<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6750589</id><updated>2011-11-23T08:00:49.176Z</updated><title type='text'>அண்ணாகண்ணன் கட்டுரைகள்</title><subtitle type='html'>பல்வேறு காலங்களில் - சூழல்களில் - கருப்பொருட்களில் நான் எழுதிய கட்டுரைகள், இதோ இங்கே.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>65</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-112507517641692259</id><published>2005-08-26T16:50:00.000Z</published><updated>2005-08-26T16:52:56.420Z</updated><title type='text'>இந்தப் பையன்தான் நான்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/3806/379/1600/std%20V%201.jpg"&gt;&lt;img style="float:centre; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3806/379/400/std%20V%201.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-112507517641692259?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/112507517641692259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=112507517641692259' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112507517641692259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112507517641692259'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/08/blog-post_26.html' title='இந்தப் பையன்தான் நான்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-112410764263819599</id><published>2005-08-15T12:04:00.000Z</published><updated>2005-08-15T12:07:22.646Z</updated><title type='text'>காந்தளகம் - 20 ஆண்டுகள்</title><content type='html'>புத்தக மதிப்புரை &lt;br /&gt;ஈழத் தமிழ் இலக்கியம் &lt;br /&gt;&lt;strong&gt;சக்தி வசந்தன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------&lt;br /&gt;நூல் : காந்தளகம் 20 ஆண்டுகள் &lt;br /&gt;ஆசிரியர் : கவிஞர் அண்ணா கண்ணன் &lt;br /&gt;வெளியீடு : காந்தளகம், &lt;br /&gt;824, அண்ணா சாலை, &lt;br /&gt;சென்னை-600 002. &lt;br /&gt;பக்கம்: 192 &lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------------&lt;br /&gt;எந்தத் தொழிலையும் வெறும் தொழிலாகவும் வியாபாரமாகவும் மட்டும் செய்யவும் முடியும். அதே தொழிலை செய்யும் விதத்தால், வெளிப்பாட்டுத் தரத்தால் ஒரு கலையாகவும், தவமாகவும், வேள்வியாகவும் இயற்றவும் முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;சென்னையிலுள்ள 'காந்தளகம்' என்ற பதிப்பகம், இரண்டாவது வகைக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது. அதன் சாதனைச் சரித்திரத்தைத்தான், இந்தக் 'காந்தளகம்-20 ஆண்டுகள்' என்ற அழகிய நூல் பல கோணங்களில் படமாக்கி உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;'காந்தளகம்' துவக்கத்தில் ஈழ மண்ணில் வேரூன்றியது. பின் 1980-ல் தமிழ்நாட்டில் கிளை பரப்பி-கடந்த இருபது ஆண்டுகளில்-அந்தக் கிளையே ஒரு பெருமரமாக வளர்ந்தோங்கி வாகை சூடி நிற்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;''ஈழத்திற்கோர் இலக்கியப் பாலம் அமைத்தது காந்தளகம்'' என்பது உண்மைதான். நம் வடலூர் வள்ளலாரிடம் வாதிட்ட ஈழத்து ஆறுமுக நாவலரின் படைப்புகளிலிருந்து, இன்றுள்ள செ.யோகநாதனின் படைப்புகள்வரை பலவற்றை அது வெளியிட்டு 'ஈழத்தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளது. இலக்கியத் துறையில் மட்டுமல்ல, கணினி, வர்த்தகம், வரலாறு போன்ற துறைகளிலும், அது குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றுத் துறையில் அது செய்துள்ள ஒரு சிறப்புமிக்கப் பணி, தமிழில் 'தேசப் பட'மென்றும் 'அட்லஸ்' என்றும் கூறப்படும் பூகோளப் படங்களை 'நிலவரை' என்ற புறநானூற்றுப் பெயரில் பகுதி பகுதியாக-வெகு நுட்பமாகத் தயாரித்துள்ளதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் ''மின்னம்பலத்தில் ஒரு நூல் அம்பல''மாக www.tamilnool.com என்ற ஒரு தளத்தை உருவாக்கி, தமிழ் நூல்கள் அனைத்தையும் துறைவாரியாகப் பிரித்ததும், 'காந்தளக'த்தின் தனிப் பெரும் சாதனைகளில் ஒன்றாகும். &lt;br /&gt;&lt;br /&gt;இதேபோல் தமிழ் இலக்கியத்தையும் கலாசாரத்தையும் கணினி அஞ்ஞானத்தையும் ஒரு புதிய நூற்றாண்டில் கொண்டு வந்து நிறுத்தி நிலைப்படுத்திய அருந்தொண்டை, அது பல ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டது என்ற செய்தி வியப்பளிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த வகையில் இதன் படைப்பாளியான மறவன் புலவு திரு.க.சச்சிதானந்தன் அவர்கட்கு, உலகத் தமிழர் அனைவருமே கடமைப்பட்டவராவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அவரது சாதனைகளில் பங்கு கொண்டோரிலிருந்து பார்த்து அனுபவித்தவர்கள் வரை பலரும் அவரது 'காந்தளக'த்தைப் பற்றி கூறியுள்ளக் கருத்துகளின் இனிய தொகுப்புதான் இந்த நூல். &lt;br /&gt;&lt;br /&gt;நூல் அமைப்பில் அச்சிலும், கட்டமைப்பிலும், தரத்திலும், திறத்திலும் 'காந்தளகம்' எப்போதுமே மற்றவர்கட்கு ஒரு முன்னோடியாக விளங்கும். அந்த ஓட்டத்தின் அழகை இதிலும் நம்மால் பார்க்க முடிகிறது. பயனுள்ள நூல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-112410764263819599?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/112410764263819599/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=112410764263819599' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112410764263819599'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112410764263819599'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/08/20.html' title='காந்தளகம் - 20 ஆண்டுகள்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-112307416878395800</id><published>2005-08-01T13:02:00.000Z</published><updated>2005-08-03T13:02:48.790Z</updated><title type='text'>கவிதாயினி மதுமிதா</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/3806/379/1600/madhu.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3806/379/320/madhu.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விக்கிரமாதித்யனின் அதிசய சிம்மாசனம் ஒரு நிலத்தில் புதைந்திருந்தது; காவலன் ஒருவன், அதன் மேல் நின்றான். அவனிடம் பரிவும் விருந்தோம்பலும் இன்னபிற நற்குணங்களும் நிறைந்திருந்தன. அந்தப் பீடத்திலிருந்து இறங்கினான்; மறுநொடி அந்த நற்குணங்கள் யாவும் அவனை விட்டு நீங்கின. இப்படி ஒரு கதை உண்டு. அது, உண்மையோ? பொய்யோ? இங்கே அதை ஒரு தொன்மக் குறியீடாய்க் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வகையில் காதலும் அந்தச் சிம்மாசனம் போலத்தான். காதலின் மேல் நிற்கும்போது நிற்பவர், இந்த உலகையே மறந்துவிடுவார். நல்லவராகவும் வல்லவராகவும் மாறிவிடுவார். குறிப்பிட்ட இருவர் மட்டுமே நிறைந்த, முற்றிலும் ஏகாந்தமான உலகம் ஒன்றிற்குள் நுழைந்துவிடுவார்கள். பிரபஞ்சப் பொருட்கள் யாவும் அவர்களின் ஏவலுக்குக் காத்திருக்கும். ஈருயிர் ஓருயிராகும் பரிணாமத்தில் கூடலும் ஊடலும் கனவும் கற்பனையும் மெளனமும் பிதற்றலுமாய் ஒரு பித்து நிலையில் சஞ்சரிப்பார்கள். அது, ஒரு வகை அதீத உலகம். அங்கே எதுவும் இயல்பாய் இருக்காது. பனித்துளிக்குள் பிரபஞ்சத்தையே காண்பது போல் களிகூத்து நிகழ்த்துவார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;காதல் கவிதைகளுக்குள் சில பொதுவான இயல்புகள் உண்டு. 'கடைக்கண்ணால் பார்; மரணத்தை வெல்கிறேன்', 'கிளுகிளுவெனச் சிரி; கிழக்குடன் போட்டியிடுகிறேன்', 'பார்வையால் என்னைக் கொல்கிறாய்', 'பசி இல்லை', 'துயில் இல்லை', 'உன்னைக் காணாமல் (வளையல்/ கைக்கடிகாரம் கழலும் அளவுக்கு) இளைக்கிறேன்', 'உடனே உன்னைப் பார்க்காவிட்டால் உயிர் உடலை விட்டுப் போய்விடும்', &lt;br /&gt;&lt;br /&gt;'என் மனம் என்னிடம் இல்லை, உன்னிடம் வந்துவிட்டது', 'விலகாதே! எப்போதும் என் பக்கத்திலேயே இரு', 'விலகியிருக்கிறாய், தனிமையின் வெப்பம் தகிக்கிறது', 'என் துணையே, உனக்குத் துயரா? தொல்லைசெய்யும் ஆளைக் காட்டு, கீசிடுறேன்', 'உனக்காக எதுவும் செய்வேன், உயிரும் கொடுப்பேன்'....... எனக் காதலர்களின் ஒவ்வோர் அசைவையும் கவனியுங்கள். அவை, ஒரு தனித்த தளத்தில் இருந்தே எழுகின்றன. காதலர்கள் பெரும்பாலும் தரையில் நிற்பதில்லை; மிதக்கிறார்கள். அந்த மனோ நிலையைத் தக்க வைப்பதே, காதல் கவிதைகளின் பணியாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவை அல்லாமல், வருணனைகளும் காதல் கவிதைகளின் பெரும்பகுதியைப் பிடித்து வைத்துள்ளன. உறுப்பு வருணனைகள், குரல்- நிழல்- பண்பு, நிமிர்ந்தது, குனிந்தது, நடந்தது ... என எதையும் விடாமல் வருணிக்கிறார்கள். புற வாழ்வில் அழுக்கு என்றும் குப்பை என்றும் கருதப்பெறும் பலவும் காதலர் உலகில் விலைமதிக்க முடியாதவை ஆகின்றன. காதலியின் ஒற்றை முடி, நகத் துண்டு ஆகியவற்றைக் காதலன் போற்றிப் பாதுகாக்கிறான். காதலன் சூட்டிய பூ காய்ந்து சருகானாலும் காதலி அதைத் தூக்கி எறிவதில்லை. இந்தப் பொருள்களையே இப்படிப் பாதுகாத்தால் பரிசுப் பொருள்களை எப்படிப் பாதுகாப்பார்கள்! &lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் உயிரோடு இருக்கும் காதலுக்குப் பொருந்தும். இணையில் ஒருவர் மறைந்தாலோ, பிரிந்தாலோ, தொலைந்தாலோ, அந்த இன்னொருவர், கொடுந்துன்பத்திற்கு உள்ளாவார். மகிழ்வின் உச்சத்தில் இருந்த நிலை மாறி, இப்போது அதற்கு நேர் எதிராய்த் துன்ப சாகரத்தின் ஆழத்தைத் தொட்டுவிடுவார். துணையின் ஒருவர் பிரிந்தால், இன்னொருவருக்கு உலகமே தலைகீழாக மாறிவிடுகிறது. ஒருதலைக் காதலும் இந்த வரிசையில் வைக்கத் தக்கதே. துன்பியல் காதல் கவிதைகளில் மரணம் என்ற சொல் உறுதியாக இருக்கும். சொல் மட்டுமா? &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக் காதலின் இயல்புகளையும் அறிகுறிகளையும் சொல்லக் காரணம் என்ன? தமிழில் வெளிவந்திருக்கும் இலட்சக்கணக்கான காதல் கவிதைகளின் சாரமே, இவை. இத்தகைய கூறுகள் இல்லாமல் எந்தக் கவிதையும் இல்லை. இந்த உணர்வுகளைத்தான் காதல் கவிஞர்கள், வெவ்வேறு சொற்களில், வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு ஆட்களின் முன் வெளிப்படுத்தி வருகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சங்க காலத்திலிருந்து வெவ்வேறு அலைவரிசைகளில் தொடரும் இந்த மரபு, இன்று வரை இடைவெளி இல்லாமல் நீடித்து வருகிறது. அந்த மரபில் வருகிறார், மதுமிதா (41).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சற்றே தலை சாய்ப்பாய்&lt;br /&gt;முடிக்கற்றை நெற்றியில் வந்து&lt;br /&gt;அழகாய் அழகு சேர்க்கும்&lt;br /&gt;&lt;br /&gt;லேசாக ஒதுக்குவாய்&lt;br /&gt;கையை எடுக்கும் முன்பே&lt;br /&gt;அதே இடத்தில் அரைநொடியில்&lt;br /&gt;அசைந்தாடி வந்து நிற்கும் அழகு முடி&lt;br /&gt;&lt;br /&gt;என்னை நலம் விசாரிக்க&lt;/em&gt;&lt;br /&gt;- என அழகியலோடு கவிதை பாடத் தெரிந்திருக்கிறது, இவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;மனமெனும் சாதனத்தை&lt;br /&gt; என் செய்வேன்&lt;br /&gt; முடியைக் கட்டி&lt;br /&gt; மலையை இழுப்பதாய்&lt;br /&gt; உன்னில் பிணைத்துள்ளேன்&lt;/em&gt;&lt;br /&gt;- என அற்புதமாக வடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;விழியால் &lt;br /&gt;முழுதாய் &lt;br /&gt;விழுங்கி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;செரிக்க இயலவில்லை&lt;br /&gt;உன் நினைவை&lt;/em&gt;&lt;br /&gt;- என்கிற போதும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சற்றே தலைசாய்த்து&lt;br /&gt;சிறு பார்வை பார்த்தாய்&lt;br /&gt;மனம்&lt;br /&gt;பெரு வெள்ளத்தில்&lt;br /&gt;அடித்துச் செல்லப்பட்டு விட்டது&lt;/em&gt;&lt;br /&gt;- என்கிற போதும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"பேச வேண்டாம்"&lt;br /&gt;என சொல்லிவிட்டு&lt;br /&gt;ஒருநாள் முடிவதற்குள்&lt;br /&gt;பரிதவித்து&lt;br /&gt;"ஒரு வருடம் ஆனது போலிருக்கிறது"&lt;br /&gt;என நான் சொல்ல&lt;br /&gt;அருகில் ஒன்று சேர்த்து&lt;br /&gt;"இல்லை 11 வருடம் போலிருக்கிறது"&lt;br /&gt;என நீ சொல்ல&lt;br /&gt;அனலில் விழுந்த புழுபோல் துடித்ததாக&lt;br /&gt;இருவரும் உணர்ந்தோமே&lt;br /&gt;ஞாபகம் இருக்கிறதா???&lt;/em&gt;&lt;br /&gt;- என்கிற போதும் காதலின் அதீத மனோநிலையை அடையாளம் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல், உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா? இது, நெடுங்காலமாக நிலவும் ஒரு கேள்வி. உடல் சார்ந்ததைக் காமம் என இக்காலத்தில் அழைக்கிறோம். உடல் சார்ந்ததாய் இருப்பது தரக் குறைவு என்றும் பலர் கருதுகின்றனர். இது, அவர்களின் சொந்தக் கருத்து அன்று. இந்தச் சமுதாயமும் ஊடகங்களும் அந்தக் கருத்தை ஆழமாக விதைத்துள்ளன. காதல், மனம் சார்ந்தது என்பது பெரும்பாலோர் கருத்து. அப்படியானால் மனம் மட்டுமே சார்ந்ததா? அவ்விதம் இல்லை. மனத்திற்கும் உடலுக்கும் காதலில் சரிசமமான இடம் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;பார்வையாலோ, உடலாலோ தீண்டுதல், காதலுக்குத் தூண்டுதல் ஆகிவிடுகிறது. தொலைதூரத்தில் இருக்கிற, பார்க்காத இருவரிடையே காதல் சாத்தியமே. அவர்கள் தொலைபேசியில் குரல்வழியே, காதலைப் பகிரலாம். அந்த வசதியும் இல்லாதோர், கடிதம் மூலம் பகிர்கிறார்கள். இங்கும் கடிதத்தின் சொற்கள், குரலாக மாறி மனத்தில் ஒலிக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். எப்போது குரல் ஒலிக்கிறதோ, அப்போதே அது உடலோடு தொடர்பு உடையதாகி விடுகிறது. புகைப்படமோ, ஓவியமோ கூட உருவத்தை எடுத்துச் செல்லும் ஊடகங்களே. &lt;br /&gt;&lt;br /&gt;பார்வையற்றவர்களிடையே கூட குரலும் தீண்டுதலும் முக்கிய இடம் பெறுகின்றன. செவிப்புலனும் பார்வையும் ஒரே நேரத்தில் இழந்தவர்களும் தீண்டுதலால் காதலைப் பரிமாறுகின்றனர். தொலைதூரத்தில் இருந்து கடிதம் கூட எழுதிக்கொள்ளாமல், எந்தத் தூதுவரும் இல்லாமல் இருவர் காதலிக்க முடியுமா? ஒரே நேரத்தில் ஒரே மாதிரி இருவர் சிந்தித்து உள்ளனர்; உரையாடியும் உள்ளனர். இதை டெலிபதி என்கின்றனர். அப்படிப்பட்ட காதலர் யாரேனும் உண்டா என்கிற தகவல் இல்லை. அப்படி இருந்தால் அது, மனம் மட்டுமே தொடர்புடைய காதல் என ஏற்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இதிலிருந்து நமக்குத் தெரிவது, உடலின் பங்கு சிறிதளவேனும் இல்லாமல் காதல் சாத்தியமில்லை என்பதே. ஆயினும் நம் மக்களின் புற மனத்தில் முத்தமிடுதல், தீண்டுதல், அணைத்தல் உள்ளிட்ட காதற் செயல்பாடுகள், தவறு என்று பதிந்துள்ளன. அவை இல்லாமல் காதல் சுவைக்காது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;என் &lt;br /&gt;இடது கன்னம் உணர்வது&lt;br /&gt;குளிர் தென்றலா&lt;br /&gt;பனித்துளியா&lt;br /&gt;உன் இதழா என்பதை &lt;br /&gt;அறியும் முன்னே&lt;br /&gt;&lt;br /&gt;விடைபெறும் கணம்&lt;br /&gt;முடிந்து விட்டது&lt;/em&gt;&lt;br /&gt;- என்ற வரிகளிலும் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;செவ்விதழ்கள் பரிசளித்த ஒற்றைவரி&lt;br /&gt;இப்போது விழிகளில் பார்&lt;br /&gt;எத்தனை செவ்வரிகள்&lt;/em&gt;&lt;br /&gt;- என்ற வரிகளிலும் தீண்டுதலின் பங்கு வெளிப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;எத்தனை ஓசைகள்&lt;br /&gt;இருந்தாலும்&lt;br /&gt;&lt;br /&gt;உனது &lt;br /&gt;சுவாசத்தின் சப்த &lt;br /&gt;அலைவரிசை மாற்றம்&lt;br /&gt;அறிந்து&lt;br /&gt;&lt;br /&gt;உன் உணர்வின்&lt;br /&gt;லயத்தைத்&lt;br /&gt;தெரிந்து கொள்வேன்&lt;/em&gt;&lt;br /&gt;- என்ற கவிதையும் தனியே குறிப்பிடத்தக்கது. மதுமிதாவின் பல கவிதைகளிலும் தனிமை, முக்கிய இடம் வகிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;தவிக்கத் தவிக்க&lt;br /&gt;தனியே விட்டுச் சென்றாய்&lt;br /&gt;கொடிது கொடிது&lt;br /&gt;தனிமை கொடிது&lt;br /&gt;அதனினும் கொடிது&lt;br /&gt;இளமையில் தனிமை&lt;/em&gt;&lt;br /&gt;- என்ற வரிகளும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சிறிதும் இரக்கமின்றி&lt;br /&gt;எதிர்வரும் தனிமை,&lt;br /&gt;கழுத்தை நெரிக்கும்&lt;br /&gt;ஆவேசத்துடன்&lt;/em&gt;&lt;br /&gt;- என்ற வரிகளும் எதை உணர்த்துகின்றன என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். நினைவுகளின் ஊசலாட்டம், சுமை, தீவிரம் ஆகியவற்றைப் பல கவிதைகள் படம் பிடித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;முரண்டு செய்து &lt;br /&gt;அடம் பிடித்து&lt;br /&gt;விடாமல் உன்னினைவைப்&lt;br /&gt;பிடிவாதமாய் பற்றிக் கொண்டு&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் காலம் புரியாது&lt;br /&gt;தலை கீழாய்த்&lt;br /&gt;தொங்குகிறது&lt;br /&gt;வௌவால் மனசு &lt;/em&gt;&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;மனம் ஒரு உடும்புதான்&lt;br /&gt;விடாமல் உன்னையே&lt;br /&gt;இறுகப் பற்றிக் கொண்டுள்ளதே...!&lt;/em&gt;&lt;br /&gt;- என்றும் அது வெளிப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;காதல் கவிதைகளை நூற்றுக் கணக்கில் எழுதித் தள்ளியிருக்கிறார், மதுமிதா. இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்கள் இதற்கென இரவும் பகலுமாய் உழைத்துக்கொண்டிருக்க, இங்கு இவர் தனியே ஆலாபனை செய்து வருகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ஒரு மென்மையான தொனியில், வலிக்காத வார்த்தைகளில், பொங்கிவரும் உணர்வலைகள் பதிவாகியுள்ளன. நல்ல கவிதைகள் பல இருந்தாலும் கூட, வெறும் சம்பவங்களும் விவரிப்புகளும் மிகுந்துள்ளன. நடையில் உரைநடை இழையோடுகிறது. அதீத உணர்வுகளைப் பேசும் போது கவிதை, தனித்த நடையைக் கையாளுவது நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;நட்பினும் பெரிது&lt;br /&gt;காமம் கடந்தது&lt;br /&gt;காதலும் அன்று&lt;br /&gt;&lt;br /&gt;அன்பே&lt;br /&gt;என்ன பெயர் வைக்கலாம்&lt;br /&gt;நமதன்பிற்கு&lt;/em&gt;&lt;br /&gt;- என்கிற கவிதையில், 'நமதன்பிற்கு' என்ற சொற்களைவிட 'இதற்கு' என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;அறுபத்தி ஐந்து ஆண்கள்&lt;br /&gt;இருபத்தி இரண்டு பெண்கள்&lt;br /&gt;பதிமூன்று சிறுவர்கள்&lt;br /&gt;ஐந்து நாய்&lt;br /&gt;ஏழு காகம்&lt;br /&gt;இரண்டு நண்டு&lt;br /&gt;மூன்று குதிரை&lt;br /&gt;கடந்து சென்ற&lt;br /&gt;இவற்றைக் கேள்&lt;br /&gt;காத்திருந்த&lt;br /&gt;நேரம் முழுவதும்&lt;br /&gt;உன்னை வாழ்த்தியதை&lt;br /&gt;அவையேனும்&lt;br /&gt;உனக்குச் சொல்லட்டும்&lt;/em&gt;&lt;br /&gt;- என்று ஒன்றை எழுதியுள்ளார். இதில் அடிப்படைப் பிழை ஒன்று உள்ளது. காதலன் (என்று வைத்துக்கொள்வோம்); சொன்னபடி வரவில்லை, காத்திருக்க வைத்துவிட்டான்; அதற்காக அவனைக் காதலி திட்டவில்லை, வாழ்த்துகிறாள்; சரி அவள் திட்டவே முடியாத அளவுக்கு நேசம் வைத்திருக்கிறாள் என்றே இருக்கட்டும். படைப்பில் உள்ள 'நேரம் முழுவதும்' என்ற சொற்கள் உண்மையானவை இல்லை. ஏனெனில், தெருவில் கடந்துசென்றவற்றைத் துல்லியமாய்க் கணக்கெடுக்கிற காதலி, கணக்கெடுக்கும் நேரத்தில் காதலனை வாழ்த்தவில்லை. வாழ்த்திக்கொண்டே கணக்கு எடுத்திருந்தால் கணக்கு துல்லியமானது இல்லை. இரண்டு வேலைகளை அவள் ஒரே நேரத்தில் செய்ய வல்லவள் எனக் கொண்டாலும், முழு மனத்தையும் காதலனிடம் அவள் செலுத்தவில்லை எனப் புலனாகிறது. எனவே, 'நேரம் முழுவதும்' என்ற சொற்கள், அவளுக்கு எதிராக இயங்குகின்றன. அதிலும் காதலனுக்குக் காதலி மேல் நம்பிக்கை இல்லையா, என்ன? கடந்து சென்றவற்றிடம் எதற்காகக் கேட்கவேண்டும்? &lt;br /&gt;&lt;br /&gt;கவிதை, உணர்வுத் தளத்திலிருந்து அறிவுத் தளத்திற்குச் செல்லும்போது இத்தகைய சிக்கல்கள் வருவது இயல்பு. இவற்றை மதுமிதா, கவனிக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;காதல் கவிதைகளைத் தவிர, மதுமிதா, பொதுக் கவிதைகளும் பல இயற்றியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கேட்ட கடைகளில் எல்லாமே &lt;br /&gt;சில்லரை இல்லை என&lt;br /&gt;ஒரே பதில்தான் கிடைக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த பட்சம்&lt;br /&gt;ஒரு ரூபாய்க்கான சாக்லேட்டாவது&lt;br /&gt;வாங்காதவரை&lt;/em&gt;&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;எந்த வெளிச்சத்தில்&lt;br /&gt;எந்தக் கோணத்தில்&lt;br /&gt;எடுத்தாலும்&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணாடியில் &lt;br /&gt;தோன்றும் அழகை&lt;br /&gt;எப்போதும்&lt;br /&gt;பிரதிபலிப்பதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;கேமெரா பிடித்துத் தள்ளும்&lt;br /&gt;எந்தப் புகைப்படமும்&lt;/em&gt;&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கோடி புண்ணியம் &lt;br /&gt;கோபுர தரிசனம்&lt;br /&gt;&lt;br /&gt;காலம் காலமாய்&lt;br /&gt;சந்ததிகளுக்கான இடங்களைப்&lt;br /&gt;பாதுகாத்தவண்ணம்&lt;br /&gt;வரிசைகளில்&lt;br /&gt;ஒரு தலைமுறையினர்&lt;br /&gt;தட்டுக்களை ஏந்தியபடி&lt;br /&gt;கோபுர வாசலில்&lt;br /&gt;&lt;br /&gt;கோபுர தரிசனம்&lt;br /&gt;கோடி புண்ணியம்&lt;/em&gt;&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;வேப்பம் பூவின் வாசம் சேர்த்து&lt;br /&gt;தடதடத்தவண்ணம்&lt;br /&gt;ஓடும் லாரியின் ஓசையைச் சுமந்து&lt;br /&gt;செல்லும் காற்றின்&lt;br /&gt;அதிர்வுடன் ஒத்திசைந்து ஆடும் &lt;br /&gt;திரைச் சீலை&lt;br /&gt;&lt;br /&gt;எதனைக் காட்டலாம்&lt;br /&gt;எதனை மறைக்கலாம்&lt;br /&gt;என்னும் பரிதவிப்புடன்...&lt;/em&gt;&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;காற்று வருடிவிடுகிறது&lt;br /&gt;பெயர் பொறிக்கப்பட்ட &lt;br /&gt;மரத்தின் வடுவை&lt;/em&gt;&lt;br /&gt;- என்றும் அழகிய, பொருள் உள்ள கவிதைகளை இயற்றியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;மதுமிதா, சுதந்தரப் போராட்டத் தியாகி அரங்கசாமி ராஜாவின் பெயர்த்தி. தென்காசியில் பிறந்து, இராஜபாளையத்தில் வாழ்ந்து, சென்னையில் வசிக்கிறார். மெளனமாய் உன்முன்னே... என்ற கவிதை நூலைப் படைத்துள்ளார். பர்த்ருஹரியாரின் தத்துவங்களைச் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். அது, நீதி சதகம் என்ற நூலாக வெளிவந்துள்ளது. இவர், சமூகப் பணிகளிலும் ஈடுபாடுள்ளவர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;பொறுமை பழகிட&lt;br /&gt;கோவிலில்&lt;br /&gt;அடிப் பிரதட்சணம்&lt;br /&gt;செய்திட வேண்டாம்&lt;br /&gt;&lt;br /&gt;நகரச் சாலையில்&lt;br /&gt;சிக்னலில்&lt;br /&gt;காத்திருந்தால் போதும்&lt;/em&gt;&lt;br /&gt;-என்கிறார் மதுமிதா.&lt;br /&gt;&lt;br /&gt;பச்சை விளக்கு எரிகிறது. பயணத்தைத் தொடருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-112307416878395800?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/112307416878395800/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=112307416878395800' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112307416878395800'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112307416878395800'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/08/blog-post.html' title='கவிதாயினி மதுமிதா'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-112307556654454082</id><published>2005-07-31T13:25:00.000Z</published><updated>2005-08-03T13:26:06.556Z</updated><title type='text'>இ.வி.சிங்கன் காரைக்குடிப் பயண அனுபவங்கள்- ஒரு பார்வை</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/3806/379/1600/scan001E5.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3806/379/320/scan001E5.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(1999ஆம் ஆண்டு மறவன்புலவு க. சச்சிதானந்தன், இ.வி.சிங்கனின் காரைக்குடி பயண அனுபவங்கள் என்ற நூலை என்னிடம் அளித்தார். அதற்கு ஒரு மதிப்புரை வழங்கக் கேட்டார். எழுதிக் கொடுத்தேன். இவ்வாறு பத்து மதிப்புரைகளை இ.வி.சிங்கன் பெற்றார். அவற்றை, 'புத்தகத்தை மதிப்புரை திறனாய்வு செய்வது எப்படி?' என்ற தலைப்பில் 2000ஆம் ஆண்டு ஒரு நூலாகவே வெளியிட்டார். அதில், என் மதிப்புரையைத் தவிர, மா.வழித்துணைவன், முனைவர் சுப.திண்ணப்பன், செ.ப.பன்னீர்செல்வம், இரா. அன்பழகன், பாத்தேறல் இளமாறன், முனைவர் லெட்சுமி மீனாட்சி சுந்தரம், முனைவர் ந.சுப்புரெட்டியார், முனைவர் எம். முத்துராமன் ஆகியோரின் மதிப்புரைகளும் இடம்பெற்றுள்ளன. அந்த நூல் குறித்தான என் மதிப்புரையை இங்கு தருகிறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;இந்நூல், இரண்டு நூல்களின் தொகுப்பாக அமைந்திருக்கிறது. சிங்கப்பூர் வாழ்த் தமிழரான இ.வி.சிங்கன், காரைக்குடி, காட்மாண்டு ஆகிய நகரங்களுக்குத் தான் மேற்கொண்ட பயணத்தைப் பற்றி, அங்குலம் அங்குலமாக விவரித்திருக்கிறார். முதற்பகுதியான காரைக்குடிப் பயணம், பக்கங்களின் இயல்பாக 1,2,3 எனத் தொடங்கி, 45இல் முடிகிறது. இரண்டாம் பகுதியான காட்மாண்டுப் பயணம், உருது, அரபு, பாரசீக மொழிகளின் இயல்பைப் போலக் கடைசிப் பக்கத்தில் இருந்து தொடங்கி, உள்ளே வந்து முடிகிறது. அதை அவர் முதல் பகுதி முடிந்தவுடன், முறையாக ஒரு தாள் விட்டு, 1,2,3 எனத் தொடங்கியிருந்தால், தமிழ் வாசகர்கள் அவர் எழுத்தை எளிதாகத் தொடர்வதற்கு வசதியாய் இருந்திருக்கும். இது நூலின் பக்க அமைப்பைப் பற்றிய கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியருக்கு மிகவும் இயல்பான எழுத்து நடை கைவந்திருக்கிறது. படிப்பதற்கும் அது சுவையாக இருக்கிறது. காரைக்குடிப் பகுதிக்கு வருவதற்கு, அவருக்குக் குழந்தைப் பருவம் முதலே ஆர்வம் இருந்தது என்பதை அழகாக விவரிக்கிறார். அவர் எழுதுகிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கள் வீட்டில் செட்டிநாட்டில் இருந்து வந்த ஒரு சமையல்காரன் இருந்தான். அவனுடன் ஆடு, மாடுகளைப் பற்றி அடிக்கடி பேசுவதில் தணியாத ஆர்வம், எனக்கு இருந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாடுகள், வெள்ளை, கறுப்பு, சாம்பல் போன்ற நிறங்களில் இருந்தன. "சிவப்பு, பச்சை, நீல நிறங்களில் மாடுகள் இருக்கின்றனவா?" என்று நான் சமையல்காரனைக் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் பரபரப்பாகச் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த போதும், மிகுந்த உற்சாகத்துடன், "எங்கள் ஊரில் இருக்கின்றன" என்று அடித்துச் சொன்னான். அது எனக்குத் திகைப்பூட்டியது."&lt;br /&gt;&lt;br /&gt;காரைக்குடியில் உள்ள இராமசாமி தமிழ்க் கல்லூரியில் திரு. இ.வி.சிங்கன் ஆற்றிய உரை, அதற்கான எதிர்வினைகள், கடிதங்கள், கல்லூரியின் பார்வையாளர் பதிவேட்டில் அவர் எழுதிய கருத்துரை உட்பட அனைத்தையும் பதிப்பித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;திருக்குறள் வகுப்பை எப்படி நடத்துவது, திருக்குறள் மூலம் எப்படித் தொண்டு செய்வது, அவை குறித்தான 10 கட்டளைகள் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் பகுதியான நேபாளத் தலைநகர் காட்மாண்டுப் பயணமும் சுவையாகவே உள்ளது. ஆப்ரிக்க, ஆசியப் புத்தகப் பதிப்பாளர் மாநாட்டில், சிங்கப்பூர் சார்பாக இ.வி.சிங்கன் கலந்துகொண்டதை இப்பகுதி விவரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர், சிங்கப்பூரிலிருந்து பாங்காக் சென்று, பின்னர் காட்மாண்டு செல்லும்போது, விமானத்தில் தாய்லாந்து நாட்டுப் பத்திரிகைகளைப் படித்திருக்கிறார். அதில் இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி, அண்மையில் சாரநாத்தில் நடந்த உலகப் புத்தர் மாநாட்டில் 'இந்திய ஆரிய நாகரிகங்களின் பழங்கொள்கைகளையே புத்தர் ஒரு புதிய அழுத்தத்துடன் மறுபடியும் சொன்னார்' என்றும், 'பகவத் கீதையின் தத்துவத்தை அடியொற்றியே, புத்தரின் செயல்கள் இருந்தன' என்றும் கூறியிருந்த செய்தியும் அதைப் பல அறிஞர்கள் மறுத்த செய்தியும் வெளியாகி இருந்தன. அதைப் படித்த இ.வி.சிங்கன், பின்வருமாறு அதை விமர்சிக்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு பெரிய மாநாட்டில், ஒரு பொறுப்புள்ள அமைச்சர், வரலாற்று ஆதாரம் இல்லாத கருத்துகளைக் கூறி இருப்பது, தேவையில்லாத கிளர்ச்சி உருவாகத்தான் உதவி செய்யும். புத்த சமயமும் சீக்கிய சமயமும் ஆரியர்களின் கொள்கைகளை எதிர்த்து உருவான சமயங்கள் என்பதே அறிஞர்களின் கருத்து. புத்த மதம், இந்து மதத்தின் அடிப்படை என்று சுருக்கமாகச் சொல்லாமல், 'புத்த சமயம்தான் என்னுடைய சமயமும்' என்று அவர் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். புத்தரையே வழிகாட்டியாகக் கொண்டு, பொருளாதாரத்திலும் உற்பத்தியிலும் முன்னேறிய நாடுகளின் அந்தக் கருத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கும்.' &lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பாளர் மாநாட்டில் இ.வி.சிங்கன் ஆற்றிய ஆங்கில உரைகளைப் பதிப்பித்துள்ளார். அவை தலைப்பை விட்டுச் சிறிதே விலகிச் செல்வதுபோல் தெரிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நூல் வணிக நோக்கில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். நூலின் பின் அட்டையில் 'Welcome to Nepal' என்ற விளம்பரம் உள்ளது. நேபாளத்தைப் பற்றிய தகவல்கள், நேபாளம், காட்மாண்டு ஆகியவற்றின் வரைபடங்கள், நேபாளியப் பழமொழிகள், Tamil way of Food Preparation Yesterday and Today, Napalese way of Food Preparation ஆகியவையும் நூலில் இடம்பெற்றுள்ளன. சிங்கப்பூரில் உள்ள ராயல் நேபாளீஸ் கன்சுலேட் ஜெனரல் அலுவலகத்தில், கன்சுலேட் ஜெனரலாக இருக்கும் திரு.எம்.என்.சுவாமி, திரு.இ.வி.சிங்கனின் முப்பதாண்டுக் கால நண்பர் என்றும் குறித்திருக்கிறார். அனைத்தையும் இணைத்துப் பார்க்கும்போது நமக்குள் ஒரு செய்தி, பாயத்தான் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பூணூலை அறுத்த பாரதியை ஆசிரியர், 'பிராமணக் கவிஞன்' என்று குறிப்பிடுவதும் தம் ஆங்கில உரைகளில் பிராமணர்களை அதிகம் பேசுவதும், சிங்கப்பூரில் மலையாளிகள், தெலுங்கர்கள், பிராமணர்கள் ஆகியோர் தமிழ் ஆசிரியர்களாக வருகிறார்கள் என்று வருந்துவதும் அவருடைய மனோ நிலையை விளக்குகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;'Status of the Author in Singapore'  என்ற தலைப்பில் பேச வேண்டிய இ.வி.சிங்கன்,&lt;br /&gt;&lt;br /&gt;'Authors are of two kinds book publishing.&lt;br /&gt;1. The Tamil people&lt;br /&gt;2. The Tamil Speaking people&lt;br /&gt;The Tamil Speaking People are non-Tamils. Their roots are different'&lt;br /&gt;-என்று பேசுகிறார். மேலும் தொடர்ந்து,&lt;br /&gt;&lt;br /&gt;'These authors are mostly Brahmins in Tamilnadu. They write books mixing plenty of Sanskrit words. Their novels consist of plots taken from European fictions in London, Paris, Frankfurt, Rome and America and are reconstructed as Delhi, Mumbai, Calcutta and Chennai and what not?'&lt;br /&gt;&lt;br /&gt;- என்று பேசியிருக்கிறார். இவர் கருத்தை முழுவதும் ஒப்புக்கொள்வதற்கில்லை. ஏனெனில் ஆசிரியர் குறிப்பிடுவது போல, எல்லாத் தமிழரல்லாத எழுத்தாளர்களும் ஐரோப்பியக் கருத்துருவில் கதை புனைவதில்லை. சமஸ்கிருதச் சொற்களை ஏராளமாகக் கலக்கிறார்கள் என்றும் வருந்துகிறார். அது தவறுதான். ஆனால், ஆசிரியர் குறிப்பிடும் 'தமிழ் எழுத்தாளர்கள்' எவ்வளவு தூய்மையாக எழுதுகிறார்கள் என்பதை அவர் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். தமிழ்வேர் கொண்டோரே வெள்ளம் போன்ற ஆங்கில வார்த்தைகளில் தமிழை மிதக்க விடுவதை அவர் குறிப்பிடாமல் விட்டது, ஒருதலைப்பட்சமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித் தமிழர், தமிழரல்லாதோர் என்று பிரிவினை வாதம் பேசுவது, காழ்ப்புணர்வைத் தூண்டுமேயல்லாது வேறெதையும் தூண்டாது. 'தமிழ்பேசும் அனைவரும் தமிழரே' என்ற ரஜனிகாந்த்தின் கருத்தைக் கலைஞர் கருணாநிதி வரவேற்றிருப்பதை நினைவுகூர வேண்டியது என் கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;நூலில் எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் மலிந்திருக்கின்றன. நல்ல உயர்தரமான தாளில் பளிச்சென்ற படங்களுடன் அருமையாக அச்சாகியுள்ள நூலில் ஒரு குறை, இது.&lt;br /&gt;&lt;br /&gt;நேபாளியப் பழமொழிகளுக்கும் தமிழ்ப் பழமொழிகளுக்கும் சில இடங்களில் ஒற்றுமை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. He who spits at the sky gets it full in his face.&lt;br /&gt;2. One hundred lies are required to hide one lie.&lt;br /&gt;&lt;br /&gt;1. வானத்தில் துப்பினால் அவன் முகத்திலேயே அது விழும்.&lt;br /&gt;2. ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்களைச் சொல்லவேண்டி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பயண அறிக்கை போல இந்நூல் இருந்தாலும், அனைத்து நடவடிக்கைகளையும் பதிய வேண்டும் என்ற முயற்சி பாராட்டுக்குரியது. அதனால் இது, வரலாற்று முக்கியத்துவமும் பெறுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-112307556654454082?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/112307556654454082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=112307556654454082' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112307556654454082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112307556654454082'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/07/blog-post_31.html' title='இ.வி.சிங்கன் காரைக்குடிப் பயண அனுபவங்கள்- ஒரு பார்வை'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-112307375269221968</id><published>2005-07-30T12:55:00.000Z</published><updated>2005-08-03T12:55:52.700Z</updated><title type='text'>சுரதா நேர்காணல்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/3806/379/1600/suratha1%20%20%28courtesy%20intamm%292.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3806/379/320/suratha1%20%20%28courtesy%20intamm%292.