதற்குச் சரிசமமான பொருண்மைகளோடு எதிர்த்தரப்பில் வேறொரு பொருள் இருக்கும். இவை இரண்டிற்கும் இடையே எப்போதும் போர் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. கவிதை, தான் உண்மையென்று நம்பும் ஒன்றையே எப்போதும் பேசும். எனவே, பொய்ம்மைக்கு எதிராகக் கவிதை, போரிட்டுக்கொண்டே இருக்கிறது.

கவிஞர்கள், தமக்கு வசதியான ஓர் இடத்தில் நின்றுகொண்டு இந்தப் போரினை நிகழ்த்துவார்கள். அந்த இடம், தேசியமாய் இருக்கலாம். இனவாதம் - மொழிவாதமாய் இருக்கலாம். சுதேசியப் பொருளாகவோ, பெண்ணடிமை எதிர்ப்பாகவோ ஏன், ஓசைக்கு எதிரான மௌனமாகவோ கூட இருக்கலாம். இந்த வரிசையில் தமிழச்சி எடுத்துக்கொண்ட இடம், கிராமம்.

எஞ்சோட்டுப் பெண் என்ற தொகுதி மூலம் அறிய வருகிற தமிழச்சியின் இயற்பெயர், த.சுமதி. ஒன்றுபட்ட இராமநாதபுரம் மாவட்டத்தின் மல்லாங்கிணறு என்ற கிராமத்தில் பிறந்தவர். சென்னை, இராணி மேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளர்.


செம்மண் புழுதிப் பொடிசுகள்
கம்மங்கூழ்...
சினை வயிற்றோடு
மேயும் சிவப்பி...
என் பெயர் எழுதிப் பார்த்த
நெட்டிலிங்கம்...
வெத்திலையின் மேல்
சுண்ணாம்பாய்க்
கருவேல மரத்தில் காந்தலுக்கு
ஒதுங்கும் கொக்கு...
என்னத்தா மெலிஞ்சிட்டியளே
என எதிர்ப்படுகையில்
விசாரிக்கும் கிடை ஆட்டுக் கிழவி
என எப்போழுதும் போலவே
இந்தக் கோடையிலும்
எனக்காக காத்திருக்கும்
எல்லாமும் இருக்கின்றன
என் பிறந்த ஊரில்...
ஒரு மாலை நேரத்து
மாரடைப்பில்
பாராமல் எனைப் பிரிந்த
என் அப்பாவைத் தவிர

ஊர்க்காட்சிப் பட்டியலை இப்படி முடித்ததால் ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்துவிட்டார், தமிழச்சி. வேறொரு கவிதையில்,

படப்பிடிப்பில் பங்கெடுப்பதற்காய்
வாடகைக்கு வரவழைக்கப்பட்ட
ஏழைக் குழந்தைபோல்
தவிப்பாய் இருக்கிறது எனக்கு, அப்பா
உங்களை இழந்துவிட்ட பிறகு

<க்ஷழ்>
என்கிறார். பிறிதொன்றில்,
<க்ஷழ்>
<ல்ழ்ங்><ண்>
இரத்தப் புற்றுநோய் கண்ட
இரண்டரை வயதுப் பெண் குழந்தையை
இழந்த பெற்றோரை எப்படி எதிர்கொள்ள...
தேற்றுவதற்குத் தோற்றுப்போன
வார்த்தைகளைத் தேடிய என்னிடம்
"தங்கச்சிப் பாப்பா சாமியாயிட்டா
இனிமேல்
சைக்கிளுக்குச் சண்டையில்லை' என்று
சுவரோரம் நிற்கும்
புது சைக்கிளைக் காட்டி
காதோரம் அதன் நான்கு வயது
அண்ணன் குதூகலிக் கையில்
சட்டென அழுகை வந்தது எனக்கு
சைக்கிள்
விடக் கற்றுக்கொண்ட புதிதில்
பிடிமானம் தவறி விழுந்து
ஆடுசதை பிய்ந்த காயம்
ஆறும் வரை அலுக்காமல்
தூக்கிச் சுமந்த
ஒரு துக்க நாளில்
மரணம் தூக்கிப்போன
என் அப்பாவை நினைத்து