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt; (படத்திற்காக நன்றி: இன்தாம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'கவிதை பிடிச்சிருக்கா... காசு போடுங்க சாமீ!' என்ற தலைப்பில், சரவணா ஸ்டோர்ஸ் இதயம் பேசுகிறது (இப்போது நின்றுவிட்டது) இதழில் 11-2-2001 அன்று வெளியான நேர்காணல், இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;'அமுதும் தேனும் எதற்கு?', 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' போன்ற திரைப்படப் பாடல்களை எழுதியவரும் பாவேந்தர் விருது, இராஜராஜன் விருது, ஆதித்தனார் விருது, கலைஞர் விருது... போன்ற பல விருதுகளைப் பெற்றவரும் 'உவமைக் கவிஞர்' என்ற பட்டத்தை உடையவருமான சுரதா அவர்கள், தன் எண்பதாவது வயதினை எட்டியுள்ளார். முத்துவிழா கொண்டாடி வரும் அவரைச் சந்தித்தோம்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நீங்கள், அவன் இவன் என்ற ஏக வசனத்தில் பேசுவது ஏன்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாருமே இப்படிப் பேசறவங்கதான். பாரதி வந்தான். வள்ளுவன் போனான் என்று இலக்கியத்திலேயே எழுதுவாங்க. ஆளு எதிர்ல இருக்கறப்ப 'அய்யா... சாரே' என்று பேசிட்டு, அவன் அந்தாண்ட போனதும் 'மட்டிப்பய' என்று சொல்லுவானுங்க. நான் மறைஞ்சு நின்னு சொல்லலை. நேராவே சொல்றேன். இதுக்கு என்னோட வயசும் ஒரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;யாரைப் பார்த்தாலும் அவருடைய சாதி என்ன என்று கேட்கிறீர்களாமே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாதி என்பது ஒரு குழு. அந்த ஆளைப் பத்தித் தெரியணும்னா அவனோட சாதி பத்தியும் தெரியணும். நான் சாதியை வளர்க்கலை. சாதி ஒழியாது. ஒருத்தன் வழிவழியா ஒரே சாதியில இருக்கறதை என்னால ஏத்துக்க முடியாது. மிட்டாய் விக்கிறவன்கிட்ட உன் சாதி என்ன என்றால், நெசவாளர் சாதி என்கிறான். அந்தத் தொழிலைச் செய்யாட்டி அவன் அந்தச் சாதி இல்லேங்கறேன். அதனாலதான் நான் சாதியையும் கேப்பேன். தொழிலையும் கேப்பேன். இன்னிக்கு முஸ்லீமும் கிறிஸ்தவனும் புனைப்பெயர் வச்சுக்கிட்டுத் தன்னோட சாதியையும் மதத்தையும் மறைக்கப் பாக்கறான். போலித்தனம் எதுக்கு? நிஜத்தைச் சொல்லு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாதிக்கு அடுத்ததா ஊர்ப் பெயர் கேக்கறீங்களே ஏன்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆளுக்கு எப்படி பேர் வந்தது என்று பார்க்கிறதை விட,  ஊருக்கு இந்தப் பெயர் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சுக்கணும். ரா.பி. சேதுப்பிள்ளை 'ஊரும் பேரும்' என்றே புத்தகம் எழுதி இருக்கார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/3806/379/1600/photo%204.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3806/379/320/photo%204.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;(1996இல் நடந்த ஒரு கவியரங்கில் எனக்குப் பரிசளிக்கிறார், சுரதா.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரபலமானவங்க பிறந்த இடத்துலேர்ந்து மண் எடுத்துச் சேர்க்கறீங்களே... ஏன்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலேசியாவுல ஒரு கார்ல போய்க்கிட்டிருந்தப்ப, இங்கதான் ராசேந்திர சோழன் முகாம் போட்டிருந்தான்னு பக்கத்துல உள்ளவர் சொன்னார். உடனே காரை நிறுத்தி அங்கிருந்து கொஞ்சம் மண் எடுத்துக்கிட்டேன். அது அப்படியே தொடர்ந்துச்சு. ஒட்டக்கூத்தர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாரதி, பாரதிதாசன், பரிதிமாற்கலைஞர் என்று இருநூத்துச் சொச்சம் பேரோட பிறந்த ஊர்லேர்ந்து மண் எடுத்தேன். நேதாஜி இங்க தங்கினார், காந்தி இங்கதான் டீ குடிச்சார்னு சொல்றதில்லையா? அது போலத்தான் இது. இந்த வேட்டியை அவர் கட்டினார், இந்தப் பேனாவால எழுதினார் என்று சொல்றாப்லதான்! ஆட்டோகிராப் வாங்குகிறோம் இல்ல. அது ஏன் வாங்குறோம்? ஒரு ஞாபகத்துக்குத்தான். இதுவும் அது மாதிரிதான். யார் யார் எங்க எங்க மண் எடுத்தாங்கன்னு ஒரு புத்தகம் வரப்போவுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒரு ஊர்ல ஒருத்தர்தான் பிறந்தார்னு இல்லியே. பாரதியைத் தவிரவும் நிறைய பேரு எட்டயபுரத்துல பொறந்திருப்பாங்களே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மத்தவனுக்கெல்லாம் மார்க்கெட் இல்லை. அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நல்ல தலைப்பு சொன்னா ஒரு ரூபா பரிசு கொடுன்னு சொன்னீங்க. கவியரங்கத்துல கவிதை பாடறதுக்கு முன்ன தரையில ஒரு துணியை விரிச்சுட்டு வந்து பாடுங்கன்னு சொன்னீங்க. கவிதையைக் கேக்கறவங்க அந்தத் துணியில பணம்... காசு போடணும்னு சொன்னீங்க... ஏன்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா கைதட்டிட்டு நல்லா இருக்கு என்பான். நல்லா இருக்குல்ல. அப்ப காசு போடுன்னு சொன்னேன். கச்சேரிக்கு, சினிமாவுக்குப் போனா டிக்கெட் வாங்குறே இல்ல. கவியரங்கம் மட்டும் ஓசியா? துண்டுல விழற காசு, பாடுற கவிஞனுக்கும் கிடைக்கும்தானே. அது மாதிரி நல்ல தமிழ்ல பேரு வச்சிருந்தா, நல்ல கருத்துச் சொன்னா ஒரு ரூபாயாவது கொடுத்துப் பாராட்டுன்னு சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படகுக் கவியரங்கம், விமானக் கவியரங்கம், அஞ்சல் வழிக் கவியரங்கம், மலைச்சாரல் கவியரங்கம், வீட்டுக்கு வீடு கவியரங்கம்... என்றெல்லாம் செய்தது ஏன்? கக்கூஸ் கவியரங்கம், பாத்ரூம் கவியரங்கம் கூட வைப்பார் என்று உங்களைக் கேலி செய்கிறார்களே?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொல்றவன் சொல்லிட்டுத்தான் இருப்பான். இதெல்லாம் கவிதையை வளர்க்கிற வழி. கவிதையை மக்கள் கிட்ட கொண்டு போற வழி. நாலு சுவத்துக்குள்ள, அந்த வாழ்த்து, இந்த வாழ்த்து என்று பாடுவதைவிட இப்படிக் கவியரங்கம் நடத்துவது ரொம்ப சிறப்பானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;'கவிதையை ஒழிக்கவேண்டும். இலக்கியங்களால் ஆபத்துதான் உண்டு' என்று சொன்னீங்களே, ஏன்?&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிகைப்படுத்திச் சொல்றது கவிதைன்னு ஆயிடுச்சு. மிகைப்படுத்தல் வந்தால் பொய் வந்திடும். உண்மை இருக்கவேண்டிய இடத்துல தந்திரம் இருக்குது. பேச்சு வழக்கிலேயே உலகை ஆண்டு விடலாம். இலக்கிய வழக்கு வந்ததால்தான் ஜாதி, மதம் வந்தது. இலக்கியங்களைக் கொளுத்திவிட்டால் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சந்திப்பு: அண்ணாகண்ணன்.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-112307375269221968?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/112307375269221968/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=112307375269221968' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112307375269221968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112307375269221968'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/07/blog-post_30.html' title='சுரதா நேர்காணல்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-112307214971787185</id><published>2005-07-05T12:28:00.000Z</published><updated>2005-08-03T13:01:57.556Z</updated><title type='text'>கவிதாயினி தேன்மொழி</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v144/annakannan/Thenmozhi.jpg" alt="Image hosted by Photobucket.com" height=300 width=200&gt;&lt;br /&gt;பூ, செடியில் பூக்கிறது. ஆனால், அது பூத்ததற்குச் செடி மட்டுமே காரணமில்லை. அது நிற்கும் நிலம், அங்கு நிலவும் தட்பவெப்பம், கிடைக்கும் நீர், சூரிய ஒளி, பாதுகாப்பு வேலி... எனப் பலவற்றின் துணையுடன்தான் ஒரு பூ மலருகிறது. இவை, புறக் காரணிகள்.  அந்தப் பூவின் வண்ணம், மணம், அளவு, அடுக்கு, வாழ்நாள்... எனப் பல இயல்புகளை அதன் மரபணு தீர்மானிக்கிறது. இவை அகக் காரணிகள். இந்த அகக் காரணிகளும் புறக் காரணிகளும் சரியான விகிதத்தில் இணைந்தால்தான் ஒரு பூ பிறக்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே இலக்கணத்தை நாம் கவிதைக்கும் பொருத்தமுடியும். ஒரு கவிதை பிறக்கிறது. அதற்கு, முழுக்க முழுக்க அந்தக் கவிஞர் மட்டுமே காரணமில்லை. அவர் வாழும் இடம், வளர்ந்த முறை, பயணித்த இடங்கள், உணவு, உறவுகள், மனநிலை, கல்வி, அறிந்த மொழிகள், வாசிப்பு, அவரின் மொழி ஆளுமை, அனுபவம், கண்ணோட்டம், எழுதும் நேரம், எழுதுபொருள்கள், சுற்றுப்புற ஒலி-ஒளிகள், நோக்கம், நெருக்கடிகள்.... எனப் பலவும் சேர்ந்துதான் ஒரு கவிதை உருவாகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;அதிகம் கவிதை எழுதப்பட்டது எப்பொழுது? போர்க் காலங்களிலா? இயல்பான காலங்களிலா? &lt;br /&gt;&lt;br /&gt;குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற நிலப்பகுதிகளில் எந்தப் பகுதியில் அதிகமாகக் கவிதைகள் எழுதப்படுகின்றன? &lt;br /&gt;&lt;br /&gt;எந்த நேரத்தில் அதிகம் எழுதுகிறார்கள்? காலையிலா? இரவிலா? &lt;br /&gt;&lt;br /&gt;கேட்டு எழுதப்பெற்றது அதிகமா? தானாகவே எழுதப்பெற்றது அதிகமா? &lt;br /&gt;&lt;br /&gt;தனிமை, கவிதைக்கு எவ்வளவு தூரம் முக்கியம்? &lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட மணம், மது, உணவு போன்றவை, படைப்பாளியிடம் கவிதை உணர்வைத் தூண்டுகின்றனவா?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் பெருமக்கள், மேலே குறிப்பிட்டுள்ள கருப்பொருள்களில் ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் புறக் காரணிகளின் தாக்கம் எவ்வளவு என்று தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால்தான் புதியவற்றை எழுத விரும்புவோர், வெளியூருக்குச் சென்று எழுத விரும்புகிறார்கள். சிறைக் கைதியாக இருந்த பலர், சிறையிலேயே பல நூல்களை எழுதியுள்ளார்கள். காரணம், அவருக்குச் சிறை என்பது, புதிய இடம். &lt;br /&gt;&lt;br /&gt;எந்தப் புதிய இடமும் ஒருவருக்குக் கவிதையைத் தந்துவிடுமா? ஒரு புதிய இடம், எவ்வளவு காலத்தில் ஒருவருக்குப் பழைய இடம் ஆகும்? இந்த வாழ்விடங்கள், கவிதையை எவ்வாறு இயக்குகின்றன? இப்படிப் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், பிறந்த ஊர் என்பது, பலருக்குப் பெரும்ஊற்றாய்க் கவிதையை வழங்கிக்கொண்டே இருக்கிறது. அதிலும் பிறந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து, வெளியூரில் வாழ நேர்ந்தவர்களுக்கு ஊர் நினைவுகள், அற்புதமாகிவிடுகின்றன; அவை,   கவிதைச் சுடரின் ஒளியை வானளாவ வளர்க்கின்றன. அவ்வகையில் தேன்மொழியின் கவிதைகளை அவரின் ஊர்ப்புலமான மலைப் பகுதி, ஆட்சி புரிகிறது. தாவரங்கள், விலங்கினங்கள், நீர்நிலைகள், மலைகள், இயற்கையின் பன்முகக் காட்சிகள் ஆகியவை, தேன்மொழியின் கவிதைகளுக்குத் தனித்துவம் சேர்க்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குளத்தின் உச்சியில்&lt;br /&gt;கழுகின் நிழல்&lt;br /&gt;வட்டமடித்து நீந்திக் குளித்து&lt;br /&gt;வெயில் காய்கையில்&lt;br /&gt;காட்டுக் கோழிச் சிறகுகள் பதறும்&lt;br /&gt;அடைக்கல ஓசையோடு&lt;br /&gt;&lt;br /&gt;நம் காலடி அதிர்வுகள் கேட்டு&lt;br /&gt;உடலிலிருந்து ஈட்டி பாய்ச்சி&lt;br /&gt;புதருக்குள் பதுங்கும் முள்ளம்பன்றி&lt;br /&gt;கூரானைக் குறிவைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;மரம் வெட்டுகையில் அது&lt;br /&gt;வீழ்வதற்கான கடைசி முறிவில்&lt;br /&gt;மிளா மான்கள் மிரளும்&lt;br /&gt;மலையிலிருந்து சமதளம் நோக்கி&lt;br /&gt;கிளைகள் உருட்டுகையில்&lt;br /&gt;கேளையாடுகள் சிதறும்&lt;br /&gt;&lt;br /&gt;விறகு தூக்கும் சதம்பலுக்குள்&lt;br /&gt;மர அணில்கள் விளையாடும்&lt;br /&gt;முயல் குட்டிகள் மிதிபடும்....&lt;br /&gt;- என வரையாட்டு மொட்டை என்ற மலையின் காட்சிகளைத் தேன்மொழி விவரிக்கையில், நமக்குள் ஒரு புதிய உலகமே விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மலைப் பிரதேசத்துக் காலைகள்&lt;br /&gt;மூடுபனியின் ஊடே&lt;br /&gt;பல்லாயிரம் தேயிலைப் பூக்களின்&lt;br /&gt;வாசனையோடுதான் விடியும்...&lt;br /&gt;- என வாசனைகளை விவரிக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;...இன்னும் &lt;br /&gt;அந்த ஒற்றைப் பேருந்து&lt;br /&gt;வானவூர்தி மாதிரி&lt;br /&gt;என் ஊர்ப்பிள்ளைகளை&lt;br /&gt;கைதட்ட வைத்துக்கொண்டுதான்&lt;br /&gt;இருக்கிறது&lt;br /&gt;- என்கிறபோது, அந்த ஊரின் நிலைமை நன்கு தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தோட்டத்தை இடுப்பிலே&lt;br /&gt;தூக்கிக்கொள்வேன்&lt;br /&gt;விடுமுறைகளில்&lt;br /&gt;&lt;br /&gt;மண்வெட்டியால் வெட்டியிருக்கிறேன்&lt;br /&gt;மண்உளிப் பாம்பை&lt;br /&gt;புரட்டிப் புரட்டிப் பார்த்தும்&lt;br /&gt;வரைய முடியாத ஓவியம் அது&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;நேசமானவள்&lt;br /&gt;சலிப்பைக் கொலுசென&lt;br /&gt;மாட்டி நடப்பாள்&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt; &lt;br /&gt;வெட்டுக்கிளி&lt;br /&gt;இலைவெட்டித் தின்கையில்&lt;br /&gt;இலையின் உள்நரம்புகள் துடிக்குமோ&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;உன் சுவாசக் காற்றைப் &lt;br /&gt;பார்க்க ஆசையா&lt;br /&gt;மூடுபனியின் ஊடே பாடு&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;பாவாடையில் காற்றைப் பிடித்து&lt;br /&gt;ஆற்றின் இக்கரையிலிருந்து&lt;br /&gt;அக்கரைக்கு மிதந்து போ&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;மான் தின்ற மலைப் பாம்பு&lt;br /&gt;மரம் சுற்றி நெரிவது மாதிரி&lt;br /&gt;என் உணர்வுகளை&lt;br /&gt;எனக்குள்ளேயே&lt;br /&gt;சடசடக்க விடுகிறேன்&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப் பற்றி&lt;br /&gt;நான் சிந்திக்கையில்&lt;br /&gt;குக் குக் குக்கென&lt;br /&gt;ஏதோ ஒரு பறவை&lt;br /&gt;குரல் கொடுக்கிறது&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;மூச்சோரம் முத்தமிட்டாய்&lt;br /&gt;அக்கணம் கண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;பியானோவின்&lt;br /&gt;வெள்ளைக் கட்டையும்&lt;br /&gt;கருப்புக் கட்டையுமாய்&lt;br /&gt;கிறங்கி இசைத்துக்கொண்டிருந்த&lt;br /&gt;உன் கண்களை&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;மல்லாந்த நெஞ்சில்&lt;br /&gt;ஏந்திய புத்தகம்&lt;br /&gt;இதயத் துடிப்பில்&lt;br /&gt;அதிர்வது மாதிரி&lt;br /&gt;&lt;br /&gt;மௌனத்தின் அடர்த்தியை&lt;br /&gt;கோதிக் கோதி&lt;br /&gt;வெளிக் கிளம்புகிறது&lt;br /&gt;உன் நினைவு&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;என் கல்லறைக்கான வாசகம்&lt;br /&gt;தேடவேண்டியதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;நட்டு வையுங்கள் என் மீது&lt;br /&gt;ஒரு பூமரத்து நாற்றை&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;சாயங்காலம் முற்றத்தில் தெளிக்கும்&lt;br /&gt;தண்ணீர்த் திவலை மிதித்து&lt;br /&gt;படியேறும் தனிமை&lt;br /&gt;&lt;br /&gt;மெழுகுதிரி வெளிச்சத்தினடியில்&lt;br /&gt;கருமையாய் தேங்கி நிற்கிறது..&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;எழுதுகின்ற நிழல்&lt;br /&gt;விரலுக்குப் பக்கத்தில் இருள்மரமாய்&lt;br /&gt;ஊர்ந்து வருவதை&lt;br /&gt;உணர்ந்தபடி எழுதுகிறேன்&lt;br /&gt;யாருமில்லை&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;நான் வாழ்வதற்கான இடம்&lt;br /&gt;இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்ந்துகொண்டிருக்கிற இடம் அல்ல அது&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;புருவத்து ரோமங்கள்&lt;br /&gt;ஆயிரங்கால் பூச்சி போல்&lt;br /&gt;நெற்றியில் படுத்துக் கிடந்தன&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளத்தாக்குகளை&lt;br /&gt;பயமின்றிக் கடக்கும் அந்தப்&lt;br /&gt;பறவை&lt;br /&gt;&lt;br /&gt;கூடடைகையில்&lt;br /&gt;நடுங்கிக் குறுகுகிறது&lt;br /&gt;- என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;முத்தத்தின் ஓடுடைத்துப் பறந்த&lt;br /&gt;பறவைகளின் சிறகு ஒலி&lt;br /&gt;&lt;br /&gt;- என்றும் தேன்மொழியின் கவிதை வெளிக்குள் எண்ணற்ற முத்துகளைக் காண முடிகிறது. இவர் கவிதைகளில் புறப் பொருள்களும் அகப் பொருள்களும் தேர்ந்த முறையில் ஒன்றிணைந்துள்ளன. வளமான மண்ணில் பிறந்து, அரிய காட்சிகளைக் கண்டு, அவற்றை நமக்கு அறிமுகப்படுத்தி வருகிறார். பலரும் தவற விடுகிற சாதாரண காட்சிகள், இவரின் கவிதைகளுக்குள் வலிமையோடு இடம் பிடிக்கின்றன. மூடு மந்திரம், ஜால வித்தை ஏதும் இல்லை; எளிய சொற்களில் ஒரு குழந்தைகூட கவிதைக்குள் நுழைய வாய்ப்பளித்து, வாழ்வின் பிழிவாய் - பதிவாய் இவரின் கவிதைகள், விளங்குகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மேற்குத் தொடர்ச்சி மலையின் மணலாறு என்ற தேயிலைத் தோட்டத்தில் 4-1-1976 அன்று பிறந்த தேன்மொழி, 8 வயது வரை அங்கு வாழ்ந்துள்ளார். அதன் பிறகு அதே தேனி மாவட்டத்திலேயே உத்தமபாளையம், ராயப்பன்பட்டி ஆகிய இடங்களிலும் மதுரையிலும் வசித்துவிட்டு, கடந்த பத்து ஆண்டுகளாகச் சென்னையில் வசிக்கிறார். ஆனால், அவர் எட்டு வயது வரை வாழ்ந்த பகுதிதான், அவரின் கவிதைகளில் எல்லாம் அழுத்தமாகப் பதிவாகி வருகின்றது. ஏழு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கிய இவர், இயற்கையை ஆராதிக்கும், அதற்காக ஏங்கும் மனத்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரின் முதல் தொகுதியான &lt;em&gt;இசையில்லாத இலையில்லை &lt;/em&gt;என்ற நூல், தேவமகள் அறக்கட்டளை விருது, 'சிற்பி' பாலசுப்பிரமணியன் இலக்கியப் பரிசு, திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றப் பரிசு ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளது. அதை அடுத்து, &lt;em&gt;அநாதி காலம் &lt;/em&gt;என்ற கவிதைத் தொகுதியைப் படைத்துள்ள தேன்மொழி, திரைப்படப் பாடல்களும் எழுதி வருகிறார். இயற்பெயர் : ரோஸ்லீன் ஜெயசுதா. &lt;br /&gt;&lt;br /&gt;முதன்முதலாக, பாரதிராஜா இயக்கத்தில் &lt;em&gt;ஈர நிலம் &lt;/em&gt;என்ற திரைப்படத்தில் பாடலாசிரியர், வசனகர்த்தா, உதவி இயக்குநர் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். சிறுகதைகளும் எழுதி வருகிறார். தமிழ்த்திரைத் தொலைக்காட்சிக்காக, நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கிவரும் இவர், திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருடைய கவிதைகளில் குறிப்பிடவேண்டிய ஒன்று: பற்பல மலர்கள், மரங்கள், தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றின் பெயர்களைக் கவிதைக்குள் பதிவு செய்துள்ளார். அவற்றுள் பலவும் நாம் அறியாதவை; ஆனால், அறிய வேண்டியவை. அவற்றை வெறும் பட்டியலாகவோ, பெயர்களாகவோ பதியாமல், கவித்துவத்துடன் இயல்பாக, கவிதை என நம்பும்படியாகப் பதிந்துள்ளமை, போற்றத் தகுந்த செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;தேன்மொழியின் படைப்புகள், படிப்படியாகச் சுருக்கமும் கூர்மையும் பெற்று வருகின்றன. நம் உணர்வுகளைத் தம் வயமாக்கும் வலிமை, அவற்றுக்கு உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ஒரு காட்டுப்&lt;br /&gt;பூவுக்குப்&lt;br /&gt;பெயரிட்டேன்&lt;br /&gt;'காஞ்சனி' &lt;br /&gt;என்று&lt;br /&gt;- என்கிறார், ஒரு கவிதையில்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரேனும் பெயரில்லாத காட்டுப் பூவைக் காண நேர்ந்தால், தேன்மொழி என்ற பெயரைப் பரிசீலியுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-112307214971787185?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/112307214971787185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=112307214971787185' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112307214971787185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112307214971787185'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/07/blog-post_05.html' title='கவிதாயினி தேன்மொழி'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-112074755579201198</id><published>2005-07-02T14:43:00.000Z</published><updated>2005-07-07T14:45:55.800Z</updated><title type='text'>திருவாசகம் - சிம்பொனி - இளையராஜா</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/3806/379/1600/thiruvasagam%20invitation.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3806/379/320/thiruvasagam%20invitation.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவாசகம் - சிம்பொனி - இளையராஜா &lt;br /&gt;&lt;br /&gt;நேற்று (30-6-05) மாலை சென்னை மியூசிக் அகாதெமி அரங்கில் இளையராஜாவின் சிம்பொனி இசையில் திருவாசகம் வெளியானது. மத்திய செய்தி-ஒலிபரப்பு &amp; கலாசார அமைச்சர் மாண்புமிகு ஜெய்பால் ரெட்டி வெளியிட, பாலமுரளி கிருஷ்ணா முதல் பேழையைப் பெற்றுக்கொண்டார். கிறித்தவர்களால் நடத்தப்பெறும் தமிழ் மையம் என்ற அமைப்பும் இளையராஜா மரபிசை, கலை, பண்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அழைப்பிதழில் பெயர் இல்லாத போதும் ரஜனிகாந்த், நிகழ்ச்சிக்கு வந்திருந்து கடைசி வரை(இரவு 10.40) இருந்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மிக அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார். கமலகாசன், பாரதிராஜா, பீட்டர் அல்போன்ஸ், என். ராம், இளையராஜாவின் குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள், தமிழ் மையத்தைச் சேர்ந்த அருட்திரு ஜெகத் கஸ்பார், அருட்திரு வின்சென்ட் சின்னதுரை, அருட்திரு ஆனந்தம் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;6 மணிக்கு விழா தொடங்கும் எனப் போட்டிருந்தார்கள். நான் 5.50க்குச் சென்றேன். அப்போதே அரங்கு நிரம்பி, வெளியில் நூற்றுக்கணக்கானோர் நின்றிருந்தார்கள். பின்னர் ஒரு வழியாக உள்ளே சென்று, இடம் பிடித்து, உட்கார்ந்தேன். சுமார் 6.30க்குத்தான் விழா தொடங்கியது. மத்திய அமைச்சர், (29-6-05)முந்தைய நாள் மாலை இதே அரங்கில் அகில இந்திய வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் மத்திய அமைச்சரவையின் திடீர் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்று, இரண்டு பண்பலை வானொலி அலைவரிசைகளைத் தொடங்கும் முடிவை எடுத்து, அதைப் பத்திரிகையாளர்களுக்கு அறிவித்துவிட்டு, மும்பை வழியாக மீண்டும் சென்னை வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;"சமூகத்தின் அடிநிலையிலிருந்து வந்து, இசையின் சிகரத்தைத் தொட்டிருக்கிறார். இசையின் ராஜா இளையராஜா" என்றெல்லாம் பாராட்டிய பின்னர் தன் உரையை முடித்துவிட்டு இருக்கைக்குத் திரும்பும் முன், மீண்டும் ஒலிவாங்கிக்கு வந்தார். "அடுத்து, பெங்களூர் செல்கிறேன். 12 மணியில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் என நான்கு மெட்ரோபாலிட்டன் மாநகரங்களைக் காண்கிறேன்" என நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிம்பொனி ஓரட்டோரியோ(தெய்வீக அருளிசை) என்ற வடிவில், திருவாசகத்தின் ஆறு பாடல்களை இளையராஜா வழங்கியுள்ளார். அந்தக் குறுந்தட்டிலிருந்து ஒரு பாடலை அரங்கில் அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, சுழலவிட்டனர். "பொல்லா வினையேன்" என்று தொடங்கி, திருவாசகத்தின் வரிகளைப் புதுமையான முறையில் தந்துள்ளார். இடையிடையே ஆங்கிலத்தில் அதன் பொருளைப் பாடலாகத் தந்துள்ளமை, நல்ல கலவை. கிறித்தவத் தன்மை உள்ள பின்னணி இசையை வெளிநாட்டவர் இசைக்க, பல்வேறு நிலைகளில் இழைந்தும் குழைந்தும் இளையராஜாவின் குரல், ஒரு பெரும் அனுபவத்தை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருவாசகத்தின் ஒரு பாடலை எடுத்துக்கொண்டு சென்னையைச் சேர்ந்த இசைக் குழுவினர், நடனமாக ஆடிக் காட்டினர். திருவாசகத்தின் வேறொரு பாடலை பள்ளிக்கூட மாணவியர் பலர், பியானோ இசைப் பின்னணியில் பாடினர். தமிழகம் முழுவதும் நடத்தப்பெற்ற திருவாசகப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினர். &lt;br /&gt;&lt;br /&gt;பாலமுரளி கிருஷ்ணா, "இது தெய்வீக இசை. இறைவன் இசை வடிவமானவன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பீட்டர் அல்போன்ஸ், "இளையராஜா இந்தப் பணியை ஏன் கத்தோலிக்க பாதிரிமார்கள் நடத்தும் தமிழ் மையத்திடம் கொடுத்தார்? தமிழ்நாட்டின் எவ்வளவோ அமைப்புகள், தமிழும் சைவமும் வளர்க்கும் திருமடங்கள், திரைத் துறை வித்தகர்கள் ஆகியோரிடம் கொடுக்காமல் தமிழ் மையத்திடம் கொடுத்ததற்குக் காரணம், சமய நல்லிணக்கமே" என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;"இதை யாரும் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யாதீர்கள். திருட்டுத்தனமாய்க் கேட்காதீர்கள். காசு கொடுத்து வாங்கிக் கேளுங்கள்" என்று இந்து பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் என். ராம் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;"இறைப்பற்று இல்லாதோரையும் ஈர்க்கும் இசை, இது. இதை ஆக்கும் திறமை, இளையராஜாவுக்கு 25,30 ஆண்டுகளுக்கு முன்பே உண்டு. இப்போது தாமதமாக வெளிப்பட்டுள்ளது" என்றார் கமலகாசன். &lt;br /&gt;&lt;br /&gt;"இளையராஜா, ஒரு வகையில் என் குரு.  அவர்தான் எனக்கு ரமண மகரிஷியையும் திருவண்ணாமலையையும் அறிமுகப்படுத்தினார்" என்றார் ரஜனிகாந்த்.&lt;br /&gt;&lt;br /&gt;"கும்பினியர்கள் ஆண்ட மண், இது. அந்த வெள்ளைக்காரர்களை உன் இசையை வாசிக்கச் செய்திருக்கிறாய். நீ பாடும்போது நானே பாடுவதுபோல் இருக்கிறது. நீ புகழ் பெறுவது நானே புகழ் பெறுவது. வைகை ஆற்றுக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் நன்றி. இளையராஜா, பல முறைகள், இனி எனக்குப் பிறவி இல்லை. என் பிறவியின் நோக்கம் நிறைவடைந்துவிட்டது என்கிறான். அது தவறு. நீ ஆயிரமாயிரம் முறை மீண்டும் மீண்டும் பிறந்து வந்து, இசையை வழங்கிக்கொண்டே இருக்கவேண்டும். உனக்கு இறப்பே கிடையாது. பிறப்பு மட்டுமே உண்டு" என்றார் பாரதிராஜா.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாகப் பேசவந்த வைகோ, மிகவும் சிறப்பாகப் பேசினார். ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களிடம் 14 வகை யாழ்க் கருவிகள் இருந்தன. பிரமிடில் யாழ்க் கருவி காணப்படுகிறது. மெசப்படோமியா-மொகஞ்சதாரோ அகழ்வில் யாழ்ச்சின்னங்கள் கிடைத்துள்ளன... எனத் தொடங்கியவர், தமிழிசையின் வரலாற்றை அடுத்துத் திருமுறைகளுக்கு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னிரு திருமுறைகள் எவை? முதலாம் திருமுறை முதல் பன்னிரண்டாம்  திருமுறை வரை ஒவ்வொரு திருமுறையிலும் இடம்பெறும் நாயன்மார்கள் யார் யார்? என்றெல்லாம் கடகடவெனச் சொல்லிக்கொண்டே வந்த அவர், எட்டாம் திருமுறையான  திருவாசகத்திற்கு வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவாசகத்தில் எத்தனை பதிகங்கள் உள்ளன? ஒவ்வொரு பதிகத்தின் பெயர் என்ன? மாணிக்கவாசகரின் பின்னணி என்ன? குதிரை வாங்குவதற்காக அரசன் தந்த பணத்தில் சைவப் பணி செய்தது, பின் அரசன் கேட்டபோது, இறைவன் கட்டளைப்படி, குதிரைகள் பின்னால் வருகின்றன என ஓலை அனுப்பியது, நரிகள், பரிகளாக(குதிரைகளாக) மாறி, லாயத்தில் அடைக்கப்பெற்றது, இரவில் அனைத்தும் மீண்டும் நரிகளாக மாறி ஊளையிட்டு அறுத்துக்கொண்டு ஓடியது, இதற்காக அரசன், மாணிக்கவாசகரைச் சினந்தது, மதுரையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது, இறைவன் பிட்டுக்கு மண் சுமக்க வந்தது, பிட்டை வாங்கிக்கொண்டு மண்ணை அடைக்காமல் நீரில் விளையாடியது, அதைக் கண்ட காவலர்கள் இறைவன் முதுகில் பிரம்பால் அடித்தது, இறைவன் மீது பட்ட அடி எல்லோர் மீதும் பட்டது, அதன் பிறகு மாணிக்கவாசகர் ஊர் ஊராகச் சென்று பாடியது... எனத் திருவாசகத்தின் பின்னணி, வரலாறு, நோக்கம் என அனைத்தையும் விளக்கமாக எடுத்துக் கூறினார். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு எந்த இடத்திலும் பார்த்துப் படிக்கவோ, தடுமாறவோ, மறந்துவிடவோ செய்யாமல் ஆற்றொழுக்காக வைகோ, மடை திறந்தார். இளையராஜாவின் பெருமைகள், இந்தத் திருவாசகத்தில் இளையராஜா எந்த ஆறு பாடல்களை எடுத்துக்கொண்டார்? ஏன் அவற்றை எடுத்துக்கொண்டார்? அவற்றின் பொருள் என்ன? என அவர் பேசப் பேச, அரங்கமே அதிசயித்தது. இளையராஜாவும் ரஜனியும் பிரமித்தார்கள். ரஜனி பேசும்போது, "வைகோவின் கர்ஜனையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் கேட்கவிருக்கிறேன்" என்றார். வைகோ பேசப் பேச, ரஜனியின் புருவம் ஏறியே இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் பேச வந்த இளையராஜா, வைகோவை, "அரசியலை விட்டுவிட்டு ஆன்மீகத்திற்கு வந்துவிடுங்கள். சைவ சித்தாந்த உரையைக் கேட்டதுபோல் இருந்தது" என்றார். பாரதிராஜாவிற்குப் பதில் அளித்த அவர், "நீ வேண்டுமானால் பிறந்துகொள். நான் பிறக்க விரும்பவில்லை. வள்ளுவரே &lt;br /&gt;தோன்றிற் புகழோடு தோன்றுக அ·திலார்&lt;br /&gt;தோன்றலின் தோன்றாமை நன்று&lt;br /&gt;என்று கூறியிருக்கிறார். பிறப்பதோ, புகழ் பெறுவதோ நம் கையில் இல்லை" என்றார். அவருக்கு முன் நன்றியுரை கூறிய அருட்திரு ஆனந்தம், "சிம்பொனி ஓரட்டோரியோவை முடித்து, பிரசவ வேதனையில் இருப்பார். அதைப் பற்றி அவர் கூறக்கூடும்" என்று கூறியிருந்தார். அதற்குப் பதில் அளித்த இளையராஜா, "தாயைக் கொச்சைப்படுத்தாதீர்கள். பிரசவ வலிக்கு உலகின் எந்த வலியும் ஈடானதில்லை" என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு பாட்டுப் பாடு தலைவா", என ரசிகர் ஒருவர் குரல் கொடுத்தார். "என்ன பாட்டு வேணும் தலைவா?" என்ற இளையராஜா, 'என் ஊரு சிவபுரம்' எனத் தொடங்கும் பாடலைப் பாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அருட்திரு ஜெகத் கஸ்பார், தமிழ் / ஆங்கிலம் இரண்டிலும் சிறப்பான ஆளுமையுடன் பேசினார். கணீர் என்ற குரல், நல்ல சிந்தனைகள், அவையை ஆளும் திறம் எனப் பலவிதங்களில் பரிமளித்தார். அவர் நிர்வாக இயக்குநராக உள்ள தமிழ் மையம்தான் இந்தத் திருவாசகத் திட்டத்தை முன்நின்று நிறைவேற்றியுள்ளது. சமய நல்லிணக்கம் செழித்தோங்கவும் தமிழிசையும் தமிழும் வளரவும் இந்தத் திருவாசகம் தொண்டாற்றும். "இன்னும் 24 மாதங்களில் கிராமி விருது பெறும் முதல் தமிழர் என்ற பெருமையை இளையராஜா பெறுவார்" என ஜெகத் கஸ்பார் நம்பிக்கை தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் இதுவரை ஒரு கோடி கடன் உள்ளது. மக்கள் நினைத்தால் இதை ஒரே வாரத்தில் தீர்த்துவிடலாம்" என்றார் ஜெகத். &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் நினைப்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;(தொடர்பு கொள்ள : தமிழ் மையம், 153, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. தொலைபேசி : 91-044-2499 3380, 2499 3390)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-112074755579201198?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/112074755579201198/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=112074755579201198' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112074755579201198'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112074755579201198'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/07/blog-post.html' title='&lt;strong&gt;திருவாசகம் - சிம்பொனி - இளையராஜா&lt;/strong&gt;'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-112022675975872789</id><published>2005-06-30T14:05:00.000Z</published><updated>2005-07-01T14:05:59.766Z</updated><title type='text'>கானல் காட்டில் கவிதைக் கருத்தரங்கம்</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/3806/379/1600/kaanaal%20kaadu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://photos1.blogger.com/blogger/3806/379/320/kaanaal%20kaadu.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொடைக்கானல் மலைத் தொடரில் கானல் காடு என்ற தோட்டப் பகுதியில் கவிதைக் கருத்தரங்கு ஒன்று, அண்மையில் நடந்தது. திசைகள் இயக்கமும் சிவகாசி பாரதி இலக்கியச் சங்கமும் இணைந்து ஜூன் 18, 19 ஆகிய நாட்களில் இதனை நடத்தின. மிகவும் இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் பகுதியில், மெல்லிய குளிரில், சுடாத வெய்யிலில் கவிதை குறித்து உரையாடினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னீலன் (மணிகட்டிப் பொட்டல்), தொ.பரமசிவம் (திருனெல்வேலி), பிரம்மராஜன் (தருமபுரி), திலகபாமா  (சிவகாசி), தேவேந்திர பூபதி  (மதுரை), ரெங்கநாயகி (ஆழ்வார் குறிச்சி), லட்சுமிஅம்மாள் (சிவகாசி), நித்திலன் (கோவை), பெரியசாமி (மதுரை), கண்ணன் (தருமபுரி), சிவக்குமார் (மதுரை), மதுமிதா (இராஜபாளையம்), பா.வெங்கடேசன் (ஓசூர்), த. பழமலய் (விழுப்புரம்), ஜெயச்சந்திரன் (விழுப்புரம்) பா.சத்தியமோகன்(நெய்வேலி), சென்னையிலிருந்து மாலன், இந்திரன், ஆர்.வெங்கடேஷ், வைகைச்செல்வி, கிருஷாங்கினி, இராதாகிருஷ்ணன், தேசபந்து ஆகியோருடன் நானும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டேன்.&lt;br /&gt;யுகபாரதி, அய்யப்ப மாதவன் ஆகியோர் முதலில் வர இசைந்திருந்து, பின்னர் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நன்கு திட்டமிட்டு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒவ்வோர் ஊரிலிருந்தும் யார் யார், எப்படி எப்படி வருகிறார்கள், அவர்களுக்கான வாகன வசதி, அவர்களை எப்படி குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் ஒன்று கூட்டுவது, உணவு, உறையுள், பானங்கள்... என அவர்களுக்கான வசதிகள், நிகழ்ச்சிக்கான ஒழுங்குகள், பேசப்படவேண்டிய கருப்பொருட்கள், எதை எதை எவ்வளவு நேரம் பேசுவது என்பவை தொடங்கி, எழுவது, உறங்குவது வரை ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கவனித்துச் செய்திருந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அறைக்குள் தூங்குவோருக்கு அதற்கேற்பவும் கூடாரத்தில் தங்குவோருக்கு அதற்கு ஏற்பவும் உதவத் தயாராய் இருந்தார்கள். உணவைப் பொறுத்தவரை சைவ / அசைவ விரும்பிகளுக்கு அவரவர்க்கு ஏற்ற உணவை வழங்கினர். அதுவும் மலைப்புறத் தோட்டப் பகுதியில் 'டாண் டாண்' என்று குறித்த நேரத்தில் உணவு வழங்கியது, உரையாடலுக்கு உதவியாக அமைந்தது. காலை, நண்பகல், இரவு என மூன்று வேளை உணவு மட்டுமின்றி, மணிக்கு மணி கொறிப்பதற்கும் ஏதாவது கொடுத்து, வயிற்றைக் குளிர வைத்துவிட்டார்கள். குளிர்ப் பகுதி ஆயிற்றே! வேண்டுவோருக்கு, காலையில் எழுந்ததும் குளிப்பதற்கு வெந்நீர் வழங்கினர். மிகவும் நடுக்கும் குளிர் இல்லை என்றாலும் வந்திருப்பவர்கள் மீதான அவர்களின் அக்கறை வெளிப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;திலகபாமாவின் பிறந்த ஊரான பட்டிவீரன்பட்டியில் ஜூன் 18 அன்று காலை செளந்திரபாண்டியனார் இலக்கியச் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் மாலன், பொன்னீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், தாம் பிறந்த நாடார் குலம் உயரப் பாடுபட்டு, பின்னர் அந்த நாடார் பட்டத்தைத் துறந்து, சாதி நல்லிணக்கத்துக்கு உழைத்த செந்திரபாண்டியனாரைப் பற்றி இருவரும் பேசினர். உள்ளூர்ப் பேச்சாளர்களும் கவிஞர்களும் கலந்துகொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;மதியம் அங்கிருந்து கிளம்பி, கானல் காட்டிற்குப் பயணித்தோம். மாலை போய்ச் சேர்ந்தோம். மலையும் காடுமான பகுதி வழியே நடந்து சென்றோம். இதுவரை பார்த்திராத ஏராளமான மரங்கள், செடிகொடிகள், கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து அளித்தன. அங்கு உலவிய அடர்த்தியான - கலவையான நறுமணம், இன்னும் நாசியில் நிற்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் சுய அறிமுகமும் கவிதை வாசிப்பும் நிகழ்ந்தன. அதைத் தொடர்ந்து கவிதை, தற்காலக் கவிதை, கவிஞர்களிடம் வாசிப்புக் குறைவு, பொருள் புலப்பாடு, இருண்மை... எனப் பலவற்றைப் பற்றியும் கலந்துரையாடினோம். தனிக் கவிதை, பொதுக் கவிதை என்பது பற்றி உரத்த விவாதம் நிகழ்ந்தது. குறிப்பிட்ட கட்டத்தில் தனிக் கவிதையும் பொதுக் கவிதையாகிவிடும் என்ற கருத்து முன்வைக்கப்பெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இரவு உணவிற்குப் பிறகும் விவாதம் தொடர்ந்தது. நள்ளிரவில் தொ.பரமசிவன் எப்படியோ வந்து சேர்ந்தார். அவரும் உரையாடலில் சேர்ந்துகொண்டார். படுக்கச் சென்ற சிலர், உரையாடலைக் கேட்டு மீண்டும் எழுந்து வந்தனர். பாலியல் சொற்களைப் பெண்கள் கையாளும் முறை குறித்து, பிரம்மராஜன் ஆதரவான கருத்துத் தெரிவிக்கவில்லை. "கலிங்கத்துப் பரணியின் காதல் பாடல்களில் காமம் மிதமிஞ்சி இருந்தாலும் அவை, கவிதைகளாக இருந்தன. இக்காலத்தவர் எழுதுபவை, கவிதைகளாக இல்லை" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் trecking என்று அழைக்கப்பெறும் மலைநடைக்குச் சென்றோம். இரவில் முன்பின்னாக உறங்கியதில் எல்லோரும் ஒரே நேரத்தில் இப்படி நடந்து செல்லவில்லை. நான் கொஞ்சம் பின்னதாகத்தான் நடந்தேன். காலையில் மெல்லிய குளிரில் நடந்தது, நல்ல அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை உணவிற்குப் பிறகு, பேரா. தொ.பரமசிவம், இதுவரை கவிதை என்ற தலைப்பில் ஒன்றரை மணிநேரம் அருமையான உரை நிகழ்த்தினார். "ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு செவ்வியல் இலக்கியம் தலைமை இடத்தை வகித்தது", "மது என்ற ஒரு சொல்லைக் குறிக்கப் பல சொற்கள் உள்ளன. இது, தமிழர்கள் மதுவை எந்த அளவு பயன்படுத்தினார்கள் என்பதைக் காட்டுகிறது", "பண்பாடு மட்டுமின்றி மொழியும் பெண்களின் வழியேதான் தொடர்ந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் செல்கிறது. பெண்கள்  பயன்படுத்தாததால்தான் சமஸ்கிருதம் அழிந்தது".... போன்ற பல கருத்துகளைத் தெரிவித்தார். "சங்க காலத்துப் பாடல்களில் எட்டுத் தொகையை மட்டும் குறிப்பிட்டது ஏன்?" என்று உரைக்குப் பின் பழமலய் கேட்டார். பத்துப் பாட்டு, காலத்தால் சற்றே பிந்தையது என்ற கருத்து இருப்பதாகத் தொ.ப. கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரைத் தொடர்ந்து பிரம்மராஜன், ஐரோப்பியக் கவிதைகளுடனான தம் அனுபவங்களையும் தம்மைக் கவர்ந்த கவிஞர்களையும் தாம் மொழிபெயர்த்தவற்றையும் பற்றிச் சுருக்கமாகப் பேசினார். அவரை அடுத்து இந்திரன், ஆப்பிரிக்கக் கவிதைகளுடன் தமக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது, அவற்றை மொழிபெயர்த்தது எப்படி?, அவை எத்தகைய வரவேற்பைப் பெற்றன? என்று கூறிவிட்டு, தாம் மொழிபெயர்த்த ஒரு கவிதையையும் வாசித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு, பாலுக்கும் அப்பால்: சமகாலக் கவிதைகள் என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அதில் பல விமர்சனங்களை முன்வைத்தனர். வழக்கம்போல் திலகபாமா, வைகைச்செல்வி, மதுமிதா, ரெங்கநாயகி ஆகியோர் பால்மொழிகளைக் கண்டித்தனர். "எங்களைப் பலரும் ஒரு மாதிரியாகப் பார்க்கின்றனர்" என வைகைச்செல்வி குறிப்பிட்டார். "அது, அவர்களின் விடுதலைக்கான குரல் எனில் அதை முன்வைப்பதில் என்ன தவறு?" என இந்திரன் கேள்வி எழுப்பினார். மாலன் உள்பட பலரும், பால்மொழியானது கவன ஈர்ப்புக்கான கருவி, வணிகத்திற்கு உதவும் உத்தி என்ற கருத்துகளைக் கொண்டிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;"பெண்களின் பால்மொழி, சமூகத்தின் சகல விதமான அடக்குமுறைகளுக்கும் (பாலியல் உள்பட) எதிரான ஆயுதம். மொழி, ஆண்களால் கட்டமைக்கப்பெற்றுள்ளது. அதை உடைக்கப் பெண்கள், பாலியல் சொற்களை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். பாலுணர்வை எழுதுவதைத் தவறாகக் கருதுகிற சமூகக் கண்ணோட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் முயற்சியாகவும் இதைக் கருதலாம். இது இப்போதுதான் அரும்பு விட்டுள்ளது. இதற்கே இப்படி உணர்ச்சி வயப்பட்டால் பெண்கள், உண்மையிலேயே தங்கள் பாலுணர்வை வெளிப்படுத்தத் தொடங்கினால், அதை உங்களால் தாங்க முடியாது" என்ற கருத்தை நான் முன்வைத்தேன். கிருஷாங்கினியும் இக்கருத்தை ஆதரித்தார். பலரும் உரத்த குரலில், ஆவேசமாகக் கருத்துரைத்தனர். அனைவரும் தங்கள் கருத்தை முன்வைக்கும் தன்மையில் விவாதம் அமையவில்லை. "எனக்கு மனநிலை பாதிக்கப்பெற்ற மூன்று குழந்தைகள் இருந்தால் நான் கவிதை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்" என்று கிருஷாங்கினி கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் பெண் கவிஞர்களின் படைப்புகள் குறித்தே விவாதம் சென்றது. விக்ரமாதித்யன், மகுடேஸ்வரன் ஆகியோரின் பெயர்களைச் சிலர் குறிப்பிட்டாலும் விவாதமாக அது வளரவில்லை.  எனினும் கவிதையைக் குறித்துப் பலரும் பல்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்தவும் யார் யார் என்னென்ன கருத்துகள் உடையவர்கள் என்பதைச் சிறிது அறியவும் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் தங்கவும் நல்ல காற்றை நுகரவும் இந்த நிகழ்ச்சி, ஒரு வாய்ப்பாக அமைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கவிதையை எவ்வாறு புரிந்துகொள்வது, கவிதைக் கலையின் நுணுக்கங்கள், உத்திகள் எனப் பல, இந்த நிகழ்வில் இடம்பெறவில்லை. பிரம்மராஜன், இந்திரன் போன்றோர், இந்தப் பணியைச் செய்வார்கள் என மாலன் நினைத்திருக்கலாம். ஆனால், அவர்கள் வேறு கோணத்தில் உரை நிகழ்த்தினர். &lt;br /&gt;&lt;br /&gt;பல நூறு  நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளதால், எனக்கு ஒரு கருத்து உறுதிப்பட்டு வருகிறது. கவிதை போன்ற நுண்கலைகளைப் பேச்சின் மூலம் அல்லாது எழுத்தின் மூலம் அறிவதே சிறந்ததோ என்று தோன்றுகிறது.  பேசும்போது கவிதைகளை அப்படியே மேற்கோள் காட்டுவது கடினம். வெறும் வாய்மொழியிலேயே அனைத்தையும் ஆற்றொழுக்காக, எதையும் விட்டுவிடாமல், முழுமையாகக்  கருத்துரைக்கும் அளவுக்கு நம்மவர்கள் திறனை வளர்த்துக்கொள்ளவில்லை. அதற்கு அளப்பரிய நினைவாற்றல் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;திறந்த வெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோர், ஒலிவாங்கி ஒன்றை அவசியம் வைத்திருப்பது நல்லது. திறந்த வெளி என்பதால் அதில் ஒலி இழப்பு அதிகம் ஏற்படுகிறது. 'நானும்' என்பது 'ஞானம்' எனச் சிலருக்குக் கேட்கிறது. வாக்கியத்தின் முடிவில் குரல் தேயும்போது, இறுதிச் சொற்களைச் சரியாகக் கேட்க முடியவில்லை. அறைக்குள்ளாவது ஒலிஇழப்புக் குறையும். பதிவு செய்வதிலும் ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஒலிஅளவில் பேசுவதால் பொது இடத்தில் வைத்திருக்கும் ஒலிப்பதிவுக் கருவியால் துல்லியமாக அவர் பேச்சைப் பதிய இயலாது. கழுத்துப் பட்டை ஒலிவாங்கி போன்றவை இருந்தால் இந்தப் பதிவு, இன்னும் சிறந்ததாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;வைகைச்செல்வியுடன் வந்த இராதாகிருஷ்ணன் என்ற வில்விஜயன், சுற்றுச் சூழல் கலைக்குழுவில் பணியாற்றி வருபவர். இவர், இரண்டு நாள்களும் 'மிமிக்ரி' என்ற பல்குரல் கலையின் மூலம் அபாரத் திறமையை வெளிப்படுத்தினார். மு.கருணாநிதி, வைரமுத்து, கமலகாசன், எம்.ஆர்.ராதா, ஜனகராஜ், எம்.ஜி.ஆர்., கிருபானந்த வாரியார்.. எனப் பலரின் குரலில் அன்றைய விவாதத்தில் பேசிய கருத்துகளுக்கு மறுமொழி போல் பேசியமை, அவரின் கவனிப்புக்கும் நினைவாற்றலுக்கும் ஆற்றொழுக்குத் தன்மைக்கும் சான்றாக விளங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கிய நண்பர்களின் அணுக்கத்துடன் கவிதை குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பாக,  இந்நிகழ்வு அமைந்தது. அந்த மட்டில் இந்த நிகழ்ச்சி, வெற்றிதான். இதே போன்று சென்னைக் கடற்கரையில் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தலாம் என்று மாலன் கூறியுள்ளார். இது தொடர்ந்தால், தமிழுக்கு நல்லது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-112022675975872789?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/112022675975872789/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=112022675975872789' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112022675975872789'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112022675975872789'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/06/blog-post_30.html' title='கானல் காட்டில் கவிதைக் கருத்தரங்கம்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-112005041889430543</id><published>2005-06-11T13:03:00.000Z</published><updated>2005-06-29T13:11:21.396Z</updated><title type='text'>புத்தகங்களும் நானும்</title><content type='html'>அண்ணாகண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;வலைப்பதிவு உலகில் நூல்களின் சங்கிலி வரிசையாகச் சிலர் எழுதி வருகின்றனர். அவ்வரிசையில் இணையுமாறு ஜெயந்தி சங்கர் அழைத்தார். அவர் அழைத்திராவிட்டால் இப்பொழுது இதை நான் எழுதியிருக்க மாட்டேன். அதற்காக அவருக்கு என் நன்றி. சற்றே வேறான ஒரு கோணத்தில் என் நூலுறவுகளைக் குறிப்பிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் ஐந்து வயதிலிருந்தே எனக்குப் புத்தகங்களுடனான உறவு தொடங்கிவிட்டது. &lt;em&gt;ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ்..., அம்புலிமாமா, கோகுலம்...&lt;/em&gt; எனச் சில கிடைத்தன. கிடைக்கும் எல்லாவற்றையும் ஆர்வத்துடன் வாசித்துக்கொண்டிருந்தேன். காமிக்ஸ் புத்தகங்களை அடுத்து, கல்கி, சாண்டில்யன் போன்றோரின் வரலாற்றுப் புதினங்கள், பாலகுமாரன், சுஜாதா போன்றோரின் சமூகப் புதினங்கள் என ஏராளமாக வாசித்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சை மாவட்டத்தில் உள்ள வேப்பத்தூரில் என் உறவினர் ஒருவர் நூலகராய் இருந்தார். எனவே விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும்போதெல்லாம் விரும்பும் நூல்களையெல்லாம் எடுத்து வாசிக்க முடிந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;திருவாரூரில் நான் ஒரு விடுதியில் தங்கிப் படித்தேன். அப்போது அந்தப் பள்ளியின் தாளாளர் ஜானகி அம்மாள் அவர்கள், நூலகத்திலிருந்து நூல்கள் எடுத்து வாசிக்க ஊக்குவித்தார். அதுமட்டுமின்றி, படித்த நூல்களில் உங்களுக்குப் பிடித்த/ பிடிக்காத அம்சங்கள் என்னென்ன என்று ஒரு குறிப்பேட்டில் எழுதிவரச் சொன்னார். அப்படிச் சில புத்தகங்களைக் குறித்து, ஓர் ஏட்டில் எழுதி வந்தேன். அப்போது எனக்கு 15 வயது. புத்தகத்தின் பெயர், ஆசிரியர், பதிப்பகம், பக்கம், விலை எனச் சில விவரங்களையும் எழுதினேன். பின்னர் நாட்குறிப்பு எழுதத் தொடங்கியபோதும் இந்தப் பழக்கம் தொடர்ந்தது. அன்றன்று படித்த புத்தகத்தைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு / விமர்சனம் எழுதி வைத்தது உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பதின்ம வயதில் &lt;em&gt;மாலைமதி&lt;/em&gt; வாசித்தேன். அப்போது அதில் பாலியல் சார்ந்த காட்சிகள் இல்லாமல் கதையே இருக்காது. '&lt;em&gt;மாலைமதி&lt;/em&gt; படிக்காதே. கெட்டுப் போய்விடுவாய்' எனப் பெரியவர் ஒருவர் எச்சரித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அதே பருவத்தில் அகிலனின் 'சித்திரப் பாவை'யையும் வாசித்த நினைவு உண்டு. பூவண்ணனின் 'புதையல் வீடு' கூட படித்துள்ளேன். சிலவற்றை நூல்களாகவும் தொடராக வெளிவந்த பலவற்றைத் தைத்துக் கட்டிய (பைண்டு செய்த) தொகுதிகளாகவும் வாசித்துள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;கதைகளுக்குப் பிறகு வாழ்க்கை வரலாறுகள், பயண இலக்கியங்கள், அறிவியல் புனைகதைகள் என என் கவனம் திரும்பியது. 'காரின் அழிவுக் கதிர்' என்ற இரஷ்ய மொழிபெயர்ப்பு நூல், என் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது. அது குறித்து, நானும் நண்பர்கள் சிலரும் சேர்ந்து நடத்திய &lt;em&gt;இலக்கியப் பாசறை &lt;/em&gt;என்ற சிற்றிதழில் ஒரு விமர்சனம் எழுதினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் சில உண்டு. 'ஜே.ஜே. சில குறிப்புகள்' நூலை வாசிக்க எடுத்திருந்தேன். அந்நேரம் எனக்கு வேறு வேலைகளும் இருந்தன. என்ன செய்வது? உடற்பயிற்சி செய்யும் போது, பலவித ஆசனங்களைச் செய்துகொண்டே அந்நூலை வாசித்தேன். குனிந்து செய்யும் உடற்பயிற்சியின்போது நூலைத் தரையில் வைத்தேன். அண்ணாந்து பார்த்துச் செய்பவற்றில் நூலை ஆகாயத்தில் தூக்கிப் பிடித்துக்கொண்டேன். பக்கவாட்டில் சாய்ந்து செய்யும் ஆசனங்களில் நூலையும் பக்கவாட்டுக்குக் கொண்டு சென்றேன். நான் எந்தக் கோணத்தில் சென்றாலும் என் கண்களுக்கு எதிரே அந்த நூலைக் கொண்டு சென்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இப்படித் தீவிரமாகப் படித்த நூல்களின் கருத்துகளை எல்லாம் நான் ஏற்றுக்கொண்டு விட்டேனா என்றால் இல்லை. கண்ணுக்குத் தெரியாத ஒரு தீச்சுவர் நம் மனத்தில் உள்ளது. அது, நம் மனம் விரும்பாதவற்றை உள்ளே அனுமதிக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;பலவிதமான தருணங்களில் எனக்குப் பலவிதமான நூல்கள் பரிசாகவும் அன்பளிப்புகளாகவும் வந்துள்ளன. போட்டிகள் பலவற்றில் வெல்பவருக்கு நூல்கள் அளிப்பது வழக்கம். கவியரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றில் கலந்துகொள்ளும்போதும் இந்த வழக்கம் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;பழைய புத்தகக் கடைகளில் பலவிதமான நூல்களை மிகவும் குறைவான விலையில் வாங்கிப் படித்தது உண்டு. நண்பர்களிடம் இரவல் வாங்கிப் படித்ததும் உண்டு. நானும் பலருக்கு நூல் இரவல் அளித்துள்ளேன். இரவல் நூல்கள் பலவும் போனவரிடம் தங்கி விடுவது உண்மை. அதனால் அடுத்த வேறு யாரேனும் நூல் கேட்டாலும், முன் எச்சரிக்கையோடு 'இல்லை' என்று கூறியிருக்கிறேன். ஆயினும் மனம் கேட்காமல் கொடுத்த நூல்கள், நண்பர்களிடம் இன்னும் பத்திரமாக இருக்கின்றன!&lt;br /&gt;&lt;br /&gt;நூல்களைப் பாதுகாக்கும் பணி, இன்னும் சிரமமானது. அடிக்கடி தூசி அடையும் அவற்றைத் தூய்மை செய்வது, கடினம். தூசி ஒவ்வாமை உள்ள எனக்கு, இன்னும் மிகக் கடினம். வேறு யாரையேனும் இதைச் செய்யப் பணித்தால், துறை வாரியாக நான் பிரித்து வைத்த நூல்கள் கலைந்து, மூலைக்கு ஒன்றாக, அட்டை மாறிப்போய், ஓரங்கள் கிழிந்துபோய்க் கிடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வாசகராக மட்டுமின்றி, வேறு வகைகளிலும் புத்தகங்களுடன் எனக்கு உறவு உண்டு. &lt;br /&gt;நான் படைப்பாளியாக உருவெடுத்த பின், இன்று வரை 8 நூல்கள், நூல்வடிவம் பெற்றுள்ளன. அவை:&lt;br /&gt;1. &lt;strong&gt;பூபாளம் &lt;/strong&gt;(கவிதைகள் - 1996)(சொந்த வெளியீடு)&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v144/annakannan/bhoopalam.jpg" alt="Image hosted by Photobucket.com" height=150 width=100&gt;&lt;br /&gt;2. &lt;strong&gt;உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு &lt;/strong&gt;(கவிதைகள் - 1997)(சொந்த வெளியீடு)&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v144/annakannan/uchamadam.jpg" alt="Image hosted by Photobucket.com" height=150 width=100&gt;&lt;br /&gt;3.&lt;strong&gt; காந்தளகம்-20 ஆண்டுகள் &lt;/strong&gt;(வணிக வரலாறு -2000)(காந்தளகம் வெளியீடு)&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v144/annakannan/kanthalagam.jpg" alt="Image hosted by Photobucket.com" height=150 width=100&gt;&lt;br /&gt;4. &lt;strong&gt;தகத்தகாய தங்கம்மா &lt;/strong&gt;(வாழ்க்கை வரலாறு - 2001)(காந்தளகம் வெளியீடு)&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v144/annakannan/Thagathagayathangamma.jpg" alt="Image hosted by Photobucket.com" height=150 width=100&gt;&lt;br /&gt;5. &lt;strong&gt;சிங்களவர் வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை&lt;/strong&gt; (மறவன்புலவு க. சச்சிதானந்தனுடன் இணைந்து மொழிபெயர்ப்பு / 2002)(காந்தளகம் வெளியீடு)&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v144/annakannan/singalavaralaru.jpg" alt="Image hosted by Photobucket.com" height=150 width=100&gt;&lt;br /&gt;6. &lt;strong&gt;கலாம் ஆகலாம் &lt;/strong&gt;(சிறுவர் பாடல் / 2002)(கங்காராணி பதிப்பகம்)&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v144/annakannan/kalamagalam.jpg" alt="Image hosted by Photobucket.com" height=150 width=100&gt;&lt;br /&gt;7.&lt;strong&gt; நூற்றுக்கு நூறு &lt;/strong&gt;(சிறுவர் கதை / 2003)(கங்காராணி பதிப்பகம்)&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v144/annakannan/noorukunooru.jpg" alt="Image hosted by Photobucket.com" height=150 width=100&gt;&lt;br /&gt;8. &lt;strong&gt;தமிழில் இணைய இதழ்கள் &lt;/strong&gt;(ஆய்வு / 2004)(அமுதசுரபி வெளியீடு)&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v144/annakannan/IniyaEthalgal.jpg" alt="Image hosted by Photobucket.com" height=150 width=100&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர, சில நூல்களை எழுதி அளித்துள்ளேன். இன்னும் அச்சாகவில்லை. அத்தகையவை:&lt;br /&gt;1. &lt;strong&gt;அரசுக்கு எதிராக இரண்டு வழக்குகள் &lt;/strong&gt;(தஞ்சையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்கு வந்திருந்த ஈழத் தமிழர்கள் சிலரைத் தமிழக அரசு திருப்பி அனுப்பியது. அதை எதிர்த்து மறவன்புலவு க. சச்சிதானந்தனும் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமனும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் தொடர்பான நூல்)&lt;br /&gt;&lt;br /&gt;2. ஈழத்திற்கு மருந்துகள் கடத்தச் சதி செய்ததாக மறவன்புலவு க. சச்சிதானந்தன் உள்பட சிலரைத் தமிழக அரசு கைது செய்தது. பின்னர், தகுந்த ஆதாரம் இல்லை என்று இவர்களை நீதிமன்றம் விடுவித்தது. இது தொடர்பான விவரங்களைத் திரட்டி, ஒரு நூல் எழுதி அளித்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வெளிவராத என் நூல்கள்&lt;/strong&gt;:&lt;br /&gt;1. சோதனை முயற்சியாக என் இரண்டு கவிதைகளை 33 மொழிகளுக்கு மொழிபெயர்க்கச் செய்துள்ளேன். அவை: தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, இந்தி, சிந்தி, குஜராத்தி, கொங்கணி, மராத்தி, ஒரியா, சமஸ்கிருதம், மைதிலி, போஜ்புரி, பஞ்சாபி, லடாகி, இராஜஸ்தானி, செளராஷ்டிரா, அவதி, பெங்காலி, உருது, பெர்சியன், அரபி, மகஹி, பிரிஜ்பாஷா, ஆங்கிலம், சிங்களம், இரஷ்யன், ஜப்பானீஸ், ஸ்பானிஷ், ஹீப்ரூ, காசி(Khasi)..... இவற்றை, கவிதைகள் குறித்த மொழிபெயர்ப்பாளர் கருத்துகளோடு ஒரே நூலாக வெளியிடத் திட்டம். தகுந்த வெளியீட்டாளர் அமையாததால் தாமதமாகிறது.&lt;br /&gt; &lt;br /&gt;2. &lt;strong&gt;அ.க. 47 / AK 47&lt;/strong&gt;:&lt;br /&gt;என்னுடைய 47 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணி நடந்து வருகிறது. இது முடிந்தால் இடது பக்கம் தமிழும் வலது பக்கம் ஆங்கிலமுமாக, இருமொழி நூலாக வெளியிட எண்ணம். இவை இரண்டுக்கும் நல்ல பதிப்பாளரை எதிர்நோக்கியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;3. நான் எடுத்த நேர்காணல்கள், எழுதிய கட்டுரைகள், வானொலி உரைச்சித்திரங்கள், கவிதைகள், சிறுவர் பாடல்கள்... எனச் சுமார் 10 நூல்கள், இன்னும் நூல் வடிவம் பெறவேண்டி உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர, நான் பதிப்பாசிரியராகவும் சில நூல்களுக்குப் பணியாற்றியுள்ளேன். அவை: &lt;br /&gt;1.&lt;strong&gt; விவாதங்கள்... சர்ச்சைகள்...&lt;/strong&gt; - வெங்கட் சாமிநாதன் (அமுதசுரபி வெளியீடு)&lt;br /&gt;2. &lt;strong&gt;மலர்மன்னன் கதைகள் &lt;/strong&gt;- மலர்மன்னன்(அமுதசுரபி வெளியீடு)&lt;br /&gt;3.&lt;strong&gt; காப்டன் கல்யாணம் &lt;/strong&gt;- வசுமதி ராமசாமி (அமுதசுரபி வெளியீடு)&lt;br /&gt;&lt;br /&gt;நான் தயாரித்து அளித்த நூல்கள்:&lt;br /&gt;1. &lt;strong&gt;பாரதியார் சரித்திரம் &lt;/strong&gt;- செல்லம்மா பாரதி(அமுதசுரபி வெளியீடு)&lt;br /&gt;2.&lt;strong&gt; தங்கம்மாள் பாரதி படைப்புகள் &lt;/strong&gt;- தங்கம்மாள் பாரதி(அமுதசுரபி வெளியீடு)&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர நூற்றுக்கணக்கான நூல்களுக்கு மெய்ப்பாளராக(proof reader)ப் பணியாற்றியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துத் திறம் குறைவான சிலருக்காக, அவர்களிடமிருந்து கருவைப் பெற்று நூலாக்கித் தந்துள்ளேன் (நூல், அவருடைய பெயரில் வரும்).&lt;br /&gt;&lt;br /&gt;நூலாக்கத்தில் மட்டுமின்றி, இதழ்களிலும் அரங்குகளிலும் பல முறைகள் நூல் திறனாய்வு புரிந்ததும் உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;என் இல்லத்தில் புதிதும் பழையதுமாக 500க்கும் மேலான புத்தகங்கள் உள்ளன. என் அலுவலகத்தில் இரண்டு ஆயிரத்திற்கும் மேலான நூல்கள் உள்ளன. மாதந்தோறும் சுமார் 100 புத்தகங்கள்,&lt;em&gt; அமுதசுரபி &lt;/em&gt;நூல் விமர்சனத்திற்கு வருகின்றன. இவை அனைத்தையும் நான் படித்ததில்லை. அதற்கு நேரமும் இல்லை. தேவைக்கு ஏற்பவும் மனநிலைக்கு ஏற்பவும் சிலவற்றைப் படிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று நூலகங்களில் நான் உறுப்பினராக உள்ளேன். இந்த நூலகங்களுக்கு நூல் எடுப்பதற்காகச் சென்று, ஆண்டுக் கணக்கில் ஆகின்றன. இணையத்தில் இலவச மின்னூல்களும் &lt;a href="http://www.tamil.net/projectmadurai/"&gt;மதுரைத் திட்டம்&lt;/a&gt;, &lt;a href="http://www.chennainetwork.com"&gt; சென்னை நெட்வொர்க்&lt;/a&gt; போன்ற தளங்களில் நல்ல தொகுப்புகளும் கூடிக்கொண்டே வருகின்றன. இன்று நம் வீட்டில் எவ்வளவு புத்தகங்கள் உள்ளன என்பது முக்கியமில்லை. படிப்பதற்கு நமக்கு எவ்வளவு நேரம் உள்ளது என்பதே முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு முக்கிய நோக்கு: நான் இன்று வரை சில ஆயிரம் நூல்களைப் படித்திருப்பேன். அவை அனைத்தும் என் நினைவில் இல்லை. அப்படி இருப்பது சாத்தியமும் இல்லை. நான் படித்து மறந்து போய்விட்டேனே! அந்தப் புத்தகங்களை நான் எந்த வகையில் சேர்ப்பது? படித்த வகையிலா? படிக்காத வகையிலா? &lt;br /&gt;&lt;br /&gt;என் வாசிப்பு, இந்த அழகில் இருக்கும்போது, நான் இன்று படிக்கும் நூல்கள் எதிர்காலத்தில் என் நினைவில் இருக்குமா? இருக்காது எனில் நான் இன்று படிப்பதன் பயன் என்ன? இன்பமோ, துன்பமோ, உடனடியாகக் கிடைக்கும் ஏதோ ஓர் உணர்வுதான் பயனா? எழுத்து, என் வாழ்வை மாற்றி அமைக்க நான் அதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாமோ? &lt;br /&gt;&lt;br /&gt;வரி விடாமல் படித்த ஒரு தலையணைப் புத்தகம், ஒரு கனவுக் காட்சியைப் போல் தோன்றுகிறது. சில வேளைகளில் ஒரு நூலில் வாசித்த காட்சி, வேறொரு நூலுடையதாகத் தோன்றுகிறது. எங்கோ படித்திருக்கிறேன்... ஆனால், எங்கே என்று நினைவில்லை என்ற நிலையிலும் பல வாசகங்கள், சம்பவங்கள் நினைவில் ஆடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்கேனும் இளவயதில் படித்த பாடப் புத்தகங்கள் முழுதும் நினைவில் உள்ளனவா?  கட்டுரைப் போட்டிகளில் குறிப்புத் திரட்டி நான் எழுதிய ஆக்கங்கள், பேச்சுப் போட்டிகளில் நான் பேசிய பேச்சுகள், நண்பர்களுடன் உரையாடிய நாட்கள்... இவை யாவற்றையும் புகை நடுவேதான் காண முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதுவதற்கான பல காரணங்களில் ஒன்று: எழுதாவிட்டால் நான் மறந்துவிடுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;இளவயதில் நான் நூல்களைக் கண்டு மலைத்ததில்லை. வாசிப்பதாயினும் படைப்பதாயினும் இன்றுவரை அது எனக்கு எளிதே. எழுத்தாளர் ஒருவர் (அலெக்சாண்டர் டூமாஸ் என்று நினைவு), உலகிலேயே அதிக அளவாக 1,400 நூல்கள் எழுதியதாக ஒரு செய்தி படித்தேன். 'இந்தச் சாதனையை நான் முறியடித்துக் காட்டுகிறேன்' என்று அப்போது நான் சொல்லிக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே அதிகப் பக்கங்கள் உள்ள ஒரு நூல் என ஏதோ ஒன்றைப் பற்றிப் படித்தேன். அப்போதும் 'இதைத் தாண்ட என்னால் முடியாதா, என்ன?' என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் என்ற செய்தியைக் கேள்விப்பட்டேன். 'ஆகா, இந்தப் பெருமையையும் நான் விட்டுத் தரமாட்டேன்' என எனக்குள்ளேயே கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அளவு மட்டுமே சாதனை ஆகாது. உள்ளடக்கமே முக்கியம் என அறிவேன். சிறப்பான உள்ளடக்கத்துடனேயே பேரெண்ணிக்கையில் படைப்பது சாத்தியம் என எண்ணியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பானது, வெளியான நூல்களில், கிடைத்த சிலவற்றை ஆராயும் சிலரின் கருத்தே தவிர, அறிவிக்கப்படும் அவர் உலகிலேயே சிறந்த படைப்பாளி எனக் கருத முடியாது. என் சமகாலப் படைப்பாளி, என் எழுத்துக்குப் பதில் சொல்லிவிட்டு என்னைக் கடந்து போகட்டும். வெற்றியோ, தோல்வியோ அதைப் பற்றிக் கவலையில்லை. ஒரு கடும் போட்டி அவருக்குக் காத்திருக்கிறது என்றெல்லாம் சொல்லிக்கொண்ட காலம், அது.&lt;br /&gt;&lt;br /&gt;மிதமிஞ்சிய தன்னெழுச்சியுடன் நான் நூல்களை அணுகினேன். புத்தகத்தை எடுக்கும்போது, அடிமைச் சிந்தனையுடன் கண்ணில் ஒற்றிக்கொள்ளுவோர், பலர். நானோ, அவற்றைச் செவ்வி கண்டேன். 'நீ இப்போது புதிதாக என்ன சொல்லப் போகிறாய்?' எனக் கேள்விக்குறியோடு பலவற்றை நான் அணுகியுள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;சில நிகழ்வுகள், இதை வலுப்படுத்தின. என் கருத்தினை யாரோ ஒரு வெளிநாட்டுச் சிந்தனையாளனின் பொன்மொழிகளில் வாசித்தபோதும், நான் எழுதியதுபோன்ற கவிதைகளைச் சில மொழிபெயர்ப்புகளில் கண்டபோதும், என் உணர்வுகளை வேற்றுநாட்டுப் படைப்பாளி பிரதிபலித்த போதும் என்னைப் போலவே இவர்களும் சிந்தித்திருக்கிறார்களே என எண்ணியது உண்டு. அவர்களுக்கு நான் எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை; அவர்களை விடவும் சிறந்த உயரங்களுக்கு என்னால் செல்ல முடியும் என்று கூறினேன். &lt;br /&gt;&lt;br /&gt;அ·து, ஒரு காலம். பிற்பாடு நான், மாறினேன். யாவற்றின் மீதும் பற்றற்ற மனநிலையை நோக்கி இப்போது பயணிக்கிறேன். பயணச் சீட்டு எடுத்துவிட்டேன்; போய்ச் சேர்ந்தேனா என்பதை உடனே சொல்ல இயலாது. இது மிகப் பெரிய பிம்பமாக இருந்தால், பற்றுக் குறைந்த நிலை என்று வைத்துக்கொள்ளுங்கள். நடப்புகளின் மீது, நான் ஆவேசம் கொள்ளுவது இல்லை. அப்படி நான் உணர்ச்சிவயப்படுவேன் ஆயின் அது என் பொருட்டு அன்று. மருத்துவர், கத்தியைக் கையில் எடுப்பது, உணர்ச்சிவயப்பட்டு அன்று. சிகிச்சையின் பொருட்டே.&lt;br /&gt;&lt;br /&gt;'இங்கே ஒருவன் இருக்கிறேன், இருக்கிறேன் என்று இந்தச் சமூகத்திற்கு நான் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டுமா, என்ன? தேவையானால் சமூகமே, உனக்கு என்ன வேண்டும் என்று கேள். தர முயல்கிறேன்' என்று இப்போது என் மனம் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்கள், எப்போதும் எனக்கு எண்ணற்ற சிறகுகளை அளிக்கக் கூடியவை. பறந்துகொண்டே இருக்கிறேன். சிறகடிக்காமலும் சில நேரங்கள் என்னால் பறக்க முடிகிறது. அது, ஏற்கெனவே சிறகசைத்ததாலேயே இயல்கிறது. பரந்த வானில் ஒரு புள்ளியாகப் பறக்கிறேன்; பறந்துகொண்டே இருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-112005041889430543?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/112005041889430543/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=112005041889430543' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112005041889430543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112005041889430543'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/06/blog-post_11.html' title='புத்தகங்களும் நானும்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-111840849339640424</id><published>2005-06-10T12:58:00.000Z</published><updated>2005-06-10T13:01:33.406Z</updated><title type='text'>தமிழில் மிதிவண்டி உதிரி பாகங்கள்</title><content type='html'>மூன்று மாதங்களுக்கு முன் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, சட்டப் பேரவையில் பேசினார். விவாதத்திற்கு இடையில் 'சைக்கிள் ஸ்பேர் பார்ட்சுகள் நூற்றினைத் தமிழில் சொல்ல முடியுமா?' எனக் கோ.க. மணியிடம் கேட்டார். அதற்கு அவரால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த இரண்டு வாரங்களாக இது குறித்துத் தொடர்ந்து சிந்தித்து வந்தேன். மிதிவண்டி உதிரி பாகங்களுக்கான ஆங்கிலப் பெயர்களை முதலில் பட்டியலிட்டேன்; http://www.firstflightbikes.com உள்பட பல்வேறு இணைய தளங்களில் தேடினேன். தொழிற்கருவிகள், துணைப் பொருள்கள், செய்யும் வேலைகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டேன். பிறகு, அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்கள் குறித்து ஆராய்ந்தேன். என் இளவல், எந்திரப் பொறியாளர் பிரசன்னா ஒத்துழைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;உதிரி பாகங்களை அவற்றின் உருவம், செயல்பாடு, பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழாக்கியுள்ளேன். பெரும்பாலும் காரணப் பெயர்களாக வருமாறு அமைத்துள்ளேன். மிதிவண்டியின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் உள்ளவற்றைத் தனித்தனியே கூற வேண்டியுள்ளது. ஏனெனில் அவை, ஒரே மாதிரியானவை அல்ல. முன்னதைப் பின்னதன் இடத்திலோ, பின்னதை முன்னதன் இடத்திலோ பயன்படுத்த இயலாது. எனவே, இரண்டும் தனித்தவை ஆகின்றன. ஆகவே, தனித் தனிப் பொருட்களாகக் காட்டியுள்ளேன். இப்போதைக்கு 153 சொற்கள் கிடைத்துள்ளன. அவை பின்வருமாறு:&lt;br /&gt;&lt;br /&gt;Tube - மென் சக்கரம்&lt;br /&gt;Tyre - வன் சக்கரம்&lt;br /&gt;Front wheel - முன் சக்கரம் &lt;br /&gt;Rear wheel (or) Back wheel - பின் சக்கரம்&lt;br /&gt;Free wheel - வழங்கு சக்கரம்&lt;br /&gt;Sprocket - இயக்குச் சக்கரம்&lt;br /&gt;Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்&lt;br /&gt;Training wheels - பயிற்சிச் சக்கரங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;Hub - சக்கரக் குடம்&lt;br /&gt;Front wheel axle - முன் அச்சுக் குடம்&lt;br /&gt;Rear wheel axle - பின் அச்சுக் குடம்&lt;br /&gt;Rim - சக்கரச் சட்டகம்&lt;br /&gt;&lt;br /&gt;Gear - பல்சக்கரம்&lt;br /&gt;Teeth - பல்&lt;br /&gt;Wheel bearing - சக்கர உராய்வி &lt;br /&gt;Ball bearing - பந்து உராய்வி&lt;br /&gt;Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு&lt;br /&gt;Cone cup - கூம்புக் கிண்ணம்&lt;br /&gt;Mouth valve - மடிப்பு வாய்&lt;br /&gt;Mouth valve cover - மடிப்பு வாய் மூடி&lt;br /&gt;&lt;br /&gt;Chain - சங்கிலி&lt;br /&gt;Chain link - சங்கிலி இணைப்பி&lt;br /&gt;Chain pin - இணைப்பி ஒட்டி&lt;br /&gt;Adjustable link - நெகிழ்வு இணைப்பி&lt;br /&gt;Circlip - வட்டக் கவ்வி&lt;br /&gt;Chain lever - சங்கிலி நெம்பி&lt;br /&gt;&lt;br /&gt;Frame - சட்டகம்&lt;br /&gt;Handle bar - பிடி செலுத்தி&lt;br /&gt;Gripper - பிடியுறை&lt;br /&gt;Cross Bar  - குறுக்குத் தண்டு&lt;br /&gt;Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை&lt;br /&gt;Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு&lt;br /&gt;&lt;br /&gt;Dynamo - மின் ஆக்கி&lt;br /&gt;Head light - முகப்பு விளக்கு&lt;br /&gt;Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி&lt;br /&gt;Rearview Mirror - பின்காட்டி&lt;br /&gt;&lt;br /&gt;Back Carrier - பொதி பிடிப்பி&lt;br /&gt;Front Carrier Basket - பொதி ஏந்தி&lt;br /&gt;Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள்&lt;br /&gt;Side box - பக்கவாட்டுப் பெட்டி&lt;br /&gt;&lt;br /&gt;Stand - நிலை&lt;br /&gt;Side stand - சாய்நிலை&lt;br /&gt;Speedo meter (Odo meter) - வேகம்காட்டி&lt;br /&gt;Fender - வண்டிக் காப்பு&lt;br /&gt;Derailleurs - பற்சக்கர மாற்றி&lt;br /&gt;Peg - ஆப்பு&lt;br /&gt;Air pump - காற்றழுத்தி &lt;br /&gt;Shock absorber - அதிர்வு ஏற்பி&lt;br /&gt;&lt;br /&gt;Break - நிறுத்தி&lt;br /&gt;Break shoes - நிறுத்துக்கட்டை&lt;br /&gt;Break wire - நிறுத்திழை&lt;br /&gt;Break Lever - நிறுத்து நெம்பி&lt;br /&gt;Front break ankle - முன் நிறுத்துக் கணு&lt;br /&gt;Back break ankle - பின் நிறுத்துக் கணு&lt;br /&gt;Disc brake - வட்டு நிறுத்தி&lt;br /&gt;Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்&lt;br /&gt;&lt;br /&gt;Pedal - மிதிக்கட்டை&lt;br /&gt;Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை&lt;br /&gt;Pedal cover - மிதிக்கட்டை உறை&lt;br /&gt;Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்&lt;br /&gt;Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு&lt;br /&gt;Spindle - சுழலும் மிதிக்கூடு&lt;br /&gt;&lt;br /&gt;Seat (Saddle) - இருக்கை&lt;br /&gt;Seat Post - இருக்கை தாங்கி&lt;br /&gt;Baby Seat - குழந்தை இருக்கை&lt;br /&gt;Seat cover - இருக்கை உறை&lt;br /&gt;Leather Seat - தோல் இருக்கை&lt;br /&gt;Cushion seat - மெத்திருக்கை&lt;br /&gt;&lt;br /&gt;Washer - நெருக்கு வில்லை&lt;br /&gt;Tension washer - மிகுநெருக்கு வில்லை&lt;br /&gt;Screw - திருகுமறை&lt;br /&gt;Nut - ஆணி இறுக்கி&lt;br /&gt;Bolt - திருகாணி&lt;br /&gt;Spring - சுருள்&lt;br /&gt;Bush - உள்ளாழி&lt;br /&gt;Lever - நெம்பி&lt;br /&gt;Rust - துரு&lt;br /&gt;Balls - பொடிப்பந்துகள்&lt;br /&gt;Crank - வளைவு அச்சு&lt;br /&gt;Rivet - கடாவு ஆணி&lt;br /&gt;Axle - அச்சு&lt;br /&gt;Spring chassis - சுருள் அடிச்சட்டம்&lt;br /&gt;Nose spring - சுருள் முனை&lt;br /&gt;Fork - கவை&lt;br /&gt;Horn - ஒலியெழுப்பி&lt;br /&gt;Cable - கம்பியிழை&lt;br /&gt;Knuckles - மூட்டுகள்&lt;br /&gt;Clamp - கவ்வி&lt;br /&gt;Ring - வளையம்&lt;br /&gt;Hole - ஓட்டை&lt;br /&gt;Hook - கொக்கி&lt;br /&gt;Spokes - ஆரக்கால்கள்&lt;br /&gt;Spoke guard - ஆரக் காப்பு&lt;br /&gt;Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி&lt;br /&gt;Spanner - மறைதிருகி&lt;br /&gt;Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி&lt;br /&gt;Screw driver - திருப்புளி&lt;br /&gt;Tools - கருவிகள்&lt;br /&gt;Pocket tools - பையடக்கக் கருவிகள்&lt;br /&gt;&lt;br /&gt;Front Mud Guard - முன் மணல் காப்புறை&lt;br /&gt;Back mud guard - பின் மணல் காப்புறை&lt;br /&gt;Chain Guard - சங்கிலிக் காப்புறை&lt;br /&gt;Dress Guard - ஆடைக் காப்புறை&lt;br /&gt;Gloves - கையுறை&lt;br /&gt;Head set - தலைக்கவசம்&lt;br /&gt;Wrist band - மணிக்கட்டுப் பட்டை&lt;br /&gt;&lt;br /&gt;Bell - மணி&lt;br /&gt;Bell lever - மணி நெம்பி&lt;br /&gt;Bell cup - மணி மூடி&lt;br /&gt;Bell spring - மணிச் சுருள்&lt;br /&gt;Bell frame - மணிச் சட்டகம்&lt;br /&gt;Bell rivet - மணி கடாவி&lt;br /&gt;Bell fixing clamp - மணிப் பொருத்தி&lt;br /&gt;&lt;br /&gt;Lock - பூட்டு&lt;br /&gt;Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி&lt;br /&gt;Key - சாவி&lt;br /&gt;Key chain - சாவிக் கொத்து&lt;br /&gt;Chain lock - சங்கிலிப் பூட்டு&lt;br /&gt;&lt;br /&gt;Inner wire - உள்ளிழை&lt;br /&gt;Electrical parts - மின்னணுப் பாகங்கள்&lt;br /&gt;Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்&lt;br /&gt;Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்&lt;br /&gt;Extra fittings - கூடுதல் பொருத்திகள்&lt;br /&gt;&lt;br /&gt;Foot rest - கால்தாங்கி&lt;br /&gt;Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி&lt;br /&gt;Water bottle - தண்ணீர்க் குடுவை&lt;br /&gt;&lt;br /&gt;Racing cycle - பந்தய மிதிவண்டி&lt;br /&gt;Mini cycle - சிறு மிதிவண்டி&lt;br /&gt;Mountain cycle - மலை மிதிவண்டி&lt;br /&gt;Foldable cycle - மடக்கு மிதிவண்டி&lt;br /&gt;Wheel chair - சக்கர நாற்காலி&lt;br /&gt;Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி&lt;br /&gt;One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி&lt;br /&gt;High-tech bike - அதிநுட்ப வண்டி&lt;br /&gt;Kid cycle - சிறுவர் மிதிவண்டி&lt;br /&gt;Ladies cycle - மகளிர் மிதிவண்டி&lt;br /&gt;Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி&lt;br /&gt;Cycle with motor - உந்து மிதிவண்டி&lt;br /&gt;&lt;br /&gt;Inflating - காற்றடித்தல்&lt;br /&gt;Patch - பட்டை&lt;br /&gt;Patching - பட்டை வைத்தல்&lt;br /&gt;Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை&lt;br /&gt;Over hauling - முழுச் சீரமைத்தல்&lt;br /&gt;Painting - வண்ணம் தீட்டல்&lt;br /&gt;Lubrication - எண்ணெய் இடல்&lt;br /&gt;Wheel bend removal - கோட்டம் எடுத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;Puncture - துளை&lt;br /&gt;Puncture closure - துளைமூடல்&lt;br /&gt;Puncture lotion - துளைமூடு பசை&lt;br /&gt;Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)&lt;br /&gt;Wooden mallet - மரச் சுத்தி&lt;br /&gt;&lt;br /&gt;Grease - உயவுப் பசை&lt;br /&gt;Lubricant oil - உயவு எண்ணெய்&lt;br /&gt;Waste oil - கழிவு எண்ணெய்&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சொற்களை விடச் சிறந்த - பொருத்தமான சொற்கள் உங்களுக்குத் தோன்றினால் தெரிவியுங்கள்; மாற்றலாம். இவை தவிர மேலும் உள்ள சொற்களை, படிக்கிற நீங்கள் தெரிவியுங்கள். அவற்றையும் தமிழாக்க முயல்வோம். முதலில் சொற்களை வரையறுப்போம்; பின்னர் அவற்றைப் பயன்படுத்துவோம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-111840849339640424?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/111840849339640424/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=111840849339640424' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111840849339640424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111840849339640424'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/06/blog-post_10.html' title='தமிழில் மிதிவண்டி உதிரி பாகங்கள்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-111806792760812423</id><published>2005-06-01T14:24:00.000Z</published><updated>2005-06-06T14:25:27.620Z</updated><title type='text'>கவிதாயினி பூரணி</title><content type='html'>பாட்டுக்கும் கவிதைக்கும் வேறுபாடு உண்டா? இல்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;உறுதியாக உண்டு. ஒழுங்கமைவு உள்ள ஓசையே இசை. அந்த இசை பயின்று வருவதே பாடல். சாதாரண பேச்சுவழக்குச் சொற்களைக்கூட விருப்பம்போல வளைத்துப் பாடலாக்கிவிடலாம். இதனால்தான் 'இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று' என்றார்கள். இவை, காதுகளுக்கானவை. &lt;br /&gt;&lt;br /&gt;பாடலுக்குள் இடம்பெறும் எதுகை, மோனை, இயைபு, சந்தம் அல்லது இசை, பாடுபவரின் குரல், பக்க வாத்தியங்கள், பின்னணி இசை ஆகியவை, கேட்பவரை ஏமாற்றக் கூடியவை; கவிதை போன்ற ஒரு மயக்கத்தைத் தரவல்லவை. பாடலின் கருத்தையோ, கவிநயத்தையோ(அப்படி ஒன்று இருந்தால்) அணுக விடாமல் கேட்பவரின் கவனத்தைத் திசைதிருப்பக் கூடியவை. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எதிர்மறையாக இல்லாமல் சில தருணங்களில் இவை, கவித்துவத்திற்கு உதவும் கூறுகளாகவும் திகழும். அனைத்தும் சேர்ந்து கவிதையை மிக ஆழமாக நம் மனத்தில் பதியவும் வைக்கும். அது, அரிதாகத்தான் நிகழும். &lt;br /&gt;&lt;br /&gt;பாடல், கவிதை என்ற வடிவங்களின் மேல் தவறில்லை. அவற்றைக் கையாளுவோரின் திறனுக்கு ஏற்ப, பாடலுக்குள் கவிதையும் கவிதைக்குள் பாடலும் இடம்பெற வாய்ப்பு உண்டு. அத்தகைய இணைவு, அரிதாகத்தான் நிகழும். திரைப்படப் பாடல்கள்  கவிதை ஆகுமா என்ற கேள்விக்கும் இந்தப் பதில் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் யாப்பு வடிவங்களுக்குப் பா என்றே பெயர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை, நான்கு வகைப் பாக்கள். இந்தப் பா என்பது, பாட்டைக் குறிக்கிறதா? இல்லை. பாடப்படுபவையே பாடல்கள்; பாடப்படாத நிலையில் இவை செய்யுள்களே. செய்யப்பட்டவை என்பதால் இப்பெயர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செய்யுள், பாடல் ஆகியவற்றிலிருந்து கவிதையை எப்படிப் பிரித்து அறிவது? ஓர் எளிய வழி உண்டு. இசையையும் அலங்காரங்களையும் படைப்பிலிருந்து உருவி எடுத்த பின்னும் ஓவியம், புகைப்படம் ஆகியவற்றிலிருந்து விலக்கி வைத்தபின்னும் படைப்பு, உயிர்த் துடிப்புடன் உள்ளதா? நம் உள்மனத்தைக் கவருகிறதா? அத்தகைய படைப்பிற்குள் கவிதை வாழ்கிறது. இன்றைய சூழலில் அதைக் காண்பது கொஞ்சம் கடினம்தான். இந்தச் சிக்கலைப் பிறகு அவிழ்த்துக்கொள்ளலாம். இப்போது பூரணியின் படைப்புகளுக்குள் நுழைவோம். 'படைப்பு' எனச் சொல்லக் காரணம் உண்டு. அது, பாடலா, செய்யுளா, கவிதையா எனக் காணும் வேலையை நான் உங்களிடமே அளிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று 92 வயதுள்ள பூரணி, 1913இல் பிறந்தவர். பாரதி மறைந்த 1921ஆம் ஆண்டு பூரணிக்கு 8 வயது. அடுத்த ஏழு ஆண்டுகளில், தன் 15ஆவது வயதிலிருந்து பூரணியும் படைப்பு முயற்சியில் இறங்குகிறார். அந்தக் காலத்தில் எத்தகையவற்றைப் படைத்தனர் எனப் பூரணியின் ஆக்கங்களிலிருந்து நாம் காணலாம். இவற்றைப் படிக்கும்போது பாரதியை மகாகவி என அழைப்பதன் பொருத்தத்தை உணரலாம்!&lt;br /&gt;&lt;br /&gt;புராண, இதிகாசக் கதைமாந்தர்களை வைத்து பாடலுக்குள் கதைசொல்லும் முயற்சியில் பூரணியும் ஈடுபட்டுள்ளார். தமயந்தி ஸ்வயம்வரக் கும்மி என்பதை 1929ஆம் ஆண்டு படைத்துள்ளார். 15 பாடல்களில் தமயந்தியின் கதையைச் சொன்ன பூரணி, இதில் ஒரு புதுமை செய்துள்ளார். 15 பாடல்களையும் அக்காலத்தின் பிரபல பாடல் மெட்டுகளில் வழங்கியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;நொண்டிச் சிந்தை அடுத்து, "பொன்னுலவு சென்னிகுள", "பத்தொன்பதாம் நூற்றுக்குமேல்", "வாழ்க திலகர் நாமம்", "தந்தனமடி", "ரத்ன ஊஞ்சல் ஆடினார்", "அன்னையே என்", "மாதவர் போற்றிடும்", "கானகம் தாண்டி", "நந்தவனத்தில்", "ஐயா, பழனி மலை", "மருவே சரித்த", "அம்மா வயிற்றைப் பசிக்குது", "வேட்டையாடினான்", "மங்களம் மாதவற்கு" ஆகிய பாடல்களின் மெட்டுகளில் தமயந்தி கதையைக் கூறியுள்ளார். ஒரு கதையை இவ்வளவு பாடல்களின் மேல் ஏற்றிச் சொன்ன பூரணியின் இசையார்வத்தைப் பாராட்டலாம். மூலப் பாடலுடன் ஒப்புநோக்கினால் மட்டுமே இவை எவ்வாறு அந்த இசையில் பொருந்தியுள்ளன எனப் பார்க்க முடியும். ஆனால், இங்கே பாடலின் கருத்தைவிட வடிவத்திற்கே முக்கியத்துவம் தந்துள்ளது தெளிவாகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1930 முதல் 1945 வரை ஆக்கியவற்றில் அக்கால வழக்கங்களை நன்கு பதிந்துள்ளார். முக்கியமாக முடுகுச் சந்தத்தில்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சுட்டி பட்டம் ஜடை&lt;br /&gt;சிங்காரம் போச்சு&lt;br /&gt;இஷ்டமுடன் தலையிலே&lt;br /&gt;சிலைடு ரிப்பன் ஆச்சு...&lt;/em&gt;&lt;br /&gt;- எனத் தொடங்கும் பாடலின் மூலம் அந்தக் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களை அறிய முடிகிறது. அந்த வகையில் இதற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. இதே காலத்தில் நலங்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். அவற்றில் மீண்டும் பிரபல மெட்டுகளைக் கையாண்டுள்ளார். "மாயப் பிரபஞ்சத்தில்", "நந்தகே லாலா", "பஜனை செய்வோம்", "உள்ளம்தான்" மெட்டுகளில் இந்த நலங்குப் பாடல்கள் அமைந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;எல்லா உணவுப் பண்டங்களையும் சேர்த்து, 'போஜனப் பாட்டு' என்ற ஒன்றை மெல்லிய நகைச்சுவையுடன் இயற்றியுள்ளார். அக்காலத்தில் என்னென்ன உணவுகள் இருந்தன என்பதை இதன் வழியே அறியலாம். இதையும் "சதா போரே" மெட்டில் பாடியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பல பாடல்களில் இவர் என்ன கருவில் பாட்டு எழுதியுள்ளார் என்பதைவிட என்ன மெட்டில் பாட்டு எழுதியுள்ளார் என்பதே முக்கியமாய் இருக்கிறது. ஏனெனில் அக்காலத்தில் இன்னின்ன பாடல்கள் பிரபலமாக இருந்தன என்பதற்கான வரலாற்றுச் சான்றாக இந்த முயற்சி இருக்கிறது. "யாவரும் சுதந்திரமாக", "ஸ்ரீ கண்டேசனை", "பார்க்கப் பார்க்க" ஆகிய மெட்டுகளிலும் இவரிடம் பாடல்கள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பாரதி பாடல்களின் மெட்டிலும் இவர் பாடல் புனைந்துள்ளார். "விடுதலை விடுதலை", "விட்டு விடுதலையாகி", "ஒளி படைத்த கண்ணினாய்", "ஆடுவோமே பள்ளு பாடுவோமே", "என்று தணியும்" ஆகிய பாடல்களின் மெட்டிலும் இசை நகல் எடுத்துள்ளார். இந்தப் பாடல்கள், மிகச் சாதாரணமானவை; ஆழமற்றவை; ஏதோ விளையாட்டுப் போல் எழுதியுள்ளார்.  &lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படப் பாடல்களை அடியொற்றியும் எழுத முயன்றுள்ளார். "சிட்டுக் குருவி", "தங்கத்திலே", "கண்ணும் கண்ணும்", "சொல்லத்தான் நினைக்கிறேன்", "காதலிக்க நேரமில்லை", "நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம்"...போன்ற திரையிசைப் பாடல் மெட்டுகளிலும் பாடல் இயற்றிப் பார்த்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;பூரணியம்மாளின் தொடக்கக் கால எழுத்து முயற்சிகள், ஏதேனும் ஒன்றைப் பார்த்துப் போலச் செய்தல் முயற்சியிலேயே உள்ளன. தொடக்க நிலைக்கு அது சரி. ஓவியம் கற்க விழைவோர், ஒரு படத்தை மாதிரியாக வைத்தே வரைவது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளிலேயே அவர், சிறந்த கவிதையை நோக்கி நகர்ந்திருக்கவேண்டும். ஆயினும் பூரணியின் படைப்புகளை வைத்துப் பார்க்கும்போது, அவர் எழுதத் தொடங்கி 40 ஆண்டுகள் வரையும் இப்படி இசை நகல் எடுத்துள்ளார். இது, மிக அதிகமான காலம். &lt;br /&gt;&lt;br /&gt;தன் சொந்த வலுவின் மேல் நம்பிக்கை இல்லாத படைப்புத்தான், இன்னொன்றின் செல்வாக்கை வேண்டி நிற்கும். பிரபலமான ஒன்றைப் பிரதி எடுப்பது, பிரச்சாரத்திற்கு வேண்டுமானால் உதவலாம். அதற்கு இலக்கியம் என்று பெயரில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பாளியை ஊக்குவிக்கும் எண்ணமுள்ள நம் நாட்டுப் பெரிய மனிதர்கள் பேரிலும் குற்றமுண்டு. பூரணி என்ன எழுதினாலும் பாராட்டியுள்ளார்கள். ஏனெனில் அதற்கு மேல் சிறப்பாக எழுதுவோர் இல்லை போலும். இது, உண்மையாகவும் இருக்கலாம். ஏனெனில், பெண்கள் படிப்பதே கூடாது என்று இருந்த காலத்தில் பிறந்த பூரணி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அதன்பிறகு தன் சொந்த முயற்சியின் பேரில் இந்த அளவு எழுதியதே அவருக்குப் பெரியதாகத்தான் இருந்திருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அவரை மேலும் மேலும் எழுதத் தூண்டியவர்கள், அவரின் இசையாற்றலைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். தலைவரை வரவேற்க, ஆண்டுவிழாவில் பாட, நாடகத்துக்கு இடையே பாட.. என்று பாடலாசிரியரைச் சிறிய வட்டத்திற்கு உள்ளேயே சுற்றி வரச் செய்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பாரதி, காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்களைப் போற்றும் துதிகள் எழுதிய பிறகு பூரணி, அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். அது, இன்றும் கூட பலரும் பின்பற்றும் உத்திதான். அதாவது, ஒரு கருப்பொருளைப் பல்வேறு விதமாக உவமிப்பது, அந்த உவமைகளை அடுக்குவது. இதன்படி, வாசலில் இட்ட கோலம் எப்படியெல்லாம் இருக்கிறது?, மின்னல் எப்படியெல்லாம் தெரிகிறது?, அலை, கரையை நோக்கி ஏன் ஓடிவருகிறது?, மலை எப்படி தோன்றுகிறது?, வாழ்க்கை எப்படியெல்லாம் நம்முன் நிற்கிறது? எனக் காட்டுகிறார். இங்குதான் கொஞ்சம் உருப்படியான யாப்பமைவு இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இதன் பிறகு காட்சி விவரணைகளுக்கு வருகிறார். என்ன பார்த்தார், கேட்டார், உணர்ந்தார் என்பதை அப்படியே அழகாகச் சொல்லத் தெரிந்துவிட்டது. இங்கு பூரணி, தன் பெயர் சொல்லும் அளவுக்குச் சில படைப்புகளை வழங்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கட்டிவிட்ட கருந்திரையாய்&lt;br /&gt;கங்குல் தன் இருட்பரப்பில்&lt;br /&gt;வெட்டவெளி வானிடையே&lt;br /&gt;மெளனத்தின் சொற்பொழிவாய்&lt;br /&gt;கண்சிமிட்டும் தாரகைகள்&lt;br /&gt;காலக்கதை உரைக்க&lt;br /&gt;மண்சுமக்கும் மானுடங்கள்&lt;br /&gt;மயங்கித் துயின்றுவிட&lt;br /&gt;&lt;br /&gt;உறங்கும் உலகத்தில்&lt;br /&gt;உறங்கா ஒரு ஜீவன்&lt;br /&gt;கிறங்கக் குழலெடுத்து&lt;br /&gt;கீதம் இசைக்கிறது.&lt;br /&gt;வெள்ளை மணற்பரப்பில்&lt;br /&gt;வேய்ங்குழலின் மோகனத்தில்&lt;br /&gt;உள்ளம் லயித்திருக்க&lt;br /&gt;ஒரு மனிதன் இசைத்தவமாய்&lt;br /&gt;பரவச நிலை அடைந்து&lt;br /&gt;பாட்டாய் மாறிவிட்டான்&lt;/em&gt;&lt;br /&gt;-'நாதம்' என்ற தலைப்பிலான இந்தப் பாடல், இவருடைய முந்தைய படைப்புகளிலிருந்து வேறான ஒரு படைப்பு. 'மெளனத்தின் சொற்பொழிவு' என்ற சொற்சேர்க்கை, பூரணியிடமிருந்து வெளிப்பட்டுள்ளது, அவருடைய மாற்றத்திற்கான சான்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;அவைகள் மனிதர்கள்&lt;br /&gt;அல்ல, அதனால்&lt;br /&gt;இணையைப் பிரித்து&lt;br /&gt;இஞ்சக்ஷன் செய்து&lt;br /&gt;இனத்தைப் பெருக்கி&lt;br /&gt;இலாபமடை;&lt;br /&gt;&lt;br /&gt;நீயோ மனிதன் ஆகையால்,&lt;br /&gt;கருத்தடை மூலம்&lt;br /&gt;குழந்தைகள் ஒழித்து&lt;br /&gt;கட்டற்றுக் &lt;br /&gt;கலவியில் திளை&lt;/em&gt;&lt;br /&gt;-'கலி நீதி' என்ற இந்தப் படைப்பில் மனிதனின் முரணை நறுக்கெனக் கூறுகிறார். இதன் மூலம் தன்னால் சுருக்கமாகவும் வலுவாகவும் ஆழமாகவும் ஒரு கருத்தை முன்வைக்க முடியும் எனக் காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக் காலமாக இவர் எழுதியுள்ள பாடல்களில் நல்ல பல கேள்விகள் உள்ளன. அவர், சமூகத்தைக் கூர்ந்து கவனிப்பதோடு அதை விமர்சிக்கிறார். அதற்கு எதிர்வினையும் ஆற்றுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;போக்குவரத்துப்&lt;br /&gt;பாதைகளும்&lt;br /&gt;நாக்கு வறளாமல்&lt;br /&gt;நல்ல குடிநீரும்&lt;br /&gt;நாட்டு மக்களுக்கு நல்குவது&lt;br /&gt;அரசாங்கத்தின் கடமை.&lt;br /&gt;இதைப்போய் ஏன்&lt;br /&gt;விளம்பரப்படுத்துகிறார்கள் டி.வி.யில்?&lt;br /&gt;கிராமங்கள் அந்நிய நாடா?&lt;br /&gt;தர்மம் செய்கிறார்களா அதற்கு? &lt;/em&gt;&lt;br /&gt;- என்ற கேள்வியை அரசியல்வாதிகளின் முன் உரக்க வைக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஒற்றைச் சிலம்பால் குற்றவாளி கோவலன்&lt;br /&gt;மற்றதால் நிரபராதி&lt;/em&gt;&lt;br /&gt;- என்று சிலப்பதிகாரக் காதையை இரண்டே வரிகளில் கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாம்பத்யம், போலிகள், கொழுப்பு, எண்ணமும் செயலும், சலிப்பு, பண்பாடு, ஆண் குணம், பெண்களின் நிலை, முதுமை, பெண்ணியம்...இவையெல்லாம் இவரின் படைப்புகளுக்கான தலைப்புகள். தலைப்பு வைப்பதில் பூரணி இன்னும் கவனம் செலுத்தவேண்டும். இவருடைய தலைப்புகளில் கவித்துவத்தை மத்திய புலனாய்வுப் பிரிவேனும் கண்டுபிடிக்குமோ, என்னவோ!&lt;br /&gt; &lt;br /&gt;மிக அரிதான ஒன்றைக் குறிப்பிடவேண்டும். பாரதியின் சமகாலத்தில் வாழ்ந்த ஒருவர், இன்றும் நம்மிடையே இருக்கிறார்; அதுவும் அவ்வப்போது ஏதாவது எழுதியபடி. கவிஞர்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, கவிதையின் மீது சலிப்படைவது இயல்பு. பூரணி அவ்விதம் இல்லாமல் தொடர்ந்து இயங்குவதே பாராட்டத்தக்கது. இக்காலச் சூழலுக்கு ஏற்ப, புதுக்கவிதையிலும் எழுத முயலுகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;பூரணியின் இயற்பெயர், சம்பூர்ணம். பிறந்த ஊர், பழனி. புகுந்த ஊர், தாராபுரம். இப்போது சென்னையில் வசிக்கிறார். தமிழாசிரியரின் மகளாகப் பிறந்தார். மிக இளம் வயதிலிருந்தே எழுதி வந்தாலும் 2001ஆம் ஆண்டில்தான் இவரின் முதல் நூல் வெளிவந்துள்ளது. அதன் தலைப்பு, பூரணி கவிதைகள். இவர், கபீர் கவிதைகளை தமிழாக்கியுள்ளார். இவருடைய மகளே கிருஷாங்கினி. நூற்றாண்டை நோக்கி வீறு நடைபோடும் பூரணி, நல்ல உடல்நலத்தோடும் மனநலத்தோடும் படைப்பாற்றலோடும் விளங்க வாழ்த்துகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கடமைகள் ஓய்ந்தாலும்&lt;br /&gt;முதுமைநிலை வந்தாலும்&lt;br /&gt;செயலற்ற நினைவோட்டம்&lt;br /&gt;சலியாது தொடர்கிறது&lt;/em&gt;- என்கிறார் பூரணி.&lt;br /&gt;&lt;br /&gt;முதியவர்கள், குழந்தைகளுக்குச் சமானம்; குழந்தைகள், தெய்வங்களுக்குச் சமானம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-111806792760812423?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/111806792760812423/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=111806792760812423' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111806792760812423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111806792760812423'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/06/blog-post.html' title='கவிதாயினி பூரணி'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-112074732276506042</id><published>2005-05-25T14:41:00.000Z</published><updated>2005-07-07T14:42:02.773Z</updated><title type='text'>தமிழ் தமிழர் தமிழ்நாடு!!???</title><content type='html'>உண்மையில் நாம் மிகவும் இக்கட்டான நிலையில்தான் இருக்கிறோம். கடந்த ஞாயிறு அன்று &lt;em&gt;தமிழன்&lt;/em&gt; தொலைக்காட்சியில் இயக்குநர் சீமான், மக்கள் எழுதி அனுப்பிய கேள்விகளுக்கு விடையளித்துக்கொண்டிருந்தார். பேச்சின் இடையே அவர் சொன்னது: அண்மையில் ஒருநாள் அவரும் அறிவுமதியும் திரையரங்கு ஒன்றிற்குச் சென்றார்களாம். அங்கு நின்றிருந்த இளைஞர்கள் அவ்வளவு பேரும் மேற்கத்திய கலாசாரம் உடையில் தெரிய, கலப்புத் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அறிவுமதி சொன்னது: 'நாம் போராட்டத்தை மிகவும் தாமதமாகத் தொடங்கியிருக்கிறோம். நாம் இப்போது மிகவும் பின்தங்கி இருக்கிறோம். எல்லாம் நம் கையை மீறிச் சென்றுவிட்டன'.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் சிந்திப்பது நல்லது. &lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் அச்சம் தரும் உண்மை என்னவெனில், பெரும்பான்மைத் தமிழர்களுக்குத் தமிழ்ப் பற்று குறைந்துவிட்டது. அது மட்டுமின்றி, அவர்களிடம் தமிழை வலியுறுத்துவதை அவர்கள் தவறு என்றும் கருதத் தொடங்கிவிட்டார்கள். தவறு என்ற மனப்பான்மை வளருவதால் நல்ல தமிழைப் பேசும் தவற்றைப் பலரும் செய்வதில்லை. இயல்பான பேச்சு என்ற பெயரில் எவ்வளவுக்கு எவ்வளவு வேற்றுமொழிச் சொற்களைக் கலக்க முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு கலக்கிறார்கள். மிகவும் கவனிக்க வேண்டியது, இப்படிக் கலப்பது குறித்து அவர்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. இதுவே சரி என்றும் கருதுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனப்பான்மையின் அடிப்படையிலேயே அவர்களின் பல செயல்களும் அமைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;1. குழந்தைகளுக்கு வடசொற்கலப்புடன் பெயர் வைப்பது,  'மம்மி', 'டாடி' என்று அழைக்கவைப்பது, தம் குழந்தைகளை ஆங்கிலப் பாட வழியில் சேர்ப்பது, ஆங்கிலத்தில் பேசுபவரைப் பெரிய அறிவாளியாகக் கருதுவது...... போன்றவை இன்று எங்கும் காணத் தகுந்த காட்சிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;2. தம் முதலெழுத்துகளை ஆங்கிலத்திலேயே வைத்துக்கொள்வோர் பெருகி வருகின்றனர். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அதன் பிறகு அவர்கள், தமிழை வலியுறுத்திப் பேசும் தகுதியையும் இழந்துவிடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;3. கடைகள், வணிக நிறுவனங்கள், விளம்பரங்கள்.. என வணிகம் சார்ந்த அனைத்திலும் ஆங்கிலமே கோலோச்சுகிறது. இன்னும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவரின் முகவரி அட்டை முதற்கொண்டு, கடிதக் கட்டு, தம்மைப் பற்றிய அறிமுகம், விலைச் சீட்டு, வணிக ஒப்பந்தம்... என அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;4. துறைதோறும் துறைதோறும் புழங்குகிற வேற்றுச் சொற்களைக் கணக்கெடுக்கத் தொடங்கினால் தமிழ் அகராதி தோற்றுவிடும் ஆபத்து உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;5. எழுத்தாளர்களும் வெட்கம் இல்லாமல் இந்தப் போக்குக்குத் துணை போகின்றனர். தமிழ்ப் படைப்புகள் பலவும் வேற்று மொழிச் சொற்களைத் தம் உடலோடு ஒட்டிக்கொண்டுள்ளன. புகழ் பெற்ற, மூத்த எழுத்தாளர்களே இது குறித்து அக்கறை ஏதும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். எங்கே அதை ஆதரித்தால் தாம் நாளை கலப்புத் தமிழில் படைக்கத் தடை உண்டாகிவிடுமோ என்ற அச்சத்தில் 'படைப்பிலக்கியத்தில் தூய தமிழைப் பேண முடியாது' என்று மறுக்கின்றனர். அவர்களுக்கு அதற்குத் தகுதியும் திறமையும் இல்லை என்று ஒப்புக்கொள்ள அவர்கள் எவரும் முன்வருவதில்லை. மாறாக, தம் குறையைத் தமிழின் குறையாக ஏற்றிக் கூறுவதில் எழுத்தாளர்கள் முனைப்புடன் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;6. தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும்கூட தம் எல்லையான வகுப்பறை அளவிலும் கூட நல்ல தமிழில் பேசுவதில்லை; மாணவர்களையும் பேசத் தூண்டுவது இல்லை. 'கூலிக்கு மாரடிப்பது' என்பதுபோல் வகுப்பறைக்குள் நுழைந்து, நேர நிரப்பிகளாக நிற்கிறார்கள். தமிழை வைத்து வயிறு வளர்க்கும் இவர்கள், தன் பக்க இலக்கிலேயே கால்பந்தை அடிக்கிறார்கள்(same side goal). மாறும் உலகில் தமிழால் எதுவும் முடியாது என்ற எண்ணத்தை வளர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;7. தமிழ்நாட்டு ஊடகங்கள், தமிழுக்குப் பெரும் கேட்டினைச் செய்து வருகின்றன. தலைப்புகளைத் தமிழில் வைக்காமல், தமிழைச் சரியாக உச்சரிக்கத் தெரியாமல் நிலைமையை மோசமாக்கி வருகிறார்கள். இவர்களும் நல்ல தமிழுக்கு எதிர்நிலையையே எடுக்கிறார்கள். தம்மைச் சார்ந்த எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நேயர்களுக்கும் தவறான வழிகாட்டி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;8. அரசு நிர்வாகம், நீதிமன்றம், ஆலயம், கல்வி, தொழில்நுட்பங்கள்.. எனப் பல துறைகளிலும் தமிழ், இரண்டாம் தர நிலையிலேயே உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழ்நிலையில் தமிழை எல்லாத் துறைகளிலும் வலியுறுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம். தமிழைப் பேசுவோர், அதுகுறித்துத் தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் பெருமிதம் கொள்ளச் செய்வது, பெரிய சவாலாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளையாக, தமிழ் அரசியல் கட்சிகள் சிலவற்றுக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. முதல் நோக்கில் இது, பாராட்டப்பட வேண்டியது. இவர்கள் வெறும் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டிருக்காமல் களத்தில் இறங்கிப் போராட முன்வந்துள்ளனர். இதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம், தமிழர்கள் தமிழை விட்டு விலகி நிற்கிறார்கள். இன்றைய சூழலில் தமிழர்களிடம் தமிழைச் சொல்லி வாக்குக் கேட்க முடியும் என்பதை நான் நம்பவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படி வெகு சிலர், போராட்டக் களத்தில் நிற்கும்போது களத்தில் இறங்கிப் போராட முடியாதவர்கள் சும்மாவாவது இருக்கலாம். வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போல், எதிர்க்கருத்தைக் கூறி, மட்டையடி அடிக்காமல் இருக்கலாம். இந்தப் போராட்டத்தால் தமிழ் மக்கள், தமிழுணர்வு பெற்றுவிடுவார்கள் என்ற நப்பாசையில் இருக்கும் சிலர், அதனால் தொடக்கத்திலேயே சோர்ந்துபோய்விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் போராட்டம், முனை மழுங்கிப் போவது, நம்மிடம் இருக்கும் மொக்கைக் கத்தியையும் நாம் இழந்துவிடுவதற்குச் சமானம். தமிழ்ப் பாதுகாப்புப் போராட்டத்தைப் பலவீனப்படுத்துவது, நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போலாகும். &lt;br /&gt;&lt;br /&gt;ஏறத்தாழ, பத்து ஆண்டுகளுக்கு முன் இத்தகைய ஒரு போராட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். 'செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம்' என்ற அமைப்பின் சார்பில், பெயர்ப் பலகைகளைத் தமிழில் வைக்கக் கோரி, சென்னையில் சில சாலைகளின் வழியே பேரணி நடத்தினோம்; காவல் துறையின் அனுமதியுடன்தான். வழியில் உள்ள கடைகளில் எல்லாம் துண்டறிக்கையை விநியோகித்து வந்தோம். இறுதியில் ஒரு கூட்டம் போட்டு, சில தீர்மானங்களை நிறைவேற்றினோம். அன்று எங்களால் செய்ய முடிந்தது அவ்வளவே.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய நிலையில் இந்தக் கோரிக்கைக்காகப் போராடுவதற்கு ஆட்கள் கிடைப்பதே அரிது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள், தம் வேலையை விட்டுவிட்டு, அக்கினி நட்சத்திர வெய்யிலில் தொண்டை கிழியக் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்து, வாகனங்களை மறித்து, வேற்று மொழி விளம்பர/ பெயர்ப் பலகைகளைக் கரிநெய் பூசி அழித்து, கைதாகி, சிறை செல்லுவது எதற்காக? &lt;br /&gt;&lt;br /&gt;அரசின், வணிக நிறுவனங்களின், பொதுமக்களின் கவனத்தைத் தமிழின்பால் ஈர்ப்பதற்கே. அவர்கள் முயற்சிக்கு நாம் ஆதரவளிக்கா விட்டாலும் எதிர்க்காமலாவது இருக்கலாம். உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறதா? ஐயப்பாடு இருக்கிறதா? வேறு ஆலோசனை இருக்கிறதா? போராடும் தோழர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள், அணுக முடியாத தொலைவில் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;போராட்டம் எப்படி அமையலாம் என்பதை ஆலோசனையாகக் கூறலாமே அன்றி, போராட்டமே தவறு என்று அவர்களைத் தூற்றக் கூடாது. நம் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். நாம் சொல்வதைக் கேட்கவும் ஆமோதிக்கவும் ஒவ்வொருவருக்கும் நாலு பேர் இருக்கத்தான் செய்வார்கள். ஆகவே வலைப்பதிவாளர்கள், தமிழைக் குறித்து விவாதிக்கும் போது மிகுந்த விழிப்போடு இருக்குமாறு வேண்டுகிறேன்.  சமூகத்திற்கு நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நன்மை செய்யும் ஒரு முயற்சிக்கு நாம் நம் வேற்றுமைகளை மறந்து ஆதரவு தெரிவிக்கவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-112074732276506042?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/112074732276506042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=112074732276506042' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112074732276506042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/112074732276506042'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/05/blog-post_25.html' title='&lt;strong&gt;தமிழ் தமிழர் தமிழ்நாடு!!???&lt;/strong&gt;'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-111806365977431444</id><published>2005-05-15T13:12:00.000Z</published><updated>2005-06-06T13:14:19.776Z</updated><title type='text'></title><content type='html'>பெண் எம்.எல்.ஏ. சூரியகலா (குடியாத்தம்)&lt;br /&gt;சந்திப்பு: அண்ணாகண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;தேநீர்க் கடையை அரசியல் பாடசாலை என்று சொல்வார்கள். ஒரு நாளிதழைப் பத்து நூறு பேர் படிப்பதும் காரசாரமாக விவாதிப்பதும் அது சிலநேரங்களில் அடிதடியில் முடிவதும் அங்கு வாடிக்கை. இதற்கு அஞ்சி, 'இங்கு அரசியல் பேசாதீர்' என்று எழுதி வைப்போரும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சில கிராமத்துத் தேநீர்க் கடைகளில் இட்லி, வடை போன்றவையும் விற்பார்கள். இக்கடையை 'ஓட்டல் கடை' என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலூர் மாவட்டத்தில் உள்ளது விரிஞ்சிபுரம் கிராமம். அங்கு 43 ஆண்டுகளுக்கு முன் நாராயணசாமி என்பவர், ஒரு ஓட்டல் கடை தொடங்கினார். 'சூரியகலா ஓட்டல்' என்று, அப்போது பிறந்த தன் மகளின் பெயரையே கடைக்கு வைத்தார். அந்தத் தேநீர்க்கடைக்காரரின் மகள் சூரியகலா(43), இன்று குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியகலாவைச் சந்திக்க விரிஞ்சிபுரத்துக்குச் சென்றோம். 'சி.எம்.சூரியகலா' என்ற பெயர்ப் பலகையைப் பார்த்தபடி வீட்டுக்குள் நுழைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"பெயருக்கு முன்னால் இருக்கும் சி.எம்., எதிர்காலத்தில் பெயருக்குப் பின்னாலும் வரக்கூடுமா?" என்று சிரித்தபடி கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"நானாவது... சி.எம். ஆவதாவது? அந்தத் தகுதி 'அம்மா' ஒருவருக்கு மட்டும்தான் உண்டு!" என்று சூரியகலாவும் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என் கணவர் சி.எம்.மகாலிங்கத்தின் முன்னோர் சின்னசாமி, முனுசாமி என்ற இருவர். அவர்களின் முதலெழுத்துகளைச் சேர்த்து 'சி.எம்.' ஆக்கினார்கள். 50 ஆண்டுகளாக அவர் குடும்பத்தில் எல்லோருக்குமே இதுதான் முதலெழுத்து. அவரை மணந்தபிறகு எனக்கும் அதுவே முதலெழுத்தானது" என்று விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளமைப் பருவம் பற்றிக் கேட்டோம். சூரியகலா விவரிக்கத் தொடங்கினார்- &lt;br /&gt;"என் அப்பா நாராயணசாமி. அம்மா, ராஜாமணி. இவர்களுக்கு 3 பெண்களும் 4 ஆண்களும் பிறந்தார்கள். நான் இரண்டாவது குழந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயதில் அப்பாவின் கடைக்குப் போய் விரும்பியதைச் சாப்பிடுவேன். வேடிக்கை பார்ப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;11ஆம் வகுப்பு வரை விரிஞ்சிபுரத்திலேயே படித்தேன். அதன்பிறகு அஞ்சல் வழியில் வரலாறு பாடத்தில் பி.ஏ. பட்டம் பெற்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதிலிருந்தே நான் 'அம்மா'வின் ரசிகை. 'அம்மா' நடித்த  படம் என்றால் முதல்நாளே போய்ப் பார்ப்பேன். 1978 முதல் நான் அ.தி.மு.க.வில் இருந்தாலும் 1980 முதல்தான் வேகமாகப் பணியாற்றத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1996 சட்டமன்றத் தேர்தலில் அணைக்கட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டேன். 19 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். அதில் சொத்துகளை இழந்து கடனாளி ஆனேன். எனினும் மனம் தளரவில்லை. இறுதிமூச்சு உள்ளவரை 'அம்மா'தான் எனத் தொடர்ந்து பணியாற்றினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 2001 தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டேன். அங்கு போட்டியிட அ.தி.மு.க. சார்பில் 36 பேர் விண்ணப்பித்தார்கள். 'அம்மா' எனக்கு 'சீட்டு' கொடுத்தார்கள். அது சொந்தத் தொகுதியாக இல்லாதபோதும் 24 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றேன். எல்லாமே 'அம்மா'வுக்காக விழுந்த வாக்கு. அம்மா என் தெய்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் என் கணவரும் 1991இல் சென்னைக்கு வந்தோம். அப்போது 'அம்மா' முதலமைச்சராய் இருந்தார். அமைச்சர் ஒருவரிடம் போய் 'அம்மாவைப் பார்க்கணும்' என்றோம். எதிரில் இருந்த புகைப்படத்தைக் காட்டி, 'இதோ, போட்டோவுல இருக்காங்க. பார்த்துக்குங்க' என்றார். மனவேதனையுடன் திரும்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வலியைத் துடைத்தெறிந்து விட்டுத் தொடர்ந்து உழைத்தேன். 'அம்மா' என்னை சட்டப் பேரவை உறுப்பினராக்கி அழகு பார்க்கிறார். இப்போது 'அம்மா'வை அடிக்கடி பார்க்கிற வாய்ப்புக் கிடைக்கிறது. ரொம்ப மகிழ்ச்சி, எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;1990இல் என் மகள் மாலதியையும் மகன் சதீசையும் கடத்தினார்கள். அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்குச் சென்று 'அப்பாவுக்கு விபத்து' என்று சொல்லிக் கூட்டிச் சென்றான், ஒருவன். எனக்கு விசயம் தெரிந்ததும் நாலாபுறமும் ஆட்களை அனுப்பித் தேடினேன். வேலூரில் பிள்ளைகளுடன் அவன் நடந்து சென்றபோது பிடிபட்டான். பிறகு விசாரணையில், 'என்னை அரசியலில் இருந்து வெளியேற்றவே இந்த முயற்சி' என்று தெரிந்தது. அன்று எங்களின் திருமண நாளும்கூட.&lt;br /&gt;&lt;br /&gt;1994ஆம் ஆண்டு 'அம்மா'வைத் தாக்கிப் பேசியதற்காக வாழப்பாடி ராமமூர்த்தியின் கொடும்பாவியை எரித்தேன். அடுத்த ஆண்டில் சென்னாரெட்டி, சுப்பிரமணியசாமி ஆகியோரின் கொடும்பாவிகளையும் எரித்தேன். மூன்று முறைகளும் கைதாகி விடுதலையானேன். பொம்மை மேல் அவர்களின் பெயர் எழுதி உள்ளே 500 சரவெடியை வைத்துக் கொளுத்தினேன். அவை தூள் தூளாக வெடித்துச் சிதறின.&lt;br /&gt;&lt;br /&gt;1995இல் ஆளுநர் சென்னாரெட்டியைத் திரும்பப் பெறக் கோரி, குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் மனு அனுப்பினோம். அதில் நான் முதலில் இரத்தக் கையெழுத்து வைத்தேன். என் தலைமையில் ஆயிரம் பேர் இரத்தக் கையெழுத்து இட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் வென்ற பிறகு நன்றி தெரிவிக்கச் சென்றபோது மக்கள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைத் தந்துள்ளார்கள். வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, ஆழ்குழாய்க் கிணறு, சாலை வசதி, மருத்துவமனைச் சுகாதார வசதி, பேருந்து வசதி, மின்விளக்கு, கல்வி, வேலைவாய்ப்பு, தொகுப்பு வீடு, கள்ளச் சாராய ஒழிப்பு, காவல்துறை மீது புகார்.... எனப் பல கோரிக்கைகளுடன் மனுக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை 2,650 மனுக்களுக்குப் பதில் எழுதியுள்ளேன். அந்தந்தத் துறைக்கு அவற்றை அனுப்பிப் பரிசீலிக்கச் சொல்லியுள்ளேன். விரைவில்  எல்லாக்  குறைகளையும்  தீர்ப்பேன்" என்றார், சூரியகலா.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியகலாவின் கணவர் மகாலிங்கம், ஒரு சித்த மருத்துவர். ஓமியோபதி, யுனானி மருத்துவமும் அறிந்தவர். வீட்டிலேயே நோயாளிகளைப் பார்த்து மருந்து தருகிறார். "கட்சிக்காரர் வந்தால் காசு வாங்கமாட்டேன். ஏழைகள் என்ன கொடுக்கிறார்களோ, வாங்கிக்கொள்வேன்" என்றார். ஆங்கில மருந்துக் கடை ஒன்றும் வாகனத்தை வாடகைக்கு விடும் நிறுவனமும் வைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியைக் குறித்துக் கேட்டோம். "1979இல் திருமணம் செய்துகொண்டோம். நான் என் மனைவியைச் 'சீதா' என்றுதான் அழைப்பேன். விட்டுக் கொடுத்து வாழ்ந்து வருகிறோம். சீதா, நேர்மையும் உண்மையும் பொருந்தியவர்" என்றார் மகாலிங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;மகாலிங்கம் மொட்டைத் தலையுடன் இருந்தார். காரணம் கேட்டோம். "அம்மா முதல்வரானால் திருப்பதிக்கு வந்து அன்னதானம் செய்து மொட்டை அடித்துக்கொள்வதாக வேண்டியிருந்தேன். அதைத்தான் நிறைவேற்றினேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு 3 பிள்ளைகள். இளையவர் ராஜேஷ்காந்தி +2 படிக்கிறார். நடுவர் சதீஷ்காந்தி +2 முடித்துள்ளார். மூத்தவர் மாலதி பிரியதர்சினி, மருத்துவப் படிப்பு 4ஆம் ஆண்டு படிக்கிறார். நடனம், நடிப்பு, பாட்டு, ஓவியத் திறமைகள் உடையவர். "நரம்பியல்  மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, 'அம்மா'வின் மருத்துவக் குழுவில் இடம்பெற விரும்புகிறேன்" என்றார் மாலதி.&lt;br /&gt;(நன்றி: ராணி 26-8-2001)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-111806365977431444?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/111806365977431444/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=111806365977431444' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111806365977431444'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111806365977431444'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/05/blog-post_15.html' title=''/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-111806286342212243</id><published>2005-05-13T12:58:00.000Z</published><updated>2005-06-06T13:01:03.756Z</updated><title type='text'>பெண் எம்.எல்.ஏ. சாண்டிரா டான் கிரேவல்</title><content type='html'>சந்திப்பு:அண்ணாகண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு மக்கள் நேரடியாகத் தேர்வுசெய்யும் உறுப்பினர்கள் 234 பேர். இவர்கள் தவிர, ஆங்கிலோ இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை எம்.எல்.ஏ. ஆக ஆளுநர் நியமிப்பது வழக்கம். தேர்ந்து எடுக்கப்படும் எம்.எல்.ஏ.களுக்கு உள்ள எல்லா உரிமைகளும் இவருக்கும் உண்டு (தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் உரிமை தவிர).&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைய சட்டமன்றத்தில் ஆங்கிலோ இந்தியன் எம்.எல்.ஏ. ஆக, சாண்டிரா டான் கிரேவல் என் 47 வயதுப் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த தாமஸ்மலையில் வசிக்கும் சாண்டிராவைச் சந்தித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் நடிகை லைலாவைப் போல் இருக்கிறீர்கள்!" என்றோம். குபீரெனச் சிரித்தார். "லைலா, தமிழ் நடிகையா?" எனக் கேட்டார். "தமிழ்ப் படங்களில் நடிக்கிறார். ஆனால், மும்பை நடிகை" என்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டி தொடர்ந்தது. சரளமான ஆங்கிலத்தில் மகிழ்ச்சியோடு பேசினார், சாண்டிரா.&lt;br /&gt;&lt;br /&gt;ராணி: நீங்கள் பிறந்ததில் இருந்து இன்றுவரை உங்கள் வாழ்வைப் படிப்படியாகச் சொல்லுங்கள்?&lt;br /&gt;சாண்டிரா: நான் இதே தாமஸ் மலையில் 1953இல் பிறந்தேன். சென்னை, அண்ணா சாலையில் உள்ள கிறித்து ஆலய ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் 11ஆம் வகுப்பு வரை படித்தேன்.சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்தவக் கல்லூரியில் பி.யூ.சி. முடித்தேன். தாம்பரத்தில் உள்ள கிறித்தவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படித்து முடித்துவிட்டு, 'இந்தியாவின் உலகப் பார்வை' என்ற தொண்டு நிறுவனத்தில் எழுத்தராக மூன்றாண்டுகள் பணியாற்றினேன். பிறகு பெட்ரோலிய வேதிப் பொருள் நிறுவனம் ஒன்றில் எழுத்தராகச் சேர்ந்தேன். அங்கு 21 ஆண்டுகள் பணியாற்றினேன். அங்கு ஆட்குறைப்பு நடந்தபோது கட்டாய ஓய்வு கொடுத்து என்னை அனுப்பினார்கள். அதன்பிறகு நான் எங்கும் வேலைக்குப் போகாமல் சமூகசேவை செய்துவருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணி: நீங்கள் செய்துவரும் சமூக சேவை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;சாண்டிரா: நான் பணியாற்றியபோது இரண்டு மாணவர்களின் கல்விச் செலவு முழுவதையும் ஏற்றிருந்தேன். இப்போது எங்கள் பகுதியில் நடமாட முடியாமல் இருக்கும் முதியோருக்கு உதவி வருகிறேன். மின்சாரக் கட்டணம் செலுத்துவது, கடைக்குச் சென்று பொருள் வாங்கி வருவது, தொலைபேசிக் கட்டணம் செலுத்துவது... போன்ற சின்னச் சின்ன உதவிகள் செய்கிறேன். ஏழைகளின் வீட்டுக்குச் சென்று அவர்களின் குடும்பச் சிக்கல் தீர ஆலோசனை வழங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எழும்பூரில் உள்ள முதியோர் இல்லத்திற்குச் சென்று ஏசுவின் மீது பாடல் இசைத்துப் பிரார்த்தனை செய்கிறேன். 'மதுரையில் கால் ஊனமுற்ற ஒருவர் தெருவில் வசிக்கிறார்' என்ற செய்தியை நாளிதழில் கண்டேன். உடனே 'உதவும் கரங்கள்' வித்யாகருக்குத் தொலைபேசி செய்தேன். 'நானும் அந்தச் செய்தியைத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன்' என்றார், அவர். என்னால் முடிந்த தொகையைக் காசோலையாக அனுப்பி வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணி: உங்களுக்கு எப்படி இந்தப் பெருமை மிகுந்த நியமனம் கிடைத்தது?&lt;br /&gt;சாண்டிரா: ஒரு நாள், தொலைபேசியில் ஒருவர் என்னை அழைத்தார். என் வாழ்க்கைக் குறிப்பை அனுப்புமாறு கேட்டார். "எதற்கு?" என்றேன். "வேலைக்காக" என்றார். "எனக்கு வேலை வேண்டாம். நான் சமுதாய சேவை செய்கிறேன்" என்றேன். "இந்த வேலையே அப்படிப்பட்டதுதான்" என்றார். அனுப்பிவைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகொருநாள் முதல்வர் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் செய்தி வந்தது. போய்ப் பார்த்தேன். "உங்களால் உங்கள் சமுதாயத்திற்குச் சேவை செய்ய முடியுமா?" என்று முதல்வர் கேட்டார். "உங்கள் உதவியோடு முடியும்" என்றேன். ஜூன் 29ஆம் தேதி என்னை எம்.எல்.ஏ. ஆகத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ராணி: 'ஆங்கிலோ இந்தியன்' என்பவர் யார்?&lt;br /&gt;சாண்டிரா: (இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் புத்தகத்தை எடுத்துக் காட்டி) ஐரோப்பியத் தந்தைக்கும் இந்தியத் தாய்க்கும் பிறந்தவரே ஆங்கிலோ இந்தியன். 'ஐரோப்பிய' என்று குறிப்பிட்டு இருந்தாலும் அவர் ஆங்கிலம் பேசுபவராய் இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணி: உங்கள் பெற்றோரைப் பற்றிச் சொல்லுங்கள்?&lt;br /&gt;சாண்டிரா: என் அம்மா பெயர், ஈவான். இப்போது 74 வயது ஆகிறது. தாமஸ் மலை தபால் தந்தி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். என் அப்பா காலின்ஸ். நாற்பது வயதுக்குள் இறந்துவிட்டார். அதன்பிறகு என் அம்மா, தன் சக ஊழியராய் ரொசாரியோவை மணந்தார். அவர்களுக்குப் பிறந்தவளே என் தங்கை மிஷல். இப்போது அவள் மும்பையில் கல்லூரிப் பேராசிரியையாக இருக்கிறாள். அவள் கணவர் ஒரு மலையாளி. என் கணவர் பஞ்சாபி.&lt;br /&gt;&lt;br /&gt;ராணி: உங்களுடையது காதல் திருமணமா? &lt;br /&gt;சாண்டிரா: ஆங்கிலோ இந்திய சமுதாயத்தில் முழுக்கக் காதல் திருமணம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாண்டிராவின் தாய்: ஆமாம். ஒருநாள் பலத்த மழை பெய்தது. என் வீட்டருகே வரும்போது அரீந்தர்சிங் கிரேவலின் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டது. எங்கள் வீட்டில்  நிறுத்திவிட்டுச் சென்றார். பிறகு நட்பு முறையில் நான் அவரது வீட்டுக்குச் சென்றேன். நட்பு வளர்ந்து காதலானது. மூன்றாண்டுகள் கழித்து எங்கள் திருமணம் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ராணி: உங்கள் கணவர் சீக்கியராகவும் நீங்கள் கிறித்தவராகவும் இருப்பதால் ஏதும் மோதல் ஏற்பட்டதுண்டா?&lt;br /&gt;சாண்டிரா: இல்லை. அவரும் அவர் வீட்டாரும் மிகவும் நல்லவர்கள். அவர் சீக்கியராய் இருந்தாலும் கிறித்தவரான என் அம்மாவை அவரது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் உட்காரவைத்து ஞாயிறுதோறும் தேவாலயத்துக்கு அழைத்துச் செல்வார். நானும் பஞ்சாபி உடையான சல்வார் கமீசை அணிவேன். என் கணவர் இப்போது பஞ்சாபில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றுகிறார். அவர் ஆங்கிலம் பேசுபவராய் இருந்ததால்தான் எங்களுக்குள் எளிதில் காதல் வளர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ராணி: சாண்டிரா டான் என்றால் என்ன பொருள்?&lt;br /&gt;சாண்டிரா: சாண்டிரா என்றால் உதவிசெய்பவர் என்றும் டான் என்றால் அதிகாலை என்றும் பொருள்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணி: தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. ஆக இருக்கிறீர்கள். தமிழ் கற்க விருப்பம் உண்டா?&lt;br /&gt;சாண்டிரா: நிறைய விருப்பம் உண்டு. ஒன்றிரண்டு தமிழ்ச் சொற்கள் தெரியும் (கண்ணாடி, பாரு, மெல்லப் போங்க என்ற சொற்களை மழலையில் சொல்லிக் காண்பித்தார்). இன்னும் ஆறு மாதத்திற்குள் தமிழ் கற்றுவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணி: இப்போது உங்கள் சமுதாயத்தின் கோரிக்கைகள் யாவை?&lt;br /&gt;சாண்டிரா: கிறித்தவர் எல்லோரும் பணக்காரர் இல்லை. எங்கள் சமுதாயத்தில் பலரும் ஏழ்மையில் இருக்கிறார்கள். சிலருக்கு அறிவுக் கூர்மை இருந்தும் தொழில் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. கல்வியும் தொழிற்பயிற்சியும் வேலைவாய்ப்பும்தான் எங்கள் முதன்மையான கோரிக்கைகள். &lt;br /&gt;&lt;br /&gt;ராணி: அந்தக் காலத்துப் புதுவை மக்களுக்கு பிரெஞ்சு அரசு, பல சலுகைகளை வழங்கியுள்ளது. அதைப் போல் இங்கிலாந்து அரசு உங்களுக்கு ஏதும் சலுகை வழங்குகிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;சாண்டிரா: அந்தக் காலத்தில் இங்கிலாந்துப் படையில் இருந்த சிலர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். வேறு எந்தச் சலுகையும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ராணி: இந்திய தேசிய கீதம், இங்கிலாந்து தேசிய கீதம்- இரண்டில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?&lt;br /&gt;சாண்டிரா: நான் ஒரு இந்தியப் பெண். என் மூதாதையரைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. என் தாத்தாவின் தாத்தா, இங்கிலாந்தில் ஒரு மருத்துவராய் இருந்தார். அவர் இந்தியாவுக்கு வந்து உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அது நான்கு தலைமுறைக்கு முந்தைய சமாசாரம். நான் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, படித்து, இந்தியரைத் திருமணம் செய்துள்ளேன். வேற்றுமையுள் ஒற்றுமை கண்டுள்ள இந்தியாவைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ராணி: ஆங்கில சமுதாயத்தின் தாக்கம் உங்கள் வாழ்க்கையில் எந்த அளவு இருக்கிறது?&lt;br /&gt;சாண்டிரா:குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை. நான் ஆங்கிலம் பேசுகிறேன். கர்த்தரைப் பின்பற்றுகிறேன். கவுன் அணிகிறேன். ஆனால், சல்வார் கமீஸ், சேலை போன்றவற்றையும் உடுப்பேன். பியானோ, கிடார் வாசிப்பேன். மதப் பாடல்கள் பாடுவேன். ஓவியம் வரைவேன். நான் நகை அணிவதில்லை. மேக்கப் போடுவதில்லை. மது அருந்துவது, புகை பிடிப்பது, சூதாடுவது எதுவும் கிடையாது. பாட்டோடு சரி. நடனம்கூட ஆடமாட்டேன். பைபிளின்படி வாழ்கிறேன். தமிழ்ப் பண்பாட்டோடு ஏறக்குறைய கலந்து விட்டேன். &lt;br /&gt;"தமிழ்ப் படித்துவிட்டால், முழு தமிழ்ப் பெண்ணாகவே ஆகிவிடுவீர்கள்" என்று வாழ்த்திவிட்டு வந்தோம்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காதல் தம்பதிகளுக்குக் குழந்தை இல்லை. "ஏழை மக்கள் எல்லோருமே என் குழந்தைகள்தான்" என்கிறார், சாண்டிரா.&lt;br /&gt;&lt;br /&gt;சாண்டிராவின் வீடு, பழங்காலத்து மண்டபம் போல இருக்கிறது. அதன் வாசல் கதவு குறுக்குக் கம்பியுடன் கூடிய மெல்லிய மரத்தால் ஆனது. அந்தப் பெரிய வீட்டில் வயதான தாயாருடன் சாண்டிரா தனியே வசிக்கிறார். "இது பாதுகாப்பான வீடுதானா?" என்று கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"1994இல் எங்கள் வீட்டில் ஒரு திருடன் புகுந்தான். பணம், வீட்டுப் பத்திரம் ஆகியவற்றைத் திருடிச் சென்றான். வெளியே போய்ப் பார்த்துவிட்டு, 'தேவையில்லை' என  வீட்டுப் பத்திரத்தை வீசி எறிந்தான். அது, மதிலுக்கு அப்பால் கிடந்தது. கடவுளின் கருணையால் அது தப்பியது. &lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல் எங்கள் வீட்டில் பல முறைகள் திருட்டு நடந்துள்ளது. என்மேல் அக்கறை கொண்ட சிலர், நாய், பெரிய கதவு, காவல்காரர் போன்ற பாதுகாப்பு வழிகளைச் சொல்வார்கள். எனக்கு அவை மேல் நம்பிக்கை இல்லை. ஏனெனில் கடவுள் காப்பாற்றுவார்" என்றார், சாண்டிரா.&lt;br /&gt;(நன்றி: ராணி 12-8-2001)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-111806286342212243?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/111806286342212243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=111806286342212243' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111806286342212243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111806286342212243'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/05/blog-post_13.html' title='பெண் எம்.எல்.ஏ. சாண்டிரா டான் கிரேவல்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-111605569342907296</id><published>2005-05-12T07:17:00.000Z</published><updated>2005-05-15T14:18:55.586Z</updated><title type='text'>பெண் எம்.எல்.ஏ. பவானி கருணாகரன்</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v144/annakannan/bhavani.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;br /&gt;சந்திப்பு: அண்ணாகண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;'மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர மறுத்திடுமா?' என்று பாடினார், எம்.ஜி.ஆர். தென்றல் மட்டுமல்ல; எம்.எல்.ஏ. பதவியும் வர மறுக்காது. இதற்கு எடுத்துக்காட்டு, அரக்கோணம் தொகுதி சட்டமன்ற பெண் உறுப்பினர், பவானி கருணாகரன். &lt;br /&gt;&lt;br /&gt;ஏரிக்கரைப் புறம்போக்கு நிலத்தில் அந்தக் குடிசை இருந்தது. அதன் வாசலை நாம் அடைந்தபோது அதிகாலை மணி 6. ஒரு சிறுமி சாணம் தெளித்துக்கொண்டிருந்தாள். ஈக்கூட்டம் பறந்தது. வாசலில் கட்டியிருந்த மூன்று ஆடுகளும் 'ம்மே' எனக் கத்தின. இரண்டு கோழிகள், குப்பையைக் கிளற, ஒரு கோழி சிறகடித்துப் பறந்து கூரையில் போய் அமர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஓலைக் கூரை. அதன்மேல் வைக்கோல் பிரியால் போர்வை. சாணம் மெழுகிய சின்னத் திண்ணை. குறுகிய வாசல். தலை இடித்துவிடாமல் இருக்கக் குனிந்து வெளியே வந்தார், பவானி (42)!&lt;br /&gt;&lt;br /&gt;20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற பவானியிடம், "உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்" என்று கேட்டோம். அமைதியாகப் பேசத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் அரக்கோணத்தில்தான் பிறந்தேன். பெற்றோருக்கு ஒரே பெண். சென்னையை அடுத்த பட்டாபிராம் ரெயில் நிலையத்தில் 'சிக்னல்' போடுபவராக என் அப்பா, வேலை பார்த்தார். அதனால் நான் அங்கே பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதன்பிறகு அரக்கோணத்துக்குத் திரும்பினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் என் வீட்டாருக்கும் எம்.ஜி.ஆர். என்றால் உயிர். அவர் அ.தி.மு.க.வைத் தொடங்கியதும் அதில் சேர்ந்தேன். வட்ட மகளிர் அணிச் செயலாளராய் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர். இறந்த பிறகு கட்சி சில இடங்களில் பிளவுற்றது. ஆனால், அரக்கோணத்தில் அவ்விதம் நடக்கவில்லை. எங்கள் செயற்குழுவில் 'அம்மா'வை ஆதரித்துத்  தீர்மானம் நிறைவேற்றினோம். அம்மாவின் தலைமையில் தொடர்ந்து பணியாற்றினேன். போராட்டம், மாநாடு, பொதுக்கூட்டம், சமுதாயப் பணி... என முழுநேர அரசியலில் இறங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1987இல் கழக நகர மகளிர் அணிச் செயலாளர் ஆனேன். 1996இல் நகராட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டேன். மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றேன். 1998இல் உள்கட்சித் தேர்தலில் கழக நகரத் துணைச் செயலாளராகத் தேர்வுபெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;2001இல் சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.வில் இருந்து 11 பேர் விண்ணப்பித்தார்கள். நானும் விண்ணப்பித்தேன். நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னேன். சிலநாள் கழித்து, வேட்பாளராய்த் தேர்வான செய்தி, தொலைக்காட்சியில் வெளியானது. மிகவும் மகிழ்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் கட்சிக்குள்ளேயே எனக்குச் சிக்கல் எழுந்தது. தனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று வருந்திய சிலர், எனக்குத் தேர்தல் பணிசெய்ய மறுத்தார்கள். சிலர், எனக்கு எதிராகப் பிரசாரமும் செய்தார்கள். என்னைத் தோற்கடிக்க முயன்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் காசு பணம் இல்லை. வண்டி வாகன வசதியும் இல்லை. வெயில் வேறு கொளுத்தியது. எனினும் வீடு வீடாக நடந்தே போய் வாக்குக் கேட்டேன். நகர பேரவைச் செயலாளர் பாபு உள்பட சிலர் உதவினார்கள். 'ஏழைப் பெண்மணி! குடிசைவாசி! அன்றும் இன்றும் என்றும் உங்களில் ஒருத்தி' என்று சொன்னேன். மக்கள் என்னை நம்பினார்கள். மிகப் பெரிய வெற்றியை அளித்தார்கள். எந்த வாக்கும் எனக்காக விழவில்லை. எல்லாம் 'அம்மா'வுக்காக விழுந்த வாக்குத்தான்!&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் பிரசாரத்தின்போது வீடு வீடாகப் போய் வாக்குக் கேட்டேன். வீட்டில் பெரியவர்கள் யாரும் இருந்தால் அவர்கள் காலில் விழுந்து வணங்கி எனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டேன்" என்றார் பவானி.&lt;br /&gt;&lt;br /&gt;"காலில் விழலாமா?" என்று கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"விழுந்தால் என்ன? ஒவ்வொரு பண்டிகையிலும் வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் விழுந்து வாழ்த்துப் பெறுவது நம் மரபு. 'என் காலில் யாரும் விழக்கூடாது' என்று 'அம்மா' கண்டிப்பாகச் சொல்லி இருக்கிறார்கள். 'அம்மா' காலில் விழுவது தப்பில்லை. எதிர்க்கட்சிக்காரர்களுக்குத்தான் அது தப்பாகத் தெரிகிறது" என்றார் பவானி.&lt;br /&gt;&lt;br /&gt;அரக்கோணம் பகுதி அ.தி.மு.க. பிரமுகர்கள் லால், அப்துல் கபூர் ஆகியோரிடம் பவானி குறித்துக் கேட்டோம்.&lt;br /&gt;"பவானி கருணாகரனின் 'டெபாசிட்' தொகையைத் தொண்டர்கள்தான் கட்டினார்கள். பிரசாரத்தின்போது ஜீப், வேன் எதுவும் இல்லாமல் பவானி ஊர் எங்கும் நடந்தே போனார். அரக்கோணம் தொகுதியில் உள்ள 166 கிராமங்களுக்கும் நடந்தே சென்றார். பிரசாரத்தின் கடைசி நாளில் பவானியின் கால் வீங்கிவிட்டது. நடக்க முடியாமல் போகவே மருத்துவமனைக்குப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது கோயில், தேவாலயம், மசூதி என மூன்று இடங்களுக்கும் போய்க் கடவுளை வேண்டினார்" என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"அரக்கோணம் தொகுதியில் ஏழைகளும் தொழிலாளிகளும் அதிகம். குடிதண்ணீர், சாலை வசதி, பட்டா வழங்குதல், ரேசன் அட்டை... எனப் பல குறைகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகத் தீர்ப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கணவர் எனக்கு உறவுக்காரர். ரெயில்வேயில் 'கலாசி'யாக வேலை செய்கிறார். இருவரும் காதலித்தோம். இரண்டு பேர் வீட்டிலும் ஒப்புக்கொள்ளவில்லை. நாங்கள் அதைப் பொருட்படுத்தாமல் திருத்தணிக்குப் போய்க் கல்யாணம் செய்துகொண்டோம். நண்பர்களும் உறவினர் சிலரும் வந்திருந்தார்கள். ஆறு மாதம் கழித்து இரு வீட்டாரும் சமாதானமாகி எங்களை ஏற்றுக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு பாத்திமா(13), வசுமதி (9) ஆகிய இரு மகள்கள் இருக்கிறார்கள். என் அப்பா இறந்துவிட்டார். அம்மா இப்போது எங்களோடுதான் இருக்கிறார். என் அம்மா வீட்டைக் கவனித்துக்கொள்வதால்தான் என்னால் வெளியில் போய் வேலை செய்ய முடிகிறது" என்றார் பவானி.&lt;br /&gt;&lt;br /&gt;பவானியின் கணவர் கருணாகரன், ரெயிலில் மின்விளக்கு, மின்விசிறி ஆகியவற்றைப் பழுதுபார்க்கும் வேலை செய்கிறார். அரக்கோணம் பகுதி அ.தி.மு.க.வின் 7ஆவது வட்டப் பிரதிநிதியாகவும் இருக்கிறார். பவானிக்கு ஆலோசனை வழங்குவதோடு வெளியூர்க் கூட்டத்துக்கும் உடன் செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"மனைவி எம்.எல்.ஏ. ஆனதால் பணியிடத்தில் உங்கள் மதிப்பு உயர்ந்துவிட்டதா?" என்று கேட்டோம். "அவங்க ஸ்டேட் என்றால் நான் சென்ட்ரல்" என்றார் கருணாகரன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் சென்ற நேரம், பேருந்துப் பயணச் சலுகைக்காகப் பவானியின் கடிதம் வேண்டிப் பலபேர் வந்திருந்தார்கள். கடிதம் பெற்ற இளைஞர் ஒருவர் விடைபெற்றபோது 'போயிட்டு வா செல்லம்' என்றார், பவானி. குரலில் தாய்மையின் கனிவு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதியவர் ஒருவர் வந்து கை கூப்பியபோது, "என்னை எதுக்குக் கும்புடுறீங்க? உங்களுக்குப் பணிசெய்ய வேண்டியது என் கடமை" என்றார். உடல் தளர்ந்து நடுங்கியபடி வந்து பேருந்துச் சலுகை கேட்ட பெரியவரை உட்கார வைத்தார். தேநீர் அளித்தார். கடிதம் கொடுத்துவிட்டு "இந்த வயசுல எங்கே போகப் போறீங்க?" என்று அன்போடு கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கள் பகுதியில் மின்சாரக் கம்பம் சாய்ந்துவிட்டது. நீங்க வந்து பார்க்கணும். வண்டி கொண்டு வரட்டுமா?" என்று ஒருவர் கேட்டார். "வண்டி எதுக்கு? நீங்கள் சைக்கிள் ஓட்டுவீங்கதானே! நான் பின்சீட்டுல உட்கார்ந்து வந்திடுறேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கிருப்பவர்கள் கல்லூரிப் படிப்புக்காகக் காஞ்சிபுரம், திருத்தணி, சென்னை என வெளியூருக்குப் போகிறார்கள். எனவே ஆண், பெண் இருவரும் படிக்கும் ஒரு கல்லூரியை இங்கே ஏற்படுத்த வேண்டும். 'அம்மா'விடம் சொல்லி நிச்சயம் செய்வேன்" என்றார் பவானி.&lt;br /&gt;&lt;br /&gt;'எளிமைக்கும் தூய்மைக்கும் பெயர் பெற்ற அரசியல்வாதி யார்?' என்று கேட்டால், காமராசர், கக்கன் எனச் சில பெயர்களைச் சொல்வார்கள். அந்தப் பட்டியலில் அவசியம் சேர்க்கவேண்டிய ஒரு பெயர், பவானி கருணாகரன். &lt;br /&gt;&lt;br /&gt;(நன்றி : ராணி 22-7-2001)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-111605569342907296?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/111605569342907296/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=111605569342907296' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111605569342907296'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111605569342907296'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/05/blog-post_12.html' title='பெண் எம்.எல்.ஏ. பவானி கருணாகரன்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-111590898938335742</id><published>2005-05-11T14:41:00.000Z</published><updated>2005-05-12T14:43:09.393Z</updated><title type='text'>பெண் எம்.எல்.ஏ. யசோதா</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v144/annakannan/yashodha.jpg" alt="Image hosted by Photobucket.com" height=250 width=200&gt;&lt;br /&gt;&lt;i&gt; சந்திப்பு: அண்ணாகண்ணன் &lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி உயிர்நீத்த இடம், திருப்பெரும்புதூர். அந்தத் தொகுதியில் இருந்து மூன்றாம் முறையாகக் காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. ஆகி இருப்பவர், யசோதா(57).&lt;br /&gt;&lt;br /&gt;சட்டப் பேரவைக் காங்கிரஸ் தலைவியாக யசோதாவைக் கட்சித் தலைவர் சோனியாகாந்தி நியமித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவியாகவும் பதவி வகிக்கும் யசோதாவை 'ராணி'யின் சார்பில் சந்தித்தோம். எளிமையாகவும் இனிமையாகவும் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் மாட மாளிகையிலோ, செல்வச் சீமான் வீட்டிலோ பிறக்கவில்லை. மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவள். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள். அப்பா, தேசமுத்து. அம்மா, கோவிந்தம்மாள். 2 ஆணும் 8 பெண்ணும் பிறந்தோம். நான் 9ஆவது குழந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, எழும்பூரில் பிறந்த நான், அங்குள்ள மாநிலப் பெண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அதோடு என் படிப்பு நின்றது. படிக்கும்போது பேச்சுப் போட்டிகளில் கலந்து பரிசு பெற்றேன். அப்போது தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் கையால் முதல் பரிசு பெற்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;என் அப்பா, தந்தை பெரியாரின் பக்தர். பெரியாரின் கூட்டத்துக்கு என்னையும் அழைத்துச் செல்வார். சிறப்புப் பேச்சாளர் வரும்வரை என்னைப் பேசச் சொல்வார்கள். சிலநேரம் பாட்டும் பாடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1964 முதல் தீவிரமாக அரசியல் கூட்டத்துக்குச் செல்லத் தொடங்கினேன். அப்போது எனக்கு 18 வயது. சென்னை, மாநகராட்சியில் உதவியாளராகப் பணியில் சேர்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கூட்டத்திற்கு அடிக்கடி சென்றுகொண்டிருந்ததால் வேலையில் சிக்கல் வந்தது. 1967ஆம் ஆண்டு, வேலையா? அரசியலா? என்ற நெருக்கடி ஏற்பட்டது. நான் வேலையை விட்டு விலகி, காங்கிரஸில் சேர்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு முழுவதும் சென்று பேசினேன். மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் ஆனேன். &lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் சார்பில் முதல்முறையாக 1980 தேர்தலில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் துணைக் கொறடாவாகவும் இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;1984 தேர்தலிலும் அதே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றேன். சட்டப் பேரவையின் காங்கிரஸ் துணைத் தலைவி ஆனேன். அப்போது தலைவராக இருந்த சுப்பிரமணியம், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால், நான் இடைக்காலத் தலைவியாகவும் பொறுப்பு வகித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது 2001 தேர்தலிலும் அதே தொகுதியில் வென்று சட்டப்பேரவை, காங்கிரஸ் கட்சித் தலைவியாக இருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;1980இல் தொடங்கி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் துணைத் தலைவியாகவும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாகவும் பொறுப்பு வகித்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருந்தலைவர் காமராசர் தன் பிறந்த நாளில் 'கேக்' வெட்டுவார். அதில் பெரிய துண்டை வாங்கி, குடிசைப் பகுதி மக்களுக்குக் கொண்டுபோய்க் கொடுப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;காமராசருக்கு மேடையில் நிறைய கதர் துண்டு போடுவார்கள். ஒரு சமயம் நான் அவற்றைக் கேட்டேன். 'ஆம்பளைக்குத்தான் துண்டு வேணும். பொம்பளைக்கு எதுக்கு?' என்று  தலைவர் கேட்டார். 'முகம் வியர்த்தால் முந்தானையிலா துடைச்சுக்கறது?' என்றேன். உடனே கொடுத்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;மழைக்காலத்திலும் அறுவடைக் காலத்திலும் அதிகமாய் அரசியல் கூட்டங்கள் இருக்காது. அப்போதெல்லாம் 'முழக்கம் இல்லையா?' எனக் காமராசர் கேட்பார். பிறகு தலைவரே 'சரி சரி! சத்தியமூர்த்தி பவனுக்குப் போய் ராமண்ணாவைப் பார்' என்பார். அங்கு போனால் ரூ.200, ரூ.300 எனக் கவரில் போட்டு வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;1975இல் சென்னை, பம்மலில் பொதுக்கூட்டம் நடந்தது. காமராசர் வரும்வரை நான் பேசினேன். &lt;br /&gt;தலைவர் வந்ததும் எல்லோரும் 'பேச்சை நிறுத்து' என்றார்கள். காமராசரோ 'இல்லை; யசோதா பேசட்டும்' என்றார். நான் பேசியதை ரசித்துக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 2 முறை அரசு விழாவுக்கு என்னை அழைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;மதுராந்தகத்தில் பேசும்போது 'இந்த ஏரியின் கரை முற்காலத்தில் உடைந்தபோது ராமபிரான் 'எனக்குக் கோவில் கட்டுங்கள். உங்களுக்குக் கரையைக் கட்டித் தருகிறேன்' என்றார். இந்த ராமச்சந்திரனோ, எதையும் கேட்காமல் ஏழைகளுக்கு எல்லாம் செய்கிறார்' என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;மதுராந்தகத்தில் ஞானசவுந்தரி என்ற பெண் இறந்தது பற்றி நான் சட்டப் பேரவையில் கடுமையாகப் பேசினேன். அது குறித்துக் கலைஞர் என்னைப் பாராட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இதுவரை 10 முறை சிறைக்குச் சென்றுள்ளேன். சிறையில் இருக்கும் போதும் சக அரசியல் கைதிகளுக்குப் பேசவும் பாடவும் பயிற்சி கொடுப்பேன். தேசியக் கொடியை எப்படி மடிப்பது? அதனுள் மலர்களை எப்படி வைப்பது? என்று பயிற்சி முகாமே நடத்துவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறைந்த பிரதமர் இந்திரா சாந்தி என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். 1981இல் மரகதம் சந்திரசேகர் உடன் டெல்லிக்குச் சென்றேன். அப்போது இந்திரா காந்தியைச் சந்தித்தோம். சட்டசபையில் நான் காரசாரமாகப் பேசியதை அறிந்த அவர் 'எங்கே அந்தச் சண்டைக் கோழி?' என்று என்னைக் குறிப்பிட்டுக் கேட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ராஜிவ் காந்தி நல்ல உயரம். நானோ, குள்ளம். அவருக்குப் பொன்னாடை அணிவிக்கும்போது 'யசோதாஜி! நீங்கள் வேண்டுமானால் நாற்காலி மீது ஏறிக்கொள்ளுங்கள்' என்று அன்பாகவும் கிண்டலாகவும் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;1991 தேர்தலில் எனக்கு முதலில் 'சீட்' கிடைக்கவில்லை. இதை அறிந்த ராஜிவ் காந்தி, எழும்பூர் தொகுதியில் நிற்க இருந்தவரை மாற்றிவிட்டு என்னை வேட்பாளராக அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மே 21ஆம் தேதிக்கு முதல் நாள் 'உங்கள் தொகுதியில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா?' என்று கேட்டார். 'ஆமாம்' என்றேன். 'நாளை மதியம் 12 மணிக்கு விமான நிலைய விருந்தினர் அறைக்கு வந்து என்னைப் பாருங்கள்' என்றார். ஆனால், அதற்கு முன்பே அவர் மனித வெடிகுண்டுக்குப் பலியாகிவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;1989இல் ஜானகி அம்மையார் இடைக்கால முதலமைச்சராய் ஆனார். அப்போது ஒரு தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தேன். பெரும் மோதல் உருவானது. சட்டப் பேரவைக்குள்ளேயே என் கை உடைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என் தொகுதிக்கு உட்பட்ட பெண்ணலூரில் மின்சார நிலையம் கொண்டுவந்தேன். ரூ.22 இலட்ச மதிப்பில் விவசாயக் கிடங்கைத் திருப்பெரும்புதூருக்குக் கொண்டுவந்தேன். இந்த நன்மைகள் தொடரும். என்றும் தொகுதி மக்களுக்கும் கூட்டணித் தலைவர்களுக்கும் விசுவாசமாய் இருப்பேன்" என்றார் யசோதா.&lt;br /&gt;&lt;br /&gt;"எத்தனையோ மேடைகளைச் சந்தித்து இருக்கிறீர்கள். அவற்றில் மறக்கமுடியாத மேடைகள் எவை?" என்று யசோதாவிடம் கேட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"பெண்ணாடத்தில் ஒரு கூட்டத்தில் பேசினேன். அதில் பெரிய கலாட்டா. கட்சிக்காரர்கள் போலீஸ் வேனில் ஏற்றி என்னைத் தப்பிக்க வைத்தார்கள்.&lt;br /&gt;கடைசியில் கட்சி சார்பில்லாத ஒருவரின் வீட்டில், குவித்து வைத்திருந்த நெல் மூட்டைக்குள் ஒளித்து வைத்தார்கள். இரவு முழுக்க அங்கேயே இருந்தேன். அதன் பிறகு தப்பித்து விருத்தாசலம் வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கிருஷ்ணகிரியில் பேசும்போது ஒருவர், கத்தியால் என்னைக் குத்த வந்தார். நான் மேடையில் இருந்த சோடா பாட்டிலைக் கையில் எடுத்தேன். அருகில் வந்தால் தலையில் அடித்துவிடலாம் என்று இருந்தேன். அதற்குள் பின்னால் இருந்த ஒருவர் அவரைப் பிடித்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இராமநாதபுரத்தில் ஒரு கூட்டத்தில் எம்.ஜி.ஆரைத் தாக்கிக் கடுமையாகப் பேசினேன். மேடையை நோக்கிக் கற்கள் பறந்து வந்தன. 'எவன்டா கல்லு விடறது? ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாங்கடா' என்று ஆவேசமாய்ச் சொல்லிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நிறையபேர் ஈட்டி, வேல்கம்பு எடுத்துக்கொண்டு நான் இருந்த ஓட்டலுக்கு வந்தார்கள். அதற்குள் நான் ரெயில் நிலையத்துக்கு வந்துவிட்டேன். அந்தக் கூட்டம், ரெயில் நிலையத்துக்கும் வந்து ரெயிலில் பெட்டி பெட்டியாகத் தேடியது. 'கார்டு' அறையில் தேடவில்லை. அங்குதான் நான் இருந்தேன். அதனால் உயிர் தப்பித்தேன்" என்றார் யசோதா எம்.எல்.ஏ.&lt;br /&gt;&lt;hr&gt;&lt;br /&gt;(நன்றி: &lt;i&gt;ராணி&lt;/i&gt; - 15-7-2001)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-111590898938335742?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/111590898938335742/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=111590898938335742' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111590898938335742'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111590898938335742'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/05/blog-post_11.html' title='பெண் எம்.எல்.ஏ. யசோதா'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-111582109609787312</id><published>2005-05-09T14:17:00.000Z</published><updated>2005-05-11T14:18:16.103Z</updated><title type='text'>ஓய்வெடுக்கிறார் வலம்புரி ஜான்</title><content type='html'>'நீங்கள் எப்போது ஓய்வாக இருப்பீர்கள்? நான் அப்போது வந்து உங்களைச் சந்திக்கிறேன்' என ஒருவர் வலம்புரி ஜானிடம் கேட்டார். அதற்கு அவர், 'ஓய்வு என்பது மரணத்திற்குப் பின் வருவது' என்று பதில் அளித்தார். அதன்படி கடந்த ஞாயிறு 8-5-05 அன்று ஜான் நிரந்தர ஓய்வு கொண்டுவிட்டார். இராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு ஞாயிறு அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டது. காலை 3.30 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 59 வயது, என்பது சராசரி ஆயுட்காலத்தை விடக் குறைவானதே. ஆனால், இந்தக் குறுகிய ஆண்டுகளுக்குள் அவர் சாதித்தவை ஏராளம். &lt;br /&gt;&lt;br /&gt;மாங்காட்டுக்கு அருகில் குமணன்சாவடியில் உள்ள அவரின் இல்லத்தில் அவரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அதே ஞாயிறு அன்று மாலை இறுதி மரியாதை செலுத்தச் சென்றேன். குமணன்சாவடியில் அவர் வீட்டைக் கண்டுபிடிக்கவே பாடுபடவேண்டியிருந்தது. அங்கிருந்த பலர், வலம்புரி ஜானையும் அவர் உயிர் நீத்ததையும் அறியவில்லை. வழி விசாரித்தபோது, தெரியாது என்று சொல்லக் கூசிய சிலர், தவறான வழிகளைக் காட்டினர். பிறகு, கடைசியாக அவர் வீட்டைக் கண்டுபிடித்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt;மெளனத்தின் ஆட்சியில் இருந்த அந்த இடத்தில் நுழைந்தேன். கண்ணாடிப் பெட்டிக்குள் அவரின் உடல். வாயிலும் மூக்கிலும் பஞ்சு அடைக்கப்பட்டிருந்தது. எங்கள் கடமை தீர்ந்தது என்பது போல், ஏற்கெனவே கிடத்தப்பெற்ற மாலைகள், கதவின் மேல் தொங்கிக்கொண்டிருந்தன. நான் கொண்டு சென்ற மாலையை அணிவித்தேன். கை கூப்பி வணங்கினேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் தலைமாட்டில் சிலுவையில் அறையப்பெற்ற கர்த்தரின் உருவச் சிலை. அதன் அருகில் மெழுகுவத்திகள் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தன. அந்த அறையில் அவரின் பெரிய அளவிலான புகைப்படங்கள் சில இருந்தன. ஒரு புகைப்படத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தார். அதன் கீழ் 'தமிழ் புயலே வருக' என்று எழுதியிருந்தது.&lt;br /&gt;அவர், ஒரு புயலாகத்தான் பவனி வந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியம், இதழியல், அரசியல்... என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் அவரின் வீச்சு, கவனிக்கத்தக்கது. அடிப்படையில் தமிழ் அறிவும் புலமையும் கவித்துவமும் இருந்ததால் அவர் எந்தத் துறையைத் தொட்டாலும் முத்திரை பதித்தார். 'நான் கழுதையான போது..' என்ற அவரின் தன்வரலாற்று நூல் அவரைப் பற்றி ஓரளவு எடுத்துக் காட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர். தொடங்கிய 'தாய்' வார இதழின் ஆசிரியராகப் பணியாற்றி, பலரை அடையாளம் காட்டியவர். வளரத் துடிக்கும் இளைஞர்களை ஊக்குவிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியவர். ஆயிரக்கணக்கான நூல்களுக்கு அணிந்துரை வழங்கியவர். &lt;br /&gt;&lt;br /&gt;பல்வேறு இதழ்களிலும் தொடர்கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று எழுதிக் குவித்தவர். தமிழ்நாட்டு அரசியலை நன்கு அறிந்தவர். தலைவர்கள் பலரோடும் நெருங்கிய நட்புக் கொண்டவர். பாராளுமன்ற உறுப்பினராகவும் சிறந்த முறையில் பணியாற்றியவர். &lt;br /&gt;&lt;br /&gt;மேடைவாசி என்று கூறத்தக்க அளவுக்குப் பெரும் பேச்சாளராக விளங்கினார். அவரின் சொற்பொழிவைக் கேட்டுப் பூரித்தவர்கள் பலர். 'வார்த்தைச் சித்தர்', 'ஞானபாரதி', 'கவிஞானி' என்றெல்லாம் நிறைய பட்டங்கள், அவரை அலங்கரித்தன. ஆங்கிலத்திலும் பேச வல்லவர். &lt;br /&gt;&lt;br /&gt;சர்வ சமய ஒருமைப்பாட்டிற்கு உழைத்தவர். இந்து, இஸ்லாம், கிறித்தவம்.. என எந்த மதமானாலும் அதைப் பாராட்டி, அதன் சிறப்புகளை எடுத்துரைத்தார். காழ்ப்புணர்வு கொள்ளாதவர். 'எல்லா ஆறுகளும் கடலில் கலக்கின்றன; எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன' எனச் சென்ற இடமெங்கும் முழங்கியவர்.  &lt;br /&gt;&lt;br /&gt;'நீ ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருக்கும்போதே அது உன்னைப் புரட்டிப் போடுகிறதா? அதுதான் சிறந்த புத்தகம்'&lt;br /&gt;என்பது போன்று பல பொன்மொழிகள், அவரிடமிருந்து வெளிவந்துள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;'அவருடைய படைப்புகள் பல, இன்னும் நூல் வடிவம் பெறவில்லை' என்று கடந்த மாதம் சந்தித்தபோது கூறினார். அதைக் குறித்து அவரின் மருமகனிடம் கூறினேன். "பாதுகாத்து வையுங்கள்; நூல்களாக வெளியிட முயலுங்கள்" என்றேன். "சரி" என்றார். வெளியே வந்தபோது, அவரின் வாசகர் ஒருவர், அவரைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;'மக்கள் குரல்'  மாலை நாளிதழில் அவரின் மரணச் செய்தி வந்திருந்தது, 59 வயதில் இறந்தவரை 70 வயதில் இறந்தார் என்று. அடுத்த நாள்தான் அடக்கம் நடைபெற இருந்தது. ஆனால், அன்றே அடக்கம் ஆகிவிட்டதாகவும் எழுதியிருந்தது. அது குறித்து உறவினர்கள் சிலர், வருந்தினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நேற்றிருந்தவர் இன்றில்லை என்பதே உலகின் பெருமை எனத் திருக்குறள் கூறுகிறது. &lt;br /&gt;'நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்&lt;br /&gt;பெருமை உடைத்துஇவ் வுலகு'&lt;br /&gt;அப்படிக் கூறிய திருக்குறள், நேற்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது. உயிர் என்றாவது ஒருநாள் போகத்தான் செய்யும். அது, நமக்கும் தெரியும். என்றாலும் ஒரு நப்பாசை. மரணத்தை வெல்லவேண்டும் என்று. ஆனாலும் மரணத்தின் கத்தி, ஒவ்வொரு நாளும்  நம் கழுத்தை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக்கொண்டேதான் இருக்கிறது. இதையும் திருக்குறள்தான் சொல்கிறது. &lt;br /&gt;'நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் &lt;br /&gt;வாள்அது உணர்வார்ப் பெறின்'&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் 'நல்லவன் வாழ்வான்' என நம் மரபு சொல்கிறது. அதன்படி வலம்புரி ஜான் வாழ்வார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-111582109609787312?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/111582109609787312/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=111582109609787312' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111582109609787312'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111582109609787312'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/05/blog-post.html' title='ஓய்வெடுக்கிறார் வலம்புரி ஜான்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-111399242575004624</id><published>2005-04-12T10:10:00.000Z</published><updated>2005-04-20T10:20:25.753Z</updated><title type='text'>கடற்கரையில் புதிய காற்று</title><content type='html'>சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு, மெரினா கடற்கரையில் 2005 ஏப்ரல் 9ஆம் தேதி மாலை  நடந்தது. அதே கடற்கரையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கடற்கரைக் கவியரங்கம் என்ற நிகழ்ச்சி நடந்து வருகிறது. மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி சுமாருக்கு இது நடக்கும். வந்திருக்கும் கவிஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறிய வட்டமாகவோ, பெரிய வட்டமாகவோ அமர்ந்து கவிதை வாசிப்பார்கள். இதைப் பொன்னடியான், தமிழ்க் கவிஞர் மன்றம் என்ற அமைப்பின் மூலம் நடத்தி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலம்பொலி தமிழ்த்தரணி என்ற அமைப்பும் இத்தகைய நிகழ்ச்சியை மாதத்தின் ஒவ்வொரு பெளர்ணமி நாளன்றும் நடத்தியது. முழுநிலாக் கவியரங்கம் என்று பெயர். இவை தவிர இன்னும் பல அமைப்புகளும் பல தேதிகளில் பல சிலைகளுக்குப் பின் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தின; நடத்தி வருகின்றன.&lt;br /&gt;இத்தகைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, எளிது. அழைப்பிதழ், சுவரொட்டி, அரங்கம், ஒலிவாங்கி, ஒலிபெருக்கி, நாற்காலி, தேநீர், இனிப்பு / காரம் என எதுவும் தேவையில்லை. முதல் முறை நடத்திவிட்டு ஒரு பத்து அல்லது பதினைந்து பேர் வந்தால் போதும். அதே கூட்ட முடிவில் அடுத்த மாதம் என்று நடைபெறும் என்று தெரிவித்து விடுவார்கள். பெரும்பாலும் அதே நாள் (இரண்டாம் சனிக்கிழமை/ மூன்றாம் சனிக்கிழமை/ கடைசி ஞாயிறு...) நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி எப்படி நடந்தாலும், எவ்வளவு பேர் வந்தாலும் அமைப்பினர் சிலர், அதுகுறித்து செய்தி இதழ்களில் ஒரு குட்டிச் செய்தி வருவதில் குறியாக இருப்பார்கள். இன்றைய நிகழ்ச்சிகளில் செய்தி வரவேண்டும் என்பது அவர்களின் துடிப்பாய் இருக்கும். ஏனெனில் நிகழ்ச்சிக்குப் பலர் வராவிட்டாலும் இன்றைய நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்கள். எனவே ஒரு நல்ல அறிமுகம் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலும் வந்திருப்பவர்களிலேயே யாரையாவது திடீர்த் தலைமை தாங்க அழைப்பார்கள். பல வகையான வேடிக்கைகள் அங்கு அரங்கேறுவது வாடிக்கை. அவை பற்றியெல்லாம் இப்பொழுது வேண்டாம்.&lt;br /&gt;சென்னை வலைப்பதிவாளர் சந்திப்புக்கு வருவோம். 'இகாரஸ்' பிரகாஷ் கணக்குப்படி 23 பேர் வந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட இடைவெளிக்குப் பிறகு இத்தகைய கடற்கரைக் கூட்டத்திற்குச் சென்றேன். ஆர்.வெங்கடேஷ், பத்ரி சேஷாத்ரி, மாலன், 'இகாரஸ்' பிரகாஷ், 'அம்பலம்' சந்திரன், ராமச்சந்திரன் உஷா, மதுமிதா, சுரேஷ் கண்ணன், 'சுவடு' ஷங்கர், 'ரஜினி' ராம்கி உள்ளிட்ட ஏற்கெனவே அறிமுகமான, முகம் தெரிந்த நண்பர்கள் பலரைக் கண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;முகம் தெரியாவிட்டாலும்  இணையம் வழியாக அறிந்த புதிய நண்பர்கள் பலரைக் கண்டேன். அமுதசுரபி மார்ச்சு '05 இதழில் பங்குச் சந்தை உள்ளும் புறமும் என்ற கட்டுரை எழுதிய தமிழ்சசியை நேரில் கண்டேன். அமுதசுரபி ஏப்ரல் இதழில் நாட்டின் மின்தேவைக்கு அணுவாற்றல் என்ற அரு¨மான கட்டுரையை எழுதிய எல்.வி.கிருஷ்ணனின் மகன் சத்யநாராயணன், வளமையான தமிழை வலியுறுத்தி வரும் இராம.கி. அய்யா, வித்தியாசமான பெயர் கொண்ட 'டோண்டு' ராகவன், 'சைவர் பிரம்மா' எஸ்.கே.,  அருணா சீனிவாசன், நாமக்கல் ராஜா, அருள்செல்வன், சந்தோஷ் குரு, வா.மணிகண்டன், 'உருப்படாதது' நாராயணன், சந்தையாக்க நிபுணர் மீனாக்ஸ் ஆகியோரை இங்குதான் முதன்முதலில் கண்டேன். அருள்செல்வனை இதற்கு முன் எங்கோ பார்த்த ஞாபகம்!&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பொறுத்தவரை இது, மிகவும் பயனுள்ள சந்திப்பு. இதன் மூலம் நட்பு வளரும் வாய்ப்பு உள்ளது. அனைவரும் சுய அறிமுகம் செய்து கொண்டது, நல்ல முறை. ஆனால், ஒலிவாங்கி இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கவனித்த, என் நினைவில் உள்ள சில உரையாடல்கள் பின்வருமாறு:&lt;br /&gt;"1. தனிப்பட்ட பதிவுகளாகவே உள்ளன; சமூகப் பதிவுகளாக இல்லை. 2. பதிவுகளால் நேரம் வீணாகிறது. பயன் இல்லை." - மாலன்&lt;br /&gt;"வலைப்பதிவுகளைப் பயனுள்ளதாக்க வேண்டும். பின்னூட்டத்தில் பாராட்டுவோர், கூகுள் ஆட்சென்ஸைச் சொடுக்கினால் அதன் மூலம் வலைப்பதிந்தவருக்குப் பண வருவாய் வர வாய்ப்பு உள்ளதா?" - அண்ணாகண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை. அப்படிச் சொடுக்கக் கூடாது. அதன் மூலம் பணத்தைப் பெருக்க முடியாது. வருவாய் கருதாமல் விக்கிபீடியா போன்ற ஒரு கலைக் களஞ்சியத்தில் சேர்க்கும் வகையில்  சிறப்பானவற்றை, புதிய துறைகளைப் பற்றிப் பதியவேண்டும்." - பத்ரி&lt;br /&gt;&lt;br /&gt;"பின்னூட்டங்களில் அடிப்படை நாகரிகம் இல்லை." - ஆர்.வெங்கடேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழ்மணம் தளத்தால் காசிக்கு நிறைய செலவாகிறது. அதைப் பயன்படுத்தும் நாம் அந்தச் செலவில் பங்குகொள்ளவேண்டும்." - எஸ்.கே.&lt;br /&gt;&lt;br /&gt;"எதிர்காலத்தில் வலைப்பதிவு இலவசமாகக் கிடைக்காது. வீடியோ பிளாக்ஸ் வருகிறது." - நாராயணன்.&lt;br /&gt;&lt;br /&gt;"பெண்களை நீங்கள் கண்டுகொள்வதில்லை. தோழியர் கூட்டு வலைப்பதிவிற்கு யாரேனும் உங்கள் பதிவில் இணைப்புக் கொடுத்துள்ளீர்களா?" - ராமச்சந்திரன் உஷா&lt;br /&gt;&lt;br /&gt;"இதை மேல்கைண்டு சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்"- ரஜினி ராம்கி.&lt;br /&gt;&lt;br /&gt;"1. அப்படிக் கொடுத்துவிட்டால் என்ன சாதித்துவிட்டதாக நினைக்கிறீர்கள்? 2. தொழில்நுட்பத்தைப் பற்றியே அதிகம் பேசுகிறீர்கள். உள்ளடக்கத்தைப் பற்றிப் பேசுங்கள்" - சுரேஷ்கண்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;"பின்னூட்டத்தை ஒருவர் நீக்கியதால் தனி வலைப்பதிவு தொடங்கினேன்." - வா.மணிகண்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;"இயல்பியல், மட்டுறுத்தர் ஆகிய சொற்களை அறிமுகம் செய்தவன் இங்குதான் உள்ளேன். முருக்க மரத்தை அறிவீர்களா? ஆங்கிலத்தில் flame of the forest என்பதே தமிழில் முருக்க மரம். மார்க்கெட்டிங் என்பதை மாறுகொள்ளுதல் எனலாம். மொழியில் பழைய சொற்கள் கழிவதும் புதிய சொற்கள் புகுவதும் இயற்கை." - இராம.கி.&lt;br /&gt;&lt;br /&gt;"இராம.கி. சொல்வது சரி. contentதான் முக்கியம்" -  அருணா சீனிவாசன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பலரும் பலவிதக் கருத்துகளை முன்வைத்தார்கள். ஒலிவாங்கி இல்லாததால் அவற்றைச் சரியாகக் கவனிக்க இயலவில்லை. படிப்படியாக ஒவ்வொருவராக விடைபெற்றுச் செல்ல, இறுதியில் பத்துப் பன்னிரண்டு பேர்களே எஞ்சியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;'சுவடு' ஷங்கர், வந்தவர்களுக்கு வறுவலும் தண்ணீரும் அளித்துத் தெம்பளித்தார். பருமனானவர்களையே விரும்புவதாக வலைப்பதிந்திருந்த மீனாக்ஸ், "கடுமையாக உழைத்து, உடலைச் சற்றே மெலியவைத்துள்ளேன்" என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;எனினும் இந்த முயற்சி, ஒரு நல்ல தொடக்கம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-111399242575004624?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/111399242575004624/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=111399242575004624' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111399242575004624'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111399242575004624'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/04/blog-post_12.html' title='கடற்கரையில் புதிய காற்று'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-111322560657132963</id><published>2005-04-11T13:13:00.000Z</published><updated>2005-04-11T13:38:44.886Z</updated><title type='text'>தமிழில் மெய்ப்பாளர் பயிற்சி - ஒரு புதிய முயற்சி</title><content type='html'>&lt;p&gt;காந்தளகம் நடத்திவரும் பதிப்புத் தொழில் உலகம் மாத இதழின் மாசி 2036 (பிப்ரவரி 2005) இதழில் பட்டய மெய்ப்பாளர் பயிற்சி குறித்து மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஒரு திட்ட வரைவினை அளித்துள்ளார். புரூப் பார்ப்பது, பிழை திருத்தம் பார்ப்பது எனப் பரவலாக அறியப்படும் ஒன்றினைத் தமிழில் மெய்ப்பு என அழைக்கிறார்கள். மெய்ப்புப் பார்ப்போரை மெய்ப்பாளர் என்கிறார்கள். &lt;/p&gt;&lt;p&gt;எப்படி ஒருவர் மெய்ப்பாளர் ஆவது? இதை முறைப்படிக் கற்றுக்கொள்ள முடியுமா? அப்படிக் கற்பதன் தேவை என்ன? எங்கே கற்பது? மாணவர் ஆவதற்கு என்ன தகுதி? அதற்கான பாடத் திட்டத்தில் இடம்பெறக் கூடியவை என்னென்ன? எவ்வளவு நாட்கள் பயிற்சி? எங்கெல்லாம் இந்தப் பயிற்சியை அளிக்க முடியும்? இதற்கு அடிப்படைத் தேவைகள் என்னென்ன?.... எனப் பலவற்றை மிக நுணுக்கமாகச் சிந்தித்து ஒரு திட்ட வரைவாக அளித்துள்ளார் சச்சிதானந்தன். அவர் அளித்துள்ள வரைவில் பாடத்திட்டம் பற்றிய பகுதியை மட்டும் இங்கு அளிக்கிறேன்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;2.1 பாடத் திட்டம்:&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;p&gt;2.1.1 அச்சுத் தொழில்- வரலாறு, ஈய அச்சு, எந்திரம், கணினி அச்சு, மறுதோன்றி எந்திரம், பிற எந்திர வகைகள், வண்ண அச்சு, எண்ணச்சு, தாள் அளவுகள், கட்டாளர் முறைகள். (கணினியகம், அச்சகம், கட்டாளரகம் யாவிலும் களப் பயிற்சி)&lt;/p&gt;&lt;p&gt;2.1.2 நூலாக்க முறைகள்- பக்க அளவுகள், பக்க வகைகள், பக்க ஒழுங்குகள், பக்க எண், பக்கத் தலைப்பு வகைகள், அச்சு எழுத்துரு வகைகள், புள்ளி அளவுகள், நிமிர்வு-சாய்வு-விரிவு வகைகள், பனுவல் தொகுப்பு - இட வல நடு ஈரக அடைவுகள், நூல் தலைப்பு, பகுதித் தலைப்பு, பந்தி, பா, படம், அடிக்குறிப்பு, சொல்லடைவு, சுட்டி, உசாத்துணை அமைப்பு, மேற்கோள் பட்டியலமைப்பு, வடஒலி, பிறமொழி ஒலிகள், பிற மொழிச் சொற்கள் - தொடர்கள், மேற்கோள், நிறுத்தக் குறிகள், கோர்வைக் கட்டுக்காக, நடுக்கட்டுக்காக, அட்டை அமைப்பு, பின் அட்டையில் குறிப்பு, உலகத் தர நூல் எண், அரங்கநாதன் தர எண், பத்தாக்க எண்முறை, விலை, அச்சகப் பதிப்பகப் பெயர் தொடர்பான சட்டங்கள், பிற.&lt;/p&gt;&lt;p&gt;2.1.3 செய்தி - விளம்பர முறைகள்: இதழ்களின் அமைப்பு, செய்தி அமைப்பு, கட்டுரை அமைப்பு, பட விளக்கம், அச்சு எழுத்துரு வகைகள், புள்ளி அளவுகள், நிமிர்வு -சாய்வு-விரிவு வகைகள், பனுவல் தொகுப்பு - இட வல நடு ஈரக அடைவுகள், வடஒலி, பிறமொழி ஒலிகள், பிற மொழிச் சொற்கள்-தொடர்கள், மேற்கோள், நிறுத்தக் குறிகள், விளம்பர வரிகள், விளம்பர வடிவமைப்பு, சுவரொட்டி வரிகள், துண்டு வெளியீட்டு வரிகள், ஒலி/ஒளி ஊடகங்களுக்கான செய்தி மற்றும் பனுவல் அமைப்பு, ஓடும் தலைப்புகள் அமைப்பு, பிற.&lt;/p&gt;&lt;p&gt;2.1.4 சொல்லியல்: பெயர்ச்சொல், வினைச்சொல், பேதச்சொல், கலைச்சொல், வடசொல், ஆங்கில மற்றும் பிறமொழிச் சொற்கள், பிற.&lt;/p&gt;&lt;p&gt;2.1.5 சொற்றொடர்: தொகைச் சொல், இணைமொழி, தொடர்ச் சொற்கள், புணர்ச்சி, உவமைத் தொடர், பழமொழிகள், பிற.&lt;/p&gt;&lt;p&gt;2.1.6 வாக்கிய அமைப்பு, வாக்கிய வகைகள், வாக்கிய மரபு வழாநிலை, வாக்கியச் சிறப்பியல்புகள், வழக்குப் பிழை-திருத்தம், பெருவழக்கு, நிறுத்தக் குறிகள், பிற.&lt;/p&gt;&lt;p&gt;2.1.7 பனுவல்: கட்டுரை, செய்தி, கவிதை, பா, துணுக்கு, நறுக்கு, கதை, நெடுங்கதை, அறிவியல் கட்டுரை, மொழிபெயர்ப்பு, பிற.&lt;br /&gt;2.1.8 அச்சுப் பனுவல்: பகுப் பதம், பகாப் பதம், ஈரெழுத்து மூவெழுத்துச் சொற்கள், வரிமுதலில் மெய் வரா மரபு, பிறமொழிச் சொல் சாய்வுருவாக, தொடர் குறுக்கங்கள், பிறமொழிக் குறுக்கங்கள் தமிழில், பிற.&lt;br /&gt;2.1.9 மெய்ப்புக் குறியீடுகள். &lt;/p&gt;&lt;p&gt;-மிகவும் நேர்த்தியான முறையில் பாடத் திட்டத்தில் என்னென்ன கூறுகள் இடம்பெற வேண்டும் என்பதனை அவர் சிந்தித்துள்ளார். ஒரு கருவை முழுமையாக அணுகுவதற்கு இ·து ஒரு சிறந்த சான்று. இந்தத் திட்டவரைவில் சேர்க்கவேண்டிய/ நீக்கவேண்டிய பகுதிகளைக் குறிப்பிடுமாறும் அவர் வேண்டியுள்ளார். &lt;/p&gt;&lt;p&gt;தமிழ்ப் பதிப்புலகும் இதழுலகும் இணைய உலகும் வளர்ந்து வரும் இந்நாளில் மெய்ப்பாளர் மிகவும் தேவை. இதன் இன்றியமையாமையை இது தொடர்புடைய துறையினர் உணராமல் இருப்பதால் மெய்ப்பின் தேவை, மிக மிக அதிகரித்துவிட்டது.இவர்களுள் இரண்டு வகைகள் உண்டு. மூலப் படி எப்படி இருக்கிறதோ அப்படியே, தட்டச்சு ஆன பிறகு உள்ள படியில் உள்ளதா எனப் பார்ப்போர் ஒரு வகை. மூலப் படியிலேயே தவறு இருந்தால் அதைக் குறித்துக் கேள்வி எழுப்பி, மூலத்தை எழுதியவரிடம் விளக்கி, பிழை திருத்துவோர் இன்னொரு வகை. இரண்டாம் வகையினரைக் காண்பது மிக அரிது. &lt;/p&gt;&lt;p&gt;சிறப்பான மெய்ப்பாளர்கள் அருங்காட்சியகங்களில் வைக்கும் அளவுக்கு அருகிவிட்டார்கள். அதிலும் அவர்களுக்குள் கருத்து முரண்பாடுகள் இன்னும் அதிகம். காற்புள்ளி, அரைப்புள்ளி, முக்காற்புள்ளி ஆகியவற்றை எங்கெங்கே இடவேண்டும் என்பது குறித்து மெய்ப்பாளர் பலரும் கருத்து மாறுபடுகிறார்கள். இடைவெளி இடும் இடங்களில்கூட இந்த அல்லாட்டம் உண்டு. ஒற்றை / இரட்டை மேற்கோள் குறிகளை இடுவதிலும் பெரும் வேறுபாடுகள் உண்டு. எங்கு பந்தி பிரிப்பது என்பதும் இறுதியானதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;வேற்றுமொழிச் சொற்களை ஒலிபெயர்ப்பதிலும் இத்தகைய மாறுபாடு உண்டு. வடசொற்களைத் தமிழில் எழுதும் முறையிலும் ஒத்த கருத்து கிடையாது. கருப்பு/ கறுப்பு, கோயில்/ கோவில், பவளம்/ பவழம் எனப் பல சொற்கள் தமிழில் புழங்குகின்றன. இவற்றில் எது சரி எனக் கேட்டால் இரண்டுமே சரிதான் என்போர் பலர். இப்படித்தான் எழுதவேண்டும் என ஒன்றை மட்டும் சொல்லுவோர் சிலர்.&lt;/p&gt;&lt;p&gt;பிழை, எப்பொழுதுமே நம்மை வீழ்த்துவதற்குக் காத்திருக்கும் ஒரு புலி போலத்தான். 700 பக்கங்கள் உள்ள ஒரு நூலினைக் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு மெய்ப்புப் பார்த்தாலும் கடைசியில் அச்சான பிறகு 70 பிழைகளாவது இருக்கும். இது, குறைந்தபட்சம். கணக்கு வழக்கில்லாமல் பிழைகள் இருப்பதே பொதுவழக்கு. பிழை திருத்தம் எனக் கடைசிப் பக்கத்தில் சிலர் இடுவதுண்டு. சில நேரங்களில் அந்தப் பிழை திருத்தத்திலேயே பிழை இருக்கும்.&lt;/p&gt;&lt;p&gt;பிழையை மாயமான் என்றும் சொல்லலாம். பிழை என நினைக்கும் இடத்தில் பிழை இருக்காது. பிழை இல்லை என எண்ணும் இடத்தில் பிழை வந்து நிற்கும்.&lt;/p&gt;&lt;p&gt;இதில் பெரிய கொடுமை என்னவென்றால், பலர் தாம் பிழை செய்கிறோம் என்பதையே அறியவில்லை. பிழையையே சரியென எண்ணிக்கொண்டு அதையே ஆணித்தரமாகச் செய்து வருகின்றனர். இப்படி இருப்பவர்கள், சரியான பாதைக்கு வருவது என்பது கடினம். ஆனால், தாம் எழுதுவது பிழையோ என்ற ஐயம் இருப்பவர்களும் பிழை எனச் சுட்டிக்காட்டும் போது திருத்திக்கொள்வோரும் பிழை வரக்கூடாது என்ற அடிப்படை எண்ணம் உள்ளவர்களும் எவ்வளவோ தேவலாம். இத்தகையவர்கள், தங்களைச் சிறப்பாக வளர்த்துக்கொள்ள முடியும்.&lt;/p&gt;&lt;p&gt;அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு, இந்த மெய்ப்பாளர் பயிற்சி.&lt;br /&gt;ஒரு பிரபல வார இதழில் நான் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய போது, முதல் நாள் ஒரு புதினம் அச்சுக்குப் போகத் தயாராய் இருந்தது. புதிதாய் வந்திருந்த என்னிடம் அதன் இறுதிப் படியைக் கொடுத்துச் சரிபார்க்கச் சொன்னார்கள். நான் அந்த நூறு பக்கப் படியைப் பார்த்து முடித்தபோது சராசரியாகப் பக்கத்திற்கு 20 பிழைகள் இருந்தன. அவற்றைப் பக்க ஓரங்களில் குறித்தேன். தட்டச்சு செய்தவரும் அங்கிருந்த மெய்ப்பாளரும் என்னைச் சினத்தோடு பார்த்தார்கள். 'நீங்க ரொம்ப க்,ச்,ப் போடுறீங்க' என்றும் 'பக்கத்தை என்ன இப்படிக் குதறி வச்சிருக்கீங்க?' என்றும் குற்றம் சாட்டும் தொனியில் கூறினார்கள். 'இப்படியெல்லாம் போட்டுக்கொண்டிருந்தால் இது இன்றைக்கு அச்சுக்குப் போகாது. சரியான நேரத்தில் அச்சுக்குப் போகாவிட்டால் அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று சொல்லிவிடுவோம்' என அச்சுறுத்தவும் செய்தார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;அதன் பிறகு நான் எப்படியெல்லாம் மெய்ப்புத் திருத்தலாம் என எனக்கு ஒரு கையேட்டினை நிருவாகம் அளித்தது. அதில் நிறைய வழிகாட்டுதல்கள். 'மனத்தை என எழுதினால் எழுத்துக் கூட்டிப் படிக்கும் பாமரர்கள் சிரமப்படுவார்கள்; எனவே மனதை என எழுதினால் போதும்' என்பது போன்ற பல விதிகள் அதில் இருந்தன.&lt;/p&gt;&lt;p&gt;வார இதழுக்கு மட்டுமின்றி, நாளிதழுக்கும் இதே நிலைதான். இன்னும் சொல்லப் போனால் அங்கு இந்த நிலை, மிகவும் மோசம். நான் ஒரு நாளிதழில் பணியாற்றியபோது, ஒரு செய்தி மெய்ப்புப் பிரிவுக்கு வந்தது. சொல், வாக்கிய அமைப்பு, பந்தி, முன்பின் நிரல் என எதுவுமே சரியில்லை. நான் அதை முற்றிலும் மாற்றி, முறையாக எழுதி, தட்டச்சுக்கு அனுப்பினேன். அடுத்த நாள், மதுரையில் இருந்த தலைமை அலுவலகத்திலிருந்து அழைப்பு மேல் அழைப்பாய் வந்துகொண்டிருந்தது. 'யார் புரூப் பார்த்தது?' எனத் தேடினார்கள். பிறகு கடைசியில் பார்த்தால் நான் மாற்றித் திருத்தி எழுதிய பிரதியைத் தூக்கி வைத்துவிட்டு, ஏற்கெனவே இருந்தபடியே தட்டச்சாளர் விட்டுவிட்டார். பிழை திருத்தத்தை அவர் மேற்கொள்ளவில்லை. அதனால் இதழின் பெயர் கெட்டதோடு, அவருக்கு அபராதமும் விதித்தார்கள். நான் திருத்திய படியைப் படித்த செய்தி ஆசிரியர், மிகவும் பாராட்டினார்.&lt;/p&gt;&lt;p&gt;ஒருமுறை, ஒரு படத்தின் அடிக்குறிப்பில் 'ம.தி.மு.க. தலைவர் வைகோ' என இருந்தது. அடுத்தநாள் விசாரணை வைத்தார்கள். 'ம.தி.மு.க.வுக்குத் தலைவர் கிடையாது; பொதுச் செயலாளர்தான் உண்டு. சட்டப்படி இது தவறு' என்பது செய்தி ஆசிரியரின் வாதம். அதன் பிறகு இது சிறிய பிழை என விடப்பட்டது.&lt;br /&gt;இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால் மெய்ப்புப் பார்ப்பது, சாதாரண வேலையில்லை. மிகவும் பொறுப்பாகச் செய்யவேண்டிய வேலை. வார இதழில் ஒருமுறை 'அவன் வசதியோடு வாழ்ந்தான்' என வந்த இடத்தில், 'அவன் வசந்தியோடு வாழ்ந்தான்' என வந்துவிட்டது. பொருளே மாறிவிட்டது பார்த்தீர்களா? அதனால் மிகவும் கவனம் தேவை.&lt;/p&gt;&lt;p&gt;நாளிதழ்களில் லாட்டரிச் சீட்டு முடிவு வெளியிடும் பகுதியையும் பத்தாம் வகுப்பு/ 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் பகுதியையும் மெய்ப்புப் பார்ப்பது மிகவும் கடினம். முழுக்க முழுக்க எண்கள் மட்டுமே இருக்கும். ஓர் எண் தப்பானாலும் போச்சு. தேர்வான மாணவர் ஒருவரின் எண் விடுபட்டால் என்னாவது? தோல்வியடைந்தவரின் எண் வெற்றிபெற்றதாக வந்துவிட்டால் என்னாவது?&lt;/p&gt;&lt;p&gt;லாட்டரியிலும் இப்படித்தான். பரிசு விழாதவர்க்கு விழுந்ததாகவோ, விழுந்தவர்க்கு விழாததாகவோ அச்சானால் மெய்ப்புப் பார்த்தவர் தீர்ந்தார்.&lt;br /&gt;மூலத்தை ஒருவர் வாசிக்க, இன்னொருவர் திருத்தம் பார்க்கவேண்டும் என்பது மெய்ப்பின் பொதுவிதி. ஆள் பற்றாக்குறை காரணமாக இது, பெரும்பாலும் நடக்காது. ஒருவரே பார்க்கவேண்டியிருக்கும். இருவர் இருந்தாலும் இருவரும் ஒரே நேரத்தில் கிடைப்பது கடினம். ஒருவர் உட்காரும்போது, இன்னொருவர், தேநீர் குடிக்கச் சென்றுவிடுவார். அவர் திரும்பி வரும்போது, முன்னவர், தொலைபேசியில் மும்முரமாய் இருப்பார். வேறு எதற்குப் பார்க்கிறார்களோ இல்லையோ, எண்கள் வெளிவரும் போது மட்டும் இருவர் பார்க்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.&lt;/p&gt;&lt;p&gt;எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பது மூத்தோர் வாக்கு. ஆனால், எழுத்தை விட எண்தான் மிகவும் சிக்கலானது. இதழ்களின் மெய்ப்பாளர் முதலில் பார்க்கவேண்டியது, அந்த இதழின் தேதி, சரியானபடி இருக்கிறதா? சில தருணங்களில் அந்த தேதியே மாற்றாமல் பழைய தேதியிலேயே அச்சாகும் ஆபத்தும் உண்டு. அதன்பிறகு, 'க்,ச்,ப் எல்லாம் பார்க்கிறவர், தேதியில் பிழை விட்டுவிட்டாரே' எனக் குத்திக் குத்திக் காட்டுவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;அடுத்து, இதழின் பக்கங்கள் முறையாக, எண் வரிசைப்படி இருக்கின்றனவா? எனப் பார்க்கவேண்டும். இதழ்கள், ·பாரம் எனப்படும் முறையில் அச்சுக்குப் போவதால் முதல் ·பாரம், இரண்டாம் ·பாரம் எனத் தயாராகும். ஏற்கெனவே போன ·பாரத்தின் எண்களில் மீண்டும் போய்விடக் கூடாது.&lt;/p&gt;&lt;p&gt;அதுபோன்றே பூச்சியங்கள்கூட நம்மைப் பெரிய சிக்கலில் ஆழ்த்திவிடும். பத்து இலட்சம் என்ற எண்ணைக் குறிக்கும்போது ஒரு பூச்சியம் குறைந்தாலும் அதிகமானாலும் சிக்கல்தான். தொகையே மாறிவிடும். இந்தச் சிக்கலைத் தவிர்க்க, 10 இலட்சம் எனப் பாதி எண்ணும் பாதி எழுத்துமாக எழுதிச் சமாளிப்பவர் உண்டு.&lt;/p&gt;&lt;p&gt;கிராமத்திலிருந்து வேலை தேடி இதழியல் அலுவலகத்திற்கு வரும் பலருக்கும் முதலில் கொடுக்கப்படுவது, (புரூப்)மெய்ப்புப் பார்க்கும் வேலைதான். அவர்கள் அதில் ஓரளவு தேரினால்தான் அடுத்து, செய்தியாளர்(நிருபர்) பணி. அதில் ஏதும் தவறு நடந்தால் அவர் வேலை காலி. தட்டச்சு செய்தவர், உதவி ஆசிரியர், ஆசிரியர் எனப் பலரைக் கடந்துதான் ஓர் இதழ் அச்சுக்குப் போகிறது. அதில் தவறு நடந்தால் ஆசிரியர், உதவி ஆசிரியரைப் பார்ப்பார். உதவி ஆசிரியர், மெய்ப்பாளரைப் பார்ப்பார். மெய்ப்பாளர், தட்டச்சாளரைப் பார்ப்பார். தட்டச்சாளர், 'தப்பைச் சரிபண்ணத்தானே நீங்க இருக்கீங்க?' என மெய்ப்பாளர் மேல் பழியைப் போட்டுவிடுவார். பெரிய தவறு இல்லாமல் என்றுகூட சொல்ல முடியாது; கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும்வரை மெய்ப்பாளர் பிழைத்தார்.&lt;/p&gt;&lt;p&gt;தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல் இன்று பலரும் மெய்ப்பாளர் பணியாற்றுகிறார்கள். தெரியாதவற்றையெல்லாம் தெரிந்ததுபோல் காட்டும் பலரும் இருக்கிறார்கள். அண்மையில் பதிப்பாசிரியர் ஒருவரின் கட்டுரையில் 'காரி உமிழ்ந்தான்' என்ற வரி இருந்தது. அதைச் சுட்டிக் காட்டி, "சரியா?" என வினவினேன். "சரிதான்" என்றார். "'காறி உமிழ்ந்தான்' என்றுதானே வரவேண்டும்?" என்றதற்குக் கொஞ்சம் யோசித்துவிட்டு, "'காரி'தான் சரி; நான் அப்படித்தான் எழுதுவேன்" என்றார். அடுத்து, ஓரிடத்தில் 'அரைகுறை' என்ற சொல் வந்திருந்தது. ஒரு பழைய நூலில் அறைகுறை என இருந்தது நினைவுக்கு வந்தது. உடனே அகராதியை எடுத்துப் பார்த்தேன். அறைகுறை என்றால் அறுத்தலும் குறைத்தலும் எனப் பொருள் இட்டிருந்தது. அரைகுறைக்காரரிடம் அதை எடுத்துக் காட்டினேன். அந்த அகராதியே தவறு என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;வாழ்த்துக்கள் என எழுதுவோர் இன்னும் பலர். 'க்' வராது என்று சொன்னால், கேட்பதில்லை. 'பல ஆண்டுகளாக இப்படித்தான் எழுதி வருகிறோம். இப்பொழுது வந்து விதியை மாற்றாதீர்கள்' என எரிந்து விழுவார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;கண் செருகும்போது, பசிக்கும்போது, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே, வானொலி கேட்டுக்கொண்டே, பக்கத்தில் இருப்பவருடன் பேசிக்கொண்டே மெய்ப்புப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். அதுபோல் அச்செழுத்து, கருப்பாய் இருந்தால் நீலம்/ சிவப்பு/ பச்சை என வேறு வண்ண எழுதுகோலால்தான் திருத்தத்தைக் குறிக்கவேண்டும். இவை போன்று நிறைய விதிமுறைகளைப் பின்பற்றினால்தான் ஓரளவுக்காவது மெய்ப்பு சிறக்கும். இவை குறித்து இந்தப் பயிற்சியில் கற்றுத் தருவர் என எதிர்பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்தத் துறை வளராததற்கு உரிய காரணங்களுள் ஒன்று: இதில் வருவாய் மிகக் குறைவு. பக்கத்திற்கு இரண்டு ரூபாய் கொடுத்தால் அதுவே அதிகம் என்ற நிலை. ஐந்து ரூபாய் கொடுத்தால் சிறிது முன்னேற்றம் உண்டு.&lt;br /&gt;இன்றைய தமிழ்ச் சூழலில் எவ்விதம் மெய்ப்புப் பார்ப்பது என்பதில் இன்னும் பொதுக் கருத்து உருவாகவில்லை. முதலில் இதுவே பெரிய சவால்தான். தமிழில் இதுவரை மெய்ப்பை மட்டுமே மையப் பாடமாகக் கொண்டு ஒரு பட்டயப் படிப்பு என்ற சிந்தனையே புதுமையானது.&lt;/p&gt;&lt;p&gt;இதனை இணையதளத்தில் ஒரு செய்முறைப் பாடமாக அளித்தால் மிகவும் பயன்படும். எந்தச் சொல்/ வாக்கிய அமைப்பு சரி எனச் சொல்வதற்கும் இந்தத் தளம் பயன்படும். அது குறித்துக் கேள்வி எழுப்பவும் பதில் அளிக்கவும் நிபுணர் குழு இயங்கவேண்டும். ஆயினும் இவை அனைத்திற்கும் நிதி முதற்கொண்டு செயலாக்கம் வரையில் பலரின் உதவி தேவை. ஆர்வம் உள்ளவர்கள் உதவுமாறு அவர் வேண்டியுள்ளார். இந்த நல்ல முயற்சி வெற்றியடைய நம்மால் முடிந்தவரை உதவுவோம்.&lt;/p&gt;&lt;p&gt;இதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினால், அடுத்து இன்னும் பலவற்றுக்கும் பயிற்சி அளிக்கலாம். 1, தமிழை உச்சரிப்பதற்கும் தெளிவாகப் பேசுவதற்குமான பயிற்சி2, பதிப்பாசிரியர் பயிற்சி3, திறனாய்வாளர் பயிற்சிபோன்ற பயிற்சிகளை முறையாக அளிக்கவேண்டிய தேவையும் நம் சமூகத்தில் உள்ளது. அவற்றைப் படிப்படியாகச் செயலாக்கலாம்.&lt;/p&gt;&lt;p&gt;மெய்ப்பாளர் பயிற்சி குறித்து மேலும் அறிய விரும்புவோர்,பதிப்புத் தொழில் உலகம்,2, மனோகரன் தெரு,சென்னை-600031&lt;a href="mailto:tamilnool@touchtelindia.net"&gt;tamilnool@touchtelindia.net&lt;/a&gt;என்ற முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.&lt;/p&gt;&lt;p&gt;இந்தக் கடினமான, சிக்கலான கருவை எடுத்துக்கொண்டு கற்றுத்தருவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் முன்வரும் அனைவருக்கும் வாழ்த்துகள்!&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-111322560657132963?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/111322560657132963/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=111322560657132963' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111322560657132963'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111322560657132963'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/04/blog-post.html' title='தமிழில் மெய்ப்பாளர் பயிற்சி - ஒரு புதிய முயற்சி'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-111399890372257868</id><published>2005-04-04T12:07:00.000Z</published><updated>2005-04-20T12:08:23.726Z</updated><title type='text'>நாட்டார் ஐயா</title><content type='html'>அண்மையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதன் பொருட்டு அவரின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் பரிவுத் தொகையாக அளிக்கப்பெற்றது. இதே தருணத்தில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு. ஆகியோரின் படைப்புகளும் நாட்டுடைமை ஆயின.&lt;br /&gt;இவரைப் பற்றி இவரின் மகன் வே. நடராஜன் எழுதிய &lt;em&gt;நாட்டார் ஐயா&lt;/em&gt; என்ற நூல், படிக்கக் கிடைத்தது. இதனைத் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (சுருக்கமாக ‘கழகம்’) வெளியிட்டுள்ளது. (முதல் பதிப்பு 1998, பக்- 277, விலை- ரூ.60.00)&lt;br /&gt;ஒரே ஒரு பிரதிதான் உள்ளது. எனவே உடனே திருப்பிக் கொடுத்துவிடவேண்டும் எனப் பதிப்பாளர் முத்துக்குமாரசுவாமி கூறியிருந்தார். எனவே, அதைத் திருப்பிக் கொடுக்கும் முன் ஒரு முறை படித்துவிட வேண்டும் என்ற உந்துதல் பிறந்தது.&lt;br /&gt;அக்காலத் தமிழ் நடையில் நூல் உள்ளது. வே. நடராஜன் , இடையிடையே தன் அநுபவங்களையும் கலந்தே எழுதியுள்ளார். எனினும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரங்களை அறிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவும்.&lt;br /&gt;நாட்டார் என்பது, கள்ளர் மரபில் வந்தவர்களின் பட்டப் பெயர். கள்ளர் என்பவர், பல்லவரின் ஒரு கிளை. தொண்டை நாட்டினின்றும் சோழ பாண்டிய நாடுகளில் குடியேறி அரையர் என்னும் பெயருடன் ஆட்சி புரிந்து வந்தனர். பின்னர் சோழர் குடி முதலியனவும் இம்மரபில் கலந்துவிட்டது. (பக்-12)&lt;br /&gt;நாட்டார், &lt;em&gt;கள்ளர் சரித்திரம்&lt;/em&gt; என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளமை குறிப்பித்தக்கது. உ.வே.சா., இந்நூலை மிகவும் பாராட்டியிருக்கிறார். இதனைக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கவும் பரிந்துரைத்துள்ளார். மாண்புமிகு மு. கருணாநிதி, தன் தென்பாண்டிச் சிங்கம் நூலுக்குக் கள்ளர் சரித்திரத்தைத் துணையாகக் கொண்டுள்ளார். ‘தமிழ்கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப்பெற்ற திரு. ந.மு.வே, நாட்டார் ஐயா அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணைகொண்டு இந்நூலை எழுதத் தொடங்குகிறேன்’ என்று முன்னுரையில் எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;em&gt;வேளிர் வரலாற்றின் ஆராய்ச்சி (1915), நக்கீரர் (1919), கபிலர் (1921), கள்ளர் சரித்திரம் (1923), கண்ணகி வரலாறும் கற்பு மாண்பும் (1926), சோழர் சரித்திரம் (1928),&lt;/em&gt; ஆகியன நாட்டாரின் நூல்கள். &lt;em&gt;கட்டுரைத் திரட்டு I&lt;/em&gt; என்ற நூலும் வெளிவந்துள்ளது. சில செய்யுள்களும் இயற்றியுள்ளார்.&lt;br /&gt;இவை தவிர, பண்டைய இலக்கியங்கள் பலவற்றுக்கு உரை வரைந்துள்ளார். கீழ்க்கணக்கு நூல்களில் இன்னா நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது என்பவற்றிற்கும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி என்னும் பிற்கால நீதி நூல்களுக்கும் நாட்டார், திருந்திய முறையில் உரையும் முகவுரையும் எழுதியுள்ளார்.&lt;br /&gt;அ.மு.சரவண முதலியாரைத் துணையாகக் கொண்டு, திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார். சிலப்பதிகாரம், அகநானூறு, மணிமேகலை ஆகியவற்றுக்கும் நாட்டார், சிறந்த உரை எழுதியுள்ளார்.&lt;br /&gt;திருவருட் கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்லூரியைத் தொடங்க நாட்டார் முயன்றுள்ளார். பின்னர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கும் முயற்சியிலும் இவருக்குப் பங்கு உண்டு. கல்லூரி, பல்கலை இரண்டின் தேவையையும் வலியுறுத்தி, அறிக்கைகளை நாட்டார் உருவாக்கியுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றவேண்டும் என்ற எண்ணத்தை, மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் 1981ஆம் ஆண்டு நிறைவேற்றினார்.&lt;br /&gt;தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேற்று மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பலர் இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் கூறியுள்ளனர். இதைக் குறித்து நாட்டார், தம் கருத்தைத் தெளிவாக எடுத்து வைத்துள்ளார்.&lt;br /&gt;*********&lt;br /&gt;''ஒருவனுடைய குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் மிகுந்த பொருட் பற்றாக்குறை ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். பற்றாக்குறையைப் போக்க உடனே நண்பர்களிடம் கடன் வாங்கிச் சமாளிக்கிறோம். நெருக்கடி நேரத்தில் கடன் வாங்குவதில் தவறில்லை. மதிப்புடனும் மானத்துடனும் வாழவேண்டும் என்று கருதுகிற ஒரு நன்மகன் நெருக்கடி நேரத்தில் கடன் வாங்கியதற்காக நன்றாக உழைத்து அதனால் கிட்டிய பொருளைக் கொண்டு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பான். எதிர்காலத்தில் நெருக்கடி வந்தாலும் கடன் வாங்கத் தேவையில்லாதபடி பொருளாதார வளமுடையவனாகத் தன்னை உயர்த்திக்கொள்வான்.&lt;br /&gt;சான்றோன் ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையில் மேற்கொள்ளும் இத்தகைய நடைமுறையையே மொழி வளர்ச்சியிலும் பின்பற்ற வேண்டும். அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது அந்நூல்களில் காணப்படும் கலைச் சொற்களுக்கு உரிய பொருளுடைய சொற்கள் தமிழில் உள்ளனவா என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவை போதாவிடத்து தமிழில் உள்ள வேர்ச் சொற்களிலிருந்து புதிய சொற்களைப் படைத்துக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;புதிய சொற்களைக் கண்டுபிடிக்கக் காலதாமதம் ஆகும்போது வேற்றுமொழிச் சொற்களையும் தமிழின் ஒலியியல் இயல்புக்கு ஏற்ப திரித்தே வழங்குதல் வேண்டும். கல்வியிற் பெரியவராகிய கம்பர் இலக்குவன், வீடணன் என்றிவ்வாறாக வடசொல் உருவினைத் தமிழியல்புக்கு ஏற்ப மாற்றியுள்ளமை காண்க. கிறித்துவ வேத புத்தகத்தை மொழிபெயர்த்தோர், இயேசு, யோவான், யாக்கோபு என்றிங்ஙனம் தமிழியல்புக்கு ஏற்ப சொற்களைத் திரித்தமையால் அதன் பயிற்சிக்குக் குறைவுண்டாயிற்றில்லை. ஒவ்வொரு மொழியிலும் இவ்வியல்பு காணப்படும். ஆகவே, பிற மொழிகளில் உள்ளவாறே அச்சொற்களைத் தமிழில் வழங்க வேண்டுமென்பது நேர்மையாகாது.''&lt;br /&gt;***********&lt;br /&gt;நாட்டாரின் கருத்து, இன்றைக்கும் தேவைப்படுவது. தமிழின் தூய்மையைக் காக்கும் வரையே அதன் உயிர் பொலிவுறும். அப்படியே வேற்றுச் சொல் தேவையெனினும் கூடிய விரைவில் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடித்து, புழக்கத்திற்குக் கொணர்வது நம் அனைவரின் கடமை.&lt;br /&gt;இங்கு, நாட்டாரின் வரலாற்றினைச் சுருக்கமாகக் காண்போம்.&lt;br /&gt;12-4-1884 அன்று நாட்டார், தஞ்சை மாவட்டத்தில் நடுக்காவேரி என்ற ஊரில் பிறந்தார். தந்தை, முத்துச்சாமி நாட்டார். தாயார், தையலம்மாள். நாட்டாருக்கு முதலில் சிவப்பிரகாசம் எனப் பெயரிட்டனர். இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அதனால் ஒரு குறவனைக் கொண்டு சூடு போட்டு ஆற்றி முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை வேண்டிக்கொண்டு பெயரையும் வேங்கடசாமி என மாற்றினர்.&lt;br /&gt;தொடக்கக் கல்வி வரை பள்ளியில் கற்ற இவர், பிறகு வீட்டில் இருந்தவாறு தாமே தமிழ் கற்கத் தொடங்கினார். பின்னர் மதுரைத் தமிழ்ச் சங்கம், மூன்று தேர்வுகளை நடத்தும் விவரம் அறிந்தார். அவற்றை எழுத விழைந்தார்.&lt;br /&gt;1901ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி மதுரைத் தமிழ்ச் சங்கத்தை வள்ளல் பாண்டித்துரைத் தேவர் நிறுவினார். அச்சங்கத்தின் கீழ் &lt;strong&gt;பாண்டியன் புத்தகசாலை&lt;/strong&gt; என்னும் நூல் நிலையமும் &lt;strong&gt;சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை&lt;/strong&gt; என்னும் தமிழ்க் கல்லூரியும் &lt;strong&gt;&lt;em&gt;செந்தமிழ்&lt;/em&gt;&lt;/strong&gt; என்னும் மாத இதழும் நிறுவப்பெற்றன.&lt;br /&gt;இந்தத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் ஆகிய தனித்தமிழ்த் தேர்வுகளும் நடத்தப் பெற்றுள்ளன. ஒவ்வொரு தேர்விற்கும் இக்கலாசாலையில் இரண்டு ஆண்டுகள் படிக்கவேண்டும் என்ற விதியிருந்தது. இக்கலாசாலையில் படிக்காதோர், வெளியிலிருந்தும் தேர்வு எழுதலாம் என்ற விதிவிலக்கு இருந்தது.அதைப் பயன்படுத்தி நாட்டார் திருச்சியிலிருந்து தேர்வு எழுதினார்.&lt;br /&gt;ஆண்டுக்கு ஒரு தேர்வு எழுதி மூன்றே ஆண்டுகளில் மூன்று தேர்வுகளிலும் முதல் மதிப்பெண்ணில் தேர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு இவர், ‘பண்டித’ ந.மு.வேங்கடசாமி நாட்டார் என அழைக்கப்பெற்றுள்ளார்.&lt;br /&gt;திருச்சி எஸ்.பி.ஜி.கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் கோவையில் பணியாற்றிவிட்டு, மீண்டும் எஸ்.பி.ஜி. கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். திருச்சியில் பணியாற்றிய பின், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல்வராகவும பணிபுரிந்துள்ளார்.&lt;br /&gt;1912இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாட்டாரின் வீட்டுக்கு வந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்று கேட்டு விளங்கிக்கொண்டார். தொல்காப்பியத்திலும் சில ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார்.&lt;br /&gt;அ.ச.ஞானசம்பந்தன் அவர்களின் தந்தையார் அ.மு.சரவண முதலியார், நாட்டாரின் நண்பர். இருவரும் இணைந்து கழகத்தின் வேண்டுகோளின் பேரில் திருவிளையாடற்புராணத்திற்கு உரை எழுதியுள்ளனர். (இந்நூலாசிரியர் வே. நடராஜனும் அ.ச.ஞானசம்பந்தனும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)&lt;br /&gt;சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தார், 1940ஆம் ஆண்டு நாட்டாருக்கு &lt;strong&gt;நாவலர்&lt;/strong&gt; என்னும் பட்டம் அளித்துள்ளனர்.&lt;br /&gt;இவருக்கு 60 ஆண்டு நிறைவதை ஒட்டி இவருக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதற்கென மணிவிழாக் குழு ஒன்றும் அமைத்துள்ளனர். அதைக் கேள்வியுற்ற நாட்டார், ‘மணிவிழாக் குழு அமைத்திருக்கிறார்கள். கா.நமச்சிவாய முதலியார் போல எப்படி ஆகப் போகிறதோ’ எனக் கூறியிருக்கிறார். பெரும்புலவர் கா.நமச்சிவாய முதலியார், தம் மணிவிழா முடிவதற்கு முன்னரே மறைந்துவிட்டார்.&lt;br /&gt;நாட்டாரின் மணிவிழாவை 8-5-1944 அன்று நடத்துவதாக மணிவிழாக் குழு முடிவு செய்திருந்தது. ஆனால், 28-3-1944 அன்றே நாட்டார் மறைந்தார். அவர் மணிவிழாவுக்காக வசூலித்த 1712-4-0(ரூ-அணா-பைசா) தொகையை அவருடைய நினைவு விழாவுக்குப் பயன்படுத்தினர்.&lt;br /&gt;அவர் சமாதி வைத்த இடத்தில் ஒரு கோயில் எழுப்பியுள்ளனர். ( 1944ஆம் ஆண்டு ஒரு மூட்டை சிமெண்டு விலை 3 ரூபாய் 12 அணா. 1000 செங்கற்கள் விலை ரூ.18. கொத்தனார் கூலி ரூ.5.)&lt;br /&gt;1984இல் நாட்டாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பெற்றது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ரூ.25ஆயிரம் செலவு செய்து 21-4-84 அன்றும் 22-4-84 அன்றும் கரந்தைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் தமிழவேள் உமாமகேசுவரனார் நூற்றாண்டையும் (ஓர் ஆண்டுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது) நாவலர் வேங்கடசாமி நாட்டார் நூற்றாண்டையும் நடத்தியது.&lt;br /&gt;நாட்டாரின் கனவுகளில் ஒன்றான திருவருள் கல்லூரியை 1992ஆம் ஆண்டு பி.விருத்தாசலம் தொடங்கினார். இதற்குப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இசைவு வழங்கியுள்ளது. இதில் தேர்ச்சியடைந்தோர், இளமுனைவர், முனைவர் பட்டங்களுக்குத் தகுதியுடையவர் என்று இப்பல்கலை தெரிவித்துள்ளது.&lt;br /&gt;தமிழில் பெரும்புலமை பெற்றவர்கள் இக்காலத்தில் மிகவும் அருகிவிட்டார்கள். பண்டைய நூல்கள் பலவற்றைப் பெயரளவில் அறிந்திருப்பதே இப்பொழுது வியப்பைத் தருவதாய் உள்ளது. ஆயினும் நாட்டார் அவர்கள், தமிழின் பழைய நூல்களை மிகவும் ஆழ்ந்து கற்றுள்ளார். சிக்கலான பாடல்களுக்கும் பொருளுணர்த்தியுள்ளார். முக்கியமாகத் தனி ஆசிரியரிடம் கல்வி பயிலாமல் தாமே முயன்று தமிழ் பயின்றுள்ளார். கடும் உழைப்பாளியான இவர், எளிய வாழ்க்கை நடத்தியுள்ளார். நாள்தோறும் நாட்குறிப்பும் எழுதியுள்ளார். அதில் பல முக்கிய நிகழ்வுகளைக் குறித்துள்ளார். மாணவர்களிடம் அன்புடன் பழகி, கற்றலின் மேல் ஆர்வம் மிகச் செய்துள்ளார்.&lt;br /&gt;நமக்கு முந்தைய தலைமுறைகளின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன.&lt;br /&gt;நாட்டாரின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியதன் மூலம், தமிழக அரசு ஒரு நற்பணியைச் செய்துள்ளது. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு பதிப்பக வல்லோர், நாட்டாரின் படைப்புகளை மக்கள் அறியச் செய்திடல் வேண்டும். நாட்டாரின் உழைப்பையும் உயர் கருத்துகளையும் தமிழ்ச் சமுதாயம் சிந்திக்க வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-111399890372257868?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/111399890372257868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=111399890372257868' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111399890372257868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111399890372257868'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/04/blog-post_04.html' title='&lt;strong&gt;&lt;span style=&quot;font-size:180%;color:#6600cc;&quot;&gt;நாட்டார் ஐயா&lt;/span&gt;&lt;/strong&gt;'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-111296414023557970</id><published>2005-03-16T12:41:00.000Z</published><updated>2005-04-11T09:31:44.546Z</updated><title type='text'>நானும் வலம்புரி ஜானும்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;1997 டிசம்பர் மாதம் என்று நினைக்கிறேன். 'உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு' என்ற என் இரண்டாவது கவிதை நூலுக்கு அணிந்துரை பெறவேண்டி வலம்புரி ஜானை அணுகினேன். போய்த் தொகுப்பைக் கொடுத்தேன். நான்கைந்து நாள் கழித்து வரச் சொன்னார். அதன்படி போனேன். அணிந்துரை எழுதி வைத்திருந்தார். அதை என்னிடம் கொடுக்கும் முன் என் எதிரில் ஒருமுறை வாசித்துக் காட்டினார். &lt;p&gt;&lt;br /&gt;அவருடைய அணிந்துரையில் ஒரு பகுதி:&lt;br /&gt;'கவிஞர் அண்ணாகண்ணன் உயிரின் மூலம் ஒன்று என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். அவர் வயதிற்கு இந்த உணர்தல் வாழ்த்திற்கு அல்ல; வணக்கத்திற்கே உரியது. அவ்வளவு எளிதாக அழித்துவிட இயலாத அவரின் பெயரை அவரின் கவிதைகள், கல்வெட்டில் கண்விழிக்க வைக்கின்றன.வெண்பாவிற்குப் 'பழைய ஏற்பாடு' என்று பொட்டு வைப்பதும் 'கவிதைக்குமாரன்' என்ற நெகிழவைக்கிற நெசவும் 'ஒட்டுமாமரத்தின் எட்டாம் கிளை' என்கிற பிரபஞ்சப் பிழிவும் என்னை வியக்க வைத்தன.&lt;br /&gt;புதிய சிந்தனைகள், சிந்திக்கிற புதிய விதம், எல்லையற்ற சந்தர்ப்ப வானம், கவிஞரின் வியர்வை சிந்துகிற உழைப்பு இவற்றைப் பார்க்கிற போது கவிஞர் அண்ணாகண்ணன் தமிழ்க் கவிதைகளை உலகத் தரத்திற்கு உயர்த்துகிற ஒருவராக வருவாரோ என்கிற எண்ணமே மேலோங்குகிறது.&lt;br /&gt;உலக இலக்கியத்திற்கு அழுத்தமான, அர்த்தமுள்ள இந்தப் பங்களிப்பால் நெகிழ்ந்து நிற்கிறேன்'&lt;br /&gt;என்றெல்லாம் எழுதிக் கையொப்பமிட்டுத் தந்தார். நூலில் அச்சேற்றும் போது 'கவிஞானி வலம்புரி ஜான்' என்று வெளியிடச் சொன்னார். 'இதற்கு நிச்சயம் நூலக ஆணை கிடைத்துவிடும்' எனச் சொன்னார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;'இப்பொழுது என்ன செய்கிறீர்கள்?' எனக் கேட்டார். 'சுதந்திரமான இதழாளராக ஏழெட்டு இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறேன்' என்றேன். 'என்னிடம் வந்துவிடுகிறீர்களா?' என்று கேட்டார். 'என்ன செய்யவேண்டும்?' எனக் கேட்டேன்.'வாருங்கள், சொல்கிறேன்' என்றார். சென்றேன். அவர், 'முதலில் ஒரு கடிதத்தைச் சொல்கிறேன்; எழுதுங்கள்' என்றார். எழுதிக் கொடுத்தேன். 'கையெழுத்து அழகாக இருக்கிறது' என்று பாராட்டினார். முக்கிய வேலை அதுதான் என்று புரிந்தது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அதன் பிறகு நாள்தோறும் சூளைமேட்டில் இருந்த அவரின் இல்லத்திற்குச் சென்றேன். அவர், சில இதழ்களில் தொடர் எழுதிக்கொண்டிருந்தார். அதற்கெல்லாம் அவர் சொல்லச் சொல்ல எழுதித் தரவேண்டும். அவர் சொல்லும் வேகத்திற்கு எழுதவேண்டும். ஒரு தலைப்பை அல்லது கருவை எடுத்துவிட்டால் போதும். நூல் பிடித்தமாதிரி சரசரவெனச் சொல்லுவார். அது, கதையோ, கட்டுரையோ, வாழ்த்துச் செய்தியோ, பரிந்துரைக் கடிதமோ..எதுவாக இருந்தாலும் அதில் ஒரு நீரோட்டத்தின் போக்கு இருக்கும். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;சில நாள்கள் காரில் செல்லும்போதே சொல்வார். கார் ஆடும் ஆட்டத்தில் என் 'அ' எழுதவருவேன். அதற்குள் அ முதல் அக்கன்னா வரை பேனா தானாகவே எழுதிக்கொள்ளும். இந்தச் சிக்கலைத் தவிர்க்க, அவர் சொல்லச் சொல்லக் கிறுக்கெழுத்தில் எழுதிக்கொள்வேன். பிறகு அழகான கையெழுத்தில் எழுதிக்கொடுப்பேன். ஜானுக்கு மிகவும் மகிழ்ச்சி. சில நேரங்களில் எழுதவேண்டும் என்று சொல்லமாட்டார். பக்கத்தில் இருப்பவரோடு பேசிக்கொண்டிருப்பார். நான் அந்த உரையாடலைக் கவனித்துக்கொண்டிருப்பேன். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1998இன் முதல் மூன்று மாதங்களுக்குள் ஒரு நிகழ்ச்சி. ஒருமுறை சிலருடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். நான் உடனிருந்து கவனித்து மனத்திற்குள் குறித்துக்கொண்டேன். அடுத்த நாள், அது தொடர்பாக அவருக்கு ஏதோ ஒரு விவரம் வேண்டியிருந்தது. அதைக் குறித்துப் பலமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தார். என்னிடம் சாதாரணமாக அதைப் பற்றிச் சிந்திப்பதைச் சொன்னார். நான் அந்தக் குறிப்பிட்ட உரையாடலை, ஒரு சொல் மாறாமல் அப்படியே திருப்பிச் சொன்னேன். அவர் வியந்துபோய் என் கை குலுக்கினார். 'இன்னும் அஞ்சு வருசத்துல நீங்க பெரியாளா ஆயிடுவீங்க' என உடனே சொன்னார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் நான் அமுதசுரபியின் ஆசிரியர் பொறுப்பினை ஏற்றேன். இது ஏதோ நான் பெரிய ஆள் ஆகிவிட்டதற்கான சான்று கிடையாது. இது தொடர்பாக வேறொரு நிகழ்வைச் சொல்லவேண்டும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;1999ஆம் ஆண்டு என்று நினைவு. என் நண்பரின் உறவுப்பெண், கனடாவிலிருந்து சென்னைக்கு ஒருமுறை வந்தார். என் கவிதை நூலைப் படித்த அவர், என்னைப் பாராட்டி விட்டு, 'எதிர்காலத்தில் பெரிய ஆளா ஆயிட்டா எங்களையெல்லாம் மறந்துடாதீங்க' என்று சிரித்தபடி சொன்னார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நான் அவரிடம் சிரிக்காமல் சொன்னேன்: 'நான் இப்பவும் பெரிய ஆள்தான். நான் எப்பொழுதோ பெரிய ஆள் ஆகிவிட்டேன். நான் எவ்வளவு பெரிய ஆள் என்பதை இந்த உலகம் புரிந்துகொள்வதற்கு வேண்டுமானால் காலம் பிடிக்கலாம்'. உடனே அந்தப் பெண்மணி, 'நீங்கள் பெரிய ஆள் என்பதை இந்த உலகம் புரிந்துகொள்ளும் போது எங்களை மறந்துவிடாதீர்கள்' என்று மீண்டும் சிரித்தபடி சொன்னார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இதை எதற்குச் சொன்னேன் என்றால் வலம்புரி ஜானுக்கு, நான் பெரிய ஆள் ஆவேன் என்ற நம்பிக்கை இருந்தது. அவருடைய நம்பிக்கையை நான் தொடர்ந்து அதிகப்படுத்தி வந்தேன்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இதழ்களுக்குக் கிறுக்கெழுத்தில் எழுதி அனுப்பி, அதில் என்ன எழுதியிருக்கிறீர்கள் என அங்கிருந்து தொலைபேசி அழைப்பு வருவது நான் வந்ததும் நின்றது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அவருக்கு வரும் கடிதங்களுக்கு என்னைப் பதில் எழுதச் சொன்னார். முக்கிய கடிதங்களுக்கு மட்டும் என்ன பதில் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்வேன். மற்றபடி பொதுவான கடிதங்களுக்கு நானே பதில் எழுதிவிடுவேன். அவர் கையொப்பம் இட்டு அனுப்பிவிடுவார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அதன்பிறகு அவர் படிக்கவேண்டிய புத்தகங்களை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார். நூல் வெளியீட்டு விழாவுக்குப் போகும் முன் அந்த நூலைக் குறித்து என்னிடம் கேட்டுக்கொள்வார். நான் முக்கியமான சில இடங்களை அடையாளமிட்டுக் கொடுப்பேன். அவரும் காரில் போகும்போதே புத்தகத்தை ஒருமுறை புரட்டிவிடுவார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;எந்த நிகழ்ச்சியானாலும் வலம்புரி ஜான் மேடையேறிவிட்டால் களைகட்டிவிடும். அடுக்குத் தொடர்களும் எதுகை மோனைகளும் அவர் பேச்சில் கொஞ்சி விளையாடும். திராவிடக் கட்சிகளின் பேச்சாளர்களைப் போல் வெற்று எதுகை மோனைகளாய் இருக்காது. ஆழ்ந்த பொருளுடன் அவர் அவற்றைக் கையாளுவார். எழுத்திலும் இப்படியே. 'நூலகங்களும் நூலாம்படைகளும்' என்பது அவர் எழுதிய ஒரு கட்டுரையின் தலைப்பு. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஜான் தொடாத துறையே இல்லை எனலாம். அரசியல், இலக்கியம் தவிர, சோதிடம், வாஸ்து, அதிருஷ்டக் கற்கள்... என எதைப் பற்றியும் பேசக் கூடியவர். சோதிடத்தில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. வடபழனியில் அவர் தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடந்தது. தலைப்பு: 'இந்த ஆண்டு குரு பெயர்ச்சி நல்லதா? தீயதா?'&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;சமையல் நிகழ்ச்சியிலும்கூட அவர் வருவார். பார்க் ஷெரட்டன் நட்சத்திர ஒட்டலின் சமையற்காரர், ஒரு கேக் செய்து காண்பித்தார். அதை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு இவர் சென்றார். 'அனைவரையும் மீண்டும் மீண்டும் கேக்க வைப்பதால் இதற்குக் கேக் எனப் பெயர் வந்தது' என்பதுபோல் பேசினார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நான் இருந்தபோது அவர், தமிழ் மாநில காங்கிரஸில் இருந்தார். கண்ணதாசனைப் போல் இவர் மீதும் கட்சித் தாவல் குற்றச்சாட்டு உண்டு. இவருடைய பேச்சுத் திறனுக்காக, முதலில் எல்லாக் கட்சிகளுமே இவரை விரும்பின. ஆனால், ஒரு கட்சிக்குள் நுழைவதற்கு வேண்டுமானால் பேச்சும் எழுத்தும் உதவலாம். அதன் தலைமையை நெருங்குவதற்கும் அவர் மனத்தில் இடம் பிடிப்பதற்கும் பேச்சு மட்டும் போதாது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஆயினும் வலம்புரி ஜான், எம்.ஜி.ஆர். மனத்தில் இடம் பிடித்தார். அவர் ஆதரவுடன் இரண்டு முறைகள் மக்களவை உறுப்பினர் ஆனார். 9 ஆண்டுகள் அவர், எம்.பி.யாக இருந்தார். அதைக் கொண்டு பலருக்கு அவர் உதவியிருக்கிறார். மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டுமா? பொறியியல் கல்லூரியில் இடம் வேண்டுமா? அரசு எந்திரத்திடம் வேலை ஆகவேண்டுமா? எல்லாவற்றுக்கும் பதவியில் இருப்பவரின் ஒரு சிபாரிசுக் கடிதம் இருந்தால் நல்லது. இந்தக் காலத்தில் வெறும் கடிதம் மட்டும் போதாது. காந்தி நோட்டும் நிறைய வேண்டும்; அந்தச் சிபாரிசு கடிதம் கொடுப்பதற்கே சில்லறை செலவாகும். ஆனால் ஜான், உண்மையிலேயே வறுமையில் இருப்பவரை மேலும் துன்பப்படுத்தமாட்டார். தன்னால் முடிந்தவரை உதவுவார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இக்கால அரசியல்வாதிகள் எல்லோருக்குமே ஒரு பொதுக் குணம் உண்டு. 'சும்மா புகழாதீங்க' என்பார்கள். ஆனால், உள்ளுக்குள் அவர்களை அடிக்கடி புகழவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். திட்டமிட்டுத் தன்னை முன்னிறுத்துவதும் உண்டு. பட்டிமன்றங்களில் பேச வாய்ப்புக் கேட்டு வருவார்கள். அவர்களிடம் நடுவராய் இருப்பவர், சொல்வார். 'நல்லாப் பேசுங்க. அப்பப்போ என்னைப் பார்த்து, நீங்க அப்படிப்பட்டவர், இப்படிப்பட்டவர் என்று நாலு வார்த்தை சொல்லுங்க' என்று கூறுவது உண்டு. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இதே போல், தொலைக்காட்சி நிகழ்ச்சியாகட்டும்; அமைப்புகளும் அரசும் வழங்கும் விருதுகள் ஆகட்டும் எல்லாவற்றுக்கும் ஒரு பின்நிகழ்வு உண்டு.&lt;br /&gt;பரபரப்புத்தான் அரசியல்வாதிக்குப் பிடிக்கும். அவன் பொதுக்கூட்டத்தில் பேசப்போனால் அங்கே ஒரு பிரச்சினை வெடிக்கவேண்டும். தானாகக் கல் விழவேண்டும். இல்லாவிட்டால் அதற்காக இவனே நாலு பேரை ஏற்பாடு செய்து பேச்சாளர் மேல் கல் எறியச் சொல்வான். அதைக் கையோடு புகைப்படம் எடுக்கச் சொல்வான். அடுத்த நாள் நாளிதழ்களில் படத்துடன் செய்தி வரும். செல்வாக்கை வளர்த்துக்கொள்ள இப்படிப்பட்ட உத்திகள் வெகுவாகப் பயன்படும்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;எனக்கு இதுபோன்ற உத்தி பிடிக்காது. தந்திரங்களும் செல்வாக்குகளும் இடும் போட்டிக்கு முன்னால் தகுதி பின்னடைவதை என்னால் சகிக்கமுடிவதில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;வலம்புரி ஜான் அரசியல்வாதிதான்; ஆனால், நல்ல மனிதர். அவரிடம் தந்திரங்களே கிடையாது என்று சொல்லமுடியாது. ஆனால், சிறந்த குணங்கள் பல அவரிடம் இருந்தன.&lt;br /&gt;'மூப்பனார் பிறந்த நாளுக்காக ஒரு மலர் தயாராகிறது. அதில் மூப்பனாரை வாழ்த்தி ஒரு கவிதை எழுதுங்கள். அப்படி எழுதி அனுப்பினால், அது மூப்பனாரின் கண்ணில் படும். அவர் உங்களைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதுவார்' என்றார் ஜான். எனக்கு அதில் விருப்பம் இல்லை. எனவே நான் எழுதவில்லை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அவர் எனக்குத் தந்த ஊதியம் மிகவும் குறைவாக இருந்தது. என் நேரமும் அதிகம் செலவானது. காலை 6,7க்குத் தொடங்கினால் இரவு 10,11கூட ஆகிவிடும். இதனால் என் சொந்தப் படைப்பியக்கம் தடைப்பட்டது. இப்படி என் நேரத்தை இழப்பதை நான் கட்டோடு விரும்பவில்லை. &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் வாலி, &lt;em&gt;புதிய பார்வை&lt;/em&gt; இதழில் நானும் இந்த நூற்றாண்டும் என்று ஒரு தொடர் எழுதிவந்தார். அதில் ஓர் இடத்தில் யாரோ ஒருவர், அவரை இன்னொரு கவிஞரிடம் உதவியாளராய்ச் சேரச் சொன்னதாகவும் அவர் மறுத்ததாகவும் எழுதியிருந்தார். நான், என்னையே ஒருமுறை கேட்டுக்கொண்டேன். 'நான் செய்வது சரியா? நான் இந்தப் பாதையிலா செல்வது?'&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;'நீங்க என்கூடத் தொடர்ந்து இருங்க. உங்களுக்கு ஒரு நல்ல அரசாங்க வேலை வாங்கித் தருகிறேன்' என்றார், ஒருமுறை. அவருக்கு நல்ல மனம் இருந்தது. ஆனால், எனக்கு அதில் விருப்பம் இல்லை. இப்படியான ஆசை காட்டி, ஏமாற்றப்பட்ட பலரை நான் அறிவேன். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;உதவியாளராய்ச் சேர்ந்த மூன்றே மாதங்களில் எனக்கு அந்த வேலை பிடிக்காமல் போனது. நான் அந்த வேலையை விட்டு விலகினேன். இறுதியாக ஓரிரு நாள்கள் ஊதியம் வரவேண்டியிருந்தது. ஆயினும் பரவாயில்லை என்று விட்டுவிட்டேன். ஓர் அஞ்சல் அட்டையில் என் முடிவை எழுதிப் போட்டுவிட்டு, நான் அடுத்த வேலையைக் கவனிக்கத் தொடங்கினேன்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;மேலும் சிறிது காலம் கழிந்தது. நான் &lt;em&gt;அமுதசுரபி&lt;/em&gt;க்கு வந்த பிறகு, அவரைத் தொடர்பு கொண்டேன். 2004 தீபாவளி மலருக்கு அவரிடம் ஒரு கவிதை பெற்று வெளியிட்டேன்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;மிகவும் உடல்நலம் குன்றி இருக்கிறார்; இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன என்று நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டேன். இதழ்களில் பார்த்தேன். இன்று(14-3-2005) சென்னை, போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்த்தேன். நல்ல திடகாத்திரமான மனிதர், அவர். மிகவும் இளைத்திருந்தார். நான் கொண்டு போன பழவகைகளைக் கொடுத்தேன். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;அவர் கழுத்தில் ஒரு கை கொடுத்துத் தூக்கி விடச் சொன்னார். தூக்கி விட்டேன். அமர்ந்தபடியே என்னிடம் பேசினார். "நீங்கள் நிச்சயம் குணமடைவீர்கள்" என்றேன். ஆமோதித்தார். அவர் கையில் சுருக்கங்களுக்கு இடையில் ஒரு கொடி பச்சைக் குத்தியிருந்தது தெரிந்தது. "அது என்ன?" என்றேன். "எம்.ஜி.ஆர். காலத்தில் குத்திக்கொண்ட அ.தி.மு.க. கொடி" என்றார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;"புத்தகம் எதுவும் வேண்டுமா?" என்று கேட்டேன். "என்னால் இப்பொழுது படிக்க முடியாது" என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;"நீங்கள் எழுதியவை பல இன்னும் நூலாக வேண்டி இருக்கின்றன இல்லையா?" என்றேன்.&lt;/p&gt;&lt;p&gt;"ஆமாம். வலம்புரி ஜான் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எனத் தொகுக்கத் தொடங்கினேன். அதற்குள் இந்தச் சிக்கல் வந்துவிட்டது" என்று வருந்தினார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பிறகு "&lt;em&gt;அமுதசுரபி &lt;/em&gt;எப்படி நடக்கிறது?" என்று கேட்டார். "நன்றாக நடக்கிறது. நீங்கள் குணமாகி வந்து எழுதுங்கள்" என்றேன்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;"என்ன சாப்பிடுகிறீர்கள்?" என்றேன்."வழக்கம் போலத்தான். இனிப்பு, ரொம்ப காலமாகவே சாப்பிடுவதில்லை; இப்போது உப்பும் கொஞ்சம் குறைத்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் டாக்டர்" என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;"நீங்கள் எவ்வளவோ இளைஞர்களை வானளாவத் தூக்கி விட்டிருக்கிறீர்கள். இயற்கை உணவை வலியுறுத்தியிருக்கிறீர்கள். யோகாசனத்தைப் பரப்பியிருக்கிறீர்கள்" என்று சிலவற்றை நினைவுகூர்ந்தேன்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;"அறுபதைக் கடந்துவிட்டீர்களா?" என்றேன். "இந்த அக்டோபர் 14 வந்தால் 60 வயது தொடங்குகிறது" என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;"உங்களுக்கு மணிவிழா எடுத்துவிடுவோம். அதில் நீங்கள் வந்து ஒரு நீண்ட உரை ஆற்றவேண்டும்" என்றேன். "நல்ல உள்ளங்கள், எங்கெங்கோ இருக்கிறீர்கள். வந்து பேசுவேன்" என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;விடைபெறும் முன் அவர் மனைவியிடம் பேசினேன். "அவர் பி பாசிட்டிவ் குருதி வகையைச் சேர்ந்தவர்; அந்தக் குருதி வகையைச் சேர்ந்தவரின் சிறுநீரகத்தைத்தான் பொருத்தவேண்டும். யாருடையதைப் பொருத்தவேண்டும் என்று மருத்துவர்களே முடிவு செய்வார்கள்" என்றார். &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;"என்ன செலவு ஆகும்?" என்று கேட்டேன். &lt;/p&gt;&lt;p&gt;"ஐந்து லட்சம் ஆகும்" என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;"தேவையான பணம் சேர்ந்துவிட்டதா? இன்னும் தேவைப்படுகிறதா?" என்று கேட்டேன். "இன்னும் தேவைப்படுகிறது" என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;"என்னால் முடிந்த சிறுதொகையை வைத்துக்கொள்ளுங்கள்" என்றேன். முதலில் மறுத்தவர், பின்னர் பெற்றுக்கொண்டார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;வலம்புரி ஜான் பிழைத்துவிடுவார் என்று உற்சாகத்தோடு திரும்பினேன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-111296414023557970?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/111296414023557970/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=111296414023557970' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111296414023557970'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111296414023557970'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2005/03/blog-post.html' title='நானும் வலம்புரி ஜானும்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-108756912927580569</id><published>2004-09-21T14:30:00.000Z</published><updated>2005-01-11T10:46:32.806Z</updated><title type='text'>குட்டி புத்தா</title><content type='html'>இருள் பொட்டலத்தைப் பிரிக்கப் பிரிக்க, உள்ளிருந்து பகல் எட்டிப் பார்க்கிற நேரம். இண்டு இடுக்கு விடாமல் எதையோ தேடிக்கொண்டிருக்கிறது தென்றல். அந்த அரச மரத்தை மட்டும் விட்டு வைக்குமா என்ன! தன்னிடம் இல்லை என அம்மரம் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் தலை முதல் கால்வரை சோதனை போட்டது. மரத்தடியில் சாய்ந்து நின்ற எந்திரத் துப்பாக்கி லேசாக ஆடியது. அப்போது ஒரு சிட்டுக் குருவி சர்ரென்று பறந்து வந்தது. அந்தத் துப்பாக்கியின்மேல் அமர்ந்தது. ஏற்கெனவே ஆடிக்கொண்டிருந்த துப்பாக்கி சரிந்து விழுந்தது. கிலியுடன் "கிரீச் கிரீச்' எனக் கத்தியபடி குருவி பறந்தோடியது. துப்பாக்கி விழுந்த சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்தான் பண்டார.&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். அருகில் எவரையும் காணவில்லை. காற்றில் விழுந்திருக்கும் என நினைத்து நிமிர்த்தி வைத்தான். முகாமுக்குள்தான் இரவு தூங்கிக் கொண்டிருந்தான். உள்ளே புழுக்கம் தாங்காமல் நள்ளிரவில் வெளியே வந்து மரத்தடியில் படுத்தான். முகாமைச் சுற்றிலும் சக இராணுவத்தினர் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;காலைநேரப் பயிற்சிக்கான சைரன் ஒலித்தது. பண்டார அவசர அவசரமாக எழுந்தான். முகம் கழுவித் தலûவாரி உடுப்பை அணிந்தான். "புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி!' என்று மனத்துக்குள்ளேயே சொல்லி வணங்கினான்.&lt;br /&gt;அது அம்மா புஞ்சிநோனா சொல்லிக் கொடுத்தது. அவளுக்குப் பண்டாரவைப் பெரிய புத்த பிக்குவாக்க ஆசை. அநுராதபுரத்து மகாவிகாரைக்கு அவனை அழைத்துச் சென்றாள். அவனுக்கோ வயது 6. மொட்டை அடித்துக் காவி உடுத்தி... பார்க்க அழகான பொம்மைபோல் இருந்தான். தன் கண்ணே பட்டுவிடப் போகிறது என்று கண்ணூறு கழித்து "என் குட்டிப் புத்தா!' என்று கூறி அழுத்தமாக முத்தமிட்டாள். கையோடு அவனை விகாரையிலும் சேர்த்தாள்.&lt;br /&gt;புத்த பிக்குகள் வந்தார்கள். புத்தர் பெருமான் பற்றியும் அவருடைய போதனைகள் பற்றி அவனுக்குக் கதை கதையாகச் சொன்னார்கள். சிங்கள இனத்தின் சிறப்புப் பற்றியும் சிங்கள மொழியின் மேன்மை பற்றியும் விளக்கினார்கள். பண்டாரவுக்கு இருப்பு கொள்ளவில்லை. சேர்ந்த பத்தாம் நாள் தன் வீட்டுக்கு ஓட்டம் பிடித்தான். "என்னாச்சு பண்டார?' திகைப்புடன் கேட்டாள், புஞ்சிநோனா ""உன்னை விட்டு இருக்க முடியலை அம்மே'' என்றவனை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள்.&lt;br /&gt;""பண்டார! ஏய் பண்டார!''&lt;br /&gt;சட்டென்று நினைவு திரும்பியவன் வாசலுக்கு ஓடினான். அவனுடைய உற்ற நண்பனும் ஊரில் பண்டாரவின் வீட்டுக்கு எதிர்வீட்டுப் பிள்ளையுமான சமந்தா, கோபத்துடன் நின்றிருந்தான். ""மணி யொலிச்சு எவ்வளவு நேரமாச்சு! இன்னும் இங்கயே நிக்கிறாய்! முட்டாள்!'' என்று பண்டாரவைத் திட்டினான். இருவரும் அணிவகுப்பு நடக்கிற இடத்துக்கு ஓடினார்கள்.&lt;br /&gt;கேணல் றெகான் தளுவத்தை, கடுகடுத்தபடி நின்றிருந்தார்.&lt;br /&gt;""உன்ரை பேர் என்ன?''&lt;br /&gt;""பண்டார''&lt;br /&gt;""முழுப்பேரைச் சொல்லு?''&lt;br /&gt;""ஆர். டி. பண்டாரநாயக்க - ரத்தினஸ்ரீ தொடங்கொட பண்டாரநாயக்கா.''&lt;br /&gt;""எந்தப் பிரிவு?''&lt;br /&gt;""நுவரேலியா - 39 ஆம் பட்டாலியன்''&lt;br /&gt;""ஏன் தாமதம்?''&lt;br /&gt;""அது... அது வந்து... ராத்திரி கனநேரம் விழிச்சிருந்தேன்....''&lt;br /&gt;""பொறுப்பில்லாத பதில். ஒரு இராணுவ வீரன் இப்படித்தான் பேசுவதா? உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. உன்னையெல்லாம் படையில் சேர்த்தார்களே, அந்த ஆள்சேர்ப்புக் குழுவினர்! அவர்களைச் சொல்லவேணும். இத்தனை பேரைச் சேர்த்திட்டோம் என்று கணக்கு காட்டத்தானே உன்னை மாதிரி தூங்கு மூஞ்சிகளையும் சோம்பேறிகளையும் சொரணையற்ற சிங்களர்களையும் பிடித்துக் கொண்டு வருகிறார்கள்! போ! போய்த் தொலை!'' கேணல் சிங்கமென உறுமினார்.&lt;br /&gt;பண்டார மனத்துக்குள் வெதும்பினான். "நானா வாறேன் வாறேன் என்று குதித்தேன்?' "புத்தம் சரணம்' என்று இருந்தவனை இழுத்து வந்து உடுப்பை மாட்டித் துவக்குப் பிடிக்க வைத்துவிட்டு இப்போது இப்படிப் பேசு கிறார்களே!'&lt;br /&gt;அந்த நாள் அவனுக்கு நன்றாக நினைவிருந்தது. புதன் கிழமை காலை 11 மணி. வெள்ளைக் கோடுபோட்ட நீலச் சட்டையும் கருப்பு கால்சட்டையும் அணிந்திருந்தான். புஞ்சிநோனா அவித்த புட்டு கமகமத்தது. மீன் குழம்போடு சேர்த்து ஒரு வெட்டு வெட்டத் தொடங்கினான். அம்மா அவசர அவசரமாக ஓடி வந்தாள். "பண்டாராக் குட்டி! எங்காவது போய் ஒளிஞ்சுகொள். பிள்ளை பிடிக்க வாறாங்களாம்' என்றாள்.&lt;br /&gt;ஊரெல்லாம் இதே பேச்சாய் இருந்தது. புஞ்சிநோனா எதிர்வீட்டுக் குசுமாவிடம் விசாரித்தாள். "பக்கத்தூருக்கு இராணுவ அதிகாரிகள் வந்து இளவயசு ஆண்பிள்ளை களை எல்லாம் கையோடு கூட்டிப்போய் விடுகிறார்கள்' எனக் குசுமா சொன்னாள். "நம்மூருக்கும் வரப்போகிறார்களாம்' என்ற அவள், ""பண்டாரவைப் பார்த்துக்கோ. நான் என் சமந்தாவை எங்காவது ஒளிச்சு வைக்கிறேன்'' என்றபடி உள்ளே போனாள்.&lt;br /&gt;புஞ்சிநோனாவுக்கு அடிவயிற்றில் இருந்து ஒரு பந்து எழும்பி வந்து தொண்டையை அடைத்தது. ஏற்கனவே அவள் கணவன் ரத்தின ஸ்ரீ தொடங்கொட, இராணுவத்தில் இருந்தான். 15 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கிலங்கையில் நடந்த சண்டையில் பலியானான். அப்போது பண்டாரவுக்கு 3 வயது. அதிலிருந்து இராணுவத்தின் மீதே அவளுக்கு வெறுப்பு. இப்பொழுது பண்டார வையும் இழக்க அவள் தயாரில்லை. ""பண்டார! சீக்கிரம் போய் ஒளிஞ்சுகொள். நான் கூப்பிடும்வரை வெளியே வராதே!' என்றாள். உடனே பண்டார, கொல்லைப் பக்கம் ஓடி ஈரப்பலா மரத்தின் மேலேறி மறைவாக அமர்ந்தான்.&lt;br /&gt;வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு வயது வந்த ஆண்களைத் தேடி அதிகாரிகள் வந்தனர். புஞ்சிநோனா வின் வீட்டுக் கதவைத் தட்டினர். கதவு திறந்தது.&lt;br /&gt;"உங்கள் வீட்டில் ஒரு 18 வயதுப் பையன் இருக்கிறான் இல்லையா?'&lt;br /&gt;"இல்லை....இல்லையே!'&lt;br /&gt;புஞ்சிநோனா சொல்லிக்கொண்டி ருக்கும் போதே வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள், சுவரில் இருந்த பண்டாரவின் புகைப்படத்தைப் பார்த்தனர். "இவன் எங்கே?' என்றனர். "இவன்... இவன் வெளியூரில் தங்கிப் படிக்கிறான்' என்றாள். அதற்குள் வாசலில் கிடந்த ஆண்கள் அணியும் செருப்பை அதிகாரி பார்த்துவிட்டார்.&lt;br /&gt;"நீங்கள் உங்கள் பிள்ளை - இருவர் மட்டும்தானே இங்கே இருக்கிறீர்கள்?'&lt;br /&gt;"ஆமாம். இல்லை, அதான் அவன் வெளியூரில் இருக்கிறான் என்றேனே! நான் மட்டும்தான் இருக்கிறேன்'&lt;br /&gt;"அப்படியானால் இந்தச் செருப்பு யாரு டையது?'&lt;br /&gt;"அது... அதுவந்து...' என்று புஞ்சிநோனா இழுக்கும்போதே "வீடு முழுக்கத் தேடுங்கள்' என்று உத்தரவிட்டார், அதிகாரி.&lt;br /&gt;ஈரப்பலா மரக்கிளையில் அமர்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் பண்டார. அரை மணி ஆயிற்று. ஒரு மணி ஆயிற்று. யாரையும் காணோம். பசிவேறு வயிற்றைக் கிள்ளியது. பாதிச் சாப்பாட்டில் எழுந்து ஓடிவந்துவிட்டான். பக்கத்து மரக் கிளையில் ஒரு கொத்து நெல்லிக்காய் தொங்கியது. எச்சில் ஊற, சற்றே முன்நகர்ந் தான். மற்றொரு சிறுகிளையைப் பற்றிக் கொண்டு அந்த நெல்லிக் கொத்தைப் பறிக்க முயன்றான். "சரக்' என ஒரு சத்தம் கேட்டது. அடுத்த நொடி, ஒருகையில் கிளையும் மற்றொரு கையில் நெல்லிக் கொத்துமாக அவன் கீழே கிடந்தான்.&lt;br /&gt;அப்போது பார்த்து அதிகாரிகள் வந்தனர். "வானத்திலிருந்து குதித்த தேவனே, வாரும்!' என அதிகாரி கிண்டலடித்தார். பண்டாரவுக்கு நல்ல முதுகு வலி. ஓடக்கூட முடியவில்லை. "பையன் முகத்தில் இராணுவ வீரனுக்கு உரிய கம்பீரம் தெரிகிறது இல்லையா?' என்று சக அதிகாரியிடம் வினவினார், அவர். சக அதிகாரியோ, இவனை யாரென்று நினைத்தீர்? மாவீரர் ரத்தினஸ்ரீ தொடங்கொடயின் மகனாக்கும். நாட்டுக்காக உயிரையே தியாகம் செய்தவர் ஆயிற்றே அவர்'. என்றார்.&lt;br /&gt;புஞ்சிநோனா, மகனைத் தூக்கினாள். உடுப்பில் ஒட்டியிருந்த தூசிகளைத் தட்டினாள். அவனைத் தன் முதுகுக்குப்பின் ஒளித்துக்கொண்டு "நாங்க செஞ்ச தியாகமெல்லாம் போதும். எனக்கு என் மகன் வேணும். அவனைத் தரமாட்டேன்' என்றாள்.&lt;br /&gt;"உங்கள் மகனுக்கு மாதம் இருபத் தையாயிரம் ரூபாய் கொடுப்போம். அரசாங்க வீடு கொடுப்போம். உங்கள் குடுமபத்துக்கு மருத்துவ வசதி இலவசம். உங்களுக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கும்.'&lt;br /&gt;"உயிர் இருந்தால் தானே அனுபவிக்க முடியும். போருக்குப் போனால் என் மகன் இறப்பான். என் மகன் இறந்தால் நானும் இறப்பேன்.'&lt;br /&gt;"நல்லதை நினையுங்கள் அம்மா... இப்படியே எல்லாரும் ஒதுங்கி ஒதுங்கிப் போனால் நாட்டை யார் காப்பாற்றுவது?'&lt;br /&gt;"புத்தர் காப்பாற்றுவார்'&lt;br /&gt;"ஒரு போர்வீரரின் மனைவியா நீங்கள்? உங்களை ஒரு சிங்களச்சி என்று சொல்லவே வெட்கமாய் இருக்கிறது!'&lt;br /&gt;"நான் முதலில் ஒரு தாய். பிறகுதான் சிங்களச்சி'&lt;br /&gt;"முரண்டு பிடிக்காதீங்க அம்மா. இது நெருக்கடி காலம். வயசுப் பிள்ளைகளும் உடம்பில் தெம்புள்ள அத்தனை ஆண்களும் போர்ப்பணிக்கு வந்தாக வேண்டும். அவங் கவங்களுக்கு ஏற்றதுபோல் வேலை கொடுப்போம். மறுக்காதீங்க. இது அரச ஆணை.'&lt;br /&gt;புஞ்சிநோனா கையில் ஒரு காகிதத்தைத் திணித்துவிட்டுப் பண்டாரவின் கைப்பிடித்து இழுத்துப்போய் வாகனத்தில் ஏற்றினார்கள். பண்டார, திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டும் விசும்பிக்கொண்டும் போனான். "குட்டிப் புத்தா' "குட்டிப் புத்தா' என அலறியபடி ஓடிவந்த புஞ்சிநோனா வழியிலேயே மயங்கி விழுந்தாள். வாகனம் புறப்பட்டது. அதனுள் சமந்தாவும் இருந்தான்.&lt;br /&gt;பூட்ஸ் கால்களின் சீரான ஒலி "சர்ரக் சரக்' "சர்ரக் சரக்' எனக் கேட்டது. வழக்கம் போல அணிவகுப்பு முடிந்து சற்று நேரத்துக் கெல்லாம் காலை உணவு ஆயிற்று. கேணல் றெகான், அனைத்து வீரர்களையும் அழைத் தார்.&lt;br /&gt;படையைப் பல பிரிவுகளாகக் கேணல் றெகான் ஏற்கெனவே பிரித்திருந்தார். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவரை நியமித்தார். பண்டாரவும் சமந்தாவும் 39ஆம் பட்டாலியனில் இருந்தனர். அப்பிரிவின் தலைவனாகச் சமந்தா தேர்வுபெற்றான். யார் யார் எந்தெந்தப் பகுதியை எப்போது தாக்கவேண்டும் என்று கேணல் உரை நிகழ்த்தினார்.&lt;br /&gt;துப்பாக்கிகளையும் ஆயுதத் தளவாடங் களையும் சுமந்துகொண்டு படையணி நகரந்தது. பண்டாரவின் கைகளிலும் ஓர் எந்திரத் துப்பாக்கி மின்னியது. புத்தம் புதிய துப்பாக்கி. சீனாவிலிருந்து வந்திறங்கியதாகக் கேணல் சொன்னார்.&lt;br /&gt;பண்டார அந்தத் துப்பாக்கியைப் பார்த்தான். பயிற்சியின்போது முதன் முதலாகத் துப்பாக்கியை இயக்கியது ஞாபகம் வந்தது. துப்பாக்கியை எப்படிப் பிடிப்பது ? குறிபார்ப்பது? விசையை இழுப்பது?... என எல்லாம் சொல்லிக் கொடுத்தனர். ஒரு நாள் தனியாய் இருக்கும் பொழுது, "இது எவ்வளவு கனம் இருக்கும்? ஒரு கையால் இதைத் தூக்க முடியுமா?' என்ற ஐயம் வந்தது. தூக்கித்தான் பார்போமே என்று தூக்கினான். கனம் தாங்காமல் கை தாழ்ந்தது. மீண்டும் தூக்கினான். மீண்டும் தாழ்ந்தது, சூரியனைப் பார்க்கக் கண் கூசியது. தலை குனிந்து மீண்டும் வேகமாகத் தூக்கினான். கை வழுக்கி, துப்பாக்கியின் விசையை அழுத்தி விட்டது. அடுத்த நொடி வான்நோக்கி ஒரு குண்டு பாய்ந்தது. அல்பாயுசுள்ள ஒரு புறா அங்கே பறந்து கொண்டிருந்தது. மறுகணம் அது கீழே விழுந்தது.&lt;br /&gt;இக்காட்சியைத் தூரத்திலிருந்து வீரர் சிலர் பார்த்துக்கொண்டிருந்தனர். ஒரு கையில் துப்பாக்கி பிடித்து, கண்ணை மூடிக்கொண்டு, பறக்கும் புறாவைச் சுட்டு வீழ்த்திய பண்டாரவின் வீரம் சில மணிகளில் படை முழுக்கப் பரவியது. பண்டார, "இல்லை, இல்லை' என எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. "மாவீரன் பண்டார' என முழங்கிவிட்டுச் சென்றனர்.&lt;br /&gt;படையணி நகரந்தது. இஸ்ரேலில் இருந்து வருவித்த அதிநவீன விமானங்கள் முன்னால் பறந்தன. தொலைதூரம் சென்று தாக்கக்கூடிய பீரங்கிகள் முன்வரிசையில் சென்றன. சிங்கள இராணுவ வீரர்களிடம் கேணல், அவ்வப்போது வீரம் கொப்பளிக்கப் பேசினார். அவர்களும் வேகமாக நடக்கத் தொடங்கினர்.&lt;br /&gt;இலக்குகளை நெருங்கினார்கள். பீரங்கி எட்டும் தூரத்தில் நின்று குண்டு வீசத் தொடங்கினார்கள். குண்டு விழுந்த இடத்தில் எல்லாம் ஒரு பெருந்தீ கொழுந்துவிட்டு எரிந்தது. எதிரிகளும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இருபுறமும் அங்கங்கே வீரர்கள் செத்து விழுந்தனர். துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பதுங்கிப் பதுங்கி முன்னேறினர். இறுதியில் எதிரிகள் பின் வாங்கித் தலைமறைவாயினர். அன்றைய தினம் சிங்களப் படை 4 கி.மீ. பரப்பைக் கைப்பற்றியதாக இலங்கை வானொலி கூறியது. 60 எதிரிகளும் இராணுவத்தினர் 12 பேரும் மாண்டதாகச் செய்தியில் சொன்னார்கள். ""8 எதிரிகளும் 34 நம்மாட்களும் தானே செத்தது?'' என்று கேட்டான் பண்டார. ""கண்டுக்காதே!'' என்றான் சமந்தா.&lt;br /&gt;அன்று இரவு. சிங்கள வீரர்கள் பலரும் ஒரு பெரிய முகாமில் அமர்ந்து பேசத் தொடங்கினர். அப்போது திடீரென்று காவலை மீறி ஒரு பையன் முகாமினுள் நுழைந்தான். இராணுவத்தினர் சுடும் முன்பு அவன்தன் அடிவயிற்றில் இருந்த பொத்தானை அமுக்கினான். அந்த முகாம் தூள்தூளாகச் சிதிறியது.&lt;br /&gt;நூற்றுக்கும் மேலான இராணுவ வீரர்கள் இறந்து விட்டதாகவும் நிறைய வெடிபொருட்கள் அழிந்தன என்றும் தெரிந்தது.&lt;br /&gt;அரச மரத்தடியில் இருந்து பண்டார ஓடிவந்தான். முகாம் இருந்த இடத்தைப் பார்த்தான். இரத்தமும் சதையும் நாலாபுறமும் சிதறிக் கிடந்தன. கண்ணில் நீர்வழிய ஒவ்வொரு சடலச் சிதறலையும் பார்த்தபடி நடந்தான். தேடித் தேடிக் கடைசியில் சமந்தாவைக் கண்டான். ஒரு காலும் கையும் தூக்கி வீசப்பட்டிருந்தன. முகம்பாதி சிதைந்திருந்தது. பண்டார மயங்கி விழுந்தான்.&lt;br /&gt;சவப்பெட்டிகளில் சடலங்களை வைத்து மூடினார்கள். அவற்றை அவரவர் ஊருக்கு அனுப்பினார்கள். திக்பிரமை பிடித்ததுபோல் பண்டார, ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தான். கேணலிட மிருந்து அழைப்பு வந்தது. அடுத்த நாள் போருக்கு 39 ஆம் பட்டாலியன் தலைவராகப் பண்டாரவைக் கேணல் தேர்ந்தெடுத்திருந்தார். ""நீ திறமையுடையவன். பொறுப்புணர்ந்து செயல்படு. உன் நண்பன் சமந்தாவையும் நம் வீரர்கள் பலரையும் கொன்றிருக்கிறார்கள். பழிக்குப் பழி வாங்கப் போ. சிங்களன் மானமுள்ளவன் என்று நிரூபி. போ போர் முனைக்கு'' என்றார். பண்டார மறுத்தான். ""போயே தீரவேண்டும்'' என்றார் கேணல்.&lt;br /&gt;அடுத்த நாள் விடிகாலை, படையணி நகர்ந்தது. பண்டாரவின் 39 ஆம் பட்டாலியன் முன்னே சென்றது. ""வானில் பறந்த புறாவைக் கண்ணை மூடிக்கொண்டு சுட்டு வீழ்த்திய மாவீரன்'' எனப் படைவீரர்கள் பேசிக்கொண்டனர். பெரும் பாலான வீரர்கள் புதிதாகச் சேர்ந்தவர்கள். அவர்கள் பண்டாரவைக் கண்டு வியந்தனர்.&lt;br /&gt;திடீரெனப் படையணியின் முன் ஒரு குண்டு வந்து விழுந்தது. எங்கிருந்து வந்தது என்று கணிக்காமல் பண்டார நாலாபுறமும் சுட்டான். அவனுக்கு வலதுபுறம் வந்த வீரர்கள் ஒரு கண்ணி வெடியை மிதித்துவிட அடுத்தநொடி தூக்கி எறியப்பெற்றனர். அடுத்து ஒரு துப்பாக்கிக் குண்டு அவன் காதை உரசிச் சென்றது.&lt;br /&gt;பண்டாரவின் கண்ணெதிரே சமந்தா வின் சிதைந்த உடல் தெரிந்தது. அவன் தந்தை ரத்தினஸ்ரீ தொடங்கொடயின் சவப்பெட்டி தோன்றியது. அவன் கண்முன்னே ஒரு சிதை தகதகவென எரிந்தது. "மகனே குட்டிப் புத்தா' என்ற புஞ்சிநோனாவின் கதறல் கேட்டது.&lt;br /&gt;தலைமயிரை உரசியபடி ஒரு குண்டு பாய்ந்தது. அவ்வளவுதான். பண்டார திரும்பினான். ஒரே ஓட்டம். அச்சம் உச்சந்தலையைப் பிடித்து ஆட்டியது. ""ஓ'' எனக் கத்திக்கொண்டே ஓடினான். தலை தெறிக்க ஓடினான். ""புத்தரே! புத்தரே'' என அரற்றியபடி ஓடினான்.&lt;br /&gt;""ஐயோ! பண்டார ஓடுகிறானே! மாவீரன் பண்டார ஓடுகிறானே!'' என்று மற்ற வீரர்களும் ஓடத் தொடங்கினர். துப்பாக்கிக் குண்டுகள் துரத்தத் துரத்த நாலாபுறமும் ஓடினர். சிறிது நேரத்தில் மொத்தப் படையும் சிதறியது. அந்த மண்ணில் அலங்கோலமாகப் பதிந்திருந்த காலடிச் சுவடுகளின் மீது பீரங்கியின் நீண்ட சக்கரங்கள் உருளத் தொடங்கின.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-108756912927580569?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/108756912927580569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=108756912927580569' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/108756912927580569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/108756912927580569'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2004/09/blog-post.html' title='குட்டி புத்தா'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-111320556961753250</id><published>2004-08-31T07:35:00.000Z</published><updated>2005-04-11T09:29:01.050Z</updated><title type='text'>புதுப் புதுப் போராட்டங்கள்</title><content type='html'>&lt;b&gt;சென்னையில் தயாராகி, அமெரிக்காவில் வெளியாவது, தி தமிழ் டைம்ஸ் என்ற மாத இதழ். கவிஞர் ஜெயபாஸ்கரன், இதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் என்னிடம் கவிதை கொடுங்கள் என்றுதான் கேட்டார் (இவருக்காவது நான் கவிஞன் என்பது நினைவில் உள்ளதே!). அண்மையில் நடைபெற்ற விநோத போராட்டங்கள் என் மனத்தைக் கவர்ந்ததால் 'இதைப் பற்றி எழுதட்டுமா?' எனக் கேட்டேன். 'அமெரிக்க மக்களுக்கு இங்கு நடப்பவற்றைத் தெரிவிக்க, இது நல்ல வாய்ப்பு. இந்தக் கட்டுரையையே கொடுங்கள்' என்றார். அது, இதோ:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டங்களால் உலகமே ஆட்டம் காணும் காலம், இது. கருப்பையினுள் நுழையும்இலட்சக்கணக்கான உயிரணுக்களுள் ஓர் அணுதான் கருவுறுகிறது. அதற்கே அந்தஅணு, ஒரு போராட்டம் நடத்தவேண்டி இருக்கிறது. வெளியே வந்த பிறகும் குழந்தை,தன் ஒவ்வொரு கோரிக்கைக்கும் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறது. தான் கேட்டது கிடைக்கும் வரை அது, கையை அசைத்து - காலை உதைத்து- படுத்துப் புரண்டு- வீரிட்டு அலறிப் பிடிவாதம் பிடிக்கிறது. தன் நோக்கம் நிறைவேறும் வரை யாரோடும் பேசாமல், எதையும் சாப்பிடாமல் - குடிக்காமல் சண்டித்தனம் செய்கிறது. கடைசியில் வேறு வழியில்லை என்று பெரியவர்கள்தாம் இறங்கி வரவேண்டி இருக்கிறது. இப்படி,குழந்தையின் குருதியிலேயே போராட்ட உணர்வு கலந்திருப்பதால் வளர்ந்த பிறகு யாரும் கற்றுக் கொடுக்காமலேயே மனிதன் போராடத் தொடங்குகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி எல்லோரும் போராடும் போது போராட்டம் என்பதே சாதாரணமான ஒன்றாய்ஆகிவிட்டது. 'எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார்' என்பது போல் ஒப்புக்கு நடக்கும் போராட்டங்கள் நாம் அறியாதவையா என்ன? தொடங்கும் இடத்தில்500 பேரும் முடியும் இடத்தில் 50 பேருமாகப் பேரணி நடப்பதால்தானே இடையில்கழன்றுவிடுவோரைத் தடுக்க, கண்காணிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள்? 50 ரூபாயும் பிரியாணி பொட்டலமும் எனப் பேசி, ஆள் பிடித்து நடக்கும் பிரமாண்டப் பேரணிகளும்பொதுக்கூட்டங்களும் இந்த மண்ணுக்கு என்ன புதிதா? இவ்வாறு இல்லாமல் உண்மையாகநடந்தால் 36 அமைப்புகள் ஒருங்கிணைந்த குடையமைப்பில் 36 பேர்தானே இருப்பார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆள் திரட்டி, படை பலம் காட்ட முடியாதவர்கள், வெவ்வேறு புதிய உத்திகளில்போராட்டங்களை அறிவிக்கிறார்கள். மற்றவர்களின் கவனத்தை உடனே திருப்புவது எப்படி என்பதே இந்தப் புதிய போராட்டக்காரர்களின் நோக்கம். ஒவ்வொருவருக்கும்ஒவ்வொரு விதமான கோரிக்கைகள். ஒவ்வொரு கோரிக்கைக்கும் வெவ்வேறு வகையானபோராட்டங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கழுதையிடம் மனு &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகஸ்டு 12ஆம் தேதி, புதுவையில் கழுதையிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. புதுவை சாரத்தில் உள்ள நில அளவைப் பதிவேடுகள் துறை அலுவலகம் முன் இது நடந்தது. இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர். விஸ்வநாதன், பட்டா வழங்கக் கோரி, கழுதையிடம் மனு அளித்தார். அதிகாரியிடம் மனு அளித்தும் பயன் இல்லை; அவர் காகிதத்தைத் தின்று விடுகிறார் என்பதைக் குறிப்பாக உணர்த்தியுள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மதுக் கடைக்குப் பூட்டு &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் கட்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சி, புதிய புதிய போராட்டங்களை அறிவிப்பதில் முன்னணியில் உள்ளது. மதுக் கடைகளை மூட வலியுறுத்தி, பிரசாரம் செய்யும் அக்கட்சி, மதுக் கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டத்தை ஆகஸ்டு 23ஆம் தேதி நடத்தியுள்ளனர். பா.ம.க. மகளிர் அணியினர், கிராமப்புறத்தில் உள்ள மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடுவதான இப்போராட்டம் சாதுரியமானது. பெண்கள் தொடர்புடைய அனைத்தும் உணர்வெழுச்சியை(சென்டிமெண்ட்)த் தூண்டக் கூடியவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மணி அடிக்கும் போராட்டம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசு, மக்கள் நலனைக் கவனிக்காமல் தூங்குகிறது; அதை எழுப்புவதற்காக என்று சொல்லி மணி அடிக்கும் போராட்டத்தைக் கடந்த மாதம் பா.ம.க. நடத்தியது. சென்னையில் தூய ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் அக்கட்சியினர் சிலர் மணி அடித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அஞ்சல் அட்டைப் போராட்டம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்டு 11 ஆம் தேதி, அஞ்சல் அட்டைப் போராட்டம் நடத்தினர். தங்களிடமிருந்து தவணை முறையில் பெற்ற தொகையை நிலம் வாங்கப் பயன்படுத்திய கூட்டுறவு சங்கத்தைக் கண்டித்தும் தங்கள் தொகையைப் பாதுகாக்க வேண்டியும் அஞ்சல் அட்டைகளை நிர்வாகிக்கு அனைத்து ஊழியர்களும் அனுப்பிவைத்தனர். சாதாரண அஞ்சல் அட்டை என்று எண்ணவேண்டாம். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை நிரூபிப்பதோடு போராட்டத்தில் அனைத்து ஊழியர்களையும் ஈடுபடச் செய்வதற்கு, இப்போராட்டம் உதவியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சைக்கிள் பேரணி &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விழுப்புரத்தில் காவல் துறை தடை உத்தரவு 30(2) நடைமுறையில் உள்ளதால் அங்கு பேரணிகள் நடத்தக் காவல் துறை அனுமதிக்கவில்லை. அதை மீறி, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட தி.மு.க.வினர் 300 பேர், ஆகஸ்டு 10 அன்று சைக்கிள் பேரணி சென்றனர். தடையை மீறிச் சென்றதால் போக்குவரத்திற்குப் பெரும் இடையூறு ஏற்பட்டதாக 300 பேர் மீதும் காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். மிதிவண்டியில் செல்வது, சாதாரணமானது என்றாலும் ஒரு நோக்கம் கருதிச் செல்வதும் கூட்டமாகச் செல்வதும் போராட்ட மதிப்பைப் பெறுகின்றன. இன்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, ஊழலை ஒழிக்க என ஏதேனும் காரணம் சொல்லி, நெடுந்தூர மிதிவண்டிப் பயணம் மேற்கொள்ளும் பலரை நம்மால் பார்க்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தீக்குளிக்க முயற்சி &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவை ஆட்சியாளர் அலுவலகத்தில் ஆகஸ்டு 9ஆம் தேதி, காணாமல் போன தம் கணவரை மீட்டுத் தரக் கோரி, விஜயலெட்சுமி என்பவர் தீக்குளிக்க முயன்றார். அன்றைய நாள், அங்கு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்துகொண்டிருந்தது. ஆங்காங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். அப்போது மனு கொடுக்க வந்த இவர், பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் புட்டியை எடுத்து, உடலில் ஊற்றினார். மற்றவர்கள் பதற்றத்தோடு பார்க்கும் போதே தீப்பெட்டியை எடுத்து, குச்சியைக் கிழிக்கப் போனார். அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று அதைத் தட்டிவிட்டனர். அவரின் மனுவைப் பெற்ற காவல் துறையினர், தற்கொலை முயற்சிக்காக விஜயலெட்சுமியைக் கைது செய்தனர். இது, தெளிவாக மற்றவர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பும் ஒரு உத்தி தான். கைதான தலைவரை விடுவிக்க வேண்டும், தலைவர் மரணம் எனப் பல நேரங்களில் தீக்குளிப்பது, தமிழ்நாட்டில் சாதாரண ஒன்று. பிறகு, தீக்குளித்த தொண்டருக்கு உதவித் தொகை வழங்கும் அடுத்த காட்சியும் அரங்கேறும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உள்ளிருப்புப் போராட்டம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்வி, வணிக மயமாவதைத் தடுக்கக் கோரி, அனைத்துக் கல்லூரி மாணவர்கள், பள்ளிக் கல்வி இயக்ககம் முன் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர். சாதாரணமாகக் கூடி நின்று குரலெழுப்பும் போராட்டம் தான் அது. அப்போது காவல் துறையினர், மாணவர்கள் சிலரைத் தாக்கினர். இதைத் தொடர்ந்து, மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துப் பற்பல கல்லூரிகளின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். ஆகஸ்டு 13ஆம் தேதி, இராணி மேரி மகளிர் கல்லூரி மாணவியர்கள், உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். அரசையும் காவல் துறையையும் கண்டித்து, தங்கள் வளாகத்திற்கு உள்ளேயே உட்கார்ந்து, உரக்கக் குரல் எழுப்பினர். பெண்கள், பொதுவாக இத்தகைய போராட்டங்களையே தேர்ந்தெடுப்பார்கள். இதுதான் அவர்களுக்குப் பாதுகாப்பானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நிர்வாணப் போராட்டம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், உக்கிரமமான சூழ்நிலையில் பெண்கள், புலியென மாறி விடுவார்கள் என்பதற்கு மணிப்பூர் பெண்களே சான்று. ஜூலை 10ஆம் தேதி இரவு மணிப்பூரில் மனோரமாதேவி என்ற 32 வயதுப் பெண், இந்திய இராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகி, கொல்லப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். இரவு நேரத்தில் வந்து இக்கொடூர செயலைச் செய்ததற்கு, இராணுவம் சொன்ன காரணம், மனோரமா, தீவிரவாத இயக்கம் ஒன்றின் கமாண்டோ என்பதே. இராணுவத்திற்குக் கேள்வி முறை இல்லாமல் அதிகாரம் வழங்கும் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் எனப் பெண்கள் அமைப்பினர் உள்பட, மணிப்பூர் மாநிலம் முழுதும் போராட்டத்தில் குதித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, பெண்கள், ஜூலை 15 அன்று , நிர்வாணப் போராட்டம் நடத்தினர். உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் அசாம் ரைபிள்ஸ் அலுவலகம் முன்பு, பத்திற்கும் மேலான பெண்கள், கூக்குரல் எழுப்பினர். ' இந்திய இராணுவமே, எங்கள் சதைகளை எடுத்துக்கொள்; மனோரமாக்களை விட்டுவிடு ' , ' இந்திய இராணுவமே, எங்களைக் கற்பழி ' என்றெல்லாம் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் தமக்கு முன்பாகப் பிடித்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கூண்டோடு விடுப்பு &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மணிப்பூரில் நிர்வாணப் போராட்டம் தவிர, ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன. இதே கோரிக்கையை வலியுறுத்தி, அரசு ஊழியர் அனைவரும் கூண்டோடு விடுப்பு எடுத்துள்ளனர். வெகு சிலரைத் தவிர, பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு வரவில்லை. இதனால் அரசு எந்திரம் முழுதும் ஸ்தம்பித்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தீப்பந்த ஊர்வலம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களின் தீவிரப் போராட்டத்தால் இம்பால் நகராட்சிப் பகுதியில் மட்டும் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவதாக அரசு அறிவித்தது. இதனால் நிறைவடையாத மக்கள், மணிப்பூர் மாநிலம் முழுதிலிருந்தும் இச்சட்டத்தை நீக்க வலியுறுத்தி, ஆகஸ்டு 12ஆம் தேதி இரவு, தீப்பந்த ஊர்வலம் நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மனிதச் சங்கிலி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகஸ்டு 15ஆம் தேதி அன்று, மனோரமா நிகழ்வையொட்டி 32 அமைப்புகள் இணைந்து , மாநிலம் முழுதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தின.&lt;br /&gt;&lt;br /&gt;ஆபாச விளம்பரங்களைக் கண்டித்து, சென்னை புரசைவாக்கத்தில் மாணவ- மாணவியரின் மனிதச் சங்கிலிப் போராட்டம், ஆகஸ்டு 10ஆம் தேதி நடந்தது. இதில் புரசை எம்.சி.டி. முத்தையா செட்டியார் ஆண்கள் , பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ- மாணவியர் பங்கேற்றனர். வேறு சில அமைப்பினரும் இதில் கலந்துகொண்டனர். ஒருவரோடு ஒருவர் கைகொடுத்து, இதை எதிர்க்கிறோம் எனக் குறிப்பாக உணர்த்துவதற்கு மனிதச் சங்கிலி உதவும். ஆட்கள் குறைவாக இருந்தாலும் அதிகமானோர் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டுவதற்கு இது, சிறந்த உத்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கூண்டுக்குள் அமர்ந்து ஆர்ப்பாட்டம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி, பெரிய பெரிய கோரிக்கைகளுக்காகத்தான் போராட்டம் நடக்க வேண்டுமா, என்ன! தென்கொரியாவில் நாய்க்கறி தின்பதற்கு எதிராகக் கடந்த மாதம், சோங்னாம் நகரில் ஒரு பேரணி நடந்தது. அதில் நாய்களை அடைத்து வைக்கும் கூண்டு ஒன்றிற்குள் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் அமர்ந்துகொண்டார். நாய் போன்ற முகமூடி ஒன்றையும் அணிந்துகொண்டார். நாய்களையும் இப்படித்தான் அடைத்து வைக்கிறீர்கள் என்பதை அவர் குறிப்பாக உணர்த்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறை நிரப்பும் போராட்டம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிபுசோரனை விடுதலை செய்யக் கோரி, அக்கட்சித் தொண்டர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்க்கண்ட் தலைநகர் இராஞ்சியில் ஆகஸ்டு 7 ஆம் தேதி, இது நடந்தது. கட்சிக் கொடிகள், பதாகைகள், கட்சியின் சின்னமான வில்- அம்பு ஆகியவற்றோடு தொண்டர்கள் கைதாயினர். இத்தகைய போராட்டம், தமிழ்நாட்டில் பல முறைகள் நடந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நடைப் பயணம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, நெல்லை முதல் சென்னை வரை 42 நாளில் 1,025 கி.மீ. தூரம் நடந்து வருகிறார். ஆகஸ்டு 5ஆம் தேதி நெல்லையில் தொடங்கிய இது, செப். 15 அன்று சென்னையில் முடிகிறது. நதிநீர் இணைப்பு, காவிரிச் சிக்கலில் தமிழக நலனைப் பாதுகாத்தல், பொது வாழ்வில் சீர்கேடு நீக்குதல், சாதி- மத உணர்வுகளைத் தடுத்தல், வன்முறை மனப்பாங்கை இளைஞர்கள் கைவிடுதல் ஆகியவற்றோடு அ.தி.மு.க. ஆட்சியை எதிர்த்தல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த நடைப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். ஏராளமான நடைப்பயணங்கள் , தமிழகத்திலும் வெளியிலும் நடைபெற்றுள்ளன. ஒரு புதிய தொடக்கத்திற்கு அடையாளமாக, குத்துவிளக்கு ஏற்றுவோர், பலர். வைகோ, தாம் புறப்படும் முன் வேப்பமரக் கன்றை நட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உடல் முழுதும் நாமம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரிவர ஊதியம் கொடுக்கவில்லை, நீதி கிடைக்கவில்லை என்போர், உடல் முழுதும் நாமம் போட்டுக்கொண்டு தெருவில் ஊர்வலம் வந்துள்ளனர். ஏமாற்றிவிட்டார் என்பதை நெற்றியில் நாமம் போட்டுவிட்டார் எனச் சொல்வோம். அதனைச் சிலர், நடைமுறையில் காட்டியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வாயில் கருப்புத் துணி கட்டிப் போராட்டம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு உள்ளது, கருத்துரிமை மறுக்கப்படுகிறது என்போர், வாயில் கருப்புத் துணி கட்டிப் போராட்டம் நடத்துவதுண்டு. பொதுவாக, எதிர்ப்புக் காட்ட, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடக்கும். இன்னும் சிலர், சட்டையில் கருப்புக் கொடியைக் குத்திக்கொண்டு பணியாற்றுவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தற்கொலை மிரட்டல் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி, உயர்ந்த கட்டடம், மரம், தொலைபேசி அலைக் கோபுரம்..போன்றவற்றில் ஏறி நின்று, குதித்துவிடப் போவதாக மிரட்டுவது. பொதுவாக, இவர்கள் கொஞ்ச நேரம் அலைக்கழித்து விட்டுக் கீழே இறங்கிவிடுவர். முன்னேறிய நாடுகளில், இவர்கள் மிரட்டத் தொடங்கிய உடனேயே சுற்றிலும் வலையை விரித்து விடுவார்கள். இந்தியாவில் ஏறியோர், தாமாக இறங்கினால்தான் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தண்டவாளத்தில் தலை &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டால்மியாபுரத்திற்குக் கல்லக்குடி எனப் பெயர் மாற்ற வேண்டும் எனக் கோரி, தி.மு.க.வினர், ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குழு குழுவாகச் சென்று தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தனர். மு.கருணநிதி, இந்தப் போராட்டத்தின் மூலம் முக்கிய தலைவர்களுள் ஒருவராகிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பலகையைத் தார் பூசி அழி &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1967 இந்தி எதிர்ப்புக் காலக்கட்டத்தில் இந்தி எழுத்துகள் அடங்கிய பெயர்ப் பலகைகளைத் தார் பூசி அழித்தனர். இத்தகைய போராட்டத்தை ஓரிரு ஆண்டுகளுக்கு முன் பா.ம.க.வினர் மீண்டும் நடத்தினர். சுவரொட்டிகளின் மீது சாணி அடித்ததன் தொடர்ச்சியே இது.&lt;br /&gt;விதவிதமான கோரிக்கைகளுக்காக, விதவிதமான போராட்டங்கள் நடப்பது, உலகெங்கும் வழக்கம்தான். இந்தப் போராட்டங்களைப் பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை: அரசு அல்லது சமூகம், செய்யச் சொல்வதைச் செய்யாதிருப்பது; செய்யக் கூடாதென்பதைச் செய்வது. முன்னதற்கு, வேலை நிறுத்தம், வரிசெலுத்தாமை, வாக்களிக்காமை , கடையடைப்பு, ஒத்துழையாமை போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகள். பின்னதற்கு, சட்ட நகல் எரிப்பு, நிர்வாண ஓட்டம், கொலை, கொள்ளை, ரெயில் கவிழ்ப்பு...போன்றவை சான்றுகளாகும்.&lt;br /&gt;எதற்காகப் போராடுகிறோம் என்பதை விட, எப்படிப் போராடுகிறோம் என்பதே முக்கியம். இதையே இத்தகைய விநோத போராட்டங்கள், அடிக்கோடு போட்டு அறிவிக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6750589-111320556961753250?l=annakannan-katturaigal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://annakannan-katturaigal.blogspot.com/feeds/111320556961753250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6750589&amp;postID=111320556961753250' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111320556961753250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6750589/posts/default/111320556961753250'/><link rel='alternate' type='text/html' href='http://annakannan-katturaigal.blogspot.com/2004/08/blog-post.html' title='புதுப் புதுப் போராட்டங்கள்'/><author><name>முனைவர் அண்ணாகண்ணன்</name><uri>http://www.blogger.com/profile/03548583925837236414</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://1.bp.blogspot.com/_fBVVUdipqtM/TSV2Kn8317I/AAAAAAAABBw/agk-0jtS3QE/S220/Annakannan_collor.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6750589.post-109206964201904034</id><published>2004-06-07T16:33:00.000Z</published><updated>2004-08-09T16:51:44.800Z</updated><title type='text'>வீர தீரச் சிறுவர்கள் - 7  மாமனிதரே ரியாஸ்(9)!</title><content type='html'>தகவல் தொடர்பின் பிரமாண்டமான வளர்ச்சியால் உலகம் ஒரு சிற்றூராகச் சுருங்கிவிட்டது . உலகம் மட்டுமன்று ; மனித மனங்களும் மிகவும் சுருங்கிவிட்டன. அடுத்தவர்களுக்கு உதவுவது, அதுவும் பிரதிபலன் பார்க்காமல் உதவுவது, மிக அரிதாகிவிட்டது. 