<க்ஷழ்>
என்கிறார். இதிலும் ஒரே கல்லில் இரு கனிகளைப் பெற்று விடுகிறார். இப்படியாகப் பல கவிதைகளில் தம் தந்தை இறந்த சோகத்தை மிக வலிமையாக இறக்கி வைக்கிறார். தந்தையை எல்லையற்ற பாசத்தின் குறியீடாகவும் கிராம வாழ்வின் ஒட்டுமொத்த அடையாளமாகவும் சித்திரிப்பதில் வெற்றி பெறுகிறார். இவர் தந்தை 1996--:-1997 தி.மு.க. அமைச்சரவையில் கூட்டுறவு & வணிக வரித் துறை அமைச்சராக இருந்த வே. தங்க பாண்டியன். இப்போது மகளின் கவிதைகளில் அமர வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
<க்ஷழ்> <க்ஷழ்>
இந்த நூலை, வாழ்க்கை வரலாற்றுக் கவிதைகளின் தொகுப்பாகக் கருதலாம். ஏனெனில் தமிழச்சியின் மனம் கவர்ந்த பலரும் இந்நூலில் நிறைந்து நிற்கிறார்கள். தந்தையைப் போலவே தமக்கை, தோழி, உறவினர்கள், ஊர்க்காரர்கள் ரெயில் பயணி... எனப் பலருடனான அனுபவங்களை உணர்ந்து எழுதியுள்ளார். வெளியே தெரியாத வேர்களாம் இவர்களைக் கதாநாயகத் தன்மையுடன் விவரிக்கிறார். பத்திரிகைச் செய்தியும், தருமபுரியில் மாணவிகள் எரிக்கப்பட்டதும் இவரைக் கவிதை எழுதத் தூண்டியுள்ளன.
<க்ஷழ்> <க்ஷழ்>
மிக உயர்ந்த அச்சுத்தரத்தில் இந்நூல் வெளிவந்துள்ளது. இந்த அக்கறையும் முழுமையும் உலகத் தரத்திற்கு இந்நூலை எடுத்துச் செல்கின்றன. ஆனால், தமிழச்சியின் எழுத்து, இன்னும் கூர்மை யடைய வில்லை. வளவளவென்று எழுதும் தன்மை இருக்கிறது.
<க்ஷழ்>
<ல்ழ்ங்><ண்>
மோருக்கு வந்திருந்தால் / பரவாயில்லை.
பாலுக்கே வந்திருச்சே

என்ற சொலவடைக்கு இவர், நீண்ட விளக்கம் அளித்துள்ளார். எல்லாவற்றையும் விளக்கி எழுதுவது, கவிதை நடை ஆகாது. சுருக்கியும் குறிப்பாலும் உணர்த்துவதே சிறப்பு.
<க்ஷழ்> <க்ஷழ்>
தாமஸ் ஹார்டியின் ஆங்கிலக் கவிதையைத் தழுவித் தமிழில் எழுதியுள்ளார். இத்தகைய கவிதைகளைத் தனியே தொகுப்பதே நன்று. சொந்தக் கவிதைகளுடன் கலந்து வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
<க்ஷழ்> <க்ஷழ்>
சிறிய திருத்தங்களை அவர் மேற்கொண்டால் கவிதை, மேலும் சிறப்பாக வடிவம் பெறும்; வசீகரிக்கும். இந்தியாவிற்கு மட்டு மல்ல, இவர் கவிதைகளுக்கும் கிராமங்களே முதுகெலும்பு.
<க்ஷழ்> <க்ஷழ்>
தாழிலில் மத்து. ஒரு கயிற்றில் தமிழச்சி மறுகயிற்றில் கிராமம். கடையக் கடையத் திரண்டு வருகிறது கவிதை தித்திப்புடன்.
<க்ஷழ்>
<ல்ழ்ங்><ண்>
எனதூர்க்
கரிசல் மண்ணில் மல்லாந்து
வட்டார மொழி சுழிக்க
வடிவங்களின்
முகம் தொலைத்து
நதி நீராய்ப்
புரண்டோட வேணுமெனக்கு
இலக்கின்றி

என்கிறார் தமிழச்சி.
<க்ஷழ்> <க்ஷழ்>
ஜீவ நதியே வருக!
<ட்ழ்>
அமுதசுரபி, ஜூன் 2004

No comments: